Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’சஹ்ரான் எனக்கு உதவவில்லை-நானும் அவருக்கு உதவவில்லை’ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

Featured Replies

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான், தன்னை ஒருமுறை சந்தித்ததாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறினார்.

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னாள், இன்று சாட்சியமளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் முடிவடைந்த பின்னர், அவருடைய அலுவலகத்துக்கு வருமாறு, சஹ்ரான் தனக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும் அரசியல் ரீதியில், மேலும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைந்து, அப்போது அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறினார்.

அப்போது சஹ்ரான், தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பை மாத்திரமே உருவாக்கியிருந்தார் என்றும் அப்போது அவர், பயங்கரவாதியாக இருக்கவில்லை என்றும் தெரிவித்த ஹிஸ்புல்லாஹ், பிரதேசத்தின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக, அவருடைய நிபந்தனைகளுக்கு தான் இயங்கியதாகவும் பின்னர் அந்த நிபந்தனைகளை மீறியதால், தன்மீது சஹ்ரான், கடும் கோபத்தில் இருந்ததாகவும் கூறினார்.

கூட்டங்களின் போது பாடல்களை இயற்ற முடியாது, ஆண்களும் பெண்களும் இணைந்து, கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது போன்ற நிபந்தனைகளை, சஹ்ரான் விதித்திருந்ததாகவும் அவற்றைத் தான் விரும்பாத காரணத்தால், 2000 ஆயிரம் வாக்குகளால், தன்னை சஹ்ரான் தோற்கடித்ததாகவும், ஹிஸ்புல்லாஹ் கூறினார்.

இதேவேளை, சாய்ந்தமருது பிரதேசத்தில், தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த நியாஸ் ஷெரீப் என்பவரும், சஹ்ரானின் சகாவென்றும் கூறிய முன்னாள் ஆளுநர், அந்நபர், தனக்கு எதிராக, பேஸ்புக் ஊடாக, பலவாரான பிரிவினைவாதக் கருத்துகளைப் பதிவிட்டிருந்ததாகவும் கூறினார்.

எவ்வாறாயினும், 2017ஆம் ஆண்டுக்கு பின்னர், அந்நபரையும் தான் காணவில்லை என்றும் சஹ்ரான், ஒருபோதும் தனக்கு உதவவில்லை என்றும் தானும், ஒருபோதும் சஹ்ரானுக்கு உதவவில்லை என்றும், தன்னை அழிப்பதற்கே சஹ்ரான் முயற்சித்ததாகவும், ஹிஸ்புல்லாஹ் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சஹ்ரான்-எனக்கு-உதவவில்லை-நானும்-அவருக்கு-உதவவில்லை/150-234139

  • தொடங்கியவர்

வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என வெளியிட்ட கருத்தை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா!!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா இன்று முன்னிலையாகி சாட்சி வழங்கினார்.

இதன்போது, வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று தாம் கருத்து வெளியிட்டமையை அவர் ஒப்புக் கொண்டார்.

முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதை விரும்பவில்லை.

எனவே முஸ்லிம்களே ஆயுதம் ஏந்தி அதற்கு எதிராக போராடுவார்கள் என்று தாம் கூறியதாக ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட தெரிவுக் குழுவின் உறுப்பினர் ஒருவர், பொறுப்புள்ள முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவர் இவ்வாறு கருத்து வெளியிடலாமா? என்று கேட்டார்.

இதன்போது ஹிஸ்புல்லா பதில் எதனையும் கூறவில்லை.

அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் அரபு மொழியிலான பெயர் பலகைகள், மத்திய கிழக்கு நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கானவை என்று கூறினார்.

அத்துடன் எல்லா அரசியல்வாதிகளைப் போலவே தாம் சஹ்ரானை சந்தித்ததாக குறிப்பிட்டார்.

2017ம் ஆண்டுக்கு முன்னர் சஹ்ரான் ஒரு மதத்தலைவராகவே பார்க்கப்பட்டதாகவும், எனினும் பின்னர் அவர் தன்னை விமர்சிக்க ஆரம்பித்து விட்டதாகவும் ஹிஸ்புல்லா கூறினார்.

