Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேண்டாம் வெளிநாட்டுப் படைகள் – ஐ.நாவிடம் கூறினார் சிறிலங்கா அதிபர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் வெளிநாட்டுப் படைகள் – ஐ.நாவிடம் கூறினார் சிறிலங்கா அதிபர்

 

Miguel-Angle-Moratinos-maithri-300x200.jசிறிலங்காவில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு வெளிநாட்டுப் படைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐ.நாவிடம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, ஐ.நா பொதுச்செயலர், தமது சிறப்புப் பிரதிநிதியாக, நாகரீகங்களின் கூட்டமைப்புக்கான ஐ.நா உதவிச் செயலர் மிக்வேல் ஏஞ்சல் மொராடினசை, கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஐ.நா உதவசிச் செயலர் மிக்வேல் ஏஞ்சல் மொராடினஸ் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது, அவர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, நிலைமைகளை கட்டுப்பாட்டில் கொண்டு வர துரிதமாக நடவடிக்கை எடுத்தமைக்கு சிறிலங்கா அதிபருக்கு  வாழ்த்து தெரிவித்தார்.

சிறிலங்கா அதிபரின் நடவடிக்கைகளை பாராட்டிய ஐ.நா உதவிச்செயலர், இஸ்லாமிய தீவிரவாதத்தை அகற்றும் இந்த முயற்சிகளுக்கு அனைத்துலக சமூகம் தோள்கொடுக்கும் என குறிப்பிட்டார்.

அத்துடன், சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு நிபுணத்துவ உதவிகளை வழங்க, தீவிரவாத முறியடிப்பு நிபுணர்களின் குழுவொன்றை ஐ.நா பொதுச்செயலர் கொழும்புக்கு அனுப்பவுள்ளார் என்றும் ஐ.நா உதவிச் செயலர் மிக்வேல் ஏஞ்சல் மொராடினஸ் தெரிவித்தார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் முன்னாள் தலைவரான மிக்வேல் ஏஞ்சல் மொராடினஸ், தமது நாடான ஸ்பெய்னும் கூட 2004இல் அல்கெய்டா தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானதாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு அமைதியான நட்பு நாடுகளான சிறிலங்காவும் ஸ்பெய்னும், தீவிரவாதிகளால் இலக்கு வைக்கப்பட்டமை ஏமாற்றம் அளிக்கிறது என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிடுகையில்,  இந்த இக்கட்டான சூழலில்  ஆதரவு வழங்க முன்வந்த ஐ.நா பொதுச்செயலருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

“தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு நிபுணத்துவம் மற்றும் ஏனைய உதவிகள் தேவைப்படுகின்றன.

ஆனாலும், சிறிலங்கா படையினர் போதுமான திறனைக் கொண்டிருக்கின்றனர். இந்த நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டுப் படையினர் தேவையில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

Miguel-Angle-Moratinos-maithri.jpghttp://www.puthinappalakai.net/2019/05/01/news/37729

4 hours ago, nunavilan said:

சிறிலங்காவில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு வெளிநாட்டுப் படைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐ.நாவிடம் தெரிவித்துள்ளார்.

அரச பயங்கரவாதக் கட்டமைப்புகள் ஊடாக செய்த சதித்திட்டங்களை, சமூக விரோத  செயல்களை, சட்டவிரோத விரோத நடவடிக்கைகளை, அடித்த கொள்ளைகளை மறைக்க இதைவிட்டால் வேறு வழியில்லை!

இவை யாவும் கற்பனையே !
ஆண்டு 2098 : இலங்கை தீவு 64000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நாடாக இருந்து புவி வெப்பமடைந்து கடல் நீர்மட்டம் உயர்ந்தமையால் இப்பொழுது  59000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நாடாக உள்ளது.

நாட்டில் மூன்று வேறு இனமக்களை காணக்கூடியதாக உள்ளது. கருப்பு தோல் கொண்டவர்கள் அதிகமாகவும் ஐரோப்பிய பூர்வீகத்தை கொண்டவர்கள் மற்றும் மஞ்சள் தோலைக்கொண்டவர்களும் காணப்படுகின்றனர்.

காவி உடை போர்த்தியவர்கள் ஆங்காங்கே வெள்ளை உடுப்பு போட்டவர்களுடன் விவாதத்தில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது. மீண்டும் 1948 மாசி மாத நிலைக்குள் சென்றுவிட்டதாக கூறுவது போலுள்ளது.

பெரும்பான்மை மக்கள் கையில் சீனாவில் செய்து அமெரிக்காவில் வடிவமைத்த ஐபோனுடன் லீவைஸ் ஜீன்ஸ் அணிந்திருப்பத்தையும் பிஸ்ஸா மற்றும் பேர்கர் உணவு சாலைகளை அதிகமாக உள்ளன. ஓடும் வாகனங்களில் சாரதிகள் இல்லை. வானத்தில்  பறவைகள் இல்லை ஆனால் டரோன்கள் பறக்கின்றன.

வழிபாட்டுத்தலங்கள் செறிச்சோடி இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது,. அதேவேளை கணிசமான மக்கள் அன்றாட வாழ்க்கைக்கும் வசதி இல்லாமல் இருக்கின்றார்கள்.

ஆனால் சிங்க கோடி மட்டும் அதே இடத்தில் பறந்த வண்ணம் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுப் படைகள் வெளிப்படையாக இல்லாமல்.. ரகசியமாக தாராளமாக வரலாம். இதுதான் சொறீலங்கா ஆட்சியாளர்களின் நிலைப்பாடு எப்போதும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.