Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் பெருமளவு மக்கள் வாக்களிப்பு அமெரிக்க சார்பு வேட்பாளர் வெற்றி பெறும் சாத்தியம்

[23 - April - 2007]

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரத்தின் பின்னர் இடம் பெற்றுள்ளது.

பத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும் கொன்சர்வேட்டிவான நிக்கொலஸ் சர்கோசிக்கும் சோசலிஷ கட்சியைச் சேர்ந்த செகொலெனே ரோயலுக்கும் இடையில் கடும் போட்டி காணப்படுகின்றது.

கடுமையான சீர்திருத்தவாதி, அமெரிக்க சார்பாளர் எனக் கருதப்படும் சர்கோசி பல பிரான்ஸ் மக்களுக்கு அச்சமூட்டுபவராக காணப்படுகின்றார்.

சோசலிஷ வாதியான செகொலெனே ரோயல் இதற்கு நேர்மாறானவராகவும், பெண்ணிலை வாதியாகவும், தாய்மை உணர்வை ஏற்படுத்துபவராகவும் காணப்படுகின்றார். குடியேற்றவாசிகளுக்கு எதிராக நிலைப்பாட்டை கொண்டுள்ள ஜீன்.மேரி லெபென்னிற்கு பெருமளவு மக்கள் ஆதரவு காணப்படுகின்றது. பெருமளவு வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜக் சிராக்கிற்குப் பின்னர் பிரான்ஸின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுபவர் பாதுகாப்பற்ற உலகொன்றில் அணுவாயுத நாடான பிரான்ஸை வழிநடத்த வேண்டும். மேலும், பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்க வேண்டும்.

கருத்துக் கணிப்பில் முன்னிலையில் உள்ள நிக்கொலஸ் சர்கோசி அமெரிக்க சார்பு வெளிவிவகார கொள்கையை உருவாக்க தயாராகவுள்ளார்.

பிரான்ஸின் 40 வீதமான மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து இறுதி நிமிடம் வரை உறுதிசெய்யாமலிருந்தமை கருத்துக் கணிப்புகள் மூலம் புலனாகியுள்ளது.

சோசலிஷ வாதியான ரோயல், ஜனாதிபதி புஷ்ஷை சந்திக்கும் வேளை அவரது கொள்கைகள் என்னவென்று தெரியாமல் அவருடன் கைகுலுக்க போவதில்லையென தெரிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்படும் பட்சத்தில் பிரான்ஸின் முதலாவது பெண் ஜனாதிபதியாக ரோயல் விளங்குவார்.

இதன் காரணமாக பிரான்ஸ் வித்தியாசமாக விளங்கும் என தெரிவிக்கும் அவர் இடதுசாரி பொருளாதார கொள்கையை பின்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

முன்னணி வேட்பாளர்கள் இருவரும் 50 வயதை தாண்டியவர்கள் என்பதுடன் இளம் வாக்காளர்களை கவர்வதற்கு இணையம் மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

16 மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தனது விருப்பத்தை பகிரங்கப்படுத்திய ரோயலுக்கான ஆதரவு பல மடங்கு அதிகரித்துள்ளது.

தினக்குரல்

தேர்தலின் முதலாவது சுற்று நேற்று முடிவடைந்தது. இதில் சர்கோசி முதல் இடத்திலும் றோயல் இரண்டாவது இடத்தில் நிற்கிறா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் ஒரு பார்வை

[29 - April - 2007]

-பாரிஸிலிருந்து ஜி.ஏ. நல்லரத்தினம்-

கடந்த ஒரு வருடத்துக்கு மேலாகவே புடம் போடப்பட்டு ஜனாதிபதி தேர்தலையே குறியாக வைத்து காய்களை நகர்த்திய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான பலப்பரீட்சையின் முதற் கட்ட வாக்களிப்பு, கடந்த 22.04.2007 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பிரான்சின் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் மிக அமைதியான முறையில் நடைபெற்றது.

