Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

5 மாநில தேர்தல்: வாக்குக் கணிப்பு முடிவுகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5 மாநில தேர்தல்: வாக்குக் கணிப்பு முடிவுகள்!

83.jpg

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு இன்று (டிசம்பர்7) மாலையோடு வாக்குப் பதிவு முடிந்த நிலையில்... பிரபல செய்தி நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

டைம்ஸ் நவ் -சி.என்.எக்ஸ்

டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம், சி.என்.எக்ஸ் இணைந்து நடத்திய வாக்குக் கணிப்புகளில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும், ராஜஸ்தானில் காங்கிரஸ், தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக - 126, காங்கிரஸ் - 89, பகுஜன் சமாஜ் - 6 இடங்களைப் பிடிக்கலாம். சத்தீஸ்கரில் பாஜக - 46, காங்கிரஸ் - 35, பகுஜன் சமாஜ் கூட்டணி - 7, மற்றவை - 2 என்ற வகையில் தேர்தல் முடிவுகள் அமையும். தெலங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் - 66, காங்கிரஸ் கூட்டணி - 37, பாஜக - 7, மற்றவை - 2 என்றும் கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக- 85, காங்கிரஸ் கூட்டணி - 105, பகுஜன் சமாஜ் கூட்டணி - 2, மற்றவை – 7 என்ற வகையில் அமையும் என்று கணித்திருக்கிறது டைம்ஸ் நவ்.

இந்தியா டுடே ஆக்சிஸ் மை இண்டியா

இந்தியா டுடே, ஆக்சிஸ்ட் மை இண்டியா நிறுவனத்துடன் இணைந்து நடத்திய வாக்குக் கணிப்பில் வேறு மாதிரியான முடிவுகள் கிடைத்துள்ளன.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் 55 முதல் 65 இடங்கள் வரை பிடிக்கும் என்றும், பாஜக 21 முதல் 31 இடங்கள் பிடித்து ஆட்சியை இழக்கும் என்றும் கூறியுள்ளது இந்தியா டுடே. .

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது என்று கணிக்கிறது இந்தியா டுடே. இதன்படி ம.பி.யில் காங்கிரஸ் 104 முதல் 122 இடங்களைப் பெறக் கூடும் என்றும், பாஜக 102 முதல் 120 இடங்கள் வரை கைப்பற்றக் கூடும் என்றும் தெரிகிறது. ம.பி.யில் தனியாக நின்ற பகுஜசன் சமாஜ் கட்சி மூன்று இடங்கள் வரைப் பிடிக்கலாம் என்கிறது இந்தியா டுடே.

ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை டைம்ஸ் நவ் போலவே காங்கிரஸே ஆட்சியைப் பிடிக்கும் என்றே இந்தியா டுடே வாக்குக் கணிப்பும் தெரிவிக்கிறது. இதன்படி ராஜஸ்தானில் காங்கிரஸ் 119 முதல் 141 இடங்களைப் பிடிக்கும் எனவும், பாஜக 55 முதல் 72 வரை பிடித்து ஆட்சியை இழக்கும் எனவும், இந்தியா டுடே வாக்குக் கணிப்பு தெரிவிக்கிறது.

தெலங்கானா மாநிலத்தில் டி.ஆர்.எஸ். கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று இந்தியா டுடே வாக்குக் கணிப்பு கூறுகிறது. டி.ஆர்.எஸ். 71 முதல் 93 இடங்கள் வரை பிடித்து ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும், காங்கிரஸ் 33 இடங்களைப் பிடிக்கும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன.

மிசோரத்தைப் பொறுத்தவரை ஆளும் மிசோரம்தேசிய முன்னணிக்கே மீண்டும் வாய்ப்பிருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.

 

https://minnambalam.com/k/2018/12/07/83

  • கருத்துக்கள உறவுகள்

à®à®¨à¯à®¤à¯à®à®®à¯

5 மாநிலங்களில் பாஜக பின்னடைவு.. நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?.. அச்சத்தில் பாஜக!

5 சட்டசபை தேர்தல்களில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்து வருவது அக்கட்சியினரை அதிரச் செய்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜஸ்தான், தெலுங்கானா, மிஸோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

இந்த 5 தொகுதிகளில் சத்தீஸ்கர், ம.பி, மிஸோரம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. அது போல் தெலுங்கானாவில் அந்த மாநில கட்சி வெற்றி பெறவும் ராஜஸ்தானில் தொங்கு சட்டசபை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்ட முதலே 5 மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகிக்காத நிலையில் இது அக்கட்சி நிர்வாகிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது. இந்நிலையில் இந்த பின்னடைவு நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்குமா என்ற சந்தேகத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்து அடுத்ததாக பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க மற்ற மாநில, தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்ற உள்ளன.

இதற்காக ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கு தேசம், திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியோ காங்கிரஸ்- பாஜக அல்லாத 3 அணியை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

இந்த சூழலில் 3-ஆவது அணி என்பது சாத்தியமில்லை என்றே தெரிகிறது. எனவே 5 தேர்தல் முடிவுகளை பார்த்தால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலை தூக்காத நிலை ஏற்படும் என்றே கருத தோன்றுகிறது.

