Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷ் விமானக் கடத்தல் முறியடிப்பு: சந்தேக நபர் சுட்டுக்கொலை! (2ஆம் இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für பà®à¯à®à®³à®¾à®¤à¯à®·à¯ விமானà®à¯à®à®à®¤à¯à®¤à®²à¯

பங்களாதேஷ் விமானக் கடத்தல் முறியடிப்பு: சந்தேக நபர் சுட்டுக்கொலை! (2ஆம் இணைப்பு)

பங்களாதேஷில் போயிங் 737 எனும் பயணிகள் விமானத்தினைக் கடத்த முயன்ற ஒருவரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

குறித்த விமானத்தின் விமானிகள் மற்றும் அதில் பயணித்த 142 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக சிட்டகாங் விமான நிலைய அதிகாரி சாஹில் மிராஜ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு மூலம் விமானத்தை வெடிக்க வைக்கப்போவதாகவும் தன்னிடம் பங்களாதேஷ் பிரதமர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் குறித்த தாக்குதல்தாரி தெரிவித்திருந்ததாகவும் இந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

8 நிமிடங்களுக்கு மேலாக இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் குறித்த தாக்குதல்தாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டதுடன், தாக்குதலிற்குப் பயன்படுத்திய பிஸ்டல் ரக கைத்துப்பாக்கியினையும் பங்களாதேஷ் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: பணயக் கைதிகளாக பயணிகள்!

பங்களாகதேஷில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பங்களாகதேஷ் சிட்டகாங்கில் இருந்து டாக்கா வழியாக டுபாய் செல்லவிருந்த விமானத்திற்கே குறித்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன், அவ்விமானத்தின் விமானிகள் மற்றும் பயணிகள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விமானக்கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் பங்களாகதேஷ் பிரதமர் ஹசினாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு கோரிக்கையினை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தை அடுத்து சிட்டகாங்க் விமான நிலையம் மூடப்பட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆயுதம் தாங்கிய தனிநபர் ஒருவரே குறித்த விமானத்தைக் கடத்த முயற்சி செய்துள்ளதாக என பங்களாகதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

http://athavannews.com/விமானத்தில்-வெடிகுண்டு-ம/

  • கருத்துக்கள உறவுகள்
  •  
வங்கதேசம்படத்தின் காப்புரிமை EPA

வங்கதேசத்தில் இருந்து துபாய் சென்று கொண்டிருந்த விமானத்தை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட பயணி, வங்கதேச சிறப்பு படைகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிட்டாகாங்கில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட பின் தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக அந்த பயணி எச்சரித்தப்பின் பாதுகாப்பு படையினரால் சுடப்பட்டார்.

'பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்' விமானத்தின் BG147 விமானத்தில் இருந்த 148 பயணிகளும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.

சந்தேக நபர் விமானத்தை கடத்த முயன்றதற்கான காரணம் தெரியவில்லை.

"25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் சுடப்பட்டபின் முதலில் காயமடைந்தார், பின் அவர் உயிரிழந்தார்" என ராணுவத்தினர் தெரிவித்ததாக ஏஎஃப்பி செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம்படத்தின் காப்புரிமை EPA

"நாங்கள் அவரை கைது செய்யவோ அல்லது சரணடைய வைக்கவோதான் முயற்சி செய்தோம். ஆனால், அவர் மறுத்துவிட்டார். எனவே, நாங்கள் அவரை சுட்டு விட்டோம்" என ராணுவ மேஜர் ஜென் மோடியூர் ரகுமான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

"அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர். அவரிடம் துப்பாக்கி இருந்தது. அதனை தவிர அவரிடம் ஒன்றும் இல்லை" என அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கடற்கரை நகரான சிட்டாகாங்கிற்கு செல்லும் மேற்கொள்ளும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பேச வேண்டும் என கோரியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணி ஒருவர் சந்தேகப்படும்படியாக நடந்து கொள்வதாகவும், விமானத்தை கடத்தப் போவதுபோல் அறிகுறிகள் தெரிவதாகவும் விமான ஊழியர் ஒருவர் தெரிவித்தார் என ராயட்டர்ஸ் செய்தி முகமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்டாகாங்கில் உள்ள ஷா அமநாத் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு, சுற்றி வளைக்கப்பட்டவுடன் சந்தேக நபருடன் அதிகாரிகள் பேச முயன்றனர்.

சமூக ஊடகங்களில், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்த போயிங் 737-800 விமானத்தை மக்கள் சுற்றி நின்று பார்ப்பது போலான புகைப்படங்கள் பகிரப்பட்டன.

இந்த விமானம் ஞாயிறன்று டாக்காவில் இருந்து புறப்பட்டு துபாயில் தரையிறங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

https://www.bbc.com/tamil/global-47353454

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.