Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எந்த தாக்கத்தையும் செலுத்தாது...

Featured Replies

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் எந்த தாக்கத்தையும் செலுத்தாது என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கம்புருபிட்டியவில் நடைபெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
 
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றில் புதிதாக 10 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
 
தென்னாபிரிக்காவில் இயங்கும் உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டதின்; அறிக்கையொன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் இலங்கையில் சித்திரவதைகளுக்கு ஆளானதாக தெரிவித்து இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
 
இந்த 10 புதிய வழக்குத் தொடுநர்களில் 8 தமிழர்களும் இரண்டு சிங்களவர்களும் அடங்குவதுடன் அவர்களில் மூன்று பேர்  பெண்களாவர்.
 
இதுதொடர்பில் இன்று செய்தியாளர்கள், மகிந்த ராஜபக்ஷவிடம் கேட்ட போது, இது புலம்பெயர்ந்த தமிழர்களின் செயற்பாடு மாத்திரமே என்று கூறினார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் எந்த தாக்கத்தையும் செலுத்தாது என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Ãhnliches Foto

அட... "வேலிக்கு, ஓணான் சாட்சி"  சொன்ன கதையாய்.. இருக்கு.  

5 hours ago, ampanai said:

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் எந்த தாக்கத்தையும் செலுத்தாது என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச இரட்டைக்குடியுரிமையுடன் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே அமெரிக்க குடியுரிமையை கைவிடும் முயற்சியில் இறங்கினார் (6 March இல் ஆரம்பித்தார்).

அந்நேரத்தில் தான் இவருக்கெதிராக வழக்கு போட்டிருந்தார்கள். இப்பொழுதும் போட்டுள்ளார்கள்.

கோத்தா 17 April அன்று அமெரிக்க கடவுச்சீட்டையும் ஏனைய தேவையான பத்திரங்களையும் அமெரிக்க தூதரகத்தில் கையளித்து விட்டார். எனவே அமெரிக்க குடியுரிமையை இழந்ததற்கான ஆவணத்தை இவருக்கு வழங்க வேண்டும். அதை ஏற்கனவே வழங்கி விட்ட மாதிரியும் கதை அடிபடுது, இன்னும் வழங்கவில்லை என்றும் சொல்லினம். எது உண்மையோ? 🤔

அமெரிக்காவில் இவருக்கெதிராக வழக்குகள் இருந்தாலும் அது அமெரிக்க குடியுரிமையை கைவிடும் நடவடிக்கையில் தாக்கம் செலுத்தாமல், கைவிட்ட பின் அவ்வழக்குகளை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.