இதற்கெல்லாம் காரணம் பாஜகவின் தவறான நிர்வாக போக்குதான் என்று கூறப்படுகிறது. பணமதிப்பிழப்பு விவகாரம் தொடங்கி நீட், பெட்ரோல் டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வரை அனைத்திலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது வெளிப்பாடே இந்த தேர்தல் முடிவுகள் என்பது யாருக்கும் தெரியாமல் இல்லை.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/5-states-election-results-bjp-s-setback-leads-the-same-loksabha-elections-336245.html

  • கருத்துக்கள உறவுகள்

à®à®©à®µà®°à®¿ 8

5 மாநில தேர்தலில் பாஜக பரிதாப தோல்வி.. பரபர சூழலில் இன்று கூடியது நாடாளுமன்றம்!

இந்திய அரசியல் களமே சூடுபிடித்து கிடக்கும் இந்த நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியது. பின்னர், மறைந்த மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர் நாள் முழுவதும் கூட்டத்தொடர் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

5 மாநில தேர்தல் முடிவுகள் ஒருபுறம் எண்ணப்பட்டு வருகிறது. இந்தநிலையில்தான் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. தேர்தலில் பாஜக தோல்வி முகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விவாதிப்பதற்கும், அலசுவதற்கும், ஆராய்வதற்கும், எக்கச்சக்க விவகாரங்களை எதிர்க்கட்சிகள் கையில் ரெடியாக வைத்திருக்கின்றன.

ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட ஏகப்பட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் இன்று எழுப்ப பிளான் செய்திருக்கின்றன. அதனால் பார்லிமென்டில் அனல் தெறிக்கும் விவாதங்கள் இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 அமர்வுகள் இந்த கூட்டம் நடக்க போகிறது. ஒவ்வொரு அமர்வுமே உச்சக்கட்ட பரபரப்பாகதான் இருக்க போகிறது. அந்த அளவுக்கு கையில் விவகாரங்களை வைத்திருக்கின்றன எதிர்கட்சிகள். ஜனவரி 8-ம் தேதிதான் இந்த கூட்டத்தொடர் முடிவடைய போகிறது.

அதுவரை கூட்டத்தொடரில் பேச 23 மசோதாக்களை பரிசீலனைக்கு எடுத்து கொள்ள முடிவாகி உள்ளது. அதாவது முத்தலாக் தடை சட்டத்துக்கு மாற்றான மசோதா, தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மனித உரிமைகள் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவைகள் எடுத்துகொள்ளப்பட இருக்கின்றன.

அதே நேரத்தில் 20 புதிய மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. கூடவே 2 மசோதாக்களை திரும்ப பெறப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்படி பார்த்தாலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை காங்கிரஸ் கண்டிப்பாக இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தும்.

இதெல்லாம் வெளிப்படையாக தெரிந்தாலும், ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழலையும், ராமர் கோயில் கட்டுவது தொடர்பான விவகாரத்தையும் எழுப்பாமல் இந்த கூட்டத்தொடர் முடியபோவதில்லை.

அதனால் காரசார விவாதங்களுக்கும், அனல்தெறிக்கும் வாக்குவாதங்களுக்கும் இந்த கூட்டத்தொடரில் ஒரு பஞ்சமும் இருக்காது என்றே தோன்றுகிறது.

அதன்படி இன்று காலை அவை கூடியது. அப்போது கூட்டத்தொடரில் மறைந்த பிரதமர் வாஜ்பாய் மற்றும் மத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/parliament-meeting-today-parties-336232.html

  • கருத்துக்கள உறவுகள்

à®®à¯à®à®¿ மறà¯à®ªà¯à®ªà¯

தேர்தல் முடிவுகள்.. கருத்து சொல்ல மோடி மறுப்பு.. முக்கிய தலைவர்களுடன் அவசர ஆலோசனை.

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து எந்தவித கருத்தையும் சொல்ல பிரதமர் மோடி மறுத்துவிட்டார். முக்கியத் தலைவர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. காலையில் வாக்கு எண்ண ஆரம்பித்த உடனேயே பாஜக, காங்கிரஸ் வெற்றி நிலவரம் தெரிய ஆரம்பித்து விட்டது.

சில மாநிலங்களில் ஆரம்பத்திலேயே காங்கிரஸ் முந்திக் கொண்டு மேலே வந்துவிட்டது. ம.பி., ராஜஸ்தானில்தான் காங்கிரசும், பாஜகவும் நீயா நானா போட்டி போட்டு கொண்டு இழுபறியை உண்டாக்கி வருகிறார்கள்.

இதில் ராஜஸ்தானில் நிலைமை ஓரளவு முடிவாகி விட்டது. ஆனால் ம.பியில் இழுபறி தொடர்கிறது. ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்பது உறுதியாகி விட்டது.

இந்த நிலையில்தான் நாடாளுமன்ற கூட்டத்துக்கு மோடி வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மோடி, "இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல முக்கியமான பிரச்சனைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

à®à®®à®¿à®¤à¯à®·à®¾

அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதம் நடத்தப்படும்" என்றார். உடனே செய்தியாளர்கள், 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கேட்டனர். அதற்கு பிரதமர், எந்தவித கருத்தையும் கூற மறுத்துவிட்டார்.

இதற்கிடையே தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-refused-comment-on-5-state-election-result-336251.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.