Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜம்மு-காஷ்மீரில் படையினர் சென்ற பஸ் மீது தாக்குதல் - 34 பேர் பலி ; மேலும் பலர் வைத்தியசாலையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு-காஷ்மீரில் படையினர் சென்ற பஸ் மீது தாக்குதல் - 34 பேர் பலி ; மேலும் பலர் வைத்தியசாலையில்

 

இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட வெடிகுண்டுத் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

jamu.jpg

அத்துடன் இந்த விபத்தில் சிக்கி 44 பேர் காயமடைந்தும் உள்ளனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் உள்ள கோரிபொரா பகுதியில் 70 வாகனங்களில்  அதிகாரிகள் உள்பட மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் 2500 பேர் சென்று கொண்டு இருந்தனர்.

இதன்போது பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற 2 பஸ்கள் மீது பதுங்கி இருந்த தற்கொலை படை தீவிரவாதிகள் இந்த வெடிகுண்டுத் தாக்குதல்  நடத்தியுள்ளனர்.

jamu1.jpg

விபத்தில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 44 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களின் பலரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதனால், உயிரிழப்புகள் அதிகிரிக்க கூடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த  தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/50026

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

ஜம்மு காஷ்மீரில் மத்திய ஆயுத பொலிஸ் படை வீரர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

இந்த கொடூரத் தாக்குதலில் தொடரணியாகச் சென்ற வாகனங்களில் ஒன்று முற்றாக எரிந்துள்ளதால் அதில் பயணித்த வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு (இரண்டாம் இணைப்பு)

ஜம்மு காஷ்மீரில் மத்திய ஆயுத பொலிஸ் படை வீரர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் இணைவதற்காக 2500 இற்கும் மேற்பட்ட வீரர்கள் 78 வாகனங்களில் தொடரணியாகச் சென்றுகொண்டிருந்தபோது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை பயங்கரவாதிகள், வீரர்கள் சென்ற வாகனம் மீது மோதச் செய்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் ஒரு வாகனம் முற்றிலும் எரிந்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அத்துடன் வீரர்களின் தியாகம் வீண் போகாது என்றும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

Eight-CRPF-personnel-killed-as-blast-rip

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் – 18 வீரர்கள் உயிரிழப்பு! (முதலாம் இணைப்பு)

ஜம்மு-காஷ்மீரில் மத்திய ஆயுத பொலிஸ் படை வீரர்கள் சென்ற (Central Reserve Police Force) வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 18 வீரர்கள் உயரிழந்துள்ளதோடு பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மிரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலை வழியாக மத்திய ஆயுத பொலிஸ் படை வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்கள்.

இதன்போது வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதில் 18 வீரர்கள் உயிரிழந்தனர்.

குறித்த வாகனத்தில் அதிகமான வீரர்கள் சென்றநிலையில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

Eight-CRPF-personnel-killed-as-blast-rip

Eight-CRPF-personnel-killed-as-blast-rip

 

 

http://athavannews.com/ஜம்மு-காஷ்மீரில்-பயங்கர-3/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.