மற்றை நாடுகளில் நடைபெறும் தேர்தல்களை விட ஐரோப்பிய நாடுகளிலே நடைபெறும் தேர்தல்கள் எவ்வித வன்முறைகளுமற்று மிக வித்தியாசமான தேர்தலாகவே அமையும். கடந்த காலங்களில் பிரான்சில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களை விட இம் முறை நடந்து முடிந்த முதல் சுற்று தேர்தல் வாக்கெடுப்பின்போது 88.5 சதவீத மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இடது சாரிக் கொள்கையை கொண்ட ஏழு பேரும் வலது சாரி கொள்கையை கொண்ட ஐந்து பேருமாக மொத்தம் பன்னிரெண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இப் பன்னிரெண்டு பேரில் எவரும் 50 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளை பெற முடியாமையினாலும் இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதனாலும் இரண்டாம் கட்ட தேர்தல் ஒன்று மே 6 ஆம் திகதி நடைபெறுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முதல் கட்ட வாக்களிப்பின் முடிவுகள் தேர்தல் முடிவடைந்த மூன்று மணி நேரத்தின் பின்பு அதாவது, ஞாயிறு இரவு எட்டு மணிக்கே வெளியிடப்பட்டிருந்தது. அந்த வகையில் வலதுசாரி கட்சி சார்பில் போட்டியிட்ட நிக்காலோ சாகோஷி 31.18 சதவீத வாக்குகளையும், இடது சாரி சோஷலிச கட்சி சார்பில் போட்டியிட்ட செகாலோ றோயல் 25.89 சதவீத வாக்குகளையும், வலதுசாரிக்கும் இடதுசாரிக்கும் இடைப்பட்ட கோசத்தை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் பிராசின் வைறோ 18.57 சதவீத வாக்குகளையும் வலது சாரி இனவாதத்தை முன்னிறுத்தி போட்டியிட்ட மேரி லூய்ன் 10.51 சதவீத வாக்குகளையும், ஏனைய எட்டு வேட்பாளர்களும் தலா 1 - 2 சதவீத வாக்குகளையும் நடந்து முடிந்த பிரான்சின் அரச அதிபர் தேர்தலில் பெற்றிருக்கின்றார்கள்.

இவ்வாறான நிலையிலே முதலாம் இரண்டாம் நிலையில் அதாவது 31.18 வீதவாக்குகளை பெற்றுள்ள வலதுசாரி கட்சியின் (U.M.P) ஜனாதிபதி வேட்பாளரான நிகாலோ சாகோஷிக்கும், இடது சாரி சோஷலிச கட்சி வேட்பாளரும் 25.18 சதவீத வாக்குகளை பெற்றவருமான செகாலோ றோயலுக்குமிடையிலேயே எதிர்வரும் மேமாதம் 6 ஆம் திகதி இறுதிக்கட்ட வாக்களிப்பு நடைபெறும். இவ் இறுதிக்கட்ட தேர்தலில் மிக கூடுதலான சதவீத வாக்குகளை பெறும் வேட்பாளரே பிரான்சின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

முதல் சுற்று தேர்தலில் 31.18 சதவீத வாக்குகளை பெற்று முன்னணியில் நிற்கும் நிக்காலோ சாகோஷி தீவிர வலதுசாரி கொள்கையை முன்னிறுத்தியும் வன்செயல்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவேன் என்றும், பிரான்சு பேரரசு பிரஞ்சு நாட்டவர்க்கே உரியதென்றும் வெளிநாட்டு குடிவரவை கட்டுப்படுத்துவேன் என்றுமே பிரஞ்சு மக்களிடம் சென்று தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். வலதுசாரிக் கட்சியின் தலைமை பதவிக்கு கடந்த வருடம் தெரிவாகியிருந்த நிகாளே சாகோஷி அரசியலிலே கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பிரகாசித்தவர். ஜக்கிராத்தினுடைய அமைச்சரவையிலே பல முக்கிய பதவிகளை வகித்தவர். இரு முறை தலைமை அமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டும் அவர் அதிக, பின்னர் தலைமை அமைச்சர் பதவி கிடைக்காத நிலையில் உள்நாட்டமைச்சராக கடந்த அமைச்சரவையிலிருந்து பிரான்சிலே ஏற்பட இருந்த பெரிய வன்செயல்களை முளையிலே கிள்ளி எறிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நடந்து முடிந்த தேர்தலில் பன்னிரெண்டு வேட்பாளர்களுள் மிக கூடுதலான வாக்குகளை சார்கோஷிக்கு பிரான்ஸு மக்கள் வழங்கியிருக்கிறார்கள் என்றால் பிரஞ்சு நாட்டை நிர்வகிக்க கூடிய அரசியல் முதிர்ச்சி சாகோஷிடம் காணப்படுவதாகவே பெரும்பாலனவர்கள் நினைத்திருக்கலாம். அதைவிட, கடந்த இரு தடவை அரசியல் ஆட்சி பீடத்தில் இருந்த வலது சாரி கட்சியின் சார்பில் போட்டியிட்டவர் இதற்கு மேலாக பிளவு குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களது சில நடவடிக்கைகள், உதவு தொகைகளை கட்டுப்படுத்தி பிரஞ்சு நாட்டை மேலும் பொருளாதாரமயப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்; காவல் துறைக்கு மேலும் பல அதிகாரங்களை வழங்குவது என சில வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் முன்வைத்தமையினாலேயே சார்கோஷி கூடுதலான வாக்குகளை பெறக்கூடியதாக இருந்தது. இது போலவே பிரன்ஸின் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதை கடந்த இரு மாதங்களுக்கு முன்பே பிரஞ்சு பத்திரிகைகள் கூட சாகோஷிக்கே பெரும்பான்மை முதல் கட்ட வாக்களிப்பில் கிடைக்குமெனவும் கணீப்பீடு செய்திருந்தன. சார்கோஷிக்கு அடுத்த நிலையில் 25.18 சத வீதவாக்குகளை பெற்றிருப்பவர் சோஷலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் செகாகோ றோயல். இவர் அரசியலிலே பெரியளவில் அறியப்படாதவர். இருந்த போதும் தேர்தல் பிரசாரங்களின் போதும் பலமாக பிரகாசித்தவர்.

