Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிச்சைக்காரனின் புண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக்காரனின் புண்

[11 - April - 2007]

நேரம் நள்ளிரவு. கட்டுநாயக்க பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் பிரயாணிகள் தங்கும் பகுதியில் பொருத்தப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியில் சுயாதீன ஒளிபரப்புச் சேவையின் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்தச் செய்தியில் அரச படைகள் விடுதலைப்புலிகளின் நிலைகளைத் துவம்சம் செய்து முன்னேறிக் கொண்டிருப்பதாக காட்டப்பட்டது.

அதேவேளையில், பிரயாணிகள் தங்கும் பகுதியில் இருந்தவர்களுக்கு பாரிய சப்தம் ஒன்று கேட்டது. இருப்பினும், அங்கிருந்த பயணிகள் அதைக் கணக்கில் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், அந்தச் சத்தத்தைக் கேட்ட அங்கிருந்த இந்தியப் பிரஜை ஒருவர், அது குண்டு வெடித்ததால் ஏற்பட்ட சத்தமாகவே இருக்க வேண்டும் என நினைத்துப் பதற்றத்துடன் சப்தம் வந்த திசையிலிருந்த ஜன்னலை நோக்கி ஓடினார். அங்கிருந்த இலங்கையர்கள் அந்த இந்தியப் பிரஜையைப் புதுமையாக நோக்கியதுடன் தொடர்ந்தும் தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பான விடுதலைப் புலிகளை ஒழிக்கும் நடவடிக்கைகள் தொடர்பான செய்தியில் கவனம் செலுத்தினர். அவ்வேளையில், விமான நிலையப் பணியாளர்களும் பாதுகாப்பு ஊழியர்களும் வழமை போலக் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அடுத்த சப்தமும் அதேபோலவே கேட்டது "எல்லோரும் நிலத்தில் படுத்து விழுங்கள்" என அந்த இந்தியப் பிரஜை சப்தமிட்டார். அதன் பின்னரே அங்கிருந்த பயணிகளை அந்த இடத்திலிருந்து அகலுமாறு அதிகாரிகள் பணித்தனர். மரண பயத்துடன் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் அங்கிருந்த அனைவரும் கூட்டமாக ஓட ஆரம்பித்தனர். கணப்பொழுதில் விமான நிலையம் அகதிகள் முகாம் போலானது. ஒரு மணித்தியாலத்தின் பின்னரே பிரயாணிகளைப் பதற்றமடையாதிருக்குமாறு அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் என்ன நடக்கிறது? என்ன நடக்கப் போகிறது? என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. அங்கு காணப்பட்ட வெளிநாட்டவர்களில் சிலர் மரணப் பயத்துடன் அழுதவாறு இருந்தனர். வேறு சிலர் தங்கள் தங்கள் கடவுள்களைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

"புலிகள் அடிக்கிறார்கள், நாங்கள் இங்கு சிறைப்பட்டுள்ளோம். என்ன நடக்குமோ தெரியாது" எனச் சிலர் கையடக்கத் தொலைபேசியில் மரண பீதியுடன் தங்கள் உறவினர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.

"மேலாலே வந்துதான் அடித்தார்களாமே" என நிலைமை ஓரளவு சுமுகமான பின்னர் யாரோ கூறுவது கேட்டது.

"மேலாலே எப்படி வரமுடியும். கிளிநொச்சியிலுள்ள விமான ஓடுபாதையைக் குண்டுவீசி அழித்துவிட்டதாக அரசு எத்தனையோ தடவைகள் கூறியுள்ளதே" என மற்றொருவர் கூறினார்.

"அப்படித்தான் கூறுகிறார்கள்" என மற்றொருவர் நகைப்புடன் கூறினார்.

யுத்தத்தின் மூலம் அரசியலை மேற்கொள்ள முயன்ற ஒவ்வொரு அரசும் முடிவில் இவ்வாறான வார்த்தைகளையே கேட்க நேரிட்டது.

