Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரன்பு -- திரைவிமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரன்பு - சினிமா விமர்சனம்

1548932055-8408.jpg

'கற்றது தமிழ்' ராம் இயக்கத்தில், மம்முட்டி கதாநாயகனாக நடித்து வெளிவரும் பேரன்பு திரைப்படம், இயற்கையின் பல குணங்களை விவரிக்கும் தனித்தனி அத்தியாயங்களின் வழியாக கதை சொல்லும் பாணியைக் கடைபிடிக்கிறது. நாம் வாழும் வாழ்க்கையின் உன்னதத்தைப் பற்றிப் பேசுகிற படம்.
 
'நீங்க எவ்வளவு நல்ல ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கனு நீங்க புரிஞ்சுக்கறதுக்காக என் வாழ்க்கையில நடந்த சில சம்பவங்களத் தேர்ந்தெடுத்து இந்தக் கதைய நான் எழுதறேன்..' என்கிற அமுதவனின் (மம்மூட்டி) குரலுடன் தொடங்கும் படம், இயற்கையை பல அத்தியாயங்களாக பிரித்து பேரன்புமிக்க ஒரு வாழ்வின் தரிசனத்தை பார்வையாளர்களுக்கு தருகிறது.

உலகமயமாக்கல் எப்படி தனி மனிதர்களின் வாழ்வில் தாக்கம் செலுத்துகிறது என்று தனது முந்தைய மூன்று படங்கள் மூலம் பேசிய இயக்குநர் ராம், இந்த திரைப்படத்தில் இயற்கையின் முரண் குறித்து கேள்வி எழுப்புகிறார்.
 
இயற்கை ஒவ்வொருவரையும் விதவிதமாய் படைத்திருக்கிறது. ஆனால் சமமாய் பாவிக்கிறது. ஏன் இந்த முரண்? என்ற கேள்வியே பேரன்பு.
 
'ஒரு குருவி, ஒரு குதிரை, ஒரு வீடு, கொஞ்சம் நெயில்பாலிஷ்'
 
இயற்கை இரக்கமற்றது, இயற்கை அதிசயமானது , இயற்கை மகத்துவமானது, இயற்கை அழகானது, இயற்கை கொடூரமானது, இயற்கை கருணையானது, இயற்கை பேரன்பானது என இயற்கையின் பல்வேறு குணங்கள் ஊடாக விரிகிறது இந்த திரைப்படம்.
 
இயற்கையின் ஒரு துண்டுதான் மனிதன். இந்த இயற்கையின் குணங்களை எப்படி அவன் வெளிப்படுத்துகிறான் என்பதை பேசுகிறது 'பேரன்பு'.

மனைவி பிரிந்து சென்றுவிட மாற்றுதிறனாளி மகளான பாப்பாவை (சாதனாவை) தனித்து வளர்க்கும் பொறுப்பு அமுதவனிடம் வந்து சேர்கிறது. இவர்கள் இருவர் வாழ்வில் இயற்கை எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை இவர்கள் கடந்து செல்லும், இவர்களை கடந்து செல்லும் மனிதர்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

 மனைவி விட்டுச் சென்ற பிறகு நகரத்தில் இருக்க அமுதவனுக்கு பிடிக்கவில்லை. அதுபோல குருவி செத்த ஊரில் இருக்க பாப்பாவுக்கும் பிடிக்கவில்லை. மனிதர்கள் இல்லாத இடமா குருவி சாகாத இடமா ஒரு இடம் தேடி கொடைக்கானிலில் நீர்நிலை ஓரம் இருக்கும் மரவீட்டிற்கு வந்து குடியேறுகிறார்கள்.

 பின் அவர்களுடன் வந்து சேரும் ஒரு குதிரை, புதிராக வந்து சேர்ந்து வஞ்சிக்கும் விஜயலட்சுமி (அஞ்சலி) என சில மனிதர்களை கொண்டு விரியும் இந்த திரைப்படம் இதுவரை தமிழ்சினிமாவில் பேசப்படாத ஒரு விஷயத்தை மிக எளிமையான காட்சி மொழின் வழியாக பேசி இருக்கிறது.
 