அதேநேரம் முஸ்லிம்களை உற்சாகப்படுத்துவதற்காகவே தாம், உலகில் பெரும்பான்மையாக இருப்பது முஸ்லிம்களே என்ற கருத்தை வெளியிட்டதாகவும் அவர் தெரிவுக் குழுவின் முன்னால் குறிப்பிட்டார்.

இதேவேளை, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜெ.ஜே. ரத்னசிறி, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இன்று முன்னிலையாகி சாட்சி வழங்கினார்.

http://www.hirunews.lk/tamil/218348/வடக்கு-கிழக்கு-இணைக்கப்பட்டால்-நாட்டில்-இரத்த-ஆறு-ஓடும்-என-வெளியிட்ட-கருத்தை-ஒப்புக்கொண்ட-ஹிஸ்புல்லா

 

  • கருத்துக்கள உறவுகள்

சஹ்ரானை சந்தித்துள்ளீர்களா? : ஆம் சந்தித்தேன் - சாட்சியத்தில் ஹிஸ்புல்லாஹ்

2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் நாம் மொஹமட் சஹ்ரானை சந்தித்ததாக தெரிவித்த முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், அவர் அப்போது தீவிரவாதியல்ல நல்ல மதவாதி எனவும் குறிப்பிட்டார்.

hisbulla.jpg

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தாக்குதல் குறித்து  விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள    பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கபட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தெரிவுக்குழு முன்னிலையில் தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர்,

 

கேள்வி:- நீங்கள் இலங்கையர் என நினைக்கிறேன், அவ்வாறு இருக்கையில் "இலங்கையில் நாங்கள் சிறுபான்மை,  உலகில் பெரும்பான்மையினர் நாம் தான்' என நீங்கள் கூறியது சரியா?

பதில்:- இது எனது அரசியல் கருத்து அல்ல, இது ஒரு பள்ளிவாசலில் நான் கூறிய விடயம். எமது மக்கள்  அங்கு மிகவும் பயந்த சுபாவத்தில் இருந்தனர். அன்றாட வாழ்க்கை அனைத்துமே  ஸ்தம்பிக்கப்பட்டு  இருந்தன. வழமையாக எமது பெருநாள் பிரார்த்தனைகள் காலி  முகத்திடலில் இடம்பெறும். இம்முறை அது நடக்கவில்லை. முஸ்லிம்கள் மிகவும் பயந்த நிலையில் இருந்தனர். ஆகவே அவர்களை அச்சம் அடைய வேண்டாம் என கூறி உங்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுங்கள் என்றேன். இதன்போதே  நாம் உலகில் பெரும்பான்மை மக்கள். ஆகவே அச்சமடைய வேண்டாம் என கூறினேன். எனினும் ஊடகங்கள் இதனை முன்னும் பின்னும் வெட்டிவிட்டு பிரசுரித்து விட்டனர். 

 

கேள்வி :- நீங்கள் இதனை நிராகரிக்கிறீர்களா? 

பதில்:- நான் இலங்கையன் என்ற எண்ணத்துடன் வாழ்கிறேன். நான் எப்போதும் நாடு என்ற உணர்வுடன் வாழ்கிறேன். பெளத்த நாடு என்ற எண்ணத்தில் நான் பல கருத்துகளை கூறியுள்ளேன். எனினும் எமது மக்கள் அச்சமடையக் கூடாது என்றே  கூறினேன்.

 

கேள்வி:- சஹ்ரானை சந்தித்துள்ளீர்களா?

பதில் :- ஆம் சந்தித்தேன்

 

கேள்வி:- எப்போது என்ன நோக்கத்தில் சந்தித்தீர்கள்?

பதில்:- கூறுகிறேன். 2015 ஆம் ஆண்டு தேர்தலில் வேட்புமனு முடிந்தவுடன்   அவர் எம் அனைவரையும்  சந்தித்து பேச அழைப்பு விடுத்தார். அப்போது அவர் நல்ல மதவாதி. குறிப்பாக இளைஞர்கள்  அவருடன் இருந்தனர். தேர்தல் முடிந்தவுடன் எம் அனைவருக்கும்  அழைப்பு விடுத்தார். நான் மட்டும் அல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும், ஏனைய பலரும் வந்தனர்.

 

கேள்வி:- அரசியல் வாதிகளை கூப்பிட்டு பேசும் அளவிற்கு யார் இவர்? இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? நீங்கள் ஏன் இவருக்கு இவ்வளவு முன்னுரிமை கொடுக்கின்றீர்கள்?  அவருக்கு அனைத்து கட்சிகளை சந்திக்க இருந்த நோக்கம் என்ன?

