Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரேந்திர மோதி:‘விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியது இந்தியா’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
நரேந்திர மோதிபடத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப் படம்

விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். இந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ள உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஏவுகணை செயற்கைக்கோளை மூன்று நிமிடங்களில் துல்லியமாக சுட்டு வீழ்த்தியதாக அவர் தெரிவித்தார்.

#MissionShakti என்று பெயரிடப்பட்ட இந்த விண்வெளித் திட்டம் முழுவதும் இந்தியத் தொழில்நுட்பங்களைக் கொண்டே செய்லபடுத்தப்பட்டது என்றார் மோதி.

இந்தியா 'லோ எர்த் ஆர்பிட் சேட்டிலைட்' எனப்படும் தாழ்வான உயரத்தில் பறக்கும் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், இந்தியா ஒரு விண்வெளி வல்லரசாக ஏற்கனவே உருவெடுத்துள்ளது என்றும் தனது உரையில் மோதி குறிப்பிட்டார்.

இந்திய விஞ்ஞானிகள் குறித்து நமது பெருமை என்றும் பூமியை நேரலையாக கண்காணிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு ஆற்றிய உரையில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோதிபடத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப் படம்

பூமியின் மேல் பரப்புக்கு மேல் 400 முதல் 1000 மைல் தொலைவில் வட்டமிடும் செயற்கைக்கோள்கள் 'லோ எர்த் ஆர்பிட்ஸ்' எனப்படும்.

இன்று காலை 11.45 மணி முதல் 12.00 மணி வரை நாட்டு மக்களுக்கு உரையாற்றப்போவதாக அவர் முன்னதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். தொலைக்காட்சி, வானொலி அல்லது சமூக ஊடகங்கள் மூலம் தனது உரையை கேட்குமாறு அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.

12.15 மணிக்கு மேல் உரையை தொடங்கிய அவர், இந்திய விண்வெளி துறையின் சாதனைகள் குறித்து பேசினார்.

நடத்தை விதி மீறப்பட்டதா?

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சமயத்தில் இத்தகைய அறிவிப்பு ஒன்றை பிரதமர் வெளியிட்டிருப்பது நடத்தை விதிகளை மீரியதாகுமா என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"பிரதமர் மோதி பேசியிருப்பது நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயம். இது குறித்து தேர்தல் நடத்தை விதிமுறைகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. நாட்டின் பிரதமராகவே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதால் இது விதிமீறலாகத் தோன்றவில்லை. எனினும், தேர்தல் ஆணையம் இதை ஆராய வேண்டும்," என்றார்.

ராணுவ மயமாகும் விண்வெளி

ஜொனாதன் மார்கஸ், ஆசிரியர், பிபிசி பாதுகாப்பு பிரிவு.

குடிமை மற்றும் ராணுவப் பயன்பாடு ஆகிய இரு நோக்கங்களுக்காகவும் வல்லரசு நாடுகள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறன.

உளவு, கண்காணிப்பு, வழிகாட்டி உள்ளிட்ட நோக்கங்களுக்காக பல நாடுகளும் செயற்கைக்கோள்களை பயன்படுத்துவதால் அவை அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளன.

செயற்கைக்கோள்களை இடைமறித்துத் தாக்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ள மிகச்சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. விண்வெளியை ராணுவ மயமாக்கும் போக்கின் இன்னொரு அங்கமாகவே இது உள்ளது.

விண்வெளியை ராணுவ மயமாக்குவதை தடுக்க அழைப்பு விடுக்கும் செயல்பாட்டாளர்கள், தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்த இந்தச் செய்தி வழிவகை செய்யும்.

