Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவினால் சபாநாயகர் கருஜயசூரியவிடம் சற்று முன்னர் கையளிக்கப்பட்டுள்ளது.

anura.jpg

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களும், அதனைத் தொடர்ந்து நாட்டில் நிலவும் அசா­தா­ரண சூழ்­நி­லையும் இந்த அர­சாங்­கத்தின் தோல்­வியைத் தெளி­வாக உணர்த்­து­கின்­றன. தாக்­கு­தல்­களால் உயி­ரி­ழப்­புக்கள், சொத்­துக்­க­ளுக்குச் சேதம் என்­பன ஏற்­பட்­ட­துடன், அதனைத் தொடர்ந்து நாட்டின் பொரு­ளா­தாரம் வெகு­வாகப் பாதிக்­கப்­பட்­டது. சிறு­வ­ணிக முயற்­சி­யா­ளர்கள் தமது வரு­மா­னத்தை இழந்­தனர். மக்கள் மனங்­களில் அச்சம் குடி­கொண்­டது. 

இவற்­றுக்கு மேலாக உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் நடை­பெற்று 21 நாட்­களின் பின்னர் முஸ்லிம் மக்­க­ளையும், அவர்­க­ளது சொத்­துக்­க­ளையும் இலக்­கு­வைத்துத் திட்­ட­மி­டப்­பட்ட முறையில் வன்­முறைத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. குண்டுத் தாக்­கு­தல்­களை அடுத்து உட­ன­டி­யாக இத்­த­கைய வன்­மு­றைகள் வெடித்­தி­ருப்பின், அத்­த­ரு­ணத்தின் கோபம் உள்­ளிட்ட உணர்ச்­சி­களின் வெளிப்­பாடு என்று  அதனை  கூற­மு­டியும். எனினும் சுமார் 20 நாட்­களின் பின்னர் தாக்­குதல் இடம்­பெ­று­வ­தென்­பது நன்கு திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­ட­தையே வெளிக்­காட்­டு­கின்­றது.   

பயங்­க­ர­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தொடர் குண்­டுத்­தாக்­கு­தல்கள் திடீ­ரென்று திட்­ட­மி­டப்­பட்ட தாக்­கு­த­லொன்­றல்ல. இஸ்­லா­மிய அரசு (ஐ.எஸ்) இயக்­கத்தில் பயிற்சி பெற்­ற­வர்கள் இலங்­கைக்கு திரும்­பி­யி­ருப்­பது தொடர்பில் தான் அறிந்­தி­ருந்­த­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார். அதே­போன்று கடந்த 2014 ஆம் ஆண்டில் சஹ்­ரானின் குழு­வினர் ஏற்­பாடு செய்­தி­ருந்த கூட்­ட­மொன்றில் இடம்­பெற்ற தக­ரா­றை­ய­டுத்து அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த மூவர் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். இது­கு­றித்து பொலிஸ் நிலை­யத்­திலும் முறைப்­பாடு  செய்­யப்­பட்­டுள்­ளது. 

மாவ­னல்லை புத்­தர்­சிலை உடைப்பு விவ­கா­ரத்தில் குற்­ற­வா­ளி­களைக் கைது செய்­வதில் அர­சி­யல்­வா­தி­களால் இடை­யூறு ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக அமைச்சர் கபீர் காசிம் குறிப்­பிட்­டி­ருந்தார். அந்த விவ­கா­ரத்­துடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் நெருங்­கிய தொடர்­பி­ருப்­பது தற்­போது விசா­ர­ணை­களில் தெரிய வந்­தி­ருக்­கி­றது. வனாத்­த­வில்லு பிர­தே­சத்தில் பெரு­ம­ளவு ஆயு­தங்கள் உள்­ளிட்ட பொருட்கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன. அங்கு பயங்­க­ர­வா­திகள் பயிற்சி பெற்­றி­ருப்­பது தற்­போது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இவை­ய­னைத்­திற்கும் மேலாக தாக்­குதல் குறித்த எச்­ச­ரிக்கை அறி­வு­றுத்தல் வெளி­நாட்டுப் புல­னாய்வு நிறு­வ­னங்­களால் பாது­காப்புப் பிரி­விற்கு அனுப்­பப்­பட்­டி­ருக்­கின்­றன.

எனவே   குண்­டுத்­தாக்­கு­தல்­களைத் முன்­கூட்­டியே தடுப்­ப­தற்குத் தேவை­யான அனைத்துத் தக­வல்­களும் அர­சாங்­கத்­திடம் இருந்­தும்­கூட, அர­சாங்­கத்தின் கவ­ன­யீனம், அச­மந்­தப்­போக்கு என்­ப­வற்­றினால்  பல உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டுள்­ளன. ஆகவே தாக்­கு­தலைத் திட்­ட­மிட்ட பயங்­க­ர­வா­திகள் குற்­ற­வா­ளிகள் என்று கரு­தப்­படும் அதே­வேளை, தாக்­குதல் குறித்து அறிந்­தி­ருந்தும் அதனைத் தடுக்­காத அர­சாங்­கமும் குற்­ற­வா­ளி­யா­கவே கரு­தப்­பட வேண்டும். 

தாக்­கு­தலின் பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்கள் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வி­டப்­பட்­டன. சில ஊட­கங்­களும் இன வன்­மு­றையைத் தூண்டும் வகை­யி­லேயே செயற்­பட்டு வந்­தன. அர­சாங்கம் இவற்றை முறை­யாகக் கண்­கா­ணித்து உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்தால் அண்­மையில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­முறைத் தாக்­கு­தல்­களைத் தடுத்­தி­ருக்க முடியும். 

இந்த அர­சாங்கம் முழு­மை­யாகத் தோல்­வி­ய­டைந்­தி­ருக்­கி­றது என்றே கூற­வேண்­டி­யி­ருக்­கின்­றது. மக்­களின் பாது­காப்புத் தொடர்பில் எவ்­வித அக்­க­றை­யு­மில்­லாத இந்த அர­சாங்கம் தொடர்ந்தும் பத­வி­யி­லி­ருக்க வேண்­டுமா என்­பதை மக்கள் தான் தீர்­மா­னிக்க வேண்டும். அதற்கு மக்கள் தேர்தல் வரை காத்­தி­ருக்க வேண்டும். ஆனால் அர­சாங்­கத்தைத் பத­வி­யி­றக்­கு­த­வற்கு பாரா­ளு­மன்­றத்­திற்கு வாய்ப்­புள்­ளது. அந்­த­வ­கையில் இந்த ஒட்­டு­மொத்த அர­சாங்­கத்­திற்கும் எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை இன்­றைய தினம் சபா­நா­ய­க­ரிடம் கையளித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

 

http://www.virakesari.lk/article/56375

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில தாக்குதல் செய்ய தளமாக இலங்கை பாவிக்கப்படுவதாக நம்ப வைக்கப்பட்டிருக்கலாம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.