Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடியப் பிரதமர் மேதகு. ஸ்ரிபன் காப்பர் அவர்கள் தமிழ்மக்களுக்கு புதுவருட வாழ்த்தினை தெரிவித்துளளார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடியப் பிரதமர் மேதகு. ஸ்ரிபன் காப்பர் அவர்கள் தமிழ்மக்களுக்கு புதுவருட வாழ்த்தினை தெரிவித்துளளார்.

- சோழன் Thursday, 12 April 2007 10:21

அவர் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியினில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“தமிழ் சித்திரைப் புத்தாண்டினை கொண்டடாடும் அனைவருக்கும் எனது உள்ளம்கனிந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த புத்தாண்டு கொண்ட்டாட்டம் இந்த சமுதாய நீரோட்டத்தில் நீங்கள் அளிக்கின்ற அபரீதமான பங்களிப்பினையும் உங்கள் கடின உழைப்பினையும் அதனால் நீங்கள் பெற்றுள்ள பெறுபேறுகளையும் சுட்டிக்காட்டி நிற்கின்றது.

நீங்கள் உங்கள் குடும்பத்துடனும் மற்றும் நண்பர்களுடனும் கூடி கோவில்களுக்கு சென்று வருகின்ற புத்தாண்டு அமைதியினையும் வளற்சியினையும் கொண்டுவர இறைவனை வேண்டும் அதே நேரம் நீங்கள் எமது கனடிய தேசத்தின் சமூக பொருளாதார வளற்சிக்கு ஆற்றிய பற்பல பங்களிப்பினையிட்டு பெருமைப்படலாம்.

கனடிய அரசின் சார்பில் இந்த புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்ததும் ஆரோக்கியமானதுமான இனிய புத்தாண்டாக இருக்க எனது புத்தாண்டு வாழ்த்துக்ளை ஏற்றுக்கொள்வீர்களாக.”

சங்கதி

அதை அவரையே வச்சுகொள்ள சொல்லுங்கள்.இயலுமான அத்தனை தடைகளையும் ஒடுக்குமுறைகளையும் போடுவிட்டு புத்தாண்டு செய்தியா அல்லது ஏது எலக்ஸன் ஏதும் வருதா

அதை அவரையே வச்சுகொள்ள சொல்லுங்கள்.இயலுமான அத்தனை தடைகளையும் ஒடுக்குமுறைகளையும் போடுவிட்டு புத்தாண்டு செய்தியா அல்லது ஏது எலக்ஸன் ஏதும் வருதா

அதே

கனடியப் பிரதமர் மேதகு. ஸ்ரிபன் காப்பர் அவர்கள் தமிழ்மக்களுக்கு புதுவருட வாழ்த்தினை தெரிவித்துளளார்.

- சோழன் Thursday, 12 April 2007 10:21

அவர் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியினில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“தமிழ் சித்திரைப் புத்தாண்டினை கொண்டடாடும் அனைவருக்கும் எனது உள்ளம்கனிந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த புத்தாண்டு கொண்ட்டாட்டம் இந்த சமுதாய நீரோட்டத்தில் நீங்கள் அளிக்கின்ற அபரீதமான பங்களிப்பினையும் உங்கள் கடின உழைப்பினையும் அதனால் நீங்கள் பெற்றுள்ள பெறுபேறுகளையும் சுட்டிக்காட்டி நிற்கின்றது.

நீங்கள் உங்கள் குடும்பத்துடனும் மற்றும் நண்பர்களுடனும் கூடி கோவில்களுக்கு சென்று வருகின்ற புத்தாண்டு அமைதியினையும் வளற்சியினையும் கொண்டுவர இறைவனை வேண்டும் அதே நேரம் நீங்கள் எமது கனடிய தேசத்தின் சமூக பொருளாதார வளற்சிக்கு ஆற்றிய பற்பல பங்களிப்பினையிட்டு பெருமைப்படலாம்.

கனடிய அரசின் சார்பில் இந்த புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்ததும் ஆரோக்கியமானதுமான இனிய புத்தாண்டாக இருக்க எனது புத்தாண்டு வாழ்த்துக்ளை ஏற்றுக்கொள்வீர்களாக.”

சங்கதி

வாழ்த்து எல்லாம் காணும் முதலில அந்த தடைய கொஞ்சம் கழட்டி விட்டா நல்லா இருக்கும் :angry:

இதிலிருந்து புரிந்துகொள்ளுங்கள்,இன்னும் எம்மவர்கள் அவர்களின் கட்சியில் இருக்கிறார்கள் என்பதை,இவர்கள் அற்ப சொற்ப ஆசா பாசங்களுக்காக எம்மையே காட்டி கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்,உண்மைகளை உணர்த்தினால் வரவேற்கத்தக்கது.ஆனால் இவர்கள் அப்படியில்லையே!

