Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் ஆட்சிக்கு ஆபத்தென்றால் இராணுவ ஆட்சி வரும் - அமைச்சர் டலஸ் அழகப்பெரும

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 12-04-2007 18:37 மணி தமிழீழம் [மயூரன்]

மகிந்தவின் ஆட்சிக்கு ஆபத்தென்றால் இராணுவ ஆட்சி வரும் - அமைச்சர் டலஸ் அழகப்பெரும

சிறீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அல்லது அவரின் தலைமைத்துவத்தில் கேள்வி எழுப்பப்படும் பட்சத்தில் நாட்டில் இராணுவ மயமாக்கப்பட்ட ஆட்சி கொண்டுவரத் தயக்கப் போவதில்லை என இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும எச்சரித்துள்ளார்.

ராஜபக்சவின் தலைமைத்துவம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்பது வெறும் பகல் கனவாகவே அமையும் எனவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவின் ஆட்சி கவிழ்கப்பட்டால் இராணுவ ஆட்சி நடைமுறையில் வரும் எனவும் அழகப்பெரும மேலுமம் தெரிவித்துள்ளார்.

pathivu

அப்போ இப்போ நடப்பதுதான் ஜனநாயக ஆட்சியா???

வியாழன் 12-04-2007 18:37 மணி தமிழீழம் [மயூரன்]

மகிந்தவின் ஆட்சிக்கு ஆபத்தென்றால் இராணுவ ஆட்சி வரும் - அமைச்சர் டலஸ் அழகப்பெரும

சிறீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அல்லது அவரின் தலைமைத்துவத்தில் கேள்வி எழுப்பப்படும் பட்சத்தில் நாட்டில் இராணுவ மயமாக்கப்பட்ட ஆட்சி கொண்டுவரத் தயக்கப் போவதில்லை என இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும எச்சரித்துள்ளார்.

ராஜபக்சவின் தலைமைத்துவம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்பது வெறும் பகல் கனவாகவே அமையும் எனவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவின் ஆட்சி கவிழ்கப்பட்டால் இராணுவ ஆட்சி நடைமுறையில் வரும் எனவும் அழகப்பெரும மேலுமம் தெரிவித்துள்ளார்.

pathivu

ஆமா யார் இந்த டல்ஸ் அழகபெரும அபப்டி ஒருத்தர் இருக்காரா.........? இன்டைக்குத்தான் கேள்விப் படுகிறேன், இப்பவும் சர்வாதிகார ஆடிசிதான் நடக்குது

ஒருவரைப் பற்றி முழுமையாக அறிய வேண்டுமென்றால் அவரிடம் பதவிளைக் கொடுத்துப் பாருங்கள் என்றொரு வாக்கியம் இருக்கிறது.

அது எவ்வளவு தூரம் உண்மையானது என்று நிரூபிப்பதற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் தான் இந்த டலஸ் அழகப்பெரும.

1980களில் தென்பகுதிகளில் நடந்த மனித உரிமை மீறல்கள், கொலைகள் என்பவற்றைப் பற்றி ஒரு பத்திரிகையாளனாய் நேர்மையுடனும் துணிச்சலுடனும் எழுதிக் கொண்டிருந்தவர் இவர்.

மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த இவர் தென்பகுதி மக்களின் நல்லபிமானத்தைப் பெற்றவர்.

பின்னர் சமாதானப் புறா வேடம் பூண்டு கொண்டு சந்திரிக்கா அரசியலில் ஈடுபட்டபோது பணபலம் அதிகமில்லாமல் மக்கள் பலத்துடன் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தவர்.

பின்னர் சந்திரிக்காவின் நடவடிக்கைகள் பிடிக்காமல் பின்னாசன எம்பிக்கள் அமைத்திருந்த கறபிஞ்சா அமைப்பிலும் தீவிரமாக இயங்கியவர்.

அதன்பின்னர் அரசியலில் சற்று ஒதுங்கியிருந்தவர் சந்திரிக்காவின் அரசியல் வெளியெற்றத்தைத் தொடர்ந்து மகிந்தவுடன் இணைந்து வழமையான பாணி அரசியலை ஆரம்பித்தவர். மங்கள் சமரவீரவும் இவரும் கீரியும் பாம்பும் போல மாத்தறை மாவட்டத்தில் செயல்படத் தொடங்கினர். அடிதடி அரசியலிலும் கலக்கு கலக்கியவர்.

மங்கள ஒதுக்கப்பட்ட போது பின்கதவால் பாராளுமன்ற உறுப்பினராகி அமைச்சாராக்கப்பட்டவர். மறைத்து வைத்திருந்த அழுக்குகளை இப்பொழுது கக்கிக் கொண்டிருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி

எல்லாம் பதவிபடுத்தும் பாடு இதுதானா???

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் எல்லோரும் திருடர்கள்.. பதவி, செல்வாக்கை வைத்து மக்களைச் சுரண்டி செல்வத்தைப் பெருக்குவதுதான் அரசியல்வாதிகளின் நோக்கம்.. இவரும் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக வளர வாழ்த்துக்கள்..

இலங்கையில் இதுவரை இராணுவ ஆட்சி வராதது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

உலக நாடுகளின் மக்கள் தொகை விகிதாசாரத்துக்கேற்ப மிகப் பெரும் இராணுவத்தைக் கொண்ட நாடுகிளில் இலங்கையும் முன்னணியில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அதுமட்டுமன்றி 80 களுக்கு பின் அபரும்பாலான காலம் நாடு அவசரகாலச் சட்டத்தின் கீழேயே இருந்து வருகிறது. இதனால் பெரும் அதிகாரங்களுடன் தாம் நினைத்ததே சட்டம் என்று செயற்பட்டுக் கொண்டிருக்கும் சிறிலங்கா இராணுவத்தின் உயர் பீடத்தினரிடையே நாடாளும் ஆசை வருவதற்கான சந்தர்ப்பம் மிக அதிகமாகவே இருக்கிறது.

அதுமட்டுமன்றி பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் முசாரபும் சரத் பொன்சேகவும் ஒன்றாக இராணுவப் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் கவனிககத்தக்கது.

(என்னோடை படிச்சவன் நாடாளக்குள்ளை நான் ஆண்டால் என்ன எண்ட எண்ணம் வராமலா இருக்கும்)

மற்றொரு விசயம் சிறிலங்கா அரசியலில் எனக்கு மூக்குப் போனாலும் பறவாயில்லை. எதிரிக்கு சகுனப் பிழையாகினால் சரி என்பது வழமையான விடயம்.

(கட்டுநாயக்கவில்சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் தாக்குதல் நடந்த போது தலைவர் பிரபாகரனை விட ரணிலே அதிகம் மகிழ்ச்சி அடைகிறார் என்று ஜெயராஜ் பெர்ணாண்டோ பிள்ளை தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தெரிவித்த கருத்து ஞாபகம் வருகிறது)

அதன்படி தன்னுடைய ஆட்சிக்கு ஒரு ஆபத்தென்றால் ஆட்சி யு.என்.பியிடம் போவதை விட இராணுவத்திடம் போவதையே மகிந்தவும் விரும்புவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.