'இயற்கை பேரன்பானது'
 
முதல் பாதியில் வனம் சூழ நகரும் படம், இரண்டாம் பாதியில் மீண்டும் நகரத்திற்கு குடிபெயர்கிறது. இவர்கள் வாழ்வில் திருநங்கை மீரா (அஞ்சலி அமீர்) வந்து சேர்கிறார். அமுதவன் மீதான அவர் காதல் அமுதவனின் வாழ்க்கையை அசைத்துப் பார்க்கிறது. இந்த வாழ்வு பேரன்பானது என்பதை உணர்த்துகிறது.

படத்தில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிடலாம், அமுதவனை விட்டுச் சென்று இன்னொருவருடன் வாழும் அந்த பெண்ணின் முகத்தைக் கூட காட்டாமல் காட்சிப்படுத்தி இருப்பது, காமத்தை தாண்டிய அன்பும் , அரவணைப்பும்தான் அனைவருக்கும் தேவையானதாக இருக்கிறது என்பதை ஆழமாக போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது.

ஒளியால் மெல்ல ஒத்தடம் கொடுக்கும் தேனி ஈஸ்வரின் கேமிரா இயற்கையை அதே எளிமையுடன் காட்சிப்படுத்தி உள்ளது. ராமின் திரைப்படங்களில் யுவன்சங்கர் ராஜாவின் இசைக்கு எப்போதும் சிறகு முளைத்துவிடும். அந்த அற்புதம் இந்த திரைப்படத்திலும் நிகழ்ந்து இருக்கிறது.
 
நெதர்லாந்தின் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா, ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா மற்றும் இந்திய பனோராமா திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படைப்புதான்.
 
வில்லன் இல்லாத, வன்முறை இல்லாத இந்தப் படம், காட்சிக்கும், மனதுக்கும் இனிமையான அனுபவத்தைத் தந்தாலும், படம் மெதுவாக நகர்கிற உணர்வை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.

பாடல்கள் இனிமையாக இருந்தாலும், ராம் திரைப்படங்களின் ஒரு பிரிக்க முடியாத அம்சமாக இருந்துவந்த நா.முத்துக்குமார் பாடல் வரிகள் இல்லாத குறை பளிச்சென தெரிகிறது. கேட்ட நொடியில் மனதில் பதியும் பாடல் வரிகள் ஏதும் தென்படவில்லை.

https://m-tamil.webdunia.com/article/bbc-tamil-news/peranbu-tamil-film-movie-review-119013100061_1.html

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

பேரன்பு – திரைவிமர்சனம்

மனைவி ஓடிப்போனதால், முடக்கு வாதத்தால் அவதிப்படும் தனது குழந்தை சாதனாவை பார்த்துக்கொள்ள இந்தியா வருகிறார் மம்முட்டி. இங்கு வந்த பிறகு தான், தனது குடும்பத்தினருக்கே தனது மகள் தொந்தரவாக இருப்பதை உணர்கிறார். இதையடுத்து சாதனாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளிப்புறத்தில், இயற்கை சூழலில் இருக்கும் ஒரு வீட்டிற்கு செல்கிறார்.

 

தாய் பாசத்தால் ஏங்கும் சாதனாவின் அனைத்து தேவைகளையும் ஒரு தந்தையாக நிறைவேற்றி வைக்கவும் முயற்சிக்கிறார். தேனப்பனும், ஜே.எஸ்.கே சதீஷும் மம்முட்டி குடியிறுக்கும் வீட்டை அபகரிக்க முயற்சிக்கிறார்கள்.

இந்த நிலையில், மம்முட்டி வீட்டிற்கு வேலைக்காரியாக வரும் அஞ்சலி, சாதனாவை தன் பெண்ணாகவே கவனித்துக் கொள்ள ஆரம்பிக்கிறார். இதற்கிடையே மோசடி மூலம் தேனப்பன் மம்முட்டியின் வீட்டை எழுதி வாங்கிவிடுகிறார். வீட்டை இழந்த நிலையில், சாதனாவுடன் சென்னை திரும்புகிறார் மம்முட்டி.

பரபரப்பாக இயங்கும் சென்னை சூழலில் மம்முட்டி தனது குழந்தையை எப்படி கவனித்துக் கொள்கிறார்? குழந்தையின் தேவையை நிறைவேற்ற அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்ன? அதில் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? என்பதே பேரன்பின் மீதிக்கதை.

