Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான ஐரோப்பியத் தடையை உடன் நடைமுறைப்படுத்துக: இத்தாலியிடம் அதிபரிடம் மகிந்த ராஜபக்ச வலியுறுத்து.

Featured Replies

புலிகள் மீதான ஐரோப்பியத் தடையை உடன் நடைமுறைப்படுத்துக: இத்தாலியிடம் அதிபரிடம் மகிந்த ராஜபக்ச வலியுறுத்து.

புனித பாப்பரசரின் அழைப்பின் பெயரில் இத்தாலிக்கு மூன்றுநாள் அரச பயணமாகச் சென்றிருக்கும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று இத்தாலிய அதிபர் சில்வியோ பெலுஸ்கோனியைச் (Silvio Berlusconi) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சந்திப்பின் போது ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த பின்னர் விடுதலைப் புலிகள் மீது இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வில்லை எனவும் அவற்றை உடனடியா நடைமுறைக்கு கொண்டுவருமாறு இத்தாலி அதிபரிடம் வலியுறுத்தியுள்ளளார்.

நாளை புனித பாப்பரசரை மகிந்த ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

-Pathivu-

பேர்லுஸ்கோனியா இன்னும் இத்தாலிய ஜனாதிபதி ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கொலைப்படைத் தலைவன் விஜயம் செய்கையில் ஏதாவது ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்றனவா? இத்தாலி நண்பர்கள் யாராவது தகவல் தாருங்கள்.

ஈழச்சகோதரர்களே இலங்கை அரசியல் தலைவர்கள் இவ்வாறு சுற்றுப்பயணம் வரும்போது .அவர்கள் வருகையை எதிர்த்து அமைதியான முறையில் ப்ரான்ஸ் தமிழர்கள் போல் ...தமிழ்த்தாயின் குழந்தை மயூரன் போல் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்துங்கள் .இது போன்ற போராட்டங்கள் புலிகள் பற்றி பரப்பப்படும் பொய் பிரசாரங்களை முறியடிக்கும். தமிழ் மக்கள் புலிகளின் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள் என்று ராஜதந்திரிகளுக்கு புரிய வைக்கும்..........ஊடகங்களும் தங்கள் கவனத்தை ஈழத்தின் மேல் திருப்பும்...... இதன் மூலம் ஈழத்தில் சிங்களர்கள் ஆடும் வெறியாட்டத்தால் தமிழர்கள் படும் இன்னல்கள் அனைத்துலக நாடுகளையும் சென்றடயும்.

நான் இலங்கை தோல்வி அடைவதைக்காண ஆவலோடு தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருந்த போது மயூரன் மைதானத்தினுள் நுழைந்த மறுவினாடியே இந்திய தொலைக்காட்சி ஆட்டத்தைக்காட்டாமல் விளம்பரம் போட்டுவிட்டது.... தமிழீழ தனியரசுக்கு விளம்பரம் கிடைக்கக்கூடாதென்று எவ்வளவு விழிப்போடு இருக்கிறார்கள் பாருங்கள்.தமிழக பத்திரிக்கைகளும் இதை இருட்டடிப்பு செய்து விட்டன.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க உலகத்தமிழர்களே ஒன்றிணைந்து வலியுறுத்துங்கள்

ஏன் ஒரே நாளில் உலகெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்கள் அனைவரும் திரண்டு அமைதியாக இலங்கையை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் செய்யக்கூடாது.......அப்படி செய்தால் உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் கண்டிப்பாக ஈழத்தின் மீது பார்வையைத்திருப்பும்

ஊடகத்துறையினர் ஆதரங்களுடன் போதிய விளக்கங்கள் பெற்று இருந்தால் அவர்களே கேள்வி மேல் கேள்விகள் கேட்டு துளைத்து விடுவார்கள்...

அவர்களுக்கு தேவையான தகவல்கள் கொடுபட தகுந்தவர்கள் நடவடிக்கை எடுப்பர் என நம்புகிறோம்....

தமிழ் நாட்டில் குமுதம் ரிப்போட்டர் ஒரு உதாரணம்.....

எம்மால் முடியாது ஒன்றுமில்லை......

காலம் கடத்தல், கடமை தவறல் கொலைவெறியரசுக்கு வசதி.....

ஐரோப்பாவில் தடைகளை இல்லாமல் செய்வது நம் கையில் இருக்கு....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தரே நீவிர் முதலில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமுல்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடை வடை நடை எல்லாம் எங்களுக்கு பெரிய பிரச்சினையில்லை....ஜயா ராஜபக்ச அவர்களே இப்போது உலகநாடுகளிடம் நீங்கள் மன்றாடவேண்டியது உங்களைத் தடை செய்யவேண்டாம் என்பது தான்..உலகம் மாறினது தெரியாமல் பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருக்கிறீங்கள், ஏனய்யா உங்களுக்கு அறிவே வளரமாட்டுதா?

இலங்கை அரசை பற்றி இப்போ எல்லா நாடுகளும் புரிந்து கொண்டு விட்டனர், இத்தாலியில் உள்ளவர்கள் தங்கள் முன்னால் சர்வாதிகாரி முசோலினிய மகிந்த ரூபத்தில பாக்கலாம்

  • தொடங்கியவர்

பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டதற்கான காரணம் விளக்கப்படும் - ஐரோப்பிய ஒன்றியம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள அமைப்புகளுக்கு, அந்த அமைப்புகள் பயங்கவாரதப் பட்டியலில் இணைப்பட்டதற்கான காரணத்தை விளக்குவதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

லக்ஸம்பேர்;கில் நேற்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் 50ற்கும் மேற்பட்ட அமைப்புகளும், குழுக்களும் இணைக்கப்பட்டுள்ளன.

முகவரி இல்லாத அமைப்புகளுக்கு கடிதம் அனுப்ப முடியாது என்பதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் அவை பற்றிய விபரங்கள் இணைக்கப்பட இருப்பதாக, பெயர் குறிப்பட விரும்பாத ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியல் 6 மாதங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில், ஈரானின் முஜாஹிதீன் அமைப்பு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு காரணமாக அது புதுப்பிக்கப்படாமல் இருக்கின்றது.

இதனால் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடாது, மக்களுக்காகப் போராடும் அமைப்புகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கப்பட முடியால் இருப்பதாகக் கருதப்படுகின்றது.

-Puthinam-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.