Jump to content

நீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை

on July 11, 2019

 

image3.jpeg?zoom=3&resize=736,337&ssl=1

 

படங்கள், Ian Treherne

திருகோணமலை கடற்கரையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி இடம்பெற்ற ஐந்து மாணவர்களின் படுகொலைகள் “திருகோணமலை ஐவர் சம்பவம்” (Trinco 5) என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் தண்டனைக்கு அச்சமின்றி குற்றச்செயல்களை நிகழ்த்தும் போக்கினை எடுத்துக் காட்டும் ஒரு குறியீட்டுச் சம்பவமாக அது இருந்து வருகின்றது. கொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையான டாக்டர் மனோகரனின் துணிச்சல் காரணமாக இந்தச் சம்பவம் பிரபல்யமடைந்தது. இந்தக் கொலையில் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்ற விடயத்தை டாக்டர் மனோகரன் அறிந்திருந்ததுடன், இது தொடர்பாக தொடக்கத்தில் நடத்தப்பட்ட ஒரு விசாரணையில் அவர் சாட்சியமளித்திருந்தார். திருகோணமலை ஐவருக்கு நீதியைக் கோரும் முயற்சியில் உள்ளூர் செயற்பாட்டாளர்களுடன், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இணைந்திருந்தன. இந்தச் சம்பவம் பரவலான விதத்தில் கவனத்தை ஈர்த்திருந்ததுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் 2007ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: “இந்தக் குற்றச் செயலை நிகழ்த்துவதில் சீருடை அணிந்த ஆளணியினர் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பதனை அனுமானிப்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருந்து வருகின்றன.” எவ்வாறிருப்பினும், இது தொடர்பான வினைத்திறன் மிக்க புலன் விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக வினைத்திறன் மிக்க விதத்தில் புலன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென 2007ஆம் ஆண்டின் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. மேலும், இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் இது தொடர்பாக மீண்டும் மீண்டும் பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. இவற்றுக்கு மத்தியிலும் கூட, இந்த விசாரணைகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வந்துள்ளன. இந்த வழக்கு திருகோணமலை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆமை வேகத்தில் இடம்பெற்றுவந்த நிலையில், சந்தேக நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து, பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்கள்.  அதன் பின்னர் போதியளவில் சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் இது  தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த சந்தேக நபர்கள் ‘விடுவிக்கப்பட்டதாக’ ஜூலை 03ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பொறுத்தவரையில் இந்தத் தீர்ப்பு இலங்கையின் குற்றவியல் நீதித்துறை தொடர்பான தமது நம்பிக்கையை தகர்த்தெறிந்த ஒரு குண்டுத் தாக்குதலாக இருந்து வந்தது.

உண்மையைக் கண்டறிந்து கொள்வதற்கான உரிமையை சம்பந்தப்பட்டவர்களுக்கு மறுத்திருக்கும் திருகோணமலை ஐவர் போன்ற வழக்குகள், குற்றச் செயல்கள் தொடர்பாக இலங்கையின் பாதுகாப்புப் படையினரை குற்றவாளிகளாக்கும் விடயத்தில் இலங்கையின் நீதித்துறை தோல்வி கண்டிருப்பதனை எடுத்துக் காட்டுகின்றன. டாக்டர் மனோகரன் தனிப்பட்ட துயரத்துக்கு மத்தியிலும் கூட, நீண்டகாலமாக முன்னெடுத்து வந்த ஒரு பிரச்சாரத்தின் ஊடாக இது தொடர்பான நிவாரணங்களைக் கோரியிருந்தார். 2007ஆம் ஆண்டின் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வீடியோ மூலம் சாட்சியமளிக்கும் நடைமுறையை இடைநிறுத்தியது. அத்துடன், அந்த ஆணைக்குழு அதன் அறிக்கையையும் வெளியிடத் தவறியிருந்தது. அச்சந்தர்ப்பத்தில், டாக்டர் மனோகரன் இது தொடர்பாக நீதியைப் பெற்றுக்கொள்வதற்கென சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்திருந்தார். ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் நிகழ்வொன்றின் போது, அதற்கு வெளியில் இடம்பெற்ற ஓர் உரையாடலில் அவர் இது குறித்துப் பேசியதுடன், திருகோணமலையில் மிகவும் கொடூரமான விதத்தில் கொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களுக்கும் நேர்ந்த கதி குறித்த உண்மையை இலங்கை அரசாங்கம் கூற வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார். அரசாங்கம் இது தொடர்பாக கால அவகாசத்தை கோரியிருந்தது. பின்னர் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை தொடர்பான உலகலாவிய பருவகால மீளாய்வின் போது டாக்டர் மனோகரன் இலங்கை அரசாங்கத்திடம் மேலும் ஒரு வேண்டுகோளை முன்வைத்திருந்தார். அத்துடன், கொலை செய்யப்பட்ட ரவிகர் மற்றும் அவருடைய நான்கு நண்பர்கள் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துவக்கி வைப்பதற்குத் தேவையான முதற்தோற்ற சாட்சியங்கள் இருந்து வருகின்றனவா என்பதனை நிர்ணயித்துக் கொள்வதற்கென அந்த விடயம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தது. இது தொடர்பான மேலும் விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். மீண்டும் ஒரு முறை இலங்கை அரசாங்கம் இது தொடர்பாக மேலும் கால அவகாசத்தை கேட்டிருந்தது. இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அதன் அறிக்கையில் திருகோணமலை ஐவர் படுகொலை சம்பவத்தை குறிப்பிட்டிருந்ததுடன், இது தொடர்பாக மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு, கொலைக் குற்றவாளிகள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டுமென வலுவாக பரிந்துரை செய்திருந்தது. இப்பொழுது 13 வருடங்கள் கழிந்திருப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பதிலளிப்பதற்கு அரசாங்கம் என்ன செய்திருக்கின்றது?