10 வருடங்களுக்கு பிறகு ஒரு தரமான கதையின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் மம்முட்டிக்கு வாழ்த்துக்கள். மலையாளத்தில் மாஸான நடிகராக இருக்கும் மம்முட்டி இதுபோன்ற ஒரு படத்தில் நடித்தது அவரது தரம் மற்றும் நற்சிந்தனையை காட்டுகிறது. ராமின் தேவையை ஒரு சாதாரண அப்பாவாக மம்முட்டி நிறைவேற்றி வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தனது குழந்தையின் தேவையை பூர்த்தி செய்யும், தனது மகள் படும் கஷ்டங்களை பார்த்து வேதனைப்படும் ஒரு தந்தையின் உணர்வுகளை அப்பட்டமாக பிரதிபலித்திருக்கிறார்.

தங்கமீன்கள் படத்திற்கு பிறகு சாதனா இதில் முற்றிலும் மாறுபட்ட, யாராலும் எளிதில் செய்ய முடியாத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று மனதில் பதிகிறார். கள்ளங்கபடமற்ற காதல், பேரன்பு, ஆசை, பாசம், இரக்கம் என அவளது உலகம் புதிரானது, வித்தியாசமானது. மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளை பிரதிபலிக்கிறார். தனக்காக தனி உலகம் இருந்தாலும், அதில் தனக்கும் ஆசைகள், விருப்பு வெறுப்புகள் உள்ளன என்பதை புரிய வைக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் சாதனாவை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தங்க மீன்கள் படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற சாதனாவுக்கு, இந்த படத்திற்காக மற்றுமொரு தேசிய விருது கொடுத்தாலும் போதாது. தங்கமீன்கள் சாதனா இனி பேரன்பின் சாதனாவாக மிளிர்வார்.

அஞ்சலி குறைவான நேரமே வந்தாலும், இதுவரை நடிக்காத அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திருநங்கை அஞ்சலி அமீர், தங்களை போன்றவர்களுக்கும் அன்பு, பாசம் உண்டு என்பதை உணர்த்திச் செல்கிறார்.

வாழ்க்கையின் எதார்த்தத்தை திரையில் அப்பட்டமாக காட்டுவதில் ராம் ஆகச்சிறந்தவர் என்பது பலருக்கும் தெரியும். அந்த வகையில் யாரும் தொடாத, எளிதில் தொட முடியாத ஒரு கதைக்கருவை பேரன்பாக படைத்திருக்கும் ராமுக்கு பாராட்டுக்கள். படத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையை விட்டுச் செல்லும் தாய், தாய் பாசத்தால் ஏங்கும் குழந்தை, குழந்தையை அரவணைக்க துடிக்கும் தந்தை என காட்சிகளை மனதில் பதிய வைக்கிறார். தன் மீது பாசம் காட்டும் அனைவரும் தன்னை விட்டு விலகிச் செல்வதை விரும்பாத குழந்தையின் கள்ளங்கபடமற்ற பாசம் உயர்வானது என்பதை புரியவைக்கிறார். நாம் அனைவரும் எப்படிப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை உணர வைத்திருக்கிறார். இயற்கையை பல அத்தியாயங்களாக காண்பித்திருக்கும் ராம் முடிவில் இயற்கையின் பேரன்பில் மகிழ்ச்சியடைகிறார். படத்தின் வசனங்கள் அருமை. படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் திரைக்கு கொண்டுவர முக்கிய காரணமாக இருந்த சூரிய பிரதாமனின் படத்தொகுப்பு படத்திற்கு கூடுதல் பலம். ராமின் சிறந்த படைப்பாக பேரன்பு பேசப்படும்.

முதல் பாதியில் யுவனின் மெல்லிசை மனதை வருட, இரண்டாவது பாதியில் பாடல்களால் மனதை குலைக்கிறார். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் இயற்கை காட்சிகள் எழில் கொஞ்சம் விதமாக உள்ளது.

மொத்தத்தில் `பேரன்பு´ இயக்குநரின் பெயர் சொல்லும்.

http://kisukisu.lk/?p=31007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.