Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் பிரிவு

Featured Replies

gangster13xw0.jpg

ஒரு நாள் உன்னை விட்டு பிரிந்து

வந்ததற்கே எப்படி பிரிய முடிந்ததென்றா

கேக்கிறாய் எங்கே உன் இதயத்தை

திறந்து பார் பிரிவுக் கவிதை

எழுதிக்கொண்டிருப்பேன்

நீயே சொல் ..

என் நம்பிக்கை நீயென்ற பின்

நம்பிக்கை இல்லாமல் நீ

தள்ளியே நின்றால் விழுந்திட

மாட்டெனோ

உன் முதல் சந்திப்பும்

உன் முதல் பிரிவும்

சில நாட்களுக்குள்

நடந்தேறியிருந்தாலும்

உன் பிரிவு மட்டும் இன்னும்

என்னை வாட்டுகிறது

உனக்கும் இரவில் உலாப் போக

பிடிக்குமா சரி வா போய் வருவோம்

அதற்க்கு முன் நிலாவிடம்

சொல்லிவிட்டு வா கொஞ்ச நேரம்

ஓய்வெடுத்து வரும்படி

உன்னை நான் பார்க்க வரும் போது

மட்டும்தான் ஏறும் பேருந்தையும்

இறங்கும் தரிபிடத்தையும் பக்கத்தில்

இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்து

கொள்கிறேன் அவ்வளவு அவசரம் எனக்கு

-யாழ்_அகத்தியன்

Edited by yaal_ahaththiyan

காதல் வயப்ப்பட்டவர்களின் மனநிலை....அழகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா....என்ன எல்லோரும் இன்னைக்கு காதல் கவிதையில கலக்குறியள்?

உங்க கவிதையும் அழகு..வாழ்த்துக்கள். :lol:

"உனக்கும் இரவில் உலாப் போக

பிடிக்குமா சரி வா போய் வருவோம்

அதற்க்கு முன் நிலாவிடம்

சொல்லிவிட்டு வா கொஞ்ச நேரம்

ஓய்வெடுத்து வரும்படி.... "

அடடா! என்னா பெருந்தன்மை! :P

"உன்னை நான் பார்க்க வரும் போது

மட்டும்தான் ஏறும் பேருந்தையும்

இறங்கும் தரிபிடத்தையும் பக்கத்தில்

இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்து

கொள்கிறேன் அவ்வளவு அவசரம் எனக்கு ... "

:lol: :lol: :(

நீயே சொல் ..

என் நம்பிக்கை நீயென்ற பின்

நம்பிக்கை இல்லாமல் நீ

தள்ளியே நின்றால் விழுந்திட

மாட்டெனோ

ம்ம் நல்லாயிருக்கு ....... உங்கள் கவி...! தொடர்ந்து கவி படையுங்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

காதலின் பிரிவு கொடுமை கொடுமை.

உங்கள் கவிதை அழகு

என் வாழ்வின் ஒரு நொடியை இக்கணத்தில் தொலைத்து விட்டேன்

அதோ பார் காலம் என்னை கடந்து போய்க்கொண்டே இருக்கிறது

இமைப்பொழுதில் மறைந்துவிடும் ஓர் ஒளிக்கீற்றைப் போலவே

நேரம் இருந்ததென்று அது முடிந்தபின் தான் தெரிகின்றது

எத்தனைனோ சூரியோதயங்களை நான் பார்க்கத் தவறிவிட்டேன்

கோடானுகோடி மழைத்துளிகளையும் அலட்சியமாய் தவறவிட்டேன்

உலகில் உன்னால் ஆக்கப்பட்ட எந்த ஒரு பொருளிலும் பார்க்க

என்றும் இயற்கையின் நிகழ்வுகள் தான் ஆயிரம் மடங்கு அழகானவை

நாங்கள் இருப்பது பலகோடி நிறங்கள் நிறைந்த ஒரு உலகம்

அது தனக்கு வேண்டிய நிறத்தில் தான் மனிதனுக்குத் தெரியும்

நீ என்றும் உன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கே விரும்புவாய்

அதற்காக வேண்டுமென்றே உயர்ந்தவன்போல் நடிக்காதே

அழகிய பொருளொன்றை எவராலும் செய்து காட்ட முடியும்

அதை நானும் நீயும் ஒற்றுமையாய் உள்ளம் இணைந்து செய்தோம்

ஆனால் நீயோ அதை நிலத்தில் தூக்கியெறிந்து உடைத்துவிட்டாய்

மனத்தின் கதவை இறுகச் சாத்தி என்னை வெளியே துரத்திவிட்டாய்

நாங்கள் எத்தனையோ மாலைப் பொழுதுகளில் இணைந்திருந்தோம்

நான் அலட்சியமாக விட்ட மழையுடன் இன்று என் கண்ணீர் கலக்கிறது

பிரிவு ஊசிபோல் இதயத்தை தைத்தாலும் அதை நான் பொருட்படுத்தாமல்

இனி என் நேரத்தின் விநாடிகளை வேறெதெற்கோ தான் பயன்படுத்துவேன்

ஆங்கிலக் கவிதை ஒன்றைத் தழுவி

தமிழில் நோர்வேஜியன்

Edited by Norwegian

"நாங்கள் இருப்பது பலகோடி நிறங்கள் நிறைந்த ஒரு உலகம்

அது தனக்கு வேண்டிய நிறத்தில் தான் மனிதனுக்குத் தெரியும்..."

அழகிய கவிதை, அழகிய மொழிபெயர்ப்பு, நன்றி!

உனக்கும் இரவில் உலாப் போக

பிடிக்குமா சரி வா போய் வருவோம்

அதற்க்கு முன் நிலாவிடம்

சொல்லிவிட்டு வா கொஞ்ச நேரம்

ஓய்வெடுத்து வரும்படி

அமாவாசை நாளில் முழு நாலும் உலா போகலாம் தாங்கள் :o

காதல்கவிதையால் நன்றாக உள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.