யுத்தத்தைத் திசை திருப்புவதற்குப் பிரபாகரனுக்கு ஒரு விநாடி மட்டும் போதும் என நான் எனது கடந்தவாரக் கட்டுரையில் தெரிவித்தேன். யுத்தத்தை இலக்காக வைத்து அரசியல் நிரல்களைத் தயாரிப்பதிலுள்ள பயங்கரம் அக்கட்டுரையில் எடுத்துக் காட்டப்பட்டது.

"விடுதலைப் புலிகளைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். இந்த யுத்தத்தில் எவரும் வெற்றிபெற முடியாது" என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இந்திய ஊடகமொன்றிற்குத் தெரிவித்த கருத்தானது சிலருக்கு உடலில் ஊசி ஏற்றுவது போல் அமைந்தது.

அமெரிக்கத் தூதுவரின் இந்தக் கருத்தை ஜீரணிக்க முடியாத சிலர், " அமெரிக்கத் தூதுவர் விடுதலைப் புலிகளுக்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்துள்ளார்" எனத் தெரிவித்தனர்.

"எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தாக்குதல்களை மேற்கொண்டால் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும்" என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அண்மையில் நோர்வேத் தூதுவரிடம் தெரிவித்திருந்தார்.

"இரத்த ஆறு ஓடும் எனத் தினமும் கூறுகிறார்கள். வாய்க் கதை மாத்திரம் தான்" என அரசாங்கத்தின் பெரியவர்கள் விமர்சித்தனர்.

அந்த இலகு விமானத் தாக்குதல் கொழும்பு நகரில் ஏதாவது இடத்தில் பட்டப்பகலில் இடம்பெற்றால் அதன் பெறுபேறுகளை நினைத்தே பார்க்க முடியாது.

கனடாவில் பயிற்சிகளைப் பெற்ற பொறியியலாளரான சங்கரைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகள் இலகு ரக விமானங்களை உற்பத்தி செய்ய முயற்சிக்கிறார்கள் என்ற தகவல்கள் 1993 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வெளியாயின.

சங்கரின் தலைமையில் விடுதலைப்புலிகள் வான்படையை அமைத்துள்ளனர் என "சண்டே ரைம்ஸ்" பத்திரிகையில் 1993 இல் தகவல்கள் வெளிவந்தன. அதேபோலவே அதற்கு முன்னர் இந்திய அமைதிப்படை இலங்கையில் நடவடிக்கைகளை மேற்கொண்ட வேளையில் விமான ஓடுபாதையும் செயற்பட முடியாத விமானமும் அழிக்கப்பட்டது என 1992 இல் வெளியான "இந்தியத் தலையீடு" என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தகவல்கள் சுமார் 15 வருட காலமாகக் கிடைத்து வருகின்றன. அது மாத்திரமன்றி மாவீரர் தின நிகழ்வின்போது மாவீரர் துயிலும் இல்லங்கள் மீது விமானத்திலிருந்து பூச் சொரியப்பட்டது என 1998 "சண்டே ரைம்ஸ்" பத்திரிகையின் பாதுகாப்பு ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.

விமானத்தின் மூலம் பாராளுமன்றம் மீது குண்டுகளை வீச விடுதலைப் புலிகள் தயாராகி வருவதாக 1998 இல் அப்போதைய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்ததுடன் விடுதலைப் புலிகளிடம் இவ்வாறான விமானங்கள் இருக்கக்கூடும் என்ற போஸ்டரை பாராளுமன்ற நுழைவாசலில் உள்ள பாதுகாப்புச் சாவடியில் காட்சிக்கு வைத்திருந்தது. அதேபோலவே, பாராளுமன்றத்தைச் சுற்றி விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் பொருத்தப்பட்டன. இருப்பினும் விடுதலைப் புலிகளின் விமானம் எதையும் கண்ணிலும் காணாத காரணத்தால் "புலிகள் சும்மா பயப்படுத்துகிறார்கள்" என நினைத்து விடுதலைப்புலிகளின் விமானம் குறித்தும் அவர்களது விமானப்படை குறித்தும் வெளியான தகவல்களும் கதைகளும் மறக்கப்பட்டு விட்டன.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிய வேளையில் உயர் வானில் சந்தேகத்திற்கிடமான விமானம் பற்றிய கதைகள் வெளிவந்தன. இருப்பினும் அந்தக் கதைகளும் கணக்கில் எடுக்கப்படவில்லை.

