Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணம் இரு மாதங்களில் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வரும் - படைத் தளபதி.

Featured Replies

கிழக்கு மாகாணம் இரு மாதங்களில் கட்டுப்பாட்டுக்குள் வரும் - படைத் தளபதி.

தமிழர் தாயகத்தின் கிழக்குப் பகுதியை இன்னும் இருமாதங்களுக்குள் சிங்களப் படையினர் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர் என கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதி தயா ரட்ணநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்பொழுது கிழக்கின் பகுதிகளில் கைப்பற்றி படிக்படியாக முன்னேறும் நடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் கிழக்கு மாகாணத்தை தமிழ் சி்ங்களப் புத்தாண்டுக்குள் கைப்பற்றிவிடுவோம் என சீறீலங்கா அதிபர் தெரிவித்திருந்த போதும் கிழக்கு மாகாண தளபதி தயா ரட்ணநாயக்க தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

-Pathivu-

ஐயோ பாவம்............ மறு படி கனவு காண்த்தொடங்கிட்டாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது கிழக்கின் பகுதிகளில் கைப்பற்றி படிக்படியாக முன்னேறும் நடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர்.

அதுசரி

அடுத்தபக்கமும் ஒருத்தர் இருக்கிறார் என்பதை மறந்து போடும் கணக்கு இது;

அவர் எங்கால முன்னேற முயற்சிக்கன்றார் என்பதையும் கேட்டுட்டு கணக்கு போடுவம்.....

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாளின் பிந்திய செய்திகளின்படி தொப்பிக்கல காட்டுப் பகுதியைத்தவிர அனைத்துப் பகுதிகளும் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள என்று தெரிகிறது.. நாளைக்கு தொப்பிக்கலக் காட்டையும் பிடித்தால் இரணுவத் தளபதி முன்னர் எதிர்வு கூறியபடி புதுவருடத்திற்கு முன்னரே கிழக்கை முழுவதுமாக கைப்பற்றிவிடலாம்.. :lol:

''இன்றைய நாளின் பிந்திய செய்திகளின்படி தொப்பிக்கல காட்டுப் பகுதியைத்தவிர அனைத்துப் பகுதிகளும் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள என்று தெரிகிறது.. நாளைக்கு தொப்பிக்கலக் காட்டையும் பிடித்தால் இரணுவத் தளபதி முன்னர் எதிர்வு கூறியபடி புதுவருடத்திற்கு முன்னரே கிழக்கை முழுவதுமாக கைப்பற்றிவிடலாம்.. ""

கிருபன் உங்களுக்க சந்தோசமா கலலையா?

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் உங்களுக்க சந்தோசமா கலலையா?

இதில் சந்தோஷப்பட அல்லது கவலைப்பட என்ன இருக்கு? இராணுவம் இடங்களைப் பிடிக்கும், பின்பு துரத்தியடிக்கப்படும், மீண்டும் வரும்.. இந்தச் சுழற்சி மாற என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்காமல் துள்ளிக் குதிப்பதையும், துக்கம் கொண்டாடுவதையும் தமிழர்கள் (குறிப்பாக புலம் பெயர்ந்தவர்கள்) முதலில் நிறுத்தவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

கனவு காண்கினம்.

கனவில் மண்விழ

நாளை புதுவருடம்....

பத்திரிகைச் செய்தி ஒன்றில்(sl) பாரிய படைநடவடிக்கைக்கு இராணுவம் தயாராவதாக தெரிவித்துள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tigers vow revenge in Sri Lanka's east

http://news.yahoo.com/s/afp/20070413/wl_af...rs_070413085107

  • தொடங்கியவர்

ஏழு பிரிகேடியர்களுக்கு 'மேஜர் ஜெனரல்' பதவி உயர்வு.

சிறிலங்கா இராணுவத்தில் 7 பிரிகேடியர்களுக்கு 'மேஜர் ஜெனரல்' தர பதவி உயர்வை இராணுவ தளபதி சரத் பொன்சேகா அளித்துள்ளார்.

