Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் கர்ப்பமான விவகாரம்.. போலீஸ் தீவிர விசாரணை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Woman in coma for over a decade gives birth

10 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் கர்ப்பமான விவகாரம்.. போலீஸ் தீவிர விசாரணை.

அமெரிக்காவில் 10 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயநினைவு இல்லாமல் இருந்த அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விபத்தொன்றில் சிக்கினார். இதில் அவர் கோமா நிலைக்குச் சென்றார். எனவே, அவர் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பீனிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோமாவில் இருந்த அப்பெண்ணை பலாத்காரம் செய்தது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர், டாஷா மெனாகர் கூறுகையில், ''கோமா நிலையில் உள்ள பெண்ணை கர்ப்பமாக்கிய கயவனை பிடிக்க, மருத்துவமனையில் பணியாற்றும், ஆண் ஊழியர்களிடம், டி.என்.ஏ., எனப்படும் மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/washington/woman-coma-over-decade-gives-birth-338307.html

  • கருத்துக்கள உறவுகள்

கோமா நிலையில் பெண்ணுக்கு குழந்தை பிறந்த விவகாரம்:மருத்துவமனை நிர்வாகத் தலைவர் ராஜினாமா!

 
அமெரிக்காவின் தென்மேற்கு மாகாணமான அரிசோனா மாகாணத்தின் பீனிக்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஹாசிண்ட்டா மருத்துவமனையில் 29 வயதான பெண் ஒருவர் கடந்த 14 ஆண்டுகளாக கோமாவில் சிகிச்சைபெற்று வந்துள்ளார்.

14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்மணி கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி  திடீரென்று பிள்ளை பெற்றெடுத்தார். இந்த விவகாரத்தில் முதற்கட்ட விசாரணையில் இந்த  பெண்மணி பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் கடும் சர்ச்சையை  ஏற்படுத்திய நிலையில் அந்த மருத்துவமனையின் முதன்மை நிர்வாக அதிகாரி பில் டிம்மன்ஸ் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனிடையே மருத்துவமனையின் முதன்மை நிர்வாக அதிகாரி பில் டிம்மன்ஸ் அறியாமல் இந்த விவகாரம் நடந்திருக்க வாய்ப்பில்லை என முன்னாள் அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். நீண்ட பத்தாண்டு காலம் அந்த மருத்துவமனையில் தாம் பணியாற்றியதாகவும், அப்போது இதுபோன்று கோமா நிலையில் இருந்த ஆண் நோயாளி ஒருவர் தொடர்பில் அவரது பாலுறுப்பு குறித்து அங்குள்ள நர்சுகள் ஆபாசமாக கிண்டல் செய்ததை தாம் காதால் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி பெண் நர்சுகளால் அந்த நோயாளி துஷ்பிரயோகத்திற்கு இரையாகியிருக்கலாம் எனவும், ஆனால் இந்த விவகாரத்தை பில் டிம்மன்ஸ் மேலிடத்திற்கு தெரிவிக்காமல் மூடிமறைத்ததாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். பில் டிம்மன்ஸ் என்றாலே அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் பயந்து நடுங்குவதாகவும், அவருக்கு தெரியாமல் அந்த மருத்துவமனையில் எதும் நடக்காது எனவும் அந்த முன்னாள் ஊழியர் தெரிவித்துள்ளார். தற்போது கோமாவில் இருந்த பெண் பிள்ளை பெற்ற விவகாரத்திலும் அதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

அந்த மருத்துவமனையில் நோயாளிகள் நிர்வாணமாக இருக்கும்போது அல்லது அவர்களின் உடல்களை துடைக்கும்போதோ போதுமான தனியுரிமை இல்லை என முறைகேடு குறித்து புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக நியூயார்க் டைம்ஸின் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தற்போது விசாரணையில் இருப்பதால் மேற்கொண்டு எந்தவொரு தகவலையும் தர மறுத்துவிட்டார் ஃ பீனிக்ஸ் காவல்துறை செய்திதொடர்பாளர்.

 

 

http://akkinikkunchu.com/?p=71412

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

14 ஆண்டுகளாக கோமாவிலிருந்த பெண் குழந்தை பிரசவிப்பு ; சந்தேகநபர் சிக்கினார்

 

14 ஆண்டுகளாக கோமா நிலையிலிருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஆண் தாதியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

usa.jpg

அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் 29 வயதான பெண் ஒருவர், கடந்த 14 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.  

இந் நிலையில் அவர் கடந்த மாதம் 29 ஆம் திகதி குழந்தையொன்றை பிரசிவித்துள்ளார். இது அங்குள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம் என்கிற கோணத்தில் பொலிஸார் உண்மையை கண்டறிவதற்காக வைத்தியசாலையில் பணியாற்றும் அனைத்து ஆண்களையும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

இன்போதேபே கோமாவில் இருந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்ததற்கு வைத்தியசாலையில் பணிபுரியும் 36 வயதுடைய ஆண் தாதியர் ஒருவர் காரணம் என தெரியவந்துள்ளது. 

இதையடுத்து பீனிக்ஸ் நகர பொலிஸார் அவரை கைது செய்ததுடன், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

http://www.virakesari.lk/article/48682

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பன் வைக்கோல் போருக்குள் இல்லை என்பதாக, டிஎன்ஏ டெஸ்டுக்கு முதலே, பிள்ளையின்ற, நிறம், தலை சுருளல் வைத்தே, இது ஒரு கறுவல்லம்மான் வேலை என்று இலகுவாக போலிசார் ஊகித்திருப்பாரகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.