Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் காமாட்சி அம்மன்...கோர்ட் வாசலை கலங்கடித்த நிர்மலா தேவி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

à®à®à¯à®à®¾à®° à®à¯à®à®¾à®¤à¯

நான் காமாட்சி அம்மன்...ஏவ்.. எல்லோரும் வரணும்.. ஏவ்.. கோர்ட் வாசலை கலங்கடித்த நிர்மலா தேவி!

தன் முடியை தானே வெட்டி, காதிலும் அதை தொங்க விட்டு கொண்டு, "கீழே சிவப்பு கலர்ல இந்த பேன்ட்டை போட்டுக்கிட்டு, மேலே இந்த புடவையை கட்டியிருக்கிறேன். பூ வெச்சிருக்கேன்" என்று பேச ஆரம்பித்த நிர்மலாதேவியை தமிழகம் முழுக்க மக்கள் குழப்பத்துடன் பார்த்து வருகிறார்கள்.

வழக்கம்போல் பளபளவென புடவை, தலைநிறைய மல்லிகைப்பூ, கழுத்து நிறைய நகைகளுடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார் நிர்மலாதேவி. கோர்ட்டுக்குள் வழக்கறிஞருடன் பேசிக் கொண்டே சென்றார்.

அப்போது, "கீழே சிவப்பு கலர்ல இந்த பேன்ட்டை போட்டுக்கிட்டு, மேலே இந்த புடவையை கட்டியிருக்கிறேன். பூ வெச்சிருக்கேன்" என்று சொல்லி பேன்ட், பூ, புடவையை சுட்டிக் காட்டுகிறார். வழக்கு விசாரணை முடிந்துவிட்டு வெளியே வரும்போது, வாசற்படியிலேயே ஹேண்ட் பேக்கை வைத்து கொண்டு உட்கார்ந்துவிட்டார்.

அங்கிருந்த நபர், "இங்கே ஏன் உட்கார்றீங்க? முன்னாடி போய் உட்காருங்க" என்கிறார். உடனே பையை தூக்கி கொண்டு அங்கிருந்து எழுகிறார் நிர்மலா. திரும்பவும் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொள்கிறார். அங்கே உட்காரக்கூடாது என்று இன்னொருவர் சொல்லியும் கேட்காமல், "இங்கதான் என்னை உட்கார சொல்லி இருக்காங்க" என்று சொல்லி உட்கார்ந்துவிட்டார்.

வà¯à®à®¿à®¯à¯

சிறிது நேரம் கைகளை கூப்பி, கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்கிறார். பிறகு எதைஎதையோ தனக்குத்தானே முணுமுணுக்கிறார். இதை அங்கிருந்த நிறைய பேர் பார்த்து கொண்டே செல்கிறார்கள் செய்தியாளர்கள் இதை வீடியோவாக படம் பிடிக்க துவங்கி விட்டனர். இங்கே உட்காரகூடாது என்று சொல்லி கோர்ட் வளாக பெஞ்சில் உட்கார வைக்கிறார்கள். அப்போது தன்னுடைய முடியை தானே வெட்டி, அதை காதில் தொங்க விட்டு கொண்டார். கண்களை மூடிக்கொண்டு தெளிவாக பேச ஆரம்பித்தார். அதன் முழு விவரம் இதுதான்:

à®à®¾à®®à®¿ à®à®¿à®à¯à® à®à¯à®à¯à®à¯à®©à¯

"நான்தான் காமாட்சி அம்மன். இப்போ தீர்ப்பு வந்துருச்சு. சந்தோஷமா இருக்கு. பட்டாசு வெடிச்சிட்டாங்க. வெளிஉலகத்துக்கு தனியா தெரியறேன். ஆனா எல்லார்கூடயும் நான் மனரீதியா பேசிட்டுதான் இருக்கேன். எங்க பாவாங்க ரெண்டு பேருக்கும் முடி ரொம்ப நீளமா இருக்கணும்ன்னு ஆசை. சாமிக்கிட்டே கேட்டேன். தரேன்னு சொல்லி இருக்காங்க. வர்றப்போ அதுக்குண்டான பரிகாரங்கள் காரில் வெச்சு காமாட்சி அம்மன் செய்ய சொன்னாங்க. அதை செஞ்சிருக்கேன். கோர்ட் வாசல்ல அந்த முடியை போட சொன்னாங்க.