"தாக்கும் வரை தெரியாது"

தற்போது இதைத்தான் கூறவேண்டியுள்ளது.

"எப்படித் தெரியும். விடுதலை புலிகளைத் துவம்சமாக்கி விட்டோம் என்றல்லவோ கூறுகின்றனர்".

இங்கு தான் பிரச்சினை உருவாகிறது.

புலிகள் ஒழிந்தார்கள் எனக் கூறினால் அவர்கள் நாட்டுப் பற்றாளர்கள். புலிகள் ஆற்றல் பெற்றுவிட்டார்கள் எனக் கூறினால் அவர்கள் தேசத் துரோகிகள்.

விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம் என இந்த அரசு கூறுவது கிழக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் மட்டுமேயாகும். கிழக்கில் விடுதலைப்புலிகளின் இருதயமாக விளங்குவது கொக்கட்டிச்சோலை. விடுதலைப் புலிகளின் கிழக்குத் தலைவராக முன்னர் பணியாற்றிய கரிகாலன் மற்றும் கருணா ஆகியோர் தங்கள் தலைமையகத்தை கொக்கட்டிச்சோலையிலேயே கொண்டிருந்தனர். அரசு இன்னும் அந்தப் பகுதியில் யுத்தத்தை மேற்கொள்ளவில்லை.

கொக்கட்டிச்சோலையை தற்போது அரச படைகள் கைப்பற்றிவிட்டன எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

1987 இல் இந்திய அமைதிப்படை தாக்குதல்களை மேற்கொண்ட வேளை மற்றும் 1995 இல் சந்திரிகா அரசு யாழ். குடாநாட்டை விடுவித்த வேளை ஆகிய சந்தர்ப்பங்களைத் தவிர, ஈழ யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்து உத்தியோகபற்றற்ற இராச்சியம் புலிகளிடம் இருந்துள்ளது. 1995 இற்கு முன்னர் அது யாழ்ப்பாணமாக இருந்தது. 1998 இன் பின்னர் அது கிளிநொச்சியாகியது. இதன் எல்லைக்குள் அரசு யுத்தத்திற்குச் செல்லவில்லை.

கிழக்கு மாகாணம் அவ்வாறு விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட உத்தியோகபூர்வமான இராச்சியம் அல்ல. கிழக்கு மாகாணம் ஒருகாலகட்டத்தில் புலிகள் வசமும் ஒரு காலகட்டத்தில் அரசின் வசமும் இருந்து வருகிறது.

1990-1994 காலகட்டத்தில் பிரேமதாசா மற்றும் விஜேதுங்கவின் அரசுகள் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றி உள்ளூராட்சித் தேர்தல்களையும் நடத்தின.

"கிழக்கு மாகாணம் படையினர் வசம்"

"தொப்பிகலவில் உக்கிர சமர்"

"திருகோணமலையில் புலிகளின் முகாம் அழிக்கப்பட்டது"

இவை 1992 மார்ச் மாதத்தில் வெளியான "லங்காதீப" பத்திரிகைகளின் தலைப்புகளாகும்.

இவைதான் இன்றைய தலைப்புகளாகவும் பிரசுரிக்கப்படுகின்றன.

அந்தக் காலகட்டத்தில் இந்தச் செய்திகளை வாசித்த அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினராகவிருந்த மகிந்த ராஜபக்ஷ புதுமையான கதையொன்றைக் கூறினார்.

"பிச்சைக்காரனின் புண்ணைப் போலவே இந்த அரசு (ஐ.தே.க.அரசு) யுத்தத்தால் வயிறு வளர்க்கிறது" என்றார்.

பாதயாத்திரையொன்றை மேற்கொண்டபோதே மகிந்த இவ்வாறு தெரிவித்தார்.

