Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்…. ரஜினிகாந்த்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்…. ரஜினிகாந்த்

December 4, 2018

 

rajini.jpg?resize=600%2C450

இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள 2.0 திரைப்படம் இந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் இந்தியா டுடே சார்பில் எடுக்கப்பட்ட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அரசியல், சினிமா, தனி வாழ்க்கை, முக்கிய பிரச்சினைகள் குறித்து மனம் திறந்திருந்த ரஜினிகாந்த் இலங்கைத் தமிழர் விவகாரம் தமிழகத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாகவே இருந்துவருகிறது. இலங்கை தமிழர்களுக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என எழுப்பபப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முதலில் இந்தியாவில் இருக்கக் கூடிய இலங்கை தமிழ் அகதிகளை, இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதுடன் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படவேண்டும் என அவர்p குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இதைச் செய்தே ஆக வேண்டும் எனவும் தமிழக அரசு இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்த ரஜினிகாந்த் இலங்கைத் தமிழர்கள் பல ஆண்டுகளாகச் சிறையில் வாழ்வது போல வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இதைப் பற்றிப் பேச இங்கு யாரும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையில் இந்தியா எப்போது ஒரு கண் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் எனவும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் எனவும் அது இலங்கையின் பிரச்சினைதானே என்று விட்டுவிடக் கூடாது எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/105584/

 

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்கள் கையில் அதிகாரம் போனால் இப்படித்தான் குடி உரிமை கிடைத்து தொடர்ந்து அடிமைகளாக இருக்கணும் என்று தலை விதியா அவர்களுக்கு ? சிங்கள அரசானாலும் ஹிந்திய அரசு என்றாலும் தமிழருக்கு எது தேவையோ அதை விட்டு வேறு எதையோ புடுன்கினம் .ஆம் தொடக்கத்தில்  இருந்து அங்கு போன அகதிகள் கேட்க்கிறார்கள் தங்களை நுழைவு புள்ளி அமைப்பை பிற்படுத்த பட்டோர் பக்கம் நகர்த்துமாறு ஆனால் கேட்டும் கேட்காத நிலையில் அங்குள்ள அரச வர்க்கம் (அவர்கள் நாடு அவர்கள் நினைப்பதுதான் நடக்கும் அப்ப exit குடுத்து அவர்கள் விரும்பிய வாழ்வையும் அடைய விடுகினம் இல்லை )

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் இதுதான் காம்பில் இருக்கும் பையன் நல்ல மார்க்ஸ் எடுத்தியா ? ஆ எடுத்தன் அங்கிள் என்ன இருந்தாலும் சிலோன் தமிழரை ஐயர் சாதி லிஸ்டில் வைத்து இருக்கினம் யுனிக்கு போவது என்றால் கூடின புள்ளி எடுக்கணும் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் மிகவும் வறுமையானவர்கள். இவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். பலவித கெடுபிடிகளுக்கு மத்தியில் வாழ்கின்றார்கள். இவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்ப்டுகின்றன. 

பண வசதிஉள்ள அகதிகள் அபிவிருத்தியடந்த நாடுகளுக்கு ஓடி விடுவார்கள்.  பின்பு சில வருடங்களுக்கு பின்பு சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவார்கள். பங்கு பற்றுவார்கள் ஆனால் கஷ்டப்படும் தம்மினத்து அகதிகளை காண்டு கொள்ள‌ மாட்டார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.