Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை செலுத்திய மருத்துவமனை ஊழியர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நà®à®µà®à®¿à®à¯à®à¯

எச்ஐவி பாதிப்பு ரத்தத்தை ஏற்றியது மன்னிக்க முடியாத குற்றம்- சுகாதார துறை செயலர்

எச்ஐவி கிருமியுடன் இருந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு செலுத்தியது மன்னிக்க முடியாத குற்றம் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி (24). இவர் 2-வது முறையாக கர்ப்பமானார். அவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கர்ப்பிணியை சோதனை செய்தபோது அவருக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு ரத்தம் ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

2 வாரங்களுக்கு முன்பு சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது. அந்த நாள் முதல் அவர் சோர்வாகவே காணப்பட்டார்.

à®à®à¯à®à®µà®¿ ரதà¯à®¤à®®à¯ à®à®±à¯à®¤à®¿à®¯à®¾à®©à®¤à¯

இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அந்த கர்ப்பிணி மீண்டும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு நடைபெற்ற சோதனையிலும் எச்ஐவி உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில் கடந்த 2016-ஆம் ஆண்டு சிவகாசியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டுக்குச் செல்ல இருந்தார். விதிகளின் படி அந்த நபருக்கு அரசு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில், அவருக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த இளைஞரின் ரத்தத்தைதான் அந்த கர்ப்பிணிக்கு ஏற்றியது தெரியவந்தது. இதையடுத்து ரத்த வங்கியைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் வளர்மதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் விசாரணை நடத்துவதற்காக கமதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை ரத்த வங்கி தலைவர் சிந்தா தலைமையில் உயர் மட்ட குழு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விருதுநகர், சிவகாசி ரத்த வங்கிகளில் குழு ஆய்வு நடத்தும். இதனிடையே சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் விருதுநகர் விரைந்தார்.

அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் எச்.ஐ.வி. கிருமியுடன் இருந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு செலுத்தியது மன்னிக்க முடியாத குற்றம். கர்ப்பிணிக்கு வெளிநாடுகளில் அளிக்கப்படும் உயர்தர சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு எச்ஐவி தொற்று போகாத வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட ரத்தம் சோதிக்கப்படாமல் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

Read more at: https://tamil.oneindia.com/news/virudhunagar/hiv-blood-transmission-tn-government-forms-high-level-committe-to-inquire-337395.html

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Laboratory-technician-confesses-for-a-long-he-has-been-lying-about-HIV-blood-tests-to-couples-678x381-720x450.jpg

எச்.ஐ.வி. இரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை – ஊழியர்கள் மீது நடவடிக்கை!

எச்.ஐ.வி. இரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

எச்.ஐ.வி. இரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண் இன்று பெலிஸ்நிலையத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வைத்தியர் இராதாகிருஷ்ணன் இன்று (புதன்கிழமை) விருதுநகருக்கு விஜயமென்றையும் மேற்கொண்டார். இது தொடர்பில் அங்கு சுகாதாரத்துறை இணை இயக்குநர் மனோகரனிடம் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளருக்கு கருத்துத் தெரிவித்த அவர்,

“எச்.ஐ.வி. இரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழக அரசு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறது. அதே போல் அவருக்கு உரிய நிவாரணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. இரத்தம் செலுத்தப்பட்ட விடயத்தில் கவனக்குறைவாக இருந்த சாத்தூர், சிவகாசி அரசு வைத்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”  என கூறினார்.

மேலும், இத்தகைய தவறுகள் மீண்டும் ஏற்படாமலிருக்க இரத்த சேமிப்புகளை மறுஆய்வு செய்ய வைத்தியத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இரத்த மாதிரிகள் முழு ஆய்வு செய்யப்பட்ட பின்னரே நோயாளிகளுக்கு செலுத்த அனுமதிக்கப்பட வேண்டுமென்றும், அதுவரை இரத்த வங்கிகளிலிருந்து இரத்தத்தை வைத்தியசாலைகளுக்கு அனுப்பக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல் கட்ட விசாரணையின்போது  சிவகாசி அரசு வைத்தியசாலை இரத்த வங்கி ஊழியர் வளர்மதி,  இரத்த வங்கியின் ஆலோசகர், ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் ஆகியோர் ததற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே எச்.ஐ. வி.யுடன் மஞ்சள் காமாலை கலந்த இரத்தத்தை பெற்ற கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற தீவிர சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாத்தூர் அரசு வைத்தியசாலை வைத்தியர்கள் அந்த பெண்ணை விருதுநகர் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துருந்தனர். அங்கு அவருக்கு  சிகிச்சையளிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பெண் சாத்தூரிலுள்ள அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது அவருக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதற்காக சென்னை தாம்பரம் சாணடோரியத்தில் உள்ள சிறப்பு வைத்தியசாலையில் இருந்து மருந்து- மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும்,  பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற தனி மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களும் தீவிர சிகிச்சைகளை ஆரம்பித்துள்ளனர்.

http://athavannews.com/எச்-ஐ-வி-இரத்தம்-ஏற்றப்பட/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, text

 

 

 

Image may contain: 2 people, people smiling, text

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அரசு மருத்துவமனைகள் தராதரம் உலகம் அறிந்ததே .. கண்டதற்கும் சிலை வைப்பதும் , சிறுவர்களை போல தினமும் ரொக்கெற் விடுவதமான செலவை மருத்துவ மேம்பாட்டுகளுக்கு பயன்படுத்தலாம் 🤔

  • கருத்துக்கள உறவுகள்

ரத்த தானம் பெற்ற கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி: பரிசோதனை செய்யாமல் செலுத்தியது யார் குற்றம்?

