Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஒரு யுவதியை வறுமை சீரழித்த விதம்..தனது வாழ்க்கைக்கும் விடைகொடுத்தாள் அவள்!!"

Featured Replies

தனமல்வில பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சந்தமாலி எனும் யுவதியே வறுமையால் வாழ்கையை தொலைத்தவள் ஆவாள். தாய், தந்தை சகோதரர்கள் என அனைத்து குடும்ப அம்சங்களும் நிறைந்த நல்லதோர் குடும்பத்தில் பிறந்த சந்தமாலி சாதாரண தரம் வரை கல்வி கற்றார்.

அவரது குடும்பத்தில் காணப்பட்ட வறுமை சந்தமாலியின் வாழ்கையை திசைதிருப்பியது.

வறுமையை இல்லாதொழிக்க கொழும்பிற்கு வேலைக்கு வருகிறாள்... பல இடங்களில் தொழில் புரிகின்றாள். ஆனால் சமூகத்திற்கோ தனது குடும்பத்திற்கோ கரை படியும் வகையில் எந்தவிதமான கூடாத தொழிலும் ஈடுபடவில்லை. ஆனால் வறுமை சந்தமாலிகறையை துரத்திக்கொண்டே இருந்தது. சந்தமாலியும் வறுமையிலும் வருமானம் தேடி ஓடிக்கொண்டே இருந்தாள்

பொருளாதார சுமை அவள் வாழ்க்கையை ஒரு கட்டத்திற்கு பாரிய தடையாக காணப்பட்டது. சிந்தித்தாள் தனது குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றுவது..? வறுமையின் பிடியிலிருந்து எவ்வாறு மீட்டெடுப்பது. என்றெல்லாம் கற்பனை செய்ததன் பின்னர் தான் அவள் தகாத தொழில் ஒன்றினை தெரிவு செய்கிறாள். நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அவளுக்கு ஓய்வுக்கென்று நேரமின்றி தனவந்தர்களுடன் நேரத்தை செலவிடுகிறாள்.

இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதி 6 ஆம் மாதம் 2019 அன்று விடுதி ஒன்றினை நடாத்தி வரும் நண்பரான தினேஷ் என்பவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்றினை மேற்கொள்கின்றார்.

சந்தமாலி 'அண்ணா எனக்கு இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு தங்குவதற்கு அறையொன்று தேவை, என்னுடைய கையில் பணம் இல்லை என்றாள்.

தினேஷ் : ' சரி சரி அப்படியா.... வாங்களேன் பார்க்கலாம்

சந்தமாலி தினேஷிடம் மற்றுமொரு கோரிக்கையையும் முன்வைக்கின்றாள்.

சந்தமாலி : அண்ணா என்னுடைய கையில் பணம் இல்லை நான் வருகை தரும் முச்சக்கர வண்டிக்கான கூலியையும் நீங்களே கொடுக்க வேண்டும். தினேஷிடம் கிடைக்கப்பெற்ற பதில்களுக்கு அமைய அம்பலாந்தோட்டையிலிருந்து முச்சக்கர வண்டியில் குறித்த விடுதிக்கு செல்கின்றாள். தினேஷ் என்று அழைக்கப்படும் தனது நண்பரை பிற்பகல் 2.10 இற்கு சந்திக்கின்றாள் சந்தமாலி. முச்சக்கர வண்டி கட்டணமாக 1800 ரூபாவை பெற்றுக்கொடுக்கின்றாள்.

சந்தமாலியை பார்த்தவுடன் 'ஏன் தங்கச்சி சுகமில்லையா' என கேட்கின்றார் தினேஷ். அதற்கு பதிலளித்த சந்தமாலி, 'ஆம் அண்ணா நான் எபோசன் ஒன்று செய்தேன் சில நாட்களுக்கு நான் இங்கு தங்க வேண்டும்' என கேட்கின்றாள்.

சந்தமாலியின் வேண்டுகோளினை ஏற்றுக்கொண்ட விடுதியின் உரிமையாளரான தினேஷ், 16 ஆம் இலக்க அறையினை தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.

13, 14, 15 ஆகிய மூன்று தினங்கள் விடுதியின் அறையிலேயே தங்கியிருந்த சந்தமாலிக்கு 15 ஆம் திகதி உடல் நிலைகுன்றி வருத்தத்துடன் அவதியுற்றுள்ளார்.

அத்துடன் கையடக்க தொலைபேசியில் சிலருடன் கதைத்து அவர்கள் கூறும் உணவு மற்றும் மருந்து வகைகளை உட்கொண்டுள்ளார்.

