Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தென்மராச்சி சரசாலைப் பகுதியில் நான்கு சிறீலங்கா படையினர் கடத்தப்பட்டுள்ளனர்.

Featured Replies

யாழ் தென்மராச்சி சரசாலைப் பகுதியில் நான்கு சிறீலங்கா படையினர் கடத்தல்.

யாழ் தென்மராச்சி சரசாலைப் பகுதியில் நான்கு சிறீலங்கா உந்துருளி படையினர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் சரசாலைப்பகுதியில் இரு இளைஞர்களை துரத்திச் சென்ற நான்கு உந்துருளிப்படையினரே காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

-Pathivu-

Edited by யாழ்வினோ

படையினரை கடத்தியது பீப்பீடீப்பீயின் வெள்ளைவான்காரராக இருக்கலாம்....

அல்லது யாழில் மோட்டார்சைக்கிள்களை திருடும் பீப்பீ.ஆர்.எல்.எவ் கும்பலாக இருக்கலாம்.....

படையினரை கடத்தியது பீப்பீடீப்பீயின் வெள்ளைவான்காரராக இருக்கலாம்....

அல்லது யாழில் மோட்டார்சைக்கிள்களை திருடும் பீப்பீ.ஆர்.எல்.எவ் கும்பலாக இருக்கலாம்.....

நானும் அப்படிதான் நினைனிறன் .

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு வதந்தி பரவுகிறது அறிந்தீர்களோ? அதாவது தமிழீழப்பகுதிகளில் உந்துருளியில் பயணிப்பவர்கள் தலைக்கவசம் போடுவதிற்கும், வெள்ளை நிற வான் பாவனைக்கும் கண்டிப்பான தடை வரப்போகுதாமே?

***************************

அதுசரி தாயகத்திலிருந்து உறுதிப்படுத்திய செய்திகளை வழங்கிவந்த சகோதரி மாதுகா எங்கே?

Edited by Valvai Mainthan

கள்ளுக்கொட்டில் பக்கம் தேடிப்பாருங்கோ :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஞாயிறு 22-04-2007 03:13 மணி தமிழீழம் ஜதாயகன்ஸ

யாழ் முன்னரங்க நிலைகளுக்கு படை நகர்த்தல்

யாழ் நீர்வேலி வாதரவத்தைஇ கனகம்புள்ளியடி கப்புதூர் வெளிகளில் ஆயிரக் கணக்கான சிறீலங்கா இராணுவத்தினரும்இ கனரக ஆயுத தளபாடங்களும் நேற்று குவிக்கப்பட்டிருந்ததால்இ மக்கள் மத்தியில் பாரிய அச்சம் தோன்றியிருந்தது.

வழமையாக படைத் தளங்களில் மறைவிடங்களில் வைக்கப்படும் ஆட்டிலறிஇ பல்குழல் எறிகணைகள் உட்பட கனரக ஆயுத தளபாடங்கள் வெளிப் பிரதேசத்திற்குக் கொண்டு சென்று குவிக்கப்பட்டிருந்தன.

ஆயுத தளபாடங்கள் மட்டுமன்றிஇ ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும் அந்த வெளிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அடிப்படை வசதிகள் அற்ற இடத்தில் ஆயிரக்கணக்கான படையினர் குவிக்கப்பட்டிருந்த காரணத்தினால்இ அருகிலுள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்ற படையினர்இ அவர்களின் பொருட்களைத் திருடியதுடன்இ கடைகளுக்குச் சென்று பொருட்களை பலவந்தமாகப் பறித்துச் சென்றனர்.

சிறீலங்காப் படையினரின் இந்தப் படைக்கலக் குவிப்பு காரணமாக அருகிலுள்ள மக்கள் மிகப்பெரும் அச்ச நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.

