Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாஜக கூட்டணி 306 இடங்களில் வெற்றி பெறும்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்களவைத்  தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி பாஜக கூட்டணி 306 இடங்களில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் கூட்டணி 132 இடங்களில் வெற்றி பெறும் எனவும், மற்றவர்கள் 104 இடங்களில் வெற்றி பெறும் எனவும் டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடை பெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 

அதன்படி ஏப்ரல் 11-ம் தேதி முதல் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்தன. இறுதியாக இன்று 7-ம் கட்டத் தேர்தல் இன்று நடந்தது. இதைத்தொடர்ந்து கருத்து கணிப்பு இன்ற மாலை முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.

டைம்ஸ் நவ் கணிப்பு

மக்களவைத்  தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி பாஜக கூட்டணி 306 இடங்களில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் கூட்டணி 132 இடங்களில் வெற்றி பெறும் எனவும், மற்றவர்கள் 104 இடங்களில் வெற்றி பெறும் எனவும் டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

சிவோட்டர் கணிப்பு

பாஜக கூட்டணி: 287

காங்கிரஸ் கூட்டணி: 128

மற்றவர்கள் 127

ஜன்கிபாத்

பாஜக கூட்டணி: 305

காங்கிரஸ் கூட்டணி: 124

மற்றவர்கள் 137

நியூஸ் நேஷன்

பாஜக கூட்டணி: 282- 290

காங்கிரஸ் கூட்டணி: 118- 126

மற்றவர்கள் 130- 138

நியூஸ் எக்ஸ்

பாஜக கூட்டணி: 300

காங்கிரஸ் கூட்டணி: 127

மற்றவர்கள் 115

https://tamil.thehindu.com/india/article27178319.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ..பாகிஸ்தானுக்கு கெட்ட நேரம்.. இனி இந்திரஜித் மாதிரி அல்லோ குண்டு போடுவினம் ..😝

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பொதுத் தேர்தல் ; பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் ! தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு

இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரியவந்து உள்ளது.

Prime-Minister-Narendra-Modi.jpg

இந்நிலையில், இந்தியா முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்றுடன் நடைபெற்று முடிந்துள்ளது.

இறுதி மற்றும் 7 ஆவது கட்டமாக நேற்று உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு இடம்பெற்றது. 

542 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எதிர்வரும் 23 ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. முடிவுகள் வெளியாகும் போது தான் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது உறுதியாக தெரிய வரும்.

மத்தியில் ஆட்சி அமைக்க தனிப்பட்ட முறையில் ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ குறைந்தபட்சம் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 336 தொகுதிகளை கைப்பற்றியது. 

தனிப்பட்ட முறையில் 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்ற பாரதீய ஜனதா, தனது கூட்டணி கட்சிகளையும் இணைத்துக்கொண்டு மோடி தலைமையில் புதிய அரசை அமைத்தது.

அந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 60 இடங்களில் மாத்திரமே வெற்றி பெற முடிந்தது. இதில் காங்கிரசுக்கு மட்டும் 44 இடங்கள் கிடைத்தன.

இந்த நிலையில், நேற்றுடன் தேர்தல் நிறைவடைந்ததை தொடர்ந்து, வாக்குகளைப் பதிவுசெய்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்திய கருத்து கணிப்பு பற்றிய முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள், பாரதீய ஜனதா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கின்றன.

டைம்ஸ் நவ் டி.வி.யின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 306 இடங்கள் கிடைக்கும் என்றும்,  இதில் தனிப்பட்ட முறையில் பாரதீய ஜனதா 262 இடங்களில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் கூட்டணிக்கு 132 இடங்கள் கிடைக்கும் என்றும் இதில் காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் 78 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பிற கட்சிகளுக்கு 104 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன்கிபாத் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 305 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 124 இடங்களும், பிற கட்சிகளுக்கு 113 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சி-ஓட்டர் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 287 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 128 இடங்களும், பிற கட்சிகளுக்கு 127 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. 

இந்தியா டூடே-சாணக்கியா சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 340 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 132 இடங்களும், பிற கட்சிகளுக்கு 104 இடங்களும் கிடைக்கும் என்றும் வெளிவந்துள்ளது.

நியூஸ் நேஷன் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 282 முதல் 290 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 118 முதல் 126 இடங்களும், பிற கட்சிகளுக்கு 130 முதல் 138 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

‘போல் ஒப் போல்ஸ்’ சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 317 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 110 இடங்களும், பிற கட்சிகளுக்கு 115 இடங்களும் கிடைக்கும் என்றும் வெளியாகியுள்ளது.

சுதர்சன் நியூஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 313 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 121 இடங்களும், பிற கட்சிகளுக்கு 109 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்து இருக்கிறது.

நியூஸ் எக்ஸ் நேட்டா சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் எந்த கட்சிக்குகோ அல்லது கூட்டணிக்கோ பெரும்பான்மை பலம் கிடைக் காது என்று தெரியவந்து உள்ளது. இதன் கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 242 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 164 இடங் களும், பிற கட்சிகளுக்கு 137 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்து இருக்கிறது.