16 ஆம் திகதி காலையில் விடுதியின் உரிமையாளரும் நண்பருமான தினேஷிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அண்ணா இன்றைய தினம் என்னை வைத்தியர் குளிக்க முடியும் என கூறினார். ஆகையினால் நான் நீராடுவதற்கு உதவி செய்யுங்கள்' என கேட்டுக்கொண்டாள்.

தினேஷிற்கு சந்மாலியின் கோரிக்கையை நிராகரிக்க முடியவில்லை.. காரணம் தினேஷின் கோரிக்கைக்கு இணங்க சந்தமாலி உடல் ரீதியாக பல தடவைகள் உதவியளித்துள்ளார். சந்தமாலியை நீராட்டி அவளின் கட்டிலில் ஓய்வெடுக்குமாறு தெரிவித்து விட்டு ஏதேனும் உணவு எடுத்து வருவதாக தெரிவித்த தினேஷ், ஒரு கோப்பை பாலினையும் பருகுமாறு கொடுத்துள்ளார்.

பின்னர் கட்டிலில் ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு தினேஷ் சமையலறைக்கு சென்று நீண்ட நேரத்தின் பின்னர் சந்தமாலியை பார்ப்பதற்கு சென்றுள்ளார்.

அந்த தருணத்தில் சந்தமாலி கட்டிலிலிருந்து கீழே விழுந்த நிலையில், கண்களில் விழிகள் மறைந்து வெண்நிற படலம் மாத்திரம் தெரியும் வகையில் விழித்தப்படி மயங்கி கிடந்துள்ளார். குழப்பமடைந்த தினேஷ் சந்தமாலியை அருகிலிருந்த முச்சக்கர வண்டியின் உதவியுடன் தெபரவெவ பகுதியிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

சந்தமாலியை பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர்கள் சந்தமாலி உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

சந்தமாலியின் அகால மரணம் தொடர்பில் வைத்தியர்கள் பொலிசாருக்கு அறிவித்துள்ளனர். பொலிசாரின் வருகையின் பின்னர் சந்தமாலி தங்கியிருந்து விடுதியின் அறைக்கு சென்று அங்கு காணப்பட்ட இரத்தம் படிந்த உடைகள், அவரின் வங்கி புத்தகம், மற்றும் பயணப் கைப்பை போன்றவற்றை மீட்டுள்ளனர்.

சந்தமாலி தனமல்வில பகுதியிலிருந்து கொழும்பிற்கு பிரிதொரு நபரால் அழைத்துச்செல்லப்பட்டதாகவும், பின்னர் கொழும்பிலிருந்து மாத்தறைக்கும் அவருடனேயே வருகை தந்துள்ளதாகவும், அதற்கான பயணச்சீட்டுக்கள் சந்தமாலியின் கைப்பையில் காணப்பட்டுள்ளமையையும் பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

அத்துடன் கையடக்க தொலைபேசியில் இடைக்கிடையே பேசிக்கொண்டிருந்த வைத்தியரின் தொடர்புகளும் பொலிசாரால் கண்டறியப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்பினால் அதிக இரத்தம் சந்தமாலியின் உடம்பிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், அதனாலேயே அவர் உயிரிழந்துள்ளார் எனவும் வைத்திய பரிசோதனைகள் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது. கருக்கலைப்பு செய்த வைத்தியர் உள்ளிட்ட மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வறுமையின் பிடியிலிருந்து தன்னை பாதுகாக்க சந்தமாலி தேர்ந்தெடுத்த தொழில் துறையும், வாழ முடியாதளவிற்கு பொருளாதார சுமையை ஏற்படுத்திய நாடும், அவளை சீரழித்த இந்த சமூகமும் அவளின் இழப்பிற்கான சாபத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்

வயிற்றுப் பசிக்காக தொழில் தேடும் மானுடத்தை உடல் சுகத்திற்காக பலியாக்கும் மானுடம் இவ்வுலகிலிருந்து அழியவேண்டும். மக்களின் பணத்தை அடிவருடும் அரசியலும் அதனால் தலைவிரித்தாடும் வறுமையும் வேரோடு இல்லாதொழிக்கப்பட வேண்டும்... அப்பொழுது சந்தமாலி மீண்டும் பிறப்பெடுப்பாள் பவித்திர உடல் கொண்டு வாழ்வை வாழ்ந்து முக்தி பெறுவாள்.
 

http://www.hirunews.lk/tamil/219458/ஒரு-யுவதியை-வறுமை-சீரழித்த-விதம்-தனது-வாழ்க்கைக்கும்-விடைகொடுத்தாள்-அவள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.