இருப்பினும் நேற்று மாலை இந்தப் படைக்கலங்கள் முன்னரங்க நிலைகளுக்கு நகர்த்தட்டு விட்டதாகக் குடாநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.நாவின் உதவி அமைப்பை தமிழர் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு சிறிலங்கா அரசு உத்தரவு

ஜஞாயிற்றுக்கிழமைஇ 22 ஏப்ரல் 2007இ 06:07 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவி அமைப்புக்களின் இணைப்பு அமைப்பை சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகள் உருவாகியுள்ள தமிழர் பகுதிகளான வடக்கு - கிழக்கு மாகாணங்களை விட்டு வெளியேறுமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்த அமைப்பு அதன் தேவைக்குரிய காலப்பகுதியை விட அதிக காலம் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பானது ஆழிப்பேரலை நிவாரண உதவிகளை வழங்குவதற்காக சிறிலங்காவிற்கு வந்திருந்தது. எனினும் வேறு பல தேவைகளுக்காக இங்கு அது தொடாந்து தங்கி சேவைகளை ஆற்றி வருகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவி அமைப்புக்களின் இணைப்பு அமைப்பானது மனித உரிமை கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள விரும்புவதாக அரசாங்கம் கோபமடைந்துள்ளது. வேறு பல அமைப்புக்கள் மனித உரிமை கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்துள்ளது.

ஆழிப்பேரலை நிவாரண உதவிகளுக்காக சிறிலங்காவிற்கு தமது அமைப்பு வந்திருந்தது எனவும். எனினும் அது மோதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிப்பணிகளை ஆற்றி வந்திருகின்றது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவி அமைப்புக்களின் இணைப்பு அமைப்பின் பேச்சாளர் ரீபென் பங்கர் நியூயோர்க்கில் தெரிவித்துள்ளார்.

தமது அமைப்பு மனித உரிமைகள் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த அமைப்பின் தலைவர் வலன்ரின் ஹற்சின்ஸகி தற்போது கிளிநொச்சியில் தங்கியுள்ளதுடன். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மகிந்தவுடன் மங்கள நிபந்தனையற்ற பேச்சுக்களை நடத்துவார்: அலவி மெளலானா

ஜஞாயிற்றுக்கிழமைஇ 22 ஏப்ரல் 2007இ 06:16 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் பதவி நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் மகிந்த நிபந்தனையற்ற முறையில் சந்தித்து பேச உள்ளதாக அவர்கள் இருவருக்கும் இடையில் சமரச முயற்சிகளை மேற்கொண்டு வரும் மேற்கு மாகாணா ஆளுநர் அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அவர்கள் இருவரும் முன் நிபந்தனைகள் அற்று பேச்சுக்களை நடத்துவதற்கு சாதகமாக சமிக்ஞைகளை தெரிவித்துள்ளனர்.

மகிந்த நாடு திரும்பியதும் இந்த சந்திப்பு நிகழும். இந்த சந்திப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னர் அவர்கள் இருவரையும் இணைப்பதுடன் அவர்களுக்கு இடையில் ஒரு மென் போக்கையும் ஏற்படுத்தும். அரசாங்கத்தில் மங்களவை மீண்டும் இணைப்பதில் மகிந்த ஆர்வமாக உள்ளார் என தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து மங்கள நாடு திரும்பிய பின்னர் மௌலானா அவரை சந்தித்து மீண்டும் அவரை அரசாங்கத்தில் இணைப்பது தொடர்பாக நீண்ட கலந்துரையாடலை நடத்தியிருந்தார். அதன் பின்னர் மங்களவுடன் பேசிய விடயங்களை மகிந்தவுடன் கலந்துரையாடிய அவர் மீண்டும் மங்களவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.

ஆனால் தற்போது சிறையில் உள்ள சிறீபதி சூரியாராச்சியின் நிலை தொடர்பாகவே தான் அக்கறை கொண்டிருப்பதாகவும்இ அவரது விருப்பங்களையும் கருத்தில் எடுக்க வேண்டும் எனவும் மங்கள தெரிவித்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

  • கருத்துக்கள உறவுகள்

அடடா! யாழ்ப்பாணத்தில் இப்போது கடத்தல்காரர்களையே கடத்திப் போகிறார்களா? யார் தான் விதி விலக்கு இதற்கு? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.