Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா தலையிடுவது தொல்லையானது: ஜே.வி.பி. தலைவர் சாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தலையிடுவது தொல்லையானது: ஜே.வி.பி. தலைவர் சாடல் [புதன்கிழமை, 11 ஏப்ரல் 2007, 14:15 ஈழம்] [சி.கனகரத்தினம்]

இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் இந்தியா தலையிடுவது தொல்லை தரக்கூடியது என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க சாடியுள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரருக்கு சோமவன்ச அமரசிங்க அளித்த நேர்காணல்:

தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். எத்தனை முறைதான் அவர்கள் இதனைத் தெரிவிப்பர்? இதுபற்றி அரசாங்கம்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். அப்படியானால் யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.

எப்போதெல்லாம் புலிகள் பலவீனமாக இருக்கிறார்களோ அப்போதெல்லாம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு புலிகள் வருகின்றனர். கருணா குழுவினால் அவர்களது பலம் குறைந்துள்ளது. இப்போது சிறார்களை படையணிகளில் அவர்களால் சேர்க்க முடியவில்லை. அண்மைய சூழ்நிலையானது புலிகளுக்குச் சாதகமாக இல்லை. கிழக்கை புலிகள் இழந்துவிட்டனர். கிழக்குப் பிரதேசம் இல்லாத ஈழத்தையா புலிகள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்?

எதுவித நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைக்குப் புலிகள் வந்தால் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குப் போகலாம். அப்படியில்லையெனில் பேச்சுவார்த்தைக்குப் போக வேண்டியதில்லை. இராணுவ நடவடிக்கைகளை கைவிடக்கூடாது. தற்போதைய நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

விடுதலைப் புலிகளின் வான்பலம் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. இது ஒன்றும் அணு ஆயுதப் போர் அல்ல. மரபுவழி யுத்தம் தான். இந்த யுத்தத்தில் விடுதலைப் புலிகளால் வெல்ல முடியாது. கிழக்கை இழந்துள்ள நிலையில் ஆட்சேர்ப்பு எளிதானது அல்ல. அவர்கள் பேச்சுக்கு வருவதற்கும் இதுவே காரணம்.

இந்த நாட்டுக்கு எந்த ஒரு அனைத்துலகத்தின் உதவியும் தேவையில்லை. ஆனால் நாம் இறைமையுள்ள ஒரு தேசம். அதே நேரத்தில் அனைத்துலக சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு உறுப்பு நாடு. ஆகையால் எதுவித நிபந்தனையுமின்றி இந்த நாட்டுக்கு அவர்கள் ஏன் உதவக் கூடாது. எமது அரசியல் யாப்பு சனநாயகத் தன்மை கொண்டது. இருந்தபோதும் நாம் சனநாயக ரீதியாக இயங்குவதில் சில சிக்கல்கள் உள்ளன. இங்கே தேசிய வேறுபட்ட இனங்களிடையே சமநிலை இன்மையால் இங்கே இனப் பிரச்சினை உள்ளது என்பதனை நாம் ஒப்புக் கொள்கிறோம்.

இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் நிலை நாட்ட வேண்டியது அரசாங்கமாகும். அதுவே பிரச்சனைக்குத் தீர்வு ஆகும். அனைத்துலகத்தின் அனுசரணை அல்லது தலையீடு என்பதனை நாம் ஏற்றுக் கொண்டால் அவர்களின் முதலீட்டுக்கும் தயாராக இருக்க வேண்டும். அதனை ஒரு போதும் செய்யக் கூடாது.

இந்தியாவின் தலையீடு நமக்கு ஒருபோதும் உதவிகரமாக இருக்காது. அது நமக்கு தொல்லைதரக் கூடிய மோசமானதாக அமையும். ஆகையால் எந்த ஒரு நாட்டினதும் எந்த வகையான தலையீட்டையும் நாம் ஒப்புக்கொள்ளக் கூடாது. ஏனெனில் அது பிரச்சனைக்குத் தீர்வாகாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்து நாடுகளிலும் இன்று இயங்குகின்றனர். அந்த இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்ட போதும் நிதி சேகரிக்கின்றனர்- ஆயுதங்களை கொள்வனவு செய்கின்றனர். ஆகையால் வெளிநாடுகள் தடை விதித்து என்ன பயன்? ஐரோப்பிய ஒன்றியமானது விடுதலைப் புலிகளைத் தடை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுகிறது. ஆனால் அதில் இடம்பெற்றுள்ள நாடுகள் தடை விதிப்புத் தீர்மானத்தை தங்களது நாடாளுமன்றங்களில் நிறைவேற்றவில்லை. இந்தத் தடையானது நமக்கு பாரிய அளவில் உதவாது என கருதுகிறேன். தடை செய்யப்படும் போது விடுதலைப் புலிகள் வலிமையான அமைப்பாக உருவாகி உள்ளது. ஆகையால் அதற்கு முன்னதாக தடை செய்திருக்க வேண்டும்.

இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று நாம் நினைக்கவில்லை. இனப்பிரச்சனையானது இப்போது சிக்கலானதாக உள்ளது, அனைத்துலக தலையீடு ஒரு பிரச்சனையாக உள்ளது என்றார் அவர்.

புதினம்

இவருக்கு என்ன்ன பிரச்சினை.வேணும் வேணும் என்பீனம் உடன வேணாம் வேணாம் எண்டுவீனம்.இலங்கையின் சுபிரமணிய சுவாமி இவர்தான்

ரம்புட்டானின் பதவிக்கு சோமபானத்தை போடலாம் போல இருக்குதே? சோமு பிச்சு எறியிறான்?

  • கருத்துக்கள உறவுகள்

சோமண்ணை இடைக்கிடை ஏதாவது அறிக்கை விட்டபடி தான். யாரும் அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை.

சீரியச் காமடியன். விடுங்கன்னா விடுங்கன்னா

இவர்களை நம்பித்தானே தமிழர் தரப்பு யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அந்த வேலையை ஜே . வி . பி யினர் சரிபடச் செய்ய வேண்டாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.