Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது.. திமிறி எழும் காளைகளை அடக்கி வரும் காளையர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாதà¯à®à®¾à®ªà¯à®ªà¯ பணி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது.. திமிறி எழும் காளைகளை அடக்கி வரும் காளையர்கள்

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது.

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது நம் வழக்கம். அதன்படி, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் 3 இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும், காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்த போட்டிக்காகவே கடந்த 15 நாட்களாக காளைகள், மாடிபிடி வீரர்கள் பதிவு, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவறை மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி இன்று பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக துவங்கியது.

மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஒய்வு பெற்ற நீதிபதி ராகவன் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

à®à®²à¯à®à¯à®à®°à¯ நà®à®°à®¾à®à®©à¯

636 காளைகள்:   இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 691 காளைகள், 594 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்று, இரண்டாம் சுற்று என சுற்றுக்கணக்கில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறும் காளைகளை அடைக்க வீரர்கள் படு உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

முன்னதாக, இவர்களுக்கு 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர்தான் மைதானத்துக்குள் இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. இது வேறு எப்போதும் இல்லாத முதன் முதலாக செய்யப்படும் புதிய அம்சம் ஆகும்.

à®à®°à®µà®¾à®°à®®à¯

ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாதவாறு மைதானத்தை சுற்றிலும்1095 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதைதவிர 10 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு, 5 அவசர உதவி ஆம்புலன்ஸ் வாகனங்கள் போன்றவை தயார் நிலையிலும் வைக்கப்பட்டுள்ளது.

போட்டியின் இறுதியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பைக், தங்க நாணயம், கட்டில், பீரோ, என பல பரிசுபொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதி மட்டுமல்லாது பிற ஊர்களிலிருந்தும் ஜல்லிக்கட்டு ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். பாய்ந்துவரும் காளைகளை அடக்கும் காளையர்களுக்கு கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி வருவதால், அவனியாபுரமே அமர்க்களமாக உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/madurai/jallikkattu-even-madurai-avaniyapuram-338915.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, தமிழ் சிறி said:

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது.. திமிறி எழும் காளைகளை அடக்கி வரும் காளையர்கள்

இந்த காளையை அடக்க முடியுமா?  :grin:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஜல்லிக்கட்டு  காணொளிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னது இந்த காளையா.. பெயரை கேட்டதுமே களத்தை விட்டு ஓடிய வீரர்கள்.. சுவாரசிய ஜல்லிக்கட்டு வீடியோ .

மதுரை: ஜல்லிக்கட்டில், ஒரு காளை மாட்டின் உரிமையாளர் பெயரை கேட்டதுமே, அத்தனை மாடுபிடி வீரர்களும், ஆளைவிடுங்கப்பா சாமி என ஒதுங்கிக் கொண்ட சுவாரஸ்ய நிகழ்வை பார்த்துள்ளீர்களா. இல்லையென்றால் இங்கே பாருங்கள்.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. இதில் உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டினரும் திரளாக பார்வையாளர்களாக பங்கேற்று ரசித்தனர். வீடியோ எடுத்து ஷேர் செய்து மகிழ்ந்தனர்.

சில காளைகள் காளையர்களால் அடக்கப்பட்டால், சில காளைகள் காளையர்களை பந்தாடி ஓடின. இப்படியாக, காளைகளுக்கும், காளையர்களுக்கும் நடுவே காலை முதலே, கடும் போட்டி நிலவியது. முன்னதாக அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் சிறப்பாக நடந்தேறியுள்ளன.

ஜல்லிக்கட்டு சிங்கம்

இதேபோலத்தான் மல்லம்பட்டியிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வாடிவாசலை திறந்ததும் வெளியே வந்தது அந்த காளை. கன்னத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். அது காளையில்லை. சிங்கம்! அப்படித்தான் சொல்ல வேண்டும். ஏன்னா, அந்த பெயரை கேட்டதுமே அரங்கமே அதிர்ந்தது. மாடுபிடி வீரர்கள் அத்தனை பேரும், புலியை பார்த்த மான்கள் போல ஓட்டம்பிடித்தனர்.

யார் அங்கே ?

தடுப்புகளின் மீது ஏறி நின்று கொண்டு, வாடிவாசலை நோக்கியபடி, இமை கொட்டாமல், அச்சத்தோடு பார்த்தபடியே இருந்தனர். கம்பீரமாக வெளியே வந்தது அந்த காளை. வந்ததும் பிற காளைகளை போல அது நேராக ஓடவில்லை. இங்கு யாரோ என்னை அடக்கனும்னு வந்தீங்களாமே.. யாருவே அது ? என்று மைண்ட் வாய்ஸ்சில் கேட்டபடி அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்ததே பார்க்கலாம். மாடுபிடி வீரர்களின் இதய துடிப்பு 18 பட்டிக்கும் லப்-டப் என்று கேட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

bull-tamers-ran-away-after-seeing-a-bull

ஓடாதீங்கப்பா

மேடையில் அமர்ந்தபடி மைக்கில் கமெண்டரி கொடுத்தவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஏம்ப்பா.. மாட்டக் கண்டா ஓடுறீங்களேப்பா.. மாடு பார்வையே சரியில்ல.. ஒரு பய கிரவுண்ட்ல இல்லை.. என்று ரன்னிங் கமெண்டரி கொடுத்தார். அவர் என்னதான், கிண்டல் செய்தாலும், மாடுபிடி வீரர்கள், தடுப்பை விட்டு இறங்குவதாக இல்லை.

