Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி உத்தரவிட்ட போதிலும் வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்கவில்லை ; மக்கள் விசனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் இராணுவ கெடுபிடிகளை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ தளபதிக்கு உத்தரவிட்ட போதிலும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.என மக்கள் தெரிவித்துய்யளர்.

IMG_1341.jpeg

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாடாளாவிய ரீதியில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.எனினும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பார்க்க வடக்கில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகமாக காணப்படுகின்றன.

.பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு சொதனையிடப்படுகின்றனர்.பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றது.

நாட்டில் பிற மாவட்டங்களை விட வடக்கில் மட்டும் அதிக கெடுபிடிகள் காணப்படுவதை தமிழ் அரசியல்வாதிகள் கடுமையாக கண்டித்தனர்.அத்துடன் பாராளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பில் சுட்டிக்காட்டி இருந்தனர்.எனினும் மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ பிரசன்னமோ கெடுபிடிகளோ குறைக்கப்படவில்லை.

IMG_1339.jpeg

இந்நிலையில் ஜனாதிபதி தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் ஏற்பட்டுள்ள இராணுவ கெடுபிடிகளை குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்ற ஜனாதிபதி கலந்துரையாடலில் பங்கேற்று இருந்த இராணுவ தளபதியிடம் உடனடியாக உத்தரவிட்டிருந்தார்.

எனினும் வடக்கில் குறிப்பாக பூநகரி,ஆனையிறவு,நாவற்குழி போன்ற பகுதிகளில் இராணுவத்தினர் பயண தடைகளை விதித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி உத்தரவிட்டும் மக்கள் இராணுவ கெடுபிடிக்குள் சிக்கியே வீதியில் பயனிகின்றமையை காணக்கூடியதாகவுள்ளது.

http://www.virakesari.lk/article/56845

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பிழம்பு said:

இந்நிலையில் ஜனாதிபதி தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் ஏற்பட்டுள்ள இராணுவ கெடுபிடிகளை குறைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

அத்தியடிக் குத்தியருக்கு இன்னமும் சிங்கள அரசின் அரசியல் அத்திவாரம் மட்டுமல்ல, அந்த அத்திவாரத்தைப் பாதுகாக்கும் விழுதுகளையும் அவர் கணக்கில் எடுக்கவில்லைப்போல் தெரிகிறது. இன்றைய அரசின் சனாதிபதியிடம் மட்டும் கோரிக்கை விடுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை, அரசின் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சனாதிபதிக் கனவில் இருக்கும் கோத்தபாய இவர்கள் அனைவரிடமும் கோரிக்கை விடுத்து.... அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, அவரவர்களுக்குரிய படைகள் அனைத்தையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் நிறுத்த முடியும்.😲   

 

பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்து கொண்ட சம்பந்தன் இதுபற்றி சொட்டும் வாய் திறக்கவில்லையாம்!
சம்பந்தன் வழமைபோல தனது அடிமைத்தன விசுவாசத்தை அங்கும் காட்டினார்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.