கிண்டல் செய்த ராகுல்

டி.ஆர்.டி.ஓ -வுக்கு வாழ்த்துகளை கூறி உள்ள ராகுல் காந்தி, கிண்டல் செய்யும் விதமாக பிரதமருக்கு உலக நாடக தின வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-47716707

  • கருத்துக்கள உறவுகள்

Ambulimama.jpg

ராணி காமிக்ஸ் , முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் அது ஓர் கனா காலம் .. மீண்டும் வருகுது மிக்க மகிழ்ச்சி..☺️

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

###################### #######################

 

Image may contain: 5 people, people standing, wedding and text

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

விண்வெளியிலும் 'சவுகிதார்'; தீவிரவாதிகள் உடலை பாக். இன்னும் கணக்கிடுகிறது: பிரதமர் மோடி பெருமிதம்

Published :  29 Mar 2019  13:25 IST
Updated :  29 Mar 2019  13:27 IST

பி.டி.ஐ

ஜேப்போர்
 
modijpg

ஒடிசா மாநிலம், ஜேப்பூரில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காட்சி : படம் ஏஎன்ஐ

விண்வெளியில் காவலாளியை உருவாக்குவதற்கு (சவுகிதார்) எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று பிரதமர் மோடி ஆவேசமாகப் பேசினார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ்  உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

ஒடிசா மாநிலம், கோரபுட் மாவட்டம், ஜேப்பூரில் இன்று நடந்த பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''மக்களின் ஆதரவு இல்லாமல் நாட்டில் எந்த ஒருபகுதியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால், வளர்ச்சிப் பணிகளைச் செய்ய முடியாது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தொண்டர்களின் ஆதரவு, மக்களின் ஆதரவும், ஆசியும் எங்களுக்குத் தேவை.

ஓடிசா மாநிலத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டுவராமல் எந்தவிதமான மேம்பாட்டுப் பணிகளையும் செய்ய முடியாது. கடந்த 5 ஆண்டுகளாக, எங்களுடைய அரசு , 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளது, 3 ஆயிரம் வீடுகளுக்கு மின்வசதியும, 40 லட்சம் வீடுகளுக்கு சமையல் கேஸ் வசதியும் அளித்துள்ளது.

விண்வெளியில் நமது செயற்கைக்கோள்களைப் பாதுகாக்க நாங்கள் காவலாளியை (சவுகிதார்) உருவாக்கி இருக்கிறோம். நமது செயற்கைக்கோளுக்கு ஊறுவிளைக்கும் எந்த செயற்கைக்கோளையும் தாக்கி அழிக்கும் வல்லமை உடைய ஏவுகணையைக் கண்டுபிடித்துள்ளோம். அதற்கான மிஷன் சக்தி சோதனையையும் வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளோம்.

modijpgjpg

ஜேப்பூரில் இன்று நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் ஒடிசாவின் பாரம்பரிய தொப்பி அணிந்து மக்களிடம் தோன்றிய பிரதமர் மோடி: படம் பிஸ்வராஜன் ரவுட்

 

ஆனால், விண்வெளியில் நாம் படைத்த சாதனையை எதிர்க்கட்சிகள் இகழ்ந்து பேசுகிறார்கள். நம்முடைய ஏ-சாட் தொழில்நுட்ப சாதனையை இழிவாகப் பேசும் எதிர்க்கட்சிகளுக்கு தேர்தலில் தகுந்த பதிலை நீங்கள் அளிக்க வேண்டும். உறுதியான முடிவுகளை அரசு எடுப்பதற்கு பெரும்பான்மை அரசு தேவை. குரல் கொடுப்பதற்காக அரசு அல்லாமல் நிலையான அரசு அமைய வாக்களிக்க வேண்டும்.

உங்களுக்கு வலிமையான அரசு வேண்டுமா அல்லது உதவி செய்ய இயலாத அரசு வேண்டுமா என்பதைப் பார்த்து வாக்களியுங்கள்.

பாலகோட்டில் நமது விமானப்படை நடத்திய தாக்குதல் நடத்தி ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால், பாகிஸ்தான் அரசு  தீவிரவாதிகளின் உடல்களை இன்னும் கணக்கிடுவதில் தீவிரமாக இருந்து வருகிறது. ஆனால், நம்முடைய எதிர்க்கட்சிகள் அந்தத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கிறார்கள்.

தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா செயல்படும்போது, நேரடியாக எதிரிகளின் இடத்துக்குச் சென்று அவர்களைத் தாக்குவோம். ஆனால், சிலர் அதற்கு ஆதாரம் கேட்கிறார்கள்''.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

https://tamil.thehindu.com/india/article26673470.ece

இந்திய மக்களை நினைத்தால் கவலையா இருக்கு!
தப்புவார்களா?!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.