Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தின் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம்..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை..? இதோ ஷாக் ரிப்போர்ட் ..!

votr4564-1555423953.jpg

சென்னை: என்னப்பா.. விலைவாசி எல்லாம் ஏறி போச்சு..! இப்ப வந்து இந்த விசுகோத்து காசை கொடுக்கிறீங்களே.. ! என்ற அங்கலாய்ப்புகள் தமிழகத்தின் பல தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாயில் இருந்து எதிரொலித்துக் கொண்டுள்ளன.காரணம்.. இந்த லோக்சபா தேர்தலில், ஒரு ஓட்டுக்கு கொடுக்கப்படும் பணத்தின் அளவு 300 என்ற அளவில் குறைந்து போனதுதானாம்.

பெரம்பலூர், மதுரை, அரக்கோணம், தூத்துக்குடி தொகுதிகளில் ஓட்டுக்கு 300 ரூபாய் என்று ரேட் ஃபிக்ஸ் செய்துள்ளதாம் அந்த "மூன்றெழுத்து" முக்கிய கட்சி.

பணம் குறைவு

நான்கு எழுத்து கட்சி, தேனி மாதிரி தொகுதிகளில் ஓட்டுக்கு, ஆயிரம் ரூபாய் அள்ளி வீசி உள்ளது.. நீங்கள் என்னடா என்றால், உங்கள் பழைய தலைவரைப் போல, கையிலிருந்து பணத்தை எடுக்க மாட்டேன் என்கிறீர்களே.. ! என்று, மூன்று எழுத்து கட்சியின் முக்கிய பிரமுகர்களிடம் அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் திருவாளர் பொது ஜனங்கள்.

சமாதானங்கள்

என்னப்பா பண்ணுவது.. ஆட்சியில் இருப்பவர்கள் எளிதாக கொண்டு சென்று கொடுக்க முடிகிறது.. நமக்கு ஆயிரத்தெட்டு கெடுபிடி.. என்று சமாதானம் சொல்கிறார்கள் மூன்றெழுத்து கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள்.

சமத்துவம் இல்லையேப்பா..

அதற்குள் அந்த பக்கம் ஒரு களேபரம். சோளிங்கர் தொகுதியில் ஓட்டுக்கு, 2000 ரூபாய் கொடுக்கிறார்கள் என்று ஒரு தகவல் பரவிவிட, என்னப்பா.. பக்கத்து அரக்கோணத்துல, 300 ரூபாய், சோளிங்கரில் 2000 ரூபாயா.. இதிலும் சமத்துவம் கிடையாதா.. சின்சியாரிட்டிக்கும், சீனியாரிட்டிக்கும் என்னப்பா மரியாதை என்று அங்கலாய்த்துக் கொள்ளும் வாக்காளர்களையும் பார்க்க முடிகிறது.

தொழில் ரகசியம்

இன்று இரவு மற்றும் நாளை இரவுக்குள், பிற தொகுதி ரேட் நிலவரமும் தெரியவந்துவிடத்தான் போகிறது. அது 1000 ரூபாய் கொடுக்கும் கட்சியோ, 300 ரூபாய் கொடுக்கும் கட்சியோ, ஆனால் ஒருவருக்கு ஒருவர் கையும் களவுமாக பிடித்து கொடுப்பதில்லை என்பதில் தான் அடங்கியுள்ளது, அந்த அரசியல் கட்சிகளின் இத்தனை ஆண்டுகால தொழில் ரகசியம்.

https://tamil.oneindia.com/news/chennai/in-tamilnadu-what-is-the-vote-rate-347112.html

டிஸ்கி :

மூன்றெழுத்து கட்சி .. ( ??)

1 ) பெரம்பலூர் -- புதிய தலைமுறை தொலைக்காட்சி அதிபர் பாரிவேந்தர்..

2) மதுரை -- எழுத்தாளர் வெங்கடேசன் ( கம்யூனிஸ்ட்)

3) தூத்துகுடி -- கவிஞர் (?) கனிமொழி.

4) அரக்கோணம் -- சாராய ஆலை அதிபர் ஜெகத்ரட்சகன் ..

நான்கெழுத்து கட்சி ( ?? )

5) தேனி -- துணை முதல்வரிண்ட மகன் ரவீந்தரநாத்து.. 😎

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இரவு... மின்சாரத்தை துண்டித்து விட்டு, பணம் கொடுக்கின்ற திட்டமும்  இருக்கின்றதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இன்று இரவு... மின்சாரத்தை துண்டித்து விட்டு, பணம் கொடுக்கின்ற திட்டமும்  இருக்கின்றதாம்.

500 ரூபாவை கைக்குள் வைத்துவிட்டு 5000 ரூபா என்றும் சொல்வார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண வினியோகத்தில் கை வைத்த அதிமுக நிர்வாகி... பொங்கி எழுந்த மக்கள்.. தேனியில் நடந்த கூத்து..!

money_1200x630xt.jpg

வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதைத் தடுக்க அதிரடி சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டியில் முழு பணத்தையும் வினியோகிக்காத அதிமுக நிர்வாகி வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் பணபட்டுவாடா செய்யப்பட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்துவருகிறது.

அதிமுகவின் பணப்பட்டுவாடாவை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வெளிப்படுத்திவருகின்றன.
இந்நிலையில் தேனி தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூரில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வினியோகித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் அதிமுக நிர்வாகி ஒருவர் 500 ரூபாயை "ஸ்வாகா" செய்துவிட்டு வாக்காளர்களுக்கு 500 ரூபாய் மட்டும் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த பொதுமக்களில் சிலர், பணப் பட்டுவாடா செய்த அதிமுக கிளைச் செயலாளர் வீட்டை முற்றுகையிட்டனர்.

பெண்கள் அதிக அளவு முற்றுகையில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள் ஆத்திரத்தில் வாக்குவாதம் செய்ததால், முழுத் தொகையை பட்டுவாடா செய்வதாக அந்த நிர்வாகி உறுதியளித்ததாகத் தெரிகிறது. அதிமுக நிர்வாகியின் உறுதியை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://tamil.asianetnews.com/politics/admk-functionary-money-distribute-in-theni-pq3718

டிஸ்கி :

 

வாழ்க ஜ(ப)ணநாயகம் ..!  😇

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை ஐயாவும் இல்லை அம்மாவும் இல்லை பார்ப்பம் என்ன நடக்குது என்று .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.