தான் கூறிய கதையை நினைவுபடுத்தும் காலம் தற்போது மகிந்தவுக்கு உருவாகியுள்ளது மூலம்; லங்காதீப -தமிழில் நேமிக்கா

தினக்குரல்

அருமையான கட்டுரை, அரசாங்கத்தின் பொய்களிற்கு அடித்த சாவுமணி

விளங்காத் தீபத்தில் இப்படியும் கட்டுரைகள் எழுதப்படுகின்றனவா? இங்கே கட்டுரையில் கூறப்படும் பிச்சைக்காரன் யார்? விளங்கவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய நிலையில் பிச்சைக்காரன் ரனிலு

இன்றைய நிலையில் பிச்சைக்காரன் மகிந்து.

விளங்காத் தீபத்தில் இப்படியும் கட்டுரைகள் எழுதப்படுகின்றனவா? இங்கே கட்டுரையில் கூறப்படும் பிச்சைக்காரன் யார்? விளங்கவில்லை...

என்ன மாப்பு ...உலகத்தின் நம்பர் ஒன் பிச்சைக்காரன் தன் முதுகில் உள்ள பல புண்களைக்காட்டி (கட்டு நாயக , போன்ற பல )எல்லா நாடுகளிடமும் கையேந்தி மடிப்பிச்சை கேட்கும் .ராஜபிச்சை யை தெரியாதது போல கேட்கிறீர் ....ராஜபக்ச என்பதை விட ராஜபிச்சை தான் மிகப்பொருத்தம் அந்த கேடுகெட்ட குடும்பத்துக்கு.

எடுப்பது பிச்சை என்றாலும் திமிருக்கு மட்டும் பஞ்சமில்லை பிச்சை வாங்கிய பொருட்களை குறை வேறு சொல்லும் (உ.ம் இந்திய ராடார்)

மூட மகிந்தன் கழுத்தில் அணிந்துள்ள துண்டு ஸ்டைலே தனி கையில் ஏந்தி மடிப்பிச்சை கேட்க மிக வசதியாக ...

Edited by வேலவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கு மாகாணம் அவ்வாறு விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட உத்தியோகபூர்வமான இராச்சியம் அல்ல. கிழக்கு மாகாணம் ஒருகாலகட்டத்தில் புலிகள் வசமும் ஒரு காலகட்டத்தில் அரசின் வசமும் இருந்து வருகிறது.

1990-1994 காலகட்டத்தில் பிரேமதாசா மற்றும் விஜேதுங்கவின் அரசுகள் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றி உள்ளூராட்சித் தேர்தல்களையும் நடத்தின.

"கிழக்கு மாகாணம் படையினர் வசம்"

"தொப்பிகலவில் உக்கிர சமர்"

"திருகோணமலையில் புலிகளின் முகாம் அழிக்கப்பட்டது"

இவை 1992 மார்ச் மாதத்தில் வெளியான "லங்காதீப" பத்திரிகைகளின் தலைப்புகளாகும்.

இவைதான் இன்றைய தலைப்புகளாகவும் பிரசுரிக்கப்படுகின்றன.

அந்தக் காலகட்டத்தில் இந்தச் செய்திகளை வாசித்த அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினராகவிருந்த மகிந்த ராஜபக்ஷ புதுமையான கதையொன்றைக் கூறினார்.

"பிச்சைக்காரனின் புண்ணைப் போலவே இந்த அரசு (ஐ.தே.க.அரசு) யுத்தத்தால் வயிறு வளர்க்கிறது" என்றார்.

பாதயாத்திரையொன்றை மேற்கொண்டபோதே மகிந்த இவ்வாறு தெரிவித்தார்.

தான் கூறிய கதையை நினைவுபடுத்தும் காலம் தற்போது மகிந்தவுக்கு உருவாகியுள்ளது மூலம்; லங்காதீப -தமிழில் நேமிக்கா

கட்டுரையாளர் சொன்ன இப்பந்தி தான் இப்போது மகிந்த செய்து கொண்டிருப்பது என்பது மிகமிக அருமை. அன்று டிபிசொன்னதையே இப்போது மகிந்த குடும்பம் சொல்லிக் கொண்டிருக்கின்றது.

புலம்பெயர் தமிழர்களுக்கும் இதே பதில் தான். அன்றும் பிடித்தார்கள். பிறகும் நம்மிடம் அது வந்தது. இப்போதும் பிடித்தேன் என்கின்றார்கள். ஆனால் அது நிரந்தரமல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.