கறுப்பி அவர்களே! மேதகு என்ற பதத்தை நீக்கி கெளரவ என்று இட்டால் நல்லம் போல தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்துதியில் மயங்கும் தமிழரல்ல நாம் என்பதை இவருக்கு நாம் உணர்த்தவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல நினைச்சதை ஈழவன் எழுதி இருக்கிறார்

முகத்துதியில் மயங்கும் தமிழரல்ல நாம் என்பதை இவருக்கு நாம் உணர்த்தவேண்டும்.

அத்தகைய மனிதர்கள் தாயகத்தில் நிறைய..... இங்கு????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்து சொல்லுவது சும்மா செலவில்லாத விடயம்தானே.. அதுதான்...

சும்மா விளம்பரத்திற்கு.. உந்தப் பரதேசியை கவனத்தில் எடுக்க தேவையில்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 17-04-2007 02:45 மணி தமிழீழம் [தாயகன்]

கனேடியப் பிரதமர் தமிழ் மக்களுக்கு வாழ்த்து - சிங்களவர்கள் சீற்றம்

கனடாவின் பிரதமர் ஹார்பர் தமிழ் மக்களுக்கு மட்டும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியதற்கு சிங்கள மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சித்திரைப் புத்தாண்டை தமிழ்ப் புதுவருடமாக வர்ணித்து கனடியப் பிரதமர் ஹார்பர் கடந்த 14ஆம் நாள் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அத்துடன், கனடாவின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கனேடிய தமிழ் மக்கள் ஆற்றும் பணிக்கும் பிரதமர் தன்னுடைய நன்றியைத் தெரிவித்திருந்தார்.

சித்திரைப் புத்தாண்டை தமிழ் மக்கள் மட்டுமன்றி, சிங்களவர்களும், ஆசியாவிலுள்ள இந்துக்கள் செறிந்து வாழும் நாடுகளில் பலவற்றிலும் கொண்டாடப்படுவதாகவும் சிங்களவர்கள் தெரிவித்துள்ளனர்.

கனேடியப் பிரதமர் ஹார்பர் தமிழ் மக்களுக்குக் கூறிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அரசியலாக்கி, கனேடிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையில் கனடாவிலுள்ள சிறீலங்கா தூதரகமும், சிங்களவர்களும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு கனடா பிரதமர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததற்கு சிறிலங்கா கடும் அதிருப்தி

[செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2007, 15:45 ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழர்களுக்கு கனடா பிரதமர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததற்கு சிறிலங்கா அரசாங்கம் தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்தி:

தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறி கனடா பிரதமர் விடுத்த செய்தியானது சிறிலங்கா அரச பீடத்தை சினங்கொள்ள வைத்துள்ளது.

ஆகையால் தமிழர் விடயம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள கனடாவுக்கான சிறிலங்கா தூதரகம் பணிக்கப்பட்டிருந்தது.

மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், பாதுகாப்பமைச்சின் செயலருமான கோத்தபாய ராஜபக்ச, ஜேர்மனி மற்றும் இங்கிலாந்து தூதுவர்களுக்கு விடுக்கப்பட்ட அழுத்தத்திற்கு மாறாக கனடாவின் வெளிவிவகார அமைச்சைத் நேரடியாகவே தொடர்பு கொண்டு சிறிலங்காவின் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

கனடாப் பிரதமரின் செய்தி மாற்றம் செய்யப்பட்டு இரு இனத்தவருக்குமாக விடுக்கப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா அரசின் விருப்பதையும் கோத்தபாய ராஜபக்ச கடந்த வார முற்பகுதியில் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் இது தங்கள் அரசுக்கும் தமது குடிமக்களான கனடாத் தமிழர்களுக்கும் இடையேயான விடயம் என்றும் இது விவகாரத்தில் சிறிலங்கா அரசு கரிசனை கொள்ளத் தேவையில்லை என்றும் தனது பதிலில் கனடா தெரிவித்துள்ளதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

puthinam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர்கள் தாங்கள் ஒரு தேசிய இனம் என்பதையும், தனித்துவமான வரலாற்றையும் உடையவர்களாகப் பிரகடனப்படுத்த முயல்கின்றனர். வேடர்கள் இனத்தைக் கூட இப்போது சிங்களவர்களாகக் காட்டுவதற்கான பாரிய முயற்சி நடந்து கொண்டிருக்கின்றது. அதனால் தான் அவர்களின் வழிபாட்டு இடமான கதிர்காமக் கந்தன், தற்போது சிங்களமயமாக்கப்பட்டு, வேடர்களுக்குச் சிங்களத்தைப் புகட்ட முயற்சி எடுத்திருக்கின்றார்கள்.

ஆனால் தமிழன், அங்கே சொட்டை, இங்கே நொட்டை பார்க்கப் போய்த், தன் அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.