பதில்:- அப்போது அவர் பயங்கரவாதி அல்ல, அவர் சிறந்த மத தலைவராக இருந்தார். அவருக்காக பல இளைஞர்கள் பின்புலத்தில் இருந்தனர். ஆகவே வாக்குகளை பெற்றுக்கொள்ள அவர் தேவைப்பட்டார். 

 

கேள்வி:- நீங்கள்  அவரை பயங்கரவாதி என ஏற்கமாட்டீர்களா?

பதில்:- அவர் பயங்கரவாதி தான் அதனை நான் மறுக்கவில்லை, ஆனால் அந்த காலத்தில் அவர் மத தலைவர்.  இளைஞர் அனைவரும் அவருடன் இருந்தனர்.  பல உடன்படிக்கைகள் அவரினால் போடப்பட்டன . 

 

கேள்வி:- என்ன உடன்படிக்கை ?

பதில்:- தேர்தல்  கூட்டங்களில் பாடல் ஒலிபரப்ப  முடியாது. பெண்கள் கூட்டங்களுக்கு தனியாக வர வேண்டும். வாக்குகளை  பெற வேண்டும் என்பதற்காக நாம் அதனை ஏற்றுக்கொண்டோம். 

 

கேள்வி:- தேர்தலில் வாக்குகளை பெற்றுக்கொள்ள எந்த உடன்படிக்கையையும் செய்வீர்களா? 

பதில்:- அவர் அப்போது பயங்கரவாதி அல்ல, அவர் ஒரு மத தலைவர். அவர் பயங்கரவாதி என்றால் நாம் ஏன் சந்திக்க போகின்றோம்? அப்படி செய்ய மாட்டோம். அது மட்டும் அல்ல அதன் பின்னர் எனக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுத்தார்.  2015 காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டேன். அதில் இருந்து எனக்கு எதிராகவே அவர் செயற்பட்டார். 

என்னை அவர் 2000 வாக்குகளால் தோற்கடித்தார். அந்த சந்திப்பின் பின்னர் அவரை நான் சந்திக்கவே இல்லை. ஏனெனில் அவர் எனக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களை  செய்தார். எனக்கு வாக்கு கொடுக்க வேண்டாம் என பிரசாரம் செய்தார். நான் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் என்னை தேசிய பட்டியலில் இணைக்க வேண்டாம் என கூறி ஆர்ப்பாட்டம் செய்தார். என்னுடன்  சூபி மக்கள் உள்ளனர். அவர்கள் எனக்கு வாக்கு கொடுப்பார்கள். அவர்களை இவர்கள் தாக்கினர். இது தொடர்பில் வழக்கு தொடுத்துள்ளேன். இதில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் பலருக்கு பிடியாணை விடுக்கப்பட்டது. அப்போதில் இருந்து எனக்கு எதிராக பல எதிர்ப்புகள்  வந்தன.

இந்தியாவில்  கேலி சித்திரம்  ஒன்றை  எடுத்து அதில் எனது முகத்தை பொருத்தி முகப்புத்தகதில் விமர்சனம் செய்தனர், அவர் நியாஸ் என்ற நபர். இவர்தான் தற்கொலை தாரியாவார்.  என்னை மட்டும் அல்ல எனது குடும்பத்தையும் விமர்சித்தார். 2017 மார்ச் மாதத்தில் இருந்து இவரை தேடுவதாக கூறினர். சஹ்ரான் மற்றும் அவரது குழுவை கைதுசெய்ய வேண்டும் என நானும் சூபி குழுவினரும் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதன் பின்னர் அவர் இருக்கவில்லை. அவர் நாட்டில் இல்லை என கூறினார்கள். அதன் பின்னர் அவரை நாம் சந்திக்கவில்லை.  எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் என்னை இல்லாது செய்ய நடவடிக்கை எடுத்தவர். இராணுவத்தினர்  பலருடன் இவர் தொடர்பில் இருந்தவர்.நியாஸும் அவ்வாறு  இருந்தார். 

 

கேள்வி:- இது என்ன கதை, தெளிவுபடுத்துங்கள்?

