Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாங் இ-4 விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாங் இ-4 விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது

January 3, 2019

change-4-lon-moon.jpg?resize=800%2C470

சாங் இ-4 ( chang’e E-4 )  விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. நிலவின் ஒரு பகுதி மட்டுமே எப்போதும் பூமியை நோக்கி உள்ள நிலையில் அதன் மற்றைய பகுதியின் பெரும்பாலானதினை பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை காணப்படுவதனால் அந்தப் பகுதியை நிலவின் இருண்ட பகுதி என அழைக்கப்படுகின்றது. .

அந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக முதல் முறையாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவின் சாங் இ-4 விண்கலம் கடந்த 8 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து நான்கு நாள்களாக பூமியை வட்டமிட்ட அந்த விண்கலம், கடந்த 12 ஆம் திகதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு நுழைந்தது.

இந்த நிலையில், நிலவின் இருண்ட பகுதியில் தரையிறங்குவதற்கு ஏற்ற வகையில், சாங் இ-4 விண்கலத்தின் வட்டப் பாதை, நீள்வட்டப் பாதையாக ஞாயிற்றுக்கிழமை மாற்றியமைக்கப்பட்டதனடிப்படையில் குறித்த விண்கலம் இன்று தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

chi.jpg?resize=600%2C400

 

http://globaltamilnews.net/2019/108732/

  • கருத்துக்கள உறவுகள்

நிலவில் சீன விண்கலம் சாங்'இ 4: நிலவின் துருவப்பகுதியில் தரையிறங்கும் முதல் வாகனம்

  •  
     
சீன அரசு ஊடகத்தில் சித்திரிக்கப்பட்டுள்ள ரோபோ விண்கலம்.படத்தின் காப்புரிமை TWITTER/CGTNOFFICIAL Image caption சீன அரசு ஊடகத்தில் சித்திரிக்கப்பட்டுள்ள ரோபோ விண்கலம்.

நிலவின் தொலைதூரப் பகுதியில் தமது ரோபோ விண்கலம் ஒன்றைத் தரையிறக்கியதாக சீனா கூறியுள்ளது. இது போன்ற ரோபோ விண்கலம் ஒன்று நிலவில் தரையிறங்குவது இதுவே முதல் முறை.

சாங்'இ-4 என்ற அந்த விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள ஐட்கென் படுகையில் பெய்ஜிங் நேரப்படி காலை 10.26 மணிக்கு (2.26 கிரீன்விச் நேரம்) தரையிறங்கியதாக சீனாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த வட்டாரத்தின் மண்ணியல் வகையை ஆராய்வதற்கும், உயிரியல் தொடர்பான ஆய்வுகள் நடத்துவதற்கும் தேவையான கருவிகள் இந்த விண்கலத்தில் உள்ளன.

இந்த விண்கலம் தரையிறங்கியதை, விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் என்று விவரித்துள்ளது சீன அரசு ஊடகம்.

ஏனெனில் இதுவரையில் நிலவுக்கு சென்ற விண்கலங்கள் எல்லாம் நிலவின் புவியை நோக்கிய பகுதியிலேயே தரையிறங்கின. இதுவரை கண்டறியப்படாத நிலவின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கலம் தரையிறங்குவது இதுவே முதல் முறை.

கடந்த சில நாள்களாகவே, சாங்'இ-4 விண்கலம் தரையிறங்குவதற்காக தமது சுற்றுப்பாதையை நிலவை நோக்கி தாழ்த்திவந்தது.

கடந்தவார இறுதியில் இந்த விண்கலம் நிலவை நெருங்கி நீள் வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியதாகவும், அந்நிலையில் நிலவின் தரைப் பகுதிக்கும் விண்கலத்துக்குமான குறைந்தபட்ச தொலைவு வெறும் 15 கிலோ மீட்டராக இருந்ததாகவும் சீன ஊடகம் தெரிவித்தது.

நிலவின் தொலைதூரப் பகுதியில் விண்கலத்தை தரையிறக்குவது என்ற முடிவு, இந்தப் பயணத்தை மிகுந்த சிக்கலும், ஆபத்தும் நிறைந்ததாக மாற்றியது. இதற்கு முன் நிலவை நோக்கி சீனா அனுப்பிய சாங்'இ-3 விண்கலம் 2013-ம் ஆண்டு நிலவின் மேர் இம்பிரியம் பகுதியில் தரையிறங்கியது. அந்த விண்கலம் எதிர்கொண்டதைவிட தற்போதைய விண்கலப் பயணம் அதிக ஆபத்தை எதிர்கொண்டது.

