Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் இலங்கை சிறுமிக்கு தலையில் காயம்- வைத்தியாசாலைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் இலங்கை சிறுமிக்கு தலையில் காயம்- வைத்தியாசாலைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுப்பு

 

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தம்பதியினரின் இரண்டுவயது குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்ட போதிலும் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு  அதிகாரிகள் பல மணி நேரமாக அனுமதி வழங்க மறுத்தனர் என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்களான நடேஸ் பிரியா தம்பதியினரின் இரண்டு வயது மகள் தருணிகாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டதாக மனித உரிமை  ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

புரோட்மெடோசில் உள்ள மெல்பேர்ன் குடிவரவு இடைந்தங்கல் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தம்பதியினரின் குழந்தை தலையில் கரும்பலகை விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை நான்குமணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்ற போதிலும் இரவு 11.30 மணிவரை தருணிகாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் அனுமதிவழங்கவில்லை என  மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தலையில் காயம் ஏற்பட்டவுடன் தருணிகா வாந்தியெடுத்த நிலையிலும் தருணிகாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.nadesh_priya.jpg

மீண்டும் தருணிகா வாந்தியெடுத்ததை தொடர்ந்து அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் கூட்டி வந்தனர் ஆனால் அவளால் ஒழுங்காக நடக்க முடியாத நிலை காணப்பட்டதை தொடர்ந்து மீண்டும் மருத்துவமனைக்கு ஸ்கானிற்காக கொண்டு செல்கின்றனர் என ஏஞ்ஞலா பிரெட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நல்ல செய்திக்காக தற்போது காத்திருக்கின்றோம் அவளிற்கு உள்காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற கரிசனை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 16 மாதங்களாக நடேஸ்பிரியா தம்பதியினர் இரு குழந்தைகளுடன் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகஇரு பிள்ளைகளின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

https://www.virakesari.lk/article/59856

 

  • 1 month later...

நாடு கடத்தலை எதிர்கொள்கின்றது இலங்கை தமிழ் குடும்பம்- அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் அனுமதி மறுப்பு

அவுஸ்திரேலியாவில்  தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பம்  இலங்கைக்கு எவ்வேளையிலும் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.

நடேஸ் பிரியா தம்பதியினரும் அவரது இரு பெண் குழந்தைகளுமே நாடு கடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு வயது மகள் தருணிகாவிற்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆராயுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அதிகாரிகள் ஆராய மறுத்துள்ள நிலையிலேயே தமிழ் குடும்பத்தினர் நாடு கடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

நடேசலிங்கத்தின் இரண்டு வயது மகளின் சார்பில் அனுப்பப்பட்ட கடிதம் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றாததன் காரணமாக குடிவரவு துறை அமைச்சர் டேவிட் கொலமன் அதனை ஆராயவில்லை என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு வயது குழந்தையின் புகலிடக்கோரிக்கையை கருத்தில் கொள்ளுமாறு கோரி தாங்கள் சமர்ப்பித்த வேண்டுகோளிற்கே இந்த பதில் கடிதத்தை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர் என நடேசலிங்கம் குடும்பத்தின் சட்டத்தரணி கரினா போர்ட் தெரிவித்துள்ளார்.

nadesh_priya.jpg

இரண்டு வயது குழந்தை  அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கான தற்காலிக பாதுகாப்பு விசாவை வழங்குமாறும் அல்லது புகலிடக்கோரிக்கையை பரிசீலிக்குமாறும் கோரியிருந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த கடிதத்தை உரிய அதிகாரிகள் அமைச்சரிடம் சமர்ப்பிக்கவில்லை அதற்கான காரணத்தை நாங்கள் கோரியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நடேசும் பிரியாவும் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு வந்தவர்கள் என்பதால் அவர்களின் குழந்தை அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கான தடையை அமைச்சரால் மாத்திரமே நீக்க முடியும் என தெரிவித்துள்ள சட்டத்தரணி குறிப்பிட்ட குழந்தை அவுஸ்திரேலியாவில் பிறந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் 2012 மற்றும் 2013 இல் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற  நடசலிங்கமும் பிரியாவும் அங்கு திருமணம் செய்தனர். அவர்களிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

நடேசலிங்கம் முன்னர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புவைத்திருந்தவர் என்பதால் அவர் இலங்கை;கு திரும்பினால் சித்திரவதைகளிற்கு உள்ளாவார் என அவரது குடும்பத்தினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

நடேஸ் பிரியா தம்பதியினரின் புகலிடக்கோரிக்கையை ஏற்கனவே நிராகரித்துள்ள அவுஸ்திரேலிய அதிகாரிகள் அவர்களை கடந்த 17 மாதங்களாக குழந்தைகளுடன் மெல்பேர்னின் தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/63166

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.