பதில்:- இவர்கள் யுத்த காலத்தில் இருந்து தொடர்பில் இருக்கலாம். ஆமி மொய்தீன் என்பவரும்  இதில் இருந்தார். நியாஸ் என்ற நபர் இராணுவத்துடன் தொடர்பில் இருந்தார்.  இராணுவத்துடன் இவர்கள் இருந்தனர். இராணுவத்துடன் வருவது போவதை  பார்த்தோம். அவர்கள் பலமாக இருந்தனர். நாம் என்ன கூறினாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. 

 

கேள்வி:- இராணுவத்துடன் தொடர்பில் இருந்தனரா? எப்போதில் இருந்து? 

பதில் :- ஆம் 2015 ஆம் ஆண்டில் இருந்து தொடர்பில் இருந்தனர். அனைவருமா என்று தெரியாது, ஆனால் நியாஸ் தொடர்பில் இருந்தார் . 

 

கேள்வி:- நீங்கள் எந்த கட்சியில் அப்போது இருந்தீர்கள்? 

பதில்:- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்தேன். கிழக்கில் பிரதான வேட்பாளராக களமிறங்கினேன் 

 

கேள்வி:- சஹ்ரானின் அழைப்புக்கு செல்ல நீங்கள் தீர்மானிக்க அவருக்கு இருந்த பலம் என்ன? 

பதில்:- வாக்கு  பலம் தான் 

 

கேள்வி:- நீங்கள் வாக்குகளை மட்டும் பார்த்தால் அவருக்கு எத்தனை பேர் ஆதரவாக இருந்தனர்  என நினைகிறீர்கள்?

பதில்:- இரண்டாயிரம் மூவாயிரம்  வாக்குகள், அப்போது நான் மகிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன், அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனாதிபதி  மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டு இருந்தார். ஊரில் மூவாயிரம்  வாக்குகள் உள்ளன என்றால் பலம் தானே? அதேபோல் அவர் நல்ல பேச்சாளர்.  ஆகவே அது பலம் தான். 

இதற்காக மட்டும் அல்ல இவரை தவிர வேறு வேறு அமைப்புகளுடனும் பேசினேன். தப்ளிக் ஜமாஅத் அவர்களுடன் பேசினேன். பத்தாயிரம் வாக்குகள் உள்ளன. சூபி என்ற அமைப்பு உள்ளது.  அவர்களிடம் ஆயிரம் வாக்குகள் உள்ளன. தாருல் என்ற அமைப்பு இவ்வாறு பல அமைப்புகள் உள்ளன. அவர்களிடம் பேசுவோம்.இது சாதாரண விடயம்.

 

கேள்வி:- சஹ்ரானுக்கு பாதுகாப்பு உதவி கிடைத்ததா? 

பதில்:- ஆம், சஹ்ரான்  எந்த சிக்கலும் இல்லாது அனைத்து சலுகைகளையும் பெறுவார். அவர்களுக்கு பொலிஸ் நெருக்கடி இருக்கவில்லை. அவர் வேறு முஸ்லிம்  அமைப்புகளை விமர்சித்து ஒலிபெருக்கிகளை கொண்டு தாக்குதல்  நடத்துவார். 

 

கேள்வி:- அப்படிஎன்றால் அவருக்கு அனுமதி கிடைக்குமா?

பதில்:- ஆம், சகல சலுகைகளையும்  பெற்றார். 

 

கேள்வி:- அவர் மதங்களுக்கு இடையில் வெறுப்புணர்வையும்  முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிராக  வெறுப்புணர்வையும்  ஏற்படுத்தினார்.  அப்படியா? 

பதில்:- ஆம், அவர்  மத ரீதியில்  தாக்குதல் நடத்துவார். 2010-11 காலங்களில் இருந்து மத ரீதியில் புதிய புதிய விடயங்களை கூறி ஒவ்வொரு குழுக்களில் இணைந்தார். அவர்களிடம் முரண்பாடுகள்  ஏற்பட்டு அவர்களே நீக்கிவிடுவார்கள். பின்னர் அவராக ஒரு அமைப்பை உருவாக்கினார். ஒவ்வொரு வெள்ளியும் ஏனைய மதங்களை விமர்சித்தார். 2017 ஆம் ஆண்டு வரை அவர் ஊரில் இருக்கும் வரையில் மதவாதியாக இருந்தார். அதன் பின்னர் தான் அவர் ஐ.எஸ் அமைப்பில் இணைந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 