பிரிகேடியர்கள் தயா ரட்நாயக்க, மிலிந்த பீரிஸ், ராஜித சில்வா, சிறிநாத் ராஜபக்ச, லக்சிறி அமரதுங்க, அதுல ஜயவர்த்தன மற்றும் ஜாகீர் ஆகியோர் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Puthinam-

இதில் சந்தோஷப்பட அல்லது கவலைப்பட என்ன இருக்கு? இராணுவம் இடங்களைப் பிடிக்கும், பின்பு துரத்தியடிக்கப்படும், மீண்டும் வரும்.. இந்தச் சுழற்சி மாற என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்காமல் துள்ளிக் குதிப்பதையும், துக்கம் கொண்டாடுவதையும் தமிழர்கள் (குறிப்பாக புலம் பெயர்ந்தவர்கள்) முதலில் நிறுத்தவேண்டும்!

கிழக்கில் விரைவில் பதிலடி தரப்படும் என்று திரு.தமிழ்செல்வன் அவர்கள் கூறுகிறார்கள் .....சிங்கள இனவெறி ராணுவத்தினரோ தொப்பிகலக்காட்டில் 300 புலிகள் மட்டுமே உள்ளனர் அதையும் விரைவில் கைப்பற்றுவோம் என்று கூறுகின்றனர்........... புலிகளை இந்த அளவுக்கு குறைத்து மதிப்பிட அவர்கள் என்ன அடிமுட்டாள் கூட்டமா??? அல்லது கருணாவின் துரோகத்தால் உண்மையிலேயே புலிகள் கிழக்கில் பலமிழந்து விட்டனரா??? ஐயோ கடவுளே வெண்ணெய் திரளும் போது தாழியை உடைத்து விட்டதோ கருணா துரோகக்கும்பல்??? என்னையும் இப்படி புலம்ப வைத்து விட்டனரே ...............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் வெற்றிகள் விரைவில் அரங்கேறும் - சு.ப.தமிழ்ச்செல்வன்

சிறீலங்கா அரசாங்கம் போர்முனைகளில் இராணுவ வெற்றிகளை பெற்றுவருவதாக முன்னெடுக்கும் பரப்புரைகளுக்கான பதில் விரைவில் வழங்கப்படும் என விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று ஏ.எவ்.பி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே தமிழ்ச்செல்வன் இதனைத் தெரிவித்துள்ளார்.

களமுனைகளில் சிறீலங்கா அரசாங்கம் வெற்றியை ஈட்டியுள்ளதாக அரசாங்கம் முன்னெடுக்கும் பரப்புரைகளுக்கு விடுதலைப் புலிகள் செயற்பாடுகள் மூலம் பதில் வழங்குவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் மீது இனவழிப்பு என்ற கொடிய யுத்தத்தை தொடுத்து மனித அவலத்தை உருவாக்கியுள்ள சிறீலங்கா அரசாங்கம் அவற்றை களமுனை யுத்தமாக திசைதிருப்பும் பரப்புரைகளாக உருவாக்க முன்படுவதாகவும் தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேவைகளுக்கு எற்றவாறு எமது இயங்கம் இராணுவ யுத்திகளை மாற்றிவருகின்ற போது அது தென்தமிழீழத்திலிருந்து விடுதலைப் புலிகளை பின்வாங்கச் செய்தது என அர்த்தப்படாதது எனவும் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பரப்புரைகளை முறியடிக்கும் வகையில் தென்தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் வெற்றிகள் விரைவில் அரங்கேறும் என தமிச்செல்வன் மேலும் தெரிவித்துள்ளார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள அரசு போல் எடுத்தோம், கவிழ்த்தோமென எந்த நகர்வுகளையும் போராட்ட வீரர்கள் செய்ய முற்படுவதில்லை. அரசுக்கு ஆட்பலம், ஆயுத பலம் ஏன் அனைத்துலக நாடுகளின் ஆதரவோடு செயற்பட்டாலும் அவர்கள் கூலிக்கு மாரடிப்பவர்கள். விடுதலை வீரர்கள் அப்படியல்ல!.ஒவ்வொரு அடியையும் மிக அவதானமாத்தோடு நிதானமாக கையாள்வார்கள்.

சிங்கள மக்களை ஆறுதல் படுத்த இராணுவம் விடும் அறிக்கைகளுக்கு !..விரைவில் முறியடிப்பு நிகழும்! சு.ப தமிழ்செல்வன் அண்ணா சொன்னது போல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.