ஆனால், சீனாவின் இந்த சமீபத்திய நிலவுப் பயணம் மூலம் நிலவின் பாறை மற்றும் தூசி மாதிரிகளை சீனா புவிக்கு கொண்டுவரும்.

https://www.bbc.com/tamil/science-46743610

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

à®à¯à®© à®à®°à®à¯ à®à®à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®¿à®¤à¯à®¤à®¿à®°à®¿à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³ à®°à¯à®ªà¯ விணà¯à®à®²à®®à¯.

எங்கடை நாகர்கோவில்  மண்புட்டியும் இரவிலை பாத்தால் உப்புடித்தான் தெரியும்...

kudathanai à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

எங்கடை நாகர்கோவில்  மண்புட்டியும் இரவிலை பாத்தால் உப்புடித்தான் தெரியும்

விஞ்ஞானம் ஒரு எல்லையை மீறி எதுவுமே செய்ய முடியாது. இதற்கு பெயர்தான் இயற்கை.

தாம் இருக்கும் பூமியை காக்க வக்கில்லாத மனிதம் சந்திரனிலும் செவ்வாயிலும் தண்ணியையும்  இன்னொரு வாழ்வையும் தேடுகின்றதாம்.:grin:

  • 2 weeks later...

செய்ய தெரிஞ்சவன் சாதனைகள் புரிகிறான். ஒன்றும் தெரியாதவன் நாகர்கோவிலில் நாகதம்பிரானுக்கு பொங்கி படைத்து சாப்பிட்டுவிட்டு தூங்கவேண்டியது தான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, tulpen said:

செய்ய தெரிஞ்சவன் சாதனைகள் புரிகிறான். ஒன்றும் தெரியாதவன் நாகர்கோவிலில் நாகதம்பிரானுக்கு பொங்கி படைத்து சாப்பிட்டுவிட்டு தூங்கவேண்டியது தான். 

 சாதனை அது இதெல்லாம் அரசுகள் சார்ந்த விடயங்கள்.

இதில் சாதாராண பொதுமக்கள் பாத்திரவாளிகளாக மாட்டார்கள்.

மேலைத்தேய கீழைத்தேய அரசுகளே மதத்தை முன்னிலைப்படுத்தும் போது  அதன் கீழ்வாழும் குப்பனும் சுப்பனும் எம்மாத்திரம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலவுக்கு எடுத்துச் செல்லபட்ட விதைகள் தளிர்விட்டிருப்பதாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் தகவல்

பூமிக்கு தொலை தூரத்தில் இருக்கும் நிலவின் மறுபக்கத்தில் சாங் இ–4 விண்கலம் முதல் முறை தரையிறக்கப்பட்டது. கடந்த ஜனவரி 3 ஆம் திகதி அங்கு தரையிறங்கிய இந்த விண்கலம் அந்த பிராந்தியத்தின் நிலவின் தன்மையை ஆராய்ந்து வருகிறது.நிலவில் தரையிறங்கிய இந்த விண்கலம் பருத்தி மற்றும் உருளைக்கிழங்கு விதைகளை எடுத்துச் சென்றது. விண்கலத்தில் மூடப்பட்ட கொள்கலனில் இந்த விதைகள் வைக்கப்பட்டுள்ளன.இந்த பருத்தி விதைகள் தற்போது மொட்டுகளாக தளிர்விட்டிருப்பதாக சீன அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.china

நிலவில் எந்த ஒரு உயிரியல் பொருளும் முளைவிட்டிருப்பது இது முதல் முறை என்பதோடு, நீண்டகால விண்வெளி ஆய்வுகளுக்கு இது முக்கிய முன்னெடுப்பாக கருதப்படுகிறது.சர்வதேச விண்வெளி நிலையத்தில் தாவரங்கள் வளர்க்கப்பட்டபோதும் நிலவில் இதுவே முதல்முறையாகும். இது செவ்வாய் கிரகம் போன்ற நீண்ட தூர விண்வெளி பயணங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.(15)

http://www.samakalam.com/செய்திகள்/நிலவுக்கு-எடுத்துச்-செல்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.