Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு ஆளுனர் தெரிவில் என்ன நடந்தது?; சுந்தரலிங்கத்திற்கு கொடுத்த வாக்குறுதி என்னானது?: பின்னணியில் இயங்கிய ‘மகாராஜா’வின் கரங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு ஆளுனர் தெரிவில் என்ன நடந்தது?; சுந்தரலிங்கத்திற்கு கொடுத்த வாக்குறுதி என்னானது?: பின்னணியில் இயங்கிய ‘மகாராஜா’வின் கரங்கள்!

January 7, 2019
49506465_286645258662436_150546107891659

வடமாகாண ஆளுனராக சுரேன் இராகவன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண ஆளுனராக நியமிக்கப்படப் போவது அவரா, இவரா என பெரும் ஊகங்களும், எதிர்பார்ப்புக்களும் நிலவி வந்த நிலையில், யாருமே எதிர்பாராத ஒருவர் இன்று திடீரென ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அவர் எப்படி நியமிக்கப்பட்டார்?

அதற்கு முன்னதாக, ஆளுனர் பட்டியலில் முதலிடத்தில் இருந்து, கடைசியில் அல்வா கொடுக்கப்பட்ட ஒருவரை பற்றிய தகவலை சொல்கிறோம்.

வடக்கு ஆளுனர் பட்டியலில் கடைசிவரை முதலிடத்தில் இருந்தவர் பி.சுந்தரலிங்கம்.  கொழும்பு மயூரபதி பத்திரகாளி தேவஸ்தான அறங்காவலர். கடந்த மூன்று நான்கு நாட்களிற்கு முன்னதாகவே வடக்கு ஆளுனர் நீங்கள்தான் என ஜனாதிபதி தரப்பிலிருந்து அவருக்கு நம்பிக்கையான உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்திருந்தது.

ஆளுனர் நியமனத்தை உறுதிசெய்ய, ஜனாதிபதியும், பி.சுந்தரலிங்கமும் கண்டியில் நேரடியாக சந்தித்து பேசியுமிருந்தார்கள். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையே மேலே இணைத்துள்ளோம்.

மஹிந்த ராஜபக்ச தரப்புடன் பி.சுந்தரலிங்கத்திற்கு இருந்த மெல்லிய தொடர்பு காரணமாக, ஆளுனர் ரேஸில் அவர் முன்னிறுத்தப்பட்டுள்ளார். பிரபல்யமான ஆலய அறங்காவலர், பக்திப்பழமாக இருக்கிறார், மஹிந்த ராஜபக்ச தரப்பின் சிபாரிசும் இருந்தது. அவரையே ஆளுனராக நியமிக்கலாமென்றுதான் மைத்திரி திட்டமிட்டிருந்தார். வாக்குறுதியும் அளித்திருந்தார்.

ஆனால், திடீரென எல்லாம் தலைகீழாக மாறி- புதிய ஆளுனராக சுரேன் இராகவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த திடீர் மாற்றத்தின் பின்னணி என்ன?

தமிழ்பக்கம் இது தொடர்பாக சில நம்பிக்கையான மூலங்களை தொடர்புகொண்டபோது, கிடைத்த தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

“மகாராஜா“ ஒருவரே இந்த நியமனத்தின் பின்னணியில் இருந்துள்ளார். சுரேன் இராகவன் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தபோது, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தலைவர், ஆலோசகர் என்ற பதவிக்கு தனக்கு நெருக்கமானவர்களை நியமிக்க விரும்பியிருந்தார். சிறீரங்காவை அந்த பொறுப்பில் நியமிக்க விரும்பியிருந்தார். எனினும், அப்போது ஜனாதிபதி அதை நிராகரித்து விட்டார். இதையடுத்தே, சுரேன் இராகவன் அந்த பொறுப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டார். மைத்திரி அதை ஏற்றுக்கொண்டார்.

இப்போது, சுரேன் இராகவனை வடக்கு ஆளுனராகவும் அந்த “மகாராஜா“ நியமித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

 கருத்து தவறான திரியில் பதியப்பட்டு விட்ட்து!

Edited by புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.