Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகார கட்டமைப்பு உருவாக்கத்துக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணையவேண்டும்!

Featured Replies

தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கைகோர்த்து இணைந்த வடக்கு கிழக்கில் தம்மைத் தாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கிக் கொள்வதற்காகப் பாடுபடவேண்டியதன் அவசியத்தையும் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தி யுள்ளார்.

நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் குழிதோண்டி புதைக்கும் பேராபத்தான ஒரு நிலைமையை புத்த பிக்குமாரின் செல்வாக்கு தோற்றுவித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரின் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை அடுத்து மேல் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களும் முஸ்லிம் அமைச்சர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில் நேற்று செய்வாய்க்கிழமை சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பசிக்கு சகோதர முஸ்லிம் மக்கள் இரையாகிவரும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் அவர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆரத்தழுவுவதாக தெரிவித்துள்ள சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் துயரத்தில் பங்குகொள்வதாகவும் கூறியுள்ளார்.

தமிழ் மக்களைப் பல தசாப்தங்களாக பலிகொண்டுவரும் சிங்கள பேரினவாதத்தின் பார்வை தற்போது முஸ்லிம் மக்களின் மீது திரும்பியிருப்பதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இந்த வேளையில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கைகோர்த்து இணைந்த வடக்கு கிழக்கில் உருவாக்கும் அதிகார கட்டமைப்பு மட்டுமே இரண்டு சமூகங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றும்

முஸ்லிம் மக்களின் அரசியல், பொருளாதார பலத்தை இலக்குவைத்து பௌத்த பேரினவாதம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் பேராபத்தை உணர்ந்துகொண்டு வெவ்வேறு கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையை வெளிப்படுத்தி இருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் அதனை வெகுவாகப் பாராட்டுவதாகவும் நீதியரசர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரித்து தேவையெனில் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள சி.வி.விக்னேஸ்வரன் ஆனால் குற்றம் செய்யாதவர்களையும் பெரும்பான்மையினம் தண்டிக்க விளைவது எந்த விதத்திலும் மன்னிக்க முடியாதது என்றும் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஜனாதிபதியையும் பிரதமரையும் பௌத்த பிக்குகள் வற்புறுத்தி குற்றம் சாட்டப்பட்டுள்ள முஸ்லிம் அமைச்சர் மற்றும் ஆளுநர்களை நீக்கும் அளவுக்கு அரசியலில் பௌத்த சங்கத்தின் செல்வாக்கு வளர்ந்துவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து தமது நிரபராதி தன்மையை பாதுகாப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டு பதிலாக மதவாதம் ஊக்குவிக்கப்பட்டுள்ளமை எதிர்காலத்தில் ஏற்படப்போகும் அழிவுகளை பறைசாற்றி நிற்கின்றது என்றும் நீதியரசர் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/121398

  • தொடங்கியவர்
23 minutes ago, போல் said:

இந்த அறிக்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பசிக்கு சகோதர முஸ்லிம் மக்கள் இரையாகிவரும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் அவர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆரத்தழுவுவதாக தெரிவித்துள்ள சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் துயரத்தில் பங்குகொள்வதாகவும் கூறியுள்ளார்.

முஸ்லீம் காடையர்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள்  பல இடங்களில் பொங்கல் பொங்கி, வெடி கொளுத்தி கொண்டாடி வருவதை அறியாத விக்னேஸ்வரன் அந்த பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை நோகடிக்கும் வகையில் சகட்டுமேனிக்கு தினமும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

தமிழின அழிப்பில் பங்கெடுத்த முஸ்லிம்கள் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தொடர்ந்தும் வாய்மூடி மௌனியாக இருக்கும் நிலையில் கத்துக்குட்டி அரசியல்வாதியான விக்னேஸ்வரன் முஸ்லிம்களுக்கு எடுபிடியாக அரசியல்செய்ய முயற்சிக்கிறார்.

சுயலாபங்களுக்காக தமிழர்களின் நலன்களை விலைபேசிய கடத்தல் கொலைகளில் கைதேர்ந்த காடையன் டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஆனந்தசங்கரி, சம்மந்தன்,  மாவை, சுமந்திரன் போன்றவர்கள் தமிழின அழிப்பை மேற்கொண்டுவரும் சிங்கள-பௌத்த கும்பலின் அடிமைகளாக அரசியல் செய்துவரும் நிலையில், அவர்களில் இருந்து விக்னேஸ்வரன் விலகி தமிழின அழிப்பில் பங்கெடுத்த முஸ்லிம் காடையர்களின் அடிமையாக அரசியல் செய்யத் தொடங்கியுள்ளார்!

தமிழரின் நலன்களை பின்னுக்குத்தள்ளி, உண்மைகளை மறைத்து, இராஜதந்திரம் என்ற போலித்தனத்தை வரிந்துகட்டி, சுயபுகழ் தேடுவதிலும் அறிக்கைகள் மூலம் காலத்தைக் கடத்தும் சாக்கடை அரசியலினுள் விக்னேஸ்வரன் சிக்கி வருவதை இவரின் அண்மைக்கால நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

இங்கே கூறப்படுவது : "அதிகார கட்டமைப்பு உருவாக்கத்துக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணையவேண்டும்" என. 

மக்களை இணையவிடாமல் பிரிப்பதே அரசியல்வாதிகள். அவர்கள், அரசியல்வாதிகள் இணையவேண்டும் இல்லையேல், அவர்கள் அரசியல் செய்ய காலப்போக்கில்  மக்கள் இருக்கமாட்டார்கள்.  

தமிழர்ற்றை வாக்குகள் உங்களுக்கு விழாது, முஸ்லிம்கள் தான் உங்களுக்கு அள்ளி அள்ளி வாக்களிக்க போக்கினம் என்டு யாரோ விக்கிக்கு மூளைச் சலவை செய்திருக்கோணும்! நல்லா இருந்த விக்கி திடீரென தப்புத்தாளம் போட தொடங்கிருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.