தொழிலாளர்களுக்கான அடிப்படைச் சம்பளத்தை 1,254 யூரோவிலிருந்து 1,500 யூசீராவாக அதிகரிப்பது உதவு தொகைகளை அதிகரிப்பது இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்களை வழங்குவது, சமத்துவமான பொருளாதாரக் கொள்கையை வகுப்பது என தனது இடதுசாரி மேதாவித்தனமான தேர்தல் வாக்குறுதிகளை தாராளமாகவே வழங்கியிருந்தார்.

பிரான்சின் தலைநகர்ப் பகுதியான பாரிஸ் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுமே கூடுதலான வாக்குகளை பெற்றிருந்தார். புறநகர்ப் பகுதிகளில் இவரது வாக்குகள் சரிவையே சந்தித்திருந்தன. ரெகாலோ றோயலுக்கு அடுத்த நிலையில் 18.57 சதவீத வாக்குகளுடன் எவரும் எதிர்பாராத விதமாக சற்று கூடுதல் வாக்குகளை பெற்றவர் பிரான்சிஸ் வைறோ. இவர் அரசியலிலே முன்னர் இடதுசாரியாக அறியப்பட்டு, பல பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்திருந்தாலும் இம் முறை நடந்த ஜனாதிபதி தேர்தலில் தானொரு வலதுசாரியும் இடது சாரியும் இல்லாத பொதுக் கொள்கையுடன் செயற்பட போவதாகவே மக்களிடம் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். வைறொவுக்கு எதிர்பார்த்ததைவிட, மிகக் கூடுதலான வாக்குகள் கிடைத்தற்கு காரணம் வலதுசாரி, இடதுசாரிகளிடம் மக்களுக்கு ஏற்பட்ட விரக்தியாக இருக்கலாமென ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

வைறோவுக்கு அடுத்த நிலையில் 10.51 சதவீத வாக்குகளை பெற்ற இனவாதத்தை வெளிப்படையாகவே வெளியிட்டு வருபவரும் வெளிநாட்டவர்களை மிகக் கடுமையாக விமர்சிப்பவரும் தீவிர வலதுசாரி போக்குடையவருமான மேரிலூப்பன் ஆகும்.

எது எவ்வாறாயினும், மிக பரபரப்பாக நடந்து முடிந்த முதல் கட்ட தேர்தலில் கிடைத்த வாக்குகளுடன் சேர்ந்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கு நிகாலோ சாகோஷியும் செகாலோ றோயலும் தயாராகி விட்டார்கள். அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற எடுகோளின்படி, எதிர்வரும் மே 6 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இறுதிக்கட்ட வாக்களிப்பே பிரான்சை ஆளப்போகும் தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும்.

தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் அதிபர் தேர்தல் நிக்கோலஸ் சர்கோசி வெற்றி

பாரீஸ்:பிரான்ஸ் அதிபர் தேர்தலில் ஆளும் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த நிக்கோலஸ் சர்கோசி வெற்றி பெற்றார். பிரான்ஸ் அதிபர் ஜேக்கியூஸ் சிராக்கின் பதவிக் காலம் முடிவடைந்ததால், அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில், 12 பேர் போட்டியிட்டனர். முதல் சுற்று ஓட்டுப்பதிவு கடந்த மாதம் 22ம் தேதி நடந்தது. ஆளும் வலதுசாரி கட்சி சார்பில் போட்டியிட்ட நிக்கோலஸ் சர்கோசி, சோசலிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட செகோலன் ராயல் ஆகியோர் இரண்டாம் சுற்று ஓட்டுப் பதிவுக்கு தகுதி பெற்றனர். இரண்டாம் சுற்று ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. பதிவான ஓட்டுகள் நேற்றிரவு எண்ணப்பட்டன. இதில், நிக்கோலஸ் சர்கோசி 53 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட செகோலன் ராயலுக்கு 47 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. நிக்கோலஸ் சர்கோசி வெற்றி பெற்றதையடுத்து, பிரான்சின் புதிய அதிபராக அவர் பதவியேற்கிறார்.

தினமலர்

  • கருத்துக்கள உறவுகள்

ம்..எங்கள் புதிய சனாதிபதியாக நிக்கெகாலா சார்கொசி அவர்கள் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார் கவலையுடனான வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்..எங்கள் புதிய சனாதிபதியாக நிக்கெகாலா சார்கொசி அவர்கள் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார் கவலையுடனான வாழ்த்துக்கள்

இப்படிக் கவலையுடன் வாழ்த்து தெரிவிக்கனுமா சாத்திரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் அதிபர் தேர்தல் வெற்றியை எதிர்த்து கலவரம்: கார்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன

பாரிஸ், மே. 7-

பிரான்சு நாட்டின் ஜனாதிபதியாக 2 முறை பதவி வகித்தவர் ஜாக்கிஸ் சிராக். இவரது பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.

அதிபர் பதவிக்கு கர்சர் வேட்டிவ் கட்சி சார்பில் நிக்கோலஸ் சர்கோஜி, சோச லிஸ்ட் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் செகோலின் ராயலும் மட்டுமே போட்டியிட்டனர்.

இறுதிக்கட்ட தேர்தலில் நிக்கோலஸ் சர்கோஜிக்கு 53 சதவீத ஓட்டுகளும், பெண் வேட்பாளர் செகோலினுக்கு 47 சதவீத ஓட்டுக்களும் கிடைத்தன.

இந்த நிலையில் தோல்வி அடைந்த செகோலின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பாரீஸ் நகரில் அவர்கள் கார்களை தீ வைத்து கொளுத்தினார்கள். கல்வீச்சிலும் ஈடுபட்டனர். கலவரம் உச்சக் கட்டத்தை அடைய போலீசார் தடியடி நடத்தினார்கள். கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். பாரீஸ் நகரம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

நன்றி - மாலைமலர்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையில் தோல்வி அடைந்த செகோலின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பாரீஸ் நகரில் அவர்கள் கார்களை தீ வைத்து கொளுத்தினார்கள். கல்வீச்சிலும் ஈடுபட்டனர். கலவரம் உச்சக் கட்டத்தை அடைய போலீசார் தடியடி நடத்தினார்கள். கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். பாரீஸ் நகரம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

இந்தியா அரசியல் தொண்டர்கள் போல பிரான்சிலும் இருக்கிறார்களா?

தேர்தலின் முதலாவது சுற்று நேற்று முடிவடைந்தது. இதில் சர்கோசி முதல் இடத்திலும் றோயல் இரண்டாவது இடத்தில் நிற்கிறா.

லீசண் அண்ணா உங்களின் ஆதரவு யாருக்கு

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிக்கோலா சாக்கோசி தேர்தலில் வென்று ஜனாதிபதியாகி விட்டார்.

மேலும் சமீபத்தில் பிரான்சில் நடந்தேறிய வன்சம்பவங்கள் நிஜமான பிரெஞ்சுக்காரரை அதிருப்தியடைய வைத்திருந்தன. அதனால் அந்த வாக்குகளும், மேரி லுப்பன் அவர்களுடைய ஓட்டு வங்கியும் சேர்ந்து அவரை உயர்த்திவிட்டன.

அத்துடன் திரு. சாக்கோசிக்கும், றோயல் அவர்களுக்கும் நடந்த தொலைக்காட்சி விவாதத்தின் போது றோயல் அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக நடந்து கொன்டதும் ஒரு காரணமாகும். அப்போது தழரு. சாக்கோசி நிதானமாக நடந்து கொன்டார். :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.