 
பரிசோதனை செய்யாத ரத்தத்தால் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி: குழந்தைக்கு சிகிச்சை தொடக்கம்படத்தின் காப்புரிமை DESHAKALYAN CHOWDHURY

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் பரிசோதிக்காத ரத்தம் செலுத்தப்பட்டதால் கர்ப்பிணி ஒருவருக்கு எச்.ஐ.வி.தொற்று ஏற்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, கர்ப்பத்தில் உள்ள குழந்தையை காப்பாற்றத் தேவையான சிகிச்சைகள் எடுக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

சாத்தூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மனைவிக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட சில தினங்களுக்குப் பிறகு, ரத்தம் கொடுத்த நபர் தாமாக முன்வந்து தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்தது என்று அறிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள முற்பட்டபோது, எட்டு மாத கர்ப்பிணி ஒருவருக்கு செலுத்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளித்துவருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ரத்தவங்கி அதிகாரிகளை நேரில் சந்தித்து விசாரணை நடத்திவருகிறார்.

பரிசோதனை செய்யாத ரத்தத்தால் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி: குழந்தைக்கு சிகிச்சை தொடக்கம்படத்தின் காப்புரிமை Hindustan Times

இந்த சம்பவத்திற்கு பிறகு ரத்த வங்கி அதிகாரிகள் மூவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என விருதுநகர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் மனோகரன் ஊடகங்களிடம் தெரிவித்தார். ''இது மருத்துவதுறையில் ஏற்பட்ட ஒரு விபத்து. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான மருத்துவ வசதிகளை அளிப்போம். அவர் பட்டதாரி என்பதால், அவரின் பிரசவத்திற்கு பின்னர், அவருக்கு அரசு வேலை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது கணவருக்கும் அரசு வேலை கிடைக்க முயற்சிகள் செய்துவருகிறோம்,'' என மனோகரன் தெரிவித்தார்.

சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த அவலத்தால், சிகிச்சைக்காக ரத்தத்தைப் பெறும் நிலையில் உள்ள நோயாளிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

பிபிசி தமிழிடம் பேசிய சிவகாசியைச் சேர்ந்த குருதிக் கொடை ஆர்வலர் ஆர்.சரவணன், ரத்ததான முகாம் நடக்கும் இடங்களில் முறையான பரிசோதனை செய்யப்படவேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளதாக தெரிவித்தார்.

பரிசோதனை செய்யாத ரத்தத்தால் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி: குழந்தைக்கு சிகிச்சை தொடக்கம்படத்தின் காப்புரிமை SHAMMI MEHRA

''நான் கடந்த 12 ஆண்டுகளாக ரத்த தானம் செய்துவருகிறேன். ஒருவர் தொடர்ந்து ரத்த தானம் செய்பவராக இருந்தாலும், பரிசோதனை செய்தபின்னர் மட்டுமே அவரிடம் இருந்து ரத்தம் பெறப்படவேண்டும். நாங்கள் நடத்திய முகாம் ஒன்றில் இதுபோலவே எச்ஐவி தோற்று இருந்த நபர் ஒருவர் ரத்ததானம் செய்திருந்தார். ரத்தம் பெறப்பட்ட பின்னர் செய்த சோதனையில் இது தெரியவந்தது. அவரை அடையாளம் கண்டு அவரை சிகிச்சைக்கு கொண்டுச்சென்றோம், அவரது ரத்தம் உடனடியாக ரத்தவங்கிக்கு செல்வதை தடுத்தோம்,'' என்று கூறுகிறார் சரவணன்.

மருத்துவர்களின் அலட்சியத்தால் நேர்ந்த ஒரு சம்பவமாக சாத்தூர் பெண்ணின் விவகாரத்தை அணுகக்கூடாது என்றும் ரத்த வங்கிகள் செயல்படும் விதத்தை சீரமைக்கவேண்டும் என்றும் கூறுகிறார் சமூக ஆர்வலர் மற்றும் மருத்துவரான ரவீந்திரநாத்.

பரிசோதனை செய்யாத ரத்தத்தால் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி: குழந்தைக்கு சிகிச்சை தொடக்கம்படத்தின் காப்புரிமை MONEY SHARMA

''இதை வெறும் அலட்சியத்தால் ஏற்பட்ட சம்பவம் என்று கடந்து போய்விடமுடியாது. இந்திய அளவில் ரத்த வங்கி செயல்பாட்டில் தமிழகம் முன்னணியில் உள்ளது. ஆனால் எச்.ஐ.வி தொற்று இருந்த நபரிடம் ரத்தம் எடுக்கப்பட்டு, மற்றவருக்கு செலுத்தப்படும்வரை எந்தக்கட்டத்திலும் சோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்பது அவலநிலை. எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட ஆறு மாதங்கள் வரை, அந்த பாதிப்பை சாதாரண பரிசோதனைகள் மூலம் கண்டறியமுடியாது. ஆனால் நமது ரத்த வங்கிகள் செயல்படும் தரத்தை உயர்த்தி, பரிசோதனை முறைகளில், நியூக்லிக் அமிலப் பரிசோதனை செய்யப்பட்டால், எச்ஐவி தொற்று ஏற்பட்ட சில தினங்களில் கூட அதை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது,'' என்கிறார் ரவீந்திரநாத்.

இரத்தம் வழங்கிய இளைஞர் தற்கொலை முயற்சி

கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட இரத்தத்தை அளித்த இளைஞருக்கு இந்த சம்பவம் குறித்தும், தனக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருக்கும் விபரம் தெரியவரவே, நேற்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வீட்டில் பயிர்களுக்கு வைக்க இருந்த எலி மருந்தை சாப்பிட்டதால் மயங்கி விழுந்த இளைஞருக்கு கமுதி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

https://www.bbc.com/tamil/india-46683853

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.