தமிழகம், புதுச்சேரியை பொறுத்தமட்டில் தேர்தல் நடந்த 39 பாராளுமன்ற தொகுதிகளில் பெரும்பாலான இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வாக்குப்பதிவுக்கு பின்னர் தந்தி டி.வி.யின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் தி.மு.க. கூட்டணிக்கு 19 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 6 இடங்களும் கிடைக்கும் என்றும், 14 தொகுதிகளில் இழுபறி நிலை இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் தி.மு.க. கூட்டணிக்கு 29 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 9 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

இந்தியா டூடே-ஆக்சிஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு 34 முதல் 38 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்து இருக்கிறது.

என்.டி.டி.வி. சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு 25 இடங் களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 12 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

சி.என்.என். நியூஸ்-18 சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு 22 முதல் 24 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 14 முதல் 16 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

அனைவரும் பொறுத்திருந்து பார்ப்போம் இறுதியில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கப்போகின்றதென ?

 

http://www.virakesari.lk/article/56299

 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெரிய ஜனநாயகம் (அதுவே சிரிப்புக்கு இடமானது ) நாட்டில் ஓட்டு இயந்திரத்தை  நம்புவதும் ஊழல் கடலில் மிதக்கும் நாட்டில் தேர்தல் முடிந்தபின் அறைக்குள் பூட்டி வைத்து அதுவும் கிட்டத்ததட்ட ஒருமாத இடைவெளிக்கு பின் ஓட்டுக்கள் என்னபடுவதும் கேலிக்கூத்து .

ஆனாலும் பாஜக வரனும் அப்பத்தான் தென்னிந்தியர்கள் இந்தியா எனும் சொல் மூலம் வடக்கர்கள் தங்களை அடிமை படுத்தி உள்ளதை உணர்வார்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இவ்வளவு பெரிய ஜனநாயகம் (அதுவே சிரிப்புக்கு இடமானது ) நாட்டில் ஓட்டு இயந்திரத்தை  நம்புவதும் ஊழல் கடலில் மிதக்கும் நாட்டில் தேர்தல் முடிந்தபின் அறைக்குள் பூட்டி வைத்து அதுவும் கிட்டத்ததட்ட ஒருமாத இடைவெளிக்கு பின் ஓட்டுக்கள் என்னபடுவதும் கேலிக்கூத்து .

ஆனாலும் பாஜக வரனும் அப்பத்தான் தென்னிந்தியர்கள் இந்தியா எனும் சொல் மூலம் வடக்கர்கள் தங்களை அடிமை படுத்தி உள்ளதை உணர்வார்கள் .

ஒரு மாத காலம் பூட்டி வைத்தது என்று சொல்வது சரியாக இல்லை. வாக்களிப்பு ஒரே நாளில் நடக்கவில்லை. பகுதி பகுதியாக / மாநிலம் மாநிலமாக வாக்களிப்பு நிகழ்ந்தமையால் தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை, இறுதி கட்ட வாக்களிப்பு கடந்த வாரம் தான் முடிந்தது. வாக்களிப்பு முற்றாக முடியும் வரைக்கும் பொதுவாக எந்த நாடுகளிலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவது இல்லை.

 

ஆனால் இப்படி சொல்வதால் இந்தியா வுக்கு பலம் இருக்கு / தகுதி இருக்கு என்று அர்த்தம் இல்லை. பெண் பிள்ளைகள் படிக்கும் பாடசாலைகளுக்கு கக்கூஸ் கட்டிக் கொடுக்க கூட வக்கற்ற அரசுகளால் ஆளப்படும் தேசம் அது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பிழம்பு said:

ஒரு மாத காலம் பூட்டி வைத்தது என்று சொல்வது சரியாக இல்லை. வாக்களிப்பு ஒரே நாளில் நடக்கவில்லை. பகுதி பகுதியாக / மாநிலம் மாநிலமாக வாக்களிப்பு நிகழ்ந்தமையால் தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை, இறுதி கட்ட வாக்களிப்பு கடந்த வாரம் தான் முடிந்தது. வாக்களிப்பு முற்றாக முடியும் வரைக்கும் பொதுவாக எந்த நாடுகளிலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவது இல்லை.

 

நீங்கள் சொல்வது சரி ஆனால் தேர்தல் முன்பே நடந்த மாநிலங்களில் வாக்கு சீட்டு இயந்திரங்கள் எங்கிருந்தன ?

அனுமதி இல்லாமல் தாசில்தார் போன்றவர்கள் வாக்கு இயந்திரங்கள் வைக்கும் அறைக்கு சென்றுவந்தார் போன்ற செய்திகள் வருகின்றனவே ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பெருமாள் said:

 

அனுமதி இல்லாமல் தாசில்தார் போன்றவர்கள் வாக்கு இயந்திரங்கள் வைக்கும் அறைக்கு சென்றுவந்தார் போன்ற செய்திகள் வருகின்றனவே ?

இந்திய சனனாயக பாரம்பரியப்படி மோடியை உள்ளே அனுமதித்தால் கூட ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை தானே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.