அனேகமாக கிட்டத்தட்ட முடி நீளமா வந்துடும். எந்த அளவுக்கு வரும்ன்னா, நான் அம்மா கிட்டது முழங்கால் அளவு முடி கேட்டேன். அம்மா எனக்கு அருள் குடுத்திருக்கிறது கையில் இப்படி போட்டு, முடி தரையில படர்ந்து வர்ற அளவுக்கு தரேன்னு சொல்லிட்டு ஆசை குடுத்திருக்காங்க. கண்டிப்பா குடுப்பாங்க. அதே மாதிரி இன்னொன்னும் கேட்டிருக்கேன், எதுக்காக கேட்டிருக்கேன்னா, எங்க குடும்பத்துல, எங்க வீட்டுக்காரங்க, அத்தை, மாமா, அப்பா, அம்மா, எனக்காக எதிரிகளால சாகடிக்கப்பட்ட எல்லாரும் வந்து கூப்பிட்டேன்.

செத்துட்டாங்க:   நைட் பூஜை செஞ்சேன். அப்போதான் எனக்கே விவரம் தெரியும். நிறைய பேர் இறந்திருக்காங்க. காலேஜ் குழந்தைங்க நெறைய பேர் இறந்திருக்காங்க. தூக்கு போட்டு கொஞ்சம் பேர் இறந்திருக்காங்க. பவித்ரா, அர்ச்சனா, இவங்க எல்லாம் இறந்திருக்காங்க. இவங்க எல்லாம் 3-ம் வருஷ மாணவிகள். இவங்க எம் மேல கம்ப்ளைன்ட் பண்ணவங்க. 

இதையெல்லாம் நான் பேசல, காமாட்சி அம்மன் பேசறாங்க. அருப்புக்கோட்டையில இருக்கக்கூடிய காமாட்சி அம்மன் கோயிலுக்கு நேத்து சாயங்காலம் நான் பூஜை பண்ண போனேன். நேத்து காலைல 5.30 சரவணபாண்டி பவா என்னை எழுப்பி விட்டார். குத்துவிளக்கேத்தி சாமி கும்பிடுன்னு சொன்னார்" என்றார்.

à®à®ªà¯à®ªà®®à¯

ஏப்பம்:   இதெல்லாம் சொல்லி முடிக்கும்வரை நிர்மலாதேவி கண்களை திறக்கவே இல்லை. அதே சமயத்தில் அடிக்கடி ஏப்பம் விட்டுக் கொண்டே இருந்தார். நடுவில் திடீரென அழுதார். அவர் பேச பேச, உடன் இருந்தவர்கள் குறுக்கு கேள்விகளை கேட்டபடியே இருந்தனர். அதையும் காதில் வாங்கி கொண்டு பதில் சொன்னார் நிர்மலாதேவி.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/professor-nirmala-devi-acts-weird-in-srivilliputhur-court-356419.html

  • கருத்துக்கள உறவுகள்

யாமீனில் வெளியான பேராசிரியை நிர்மலாதேவியை ஏன் போலீசு தேட வேண்டும்? திரும்ப திரும்ப ஏன் தொந்தரவு செய்யணும்? வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

யாமீன் வழங்கும்போது, ஊடகங்களுக்கு அவர் எந்தபேட்டியும் தரக்கூடாது என்று நிபந்தனையும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல நீதிமன்றத்தில் நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க இடைக்கால தடையும் உள்ளது. பேராசிரியை நிர்மலா தேவி பற்றிய செய்திகள் புலனாய்வு இதழ் ஒன்றில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் முறையீடும் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

காரணம் என்ன? காரணம் இதுவாகத்தான் இருக்கவேண்டும்....! மக்களை ஆட்சிசெய்த மனுநீதிச் சோழர்கள்போல்..... தங்களை வெளிக்காட்டி ஆட்சிசெய்யும் அரசிலுள்ள காமவெறிபிடித்த பெரும் புள்ளிகள், எங்கே தங்கள் பெயர்களை பேராசிரியை வெளிப்படுத்தி விடுவாரோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

   44158d1442844799t-announcing-windows-10-insider-preview-build-10565-a-afraid-male-afraid-frightened-smile.gif-c200.gif

 

 

Edited by Paanch

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தà¯à®°à¯à®µà®¿à®²à¯ நà®à®¨à¯à®¤à®¾à®°à¯

திகில் தரும் நிர்மலாதேவி அவதாரம்.. தர்காவுக்குள் தலைவிரி கோலத்தில் புலம்பல்.. தூக்கி சென்ற போலீஸ்

எனக்கு பேய் பிடிச்சிருக்கு.. மந்திரிச்சு விடுங்க" என்று தர்காவுக்குள் தலைவிரி கோலமாக உறுமிய நிர்மலாதேவியால் அருப்புக்கோட்டையே ஆடிவிட்டது.

இதுநாள் வரை தெளிவாக இருந்த நிர்மலாதேவிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. நேற்று ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டுக்கு வந்து தமிழகம் முழுவதும் பேச வைத்து விட்டார்.