மாடுதான் அவர்களை பிடித்தது

இதை பார்த்த வர்ணனையாளர், மாட்டை பிடித்தால் சைக்கிள் என்று அறிவித்தார். ம்ஹூம்.. பலனில்லை. ஆடி காரே கொடுத்தாலும் சரி, ஒருத்தரும், அசையமாட்டோம் என்பதை போல காணப்பட்டனர். ஆனால், காளை விடுவதாக இல்லை. என்னையா அடக்க வந்தீங்க என்று கேட்பதைபோல முறைத்து பார்த்ததோடு, தடுப்பின் மீது ஏறி நின்ற ஒரு வீரரின் பின்பக்கத்தை கொம்பால் குத்தி தூக்கிப்போட்டது.

பேரைக்கேட்டதும் அதிர்ந்த களம்

இது மாடு இல்லைப்பா.. பாயும் புலி என்ற முடிவுக்கு வந்த போட்டி ஏற்பாட்டாளர்கள், மாட்டின் உரிமையாளரே மாட்டை பிடித்துக்கொண்டு சென்றுவிடுங்கப்பா. உங்கள் காளை ஜெயித்துவிட்டது. களத்தைவிட்டும் போக மாட்டேங்குது என கெஞ்ச ஆரம்பித்துவிட்டனர். இதன்பிறகு காளை களத்தை விட்டு அழைத்துச் செல்லப்பட்ட பிறகே, காளையர்கள் களத்திற்குள் வந்தனர்.

அப்பேர்ப்பட்ட அந்த காளையின் உரிமையாளர் பெயர், மாத்தூர் பாலச்சந்திரன். இவரது பெயரை வர்ணனையாளர் கூறியதும்தான், காளையர்கள் தெறித்து ஓடிவிட்டனர்.

https://tamil.oneindia.com/news/madurai/bull-tamers-ran-away-after-seeing-bull-jallikattu-viral-video/articlecontent-pf348332-339024.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பேரைக்கேட்டதும் அதிர்ந்த களம்

இது மாடு இல்லைப்பா.. பாயும் புலி என்ற முடிவுக்கு வந்த போட்டி ஏற்பாட்டாளர்கள், மாட்டின் உரிமையாளரே மாட்டை பிடித்துக்கொண்டு சென்றுவிடுங்கப்பா. உங்கள் காளை ஜெயித்துவிட்டது. களத்தைவிட்டும் போக மாட்டேங்குது என கெஞ்ச ஆரம்பித்துவிட்டனர். இதன்பிறகு காளை களத்தை விட்டு அழைத்துச் செல்லப்பட்ட பிறகே, காளையர்கள் களத்திற்குள் வந்தனர்.

அப்பேர்ப்பட்ட அந்த காளையின் உரிமையாளர் பெயர், மாத்தூர் பாலச்சந்திரன். இவரது பெயரை வர்ணனையாளர் கூறியதும்தான், காளையர்கள் தெறித்து ஓடிவிட்டனர்.

அந்த மாடும்.... துறு துறு என்று, 360 பாகையில்  திரும்பிய படியே... நின்ற விதம், மிக அழகு.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அப்பேர்ப்பட்ட அந்த காளையின் உரிமையாளர் பெயர், மாத்தூர் பாலச்சந்திரன். இவரது பெயரை வர்ணனையாளர் கூறியதும்தான், காளையர்கள் தெறித்து ஓடிவிட்டனர்.

பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல.

10 hours ago, தமிழ் சிறி said:

அந்த மாடும்.... துறு துறு என்று, 360 பாகையில்  திரும்பிய படியே... நின்ற விதம், மிக அழகு.

அதுதானே தெம்பிருந்தா யாராவது வாங்கடா பார்ப்பம் என்று சுழன்று கொண்டு நிற்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல.

அதுதானே தெம்பிருந்தா யாராவது வாங்கடா பார்ப்பம் என்று சுழன்று கொண்டு நிற்குது.

ஈழப் பிரியன்  இந்த முறை, சில இடங்களில்  நடந்த ஜல்லிக் கட்டில் வென்றவர்களுக்கும், 
மாட்டு உரிமையாளர்களுக்கும்.... கார்  கூட, பரிசாக வழங்கினார்களாம்.
அப்படி ஒரு,  கார்... இந்த மாட்டின் மூலம்,  அதனை பயிற்றுவித்த  உரிமையாளருக்கு  கிடைத்திருந்தால் சந்தோசம்.
ஆனால்... அதனைப் பற்றிய,  செய்திகள் கிடைக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

edappaty-720x450.png

கின்னஸ் சாதனைக்கான விராலிமலை ஜல்லிக்கட்டு ஆரம்பம்

கின்னஸ் சாதனைக்கான விராலிமலை ஜல்லிக்கட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பித்து வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்மென்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், வேண்டுகோளுக்கமைய விராலிமலையில் பாரிய ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக 2000 மாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் 800க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தைப்பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கின்னஸ்-சாதனைக்கான-விரால/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்களின்  மாடுபிடி வீரர்கள்.. பயிற்சியின் போது..    

 

 

Image may contain: 13 people, people smiling, text

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.