 

 (முழுமையான விபரம் நாளை எதிர்பாருங்கள் )

https://www.virakesari.lk/article/58204

  • தொடங்கியவர்

முன்பெல்லாம் மாணவர்களிடம் நீ ஜனாதிபதியாக வந்தால்; நாட்டின் பிரதமராக இருந்தால் எப்படி அரசாட்சி செய்வீர் என்று கட் டுரை வரைக எனக் கேள்வி கேட்பது வழக்கம். அதுவும் 150 சொற்களுக்குள் இருக்கவேண்டும், 

நான் ஒரு மாணவனாக இருந்தால் நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து விசாரணை நடத்துவதற்கெனப் பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நான் ஓர் உறுப்பினராக இருந்தால் ........ என்று கட்டுரை எழுது மாறு கேள்வி கேட்கப்படுவதை விரும்புவேன்.

அவ்வாறான கேள்வி கேட்கப்பட்டால், மாணவன் என்ற அடிப்படையில் என் கட்டுரை இவ்வாறாகவே இருக்கும்.

ஹிஸ்புல்லா: வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்தாறு ஓடும் என்று நான் கூறியது உண்மைதான். 

தெரிவுக்குழு உறுப்பினர் (மாணவன்): வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்
ஹிஸ்புல்லா: (கற்பனை) (மெளனம்)


தெரிவுக்குழு உறுப்பினர் (மாணவன்): கிழக்கு மாகாணத்தில் பள்ளி வாசல்களில்  வைத்திருந்த வாள்களைக் கொண்டு தமிழ்மக்களை வெட்டிச் சரித்திருப்பீர்கள். அதன் மூலம் இரத்தாறு ஓடியிருக்கும்.

ஹிஸ்புல்லா (கற்பனை) மெளனம்


தெரிவுக்குழு உறுப்பினர் (மாணவன்): தற்கொலைக் குண்டுதாரிகள் மூலாக தமிழர் பகுதிகளில் குண்டு களை வெடிக்க வைத்து பல்லாயிரக் கணக்கான தமிழ்மக்களைக் கொன்று குவித்து இரத்த ஆறைஓட வைத்திருப்பீர்கள்.

ஹிஸ்புல்லா: (கற்பனை) மெளனம்


தெரிவுக்குழு உறுப்பினர் (மாணவன்):வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால், இரத்த ஆறு ஓடும் என்று தான் கூறியது உண்மை என ஹிஸ்புல்லா ஏற்றுக்கொண்ட பின்பு கூட, அவரைக் கைது செய்ய வில்லை என்றால் என்ன காரணம்... நூற்றைம்பது சொல் முடிந்து விட்டதால் பதிலை நீங்களே கண்டறியுங்கள் 🙂 

  • தொடங்கியவர்

8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்

தீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், 8 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் அங்கிருந்து சென்றுள்ளதாக, ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் குணசேகர தெரிவித்தார்.

இன்று (15) முற்பகல் 9.45 மணியளவில் தீவிரவாத விசாரணைப் பிரிவுக்கு சமூகமளித்த அவர், பிற்பகல் 5.45 மணியளவில் அங்கிருந்து சென்றதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி இரவு 10 மணியளவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த வேளையில், கல்குடா பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் அரேபியர்கள் இருவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் தீவிரவாத விசாரணை பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்காக அவர் அங்கு  அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.thinakaran.lk/2019/06/15/குற்றம்/35942/8-மணிநேர-வாக்குமூலத்தின்-tid-யிலிருந்து-வெளியேறினார்-ஹிஸ்புல்லாஹ்

ரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு எதிராக நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின், முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலியை ஆகியோரை கைது செய்யுமாறும் குருணாகல் வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு தண்டனை வழங்க கோரியும் நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் நுவரெலியா நகர மத்தியில் இன்று முற்பகல் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய சுதந்திர முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றதாக அங்கிருக்கும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%2C+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%2C+%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

http://www.hirunews.lk/tamil/218466/ரிஷாட்-ஹிஸ்புல்லாஹ்-அசாத்-சாலிக்கு-எதிராக-நுவரெலியாவில்-ஆர்ப்பாட்டம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.