Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை..!

student.jpg

10 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த பொதுத்தேர்வில், தமிழ் பாடத்தில்தான் குறைந்த அளவிலான பேர் தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் இந்த தேர்வு முடிவடைந்தது. மக்களவை தேர்தல் காரணமாக இந்த தேர்வு வேகமாக நடத்தி முடிக்கப்பட்டது. மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த தேர்வை எழுதி இருந்தார்கள். இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.3 சதவீதம் பேரும் மாணவிகள் 97 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.1 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 2018-ம் ஆண்டு 94.50 சதவீதமாக இருந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 95.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் முதலிடம்:-

மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் 98.53 சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்திலும், 98.48 சதவீதத்துடன் ராமநாதபுரம் 2-வது இடத்திலும், நாமக்கல் 3-வது இடத்தையும் பிடித்தது. 89.98 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது.

பாடவாரியாக தேர்ச்சி விகிதம்:-

மொழிப்பாடம்: 96.12%
ஆங்கிலம்: 97.35%
கணிதம்: 96.46%
அறிவியல்: 98.56%
சமூக அறிவியல்: 97.07%

https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/10-th-result-tamil-subject-pecentage-lower-pqpi8p

  • கருத்துக்கள உறவுகள்

96.12க்கும் 98.56 கற்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை. மேலும் இந்தத் தேர்ச்சி விகிதங்கள் மொத்தத்தில் செயற்கையாகவே தோன்றுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில்.... தமிழ் இருந்தால் போதும்.  
ஆங்கிலம் இரண்டாவது மொழியாக இருக்கலாம்.  
திராவிட  கொள்கைகள்.... இனி உதவாது.

கருணாநிதியின் மகன் ஸ்ராலின், முதல் அமைச்சராக வந்தால்.... 
தமிழநாட்டில்...  பாடசாலைகளில்  தமிழுக்கு முதல் இடம் சொல்லி,
அரச உத்தரவை.... பிறப்பித்தால்.... அதனைப் போல்...
எந்த, உயர் மகிழ்ச்சியும்...  இந்த உலகில்  இல்லை.

தி.மு.க.  இனியாவது... தமிழுக்கு முதலிடம் கொடுப்பார்களா... என்பது  சந்தேகமே...
கனிமொழியாவது...... இதனை,  பரிசீலிக்கலாம் ..
ஹ்ம்ம்...  உங்கள் அரசியலில், எங்கள் தமிழை மறந்தால்....
விரைவில்... காணமால் போவீர்கள். என்பது உறுதி.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் நாட்டில்.... தமிழ் இருந்தால் போதும்.  
ஆங்கிலம் இரண்டாவது மொழியாக இருக்கலாம்.  
திராவிட  கொள்கைகள்.... இனி உதவாது.

கருணாநிதியின் மகன் ஸ்ராலின், முதல் அமைச்சராக வந்தால்.... 
தமிழநாட்டில்...  பாடசாலைகளில்  தமிழுக்கு முதல் இடம் சொல்லி,
அரச உத்தரவை.... பிறப்பித்தால்.... அதனைப் போல்...
எந்த, உயர் மகிழ்ச்சியும்...  இந்த உலகில்  இல்லை.

தி.மு.க.  இனியாவது... தமிழுக்கு முதலிடம் கொடுப்பார்களா... என்பது  சந்தேகமே...
கனிமொழியாவது...... இதனை,  பரிசீலிக்கலாம் ..
ஹ்ம்ம்...  உங்கள் அரசியலில், எங்கள் தமிழை மறந்தால்....
விரைவில்... காணமால் போவீர்கள். என்பது உறுதி.

நாட்டையே போட்டி போட்டு விற்பவர்களிடம் தமிழைப் பற்றி கதைக்கிறீர்களே?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

நாட்டையே போட்டி போட்டு விற்பவர்களிடம் தமிழைப் பற்றி கதைக்கிறீர்களே?

"செவிடன் காதில், ஊதிய சங்கு"  என்றாலும்,
ஒரு,  தமிழனாய் சொல்ல வேண்டியது, எனது கடமை.
அதனை... அவர்கள் பின்பற்றா  விட்டால், 
பல தமிழர்கள் அந்தக் கேள்வியை கேட்பார்கள். எனற நம்பிக்கை.
"சிறு துளி... பெரு வெள்ளம்."   இது பால பாடம். :)

Edited by தமிழ் சிறி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் இனி தமிழ் பாடம் இருக்காது ! வெளியான அதிர்ச்சி தகவல் !!

school-education.jpg

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஒரு மொழி பாடத்தை அமல்படுத்துவதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு, பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது. அதன்படி இனி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் இனி தமிழ் அல்லது ஆங்கிலம் என ஏதாவது ஒரு பாடம் மட்டுமே இருக்கும் என தெரியவந்துள்ளது.

பள்ளி கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பு ஏற்றது முதல் கல்வித்துறையில் பல அதிரடியான மாற்றங்களை புகுத்தி வருகிறார். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளை போன்று 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொதுத்தேர்வு முறையில் மீண்டும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.

9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மொழி பாடங்களான தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் என்றும், ஆங்கிலம் முதல் தாள், இரண்டாம் தாள் என்றும் பிரிக்கப்பட்டு தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள் என்று இருப்பதை தமிழ் என்று ஒரே தேர்வாகவும், ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என்று இருப்பதை ஆங்கிலம் என்று ஒரே தேர்வாகவும் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன.

இதேபோல 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் மொழி பாடங்களாக தமிழ், ஆங்கிலம் என்று 2 பாடங்களும், 4 முக்கிய பாடங்களும் என மொத்தமாக 6 பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஏதாவது ஒரு பாடத்தை அமல்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மொழி பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொழிப்பாடம் ஒன்று குறையும் பட்சத்தில் தேர்வுகளின் எண்ணிக்கை 5 ஆக குறையும். இவ்வாறு குறையும்போது 600 ஆக இருந்த மொத்த மதிப்பெண்கள் 500 ஆக குறையும்.

இந்த முடிவுகளை நன்கு பரிசீலித்த பள்ளி கல்வித்துறை இதற்கான பரிந்துரையை, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசு அனுமதி கொடுத்தால் இந்த கல்வி ஆண்டு முதலே புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

https://tamil.asianetnews.com/politics/no-tamil-lesson-in-11th-abd-12th-prbkqu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.