"காமாட்சி அம்மன் பேசறேன்.. எனக்கு எதிரான சாட்சி சொன்ன குழந்தைங்க எல்லாம் தூக்கு போட்டு செத்து போய்ட்டாங்க.." என்று அருள்வாக்கு வந்தவர் போல உளறி கொட்டினார்.

à®à¯à®²à¯à®ªà¯à®©à¯

இதையடுத்து அங்கு வந்த ஒரு வக்கீல், "இந்தாம்மா செல்போன்.. உன் புருஷன்கிட்ட பேசு" என்று போனை தரவும், அதை வாங்கி தரையில் மடார் மடார் என போட்டு உடைத்துவிட்டார் நிர்மலா. செல்போனை ரிப்பேர் செய்ய மொபைல் கடைக்கு உடன் இருந்தவர்கள் அழைத்து சென்றால், அங்கேயும் தரையில் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்து உளற ஆரம்பித்துவிட்டார்.

பிறகு திடீரென அந்த தெருவில் குறுக்கு நெடுக்குமாக ஆவேசமாக நடந்தார். தலையில் இருந்த மல்லிகை பூவை பிய்த்து போட்டபடி நடந்து கொண்டிருந்ததை மக்கள் பார்த்தவாறே சென்றனர்.

பà¯à®¯à¯ பிà®à®¿à®à¯à®à®¿à®°à¯à®à¯à®à¯

இதற்கு பிறகு இரவு 7 மணி இருக்கும்... அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தர்காவுக்குள் நுழைந்துவிட்டார். குழந்தைகளுக்கு மந்திரிக்கும் பகுதிக்கு சென்ற அவர் தரையில் அமர்ந்து கொண்டார். "நபிகள் நாயகம் என்னை இங்குதான் உட்கார சொன்னார். எனக்கு பேய் பிடிச்சிருக்கு.. மந்திரிச்சு விடுங்க" என்று உறுமினார். தலைமுடியெல்லாம் அவிழ்த்துவிட்டு கொண்டார்.
பà¯à®²à¯à®¸à¯

தலையை சுழட்டி சுழட்டி பேய் பிடிச்சிருக்கு என்று முட்டி முட்டி சொல்லி கொண்டே இருந்தார். இதனைக்கண்டதும் ஜமாத் நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.விஷயம் போலீசாருக்கு எட்டியதும், விரைந்து வந்த அவர்கள் தர்காவை விட்டு வெளியேறுமாறு சொன்னார்கள். ஆனால் நிர்மலாவோ, தனக்குதானே பேசிக் கொண்டே இருந்தார்.

à®®à¯à®°à®£à¯à®à¯ பிà®à®¿à®¤à¯à®¤à®¾à®°à¯

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் அங்கு வந்த மகளிர் போலீசார் நிர்மலாதேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போதும் வெளியே போக மறுத்து முரண்டுபிடித்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் தர்காவில் எல்லாரையும் படாதபாடு படுத்தி விட்டார். கடைசியில் போலீசார் அவரை குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.

வீடு ஆத்திப்பட்டி காவியநகரில் உள்ளதால், வாகனத்தில் ஏற்றி அழைத்துச்சென்றனர். ஆனால் வீட்டுக்குள் செல்ல மறுத்து அங்கேயும் நிர்மலாதேவி அடம் பிடித்தார். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வழியாக அவரை வீட்டுக்குள்ளே அனுப்பி வைத்தனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/virudhunagar/nirmala-devi-was-in-aruppukottai-dharga-356429.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Paanch said:

யாமீனில் வெளியான பேராசிரியை நிர்மலாதேவியை ஏன் போலீசு தேட வேண்டும்? திரும்ப திரும்ப ஏன் தொந்தரவு செய்யணும்? வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

யாமீன் வழங்கும்போது, ஊடகங்களுக்கு அவர் எந்தபேட்டியும் தரக்கூடாது என்று நிபந்தனையும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல நீதிமன்றத்தில் நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க இடைக்கால தடையும் உள்ளது. பேராசிரியை நிர்மலா தேவி பற்றிய செய்திகள் புலனாய்வு இதழ் ஒன்றில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் முறையீடும் செய்யப்பட்டுள்ளது.

காரணம் என்ன? காரணம் இதுவாகத்தான் இருக்கவேண்டும்....! மக்களை ஆட்சிசெய்த மனுநீதிச் சோழர்கள்போல்..... தங்களை வெளிக்காட்டி ஆட்சிசெய்யும் அரசிலுள்ள காமவெறிபிடித்த பெரும் புள்ளிகள், எங்கே தங்கள் பெயர்களை பேராசிரியை வெளிப்படுத்தி விடுவாரோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

   

 

Image may contain: 3 people, text

No Way Do Not Want GIF

ஐயோ... நான்... இல்லை.  என்னை விட்டுடுங்க.  :grin:  :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.