திருகோணமலை ஐவர் சம்பவம் பொறுப்புக்கூறும் விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் செய்யக் கூடிய காரியங்களை எடுத்துக் காட்டும் ஒரு அமிலப் பரிசோதனையாக இருந்து வருகின்றது. கொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் அவர்கள் தமிழ் இளைஞர்களாக இருந்து வந்தார்கள் என்பதைத் தவிர, வேறு எந்தவொரு காரணமும் இல்லாத நிலையில் – மிக அருகில் வைத்து சுடப்பட்டிருந்தார்கள். சிங்கள மற்றும் முஸ்லிம் நண்பர்களைக் கொண்டிருக்கும் டாக்டர் மனோகரன் இந்தச் சம்பவத்தை அரசியல்மயமாக்குவதற்கென எடுக்கப்பட்ட முயற்சிகளை எதிர்த்தார் – வெறுமனே அவருக்கு பதில்கள் மட்டுமே தேவையாக இருந்தது. அதேபோன்று எம் அனைவருக்கும் இது தொடர்பான பதில்கள் தேவைப்படுகின்றன.

மிகச் சமீபத்தில் இது தொடர்பாக ஏற்பட்டிருக்கும் மாற்றம், மீண்டும் ஒரு முறை இது குறித்துக் குரல் எழுப்புவதற்கும், திருகோணமலை ஐவர் சம்பவம் குறித்த உண்மையைக் கண்டறிந்து கொள்வதற்கான தனது முயற்சிகளுக்கு இலங்கை வாழ் பொது மக்களின் ஆதரவைக் கோருவதற்கும் அவரை நிர்ப்பந்தித்துள்ளது. குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதனையடுத்து, அவருடன் பேசக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் பின்வரும் விடயங்களையே எங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினார்:

என்னுடைய பெயர் டாக்டர் கைலாசபிள்ளை மனோகரன்.

என்னுடைய அன்பு மகன் ரஜீகர் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி இலங்கைப் படையினரால் கொலை செய்யப்பட்டார். அந்தப் பயங்கரம் நிகழ்ந்த அந்த நாள் தொடக்கம், அங்கு என்ன நடந்தது என்பது குறித்த உண்மையை கண்டறிய வேண்டும் என்பதற்காக நான் இடையறாது ஒரு முயற்சியை முன்னெடுத்து வந்துள்ளேன்.

எனது மகன் ரஜீகர் என்னுடன் தொடர்பு கொண்ட கடைசித் தருணம் அவர் எனக்கு அனுப்பிய ஒரு மொபைல் தொலைபேசி செய்தியாகும். அதில் வெறுமனே ‘DAD’ எனக் கூறப்பட்டிருந்து. அந்தச் செய்தி 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி எனக்குக் கிடைத்தது. என்னுடைய மகன் ஒரு நல்ல பையனாக இருந்து வந்ததுடன், பரீட்சைகள் முடிவடைந்த மகிழ்ச்சியை திருகோணமலை கடற்கரையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவன் கொண்டாடிக் கொண்டிருந்தான். அன்றைய தினம் கடற்கரையில் ஒரு குண்டு வெடித்த சப்தம் எனக்குக் கேட்டது, எனது ஏனைய மூன்று மகன்களும் வீடு திரும்பினார்கள். ஆனால், ரஜிகர் வீடு திரும்பவில்லை. இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஒரு சில நிமிடங்களில் எனக்கு மகனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது: Daddy படையினர் என்னை சுற்றி வளைத்துள்ளார்கள்” என அவர் கூறினார். பாதுகாப்பு படையினரையே அவர் குறிப்பிட்டிருந்தார். என்னுடைய மகன் கூறியது அவ்வளவுதான். அதன் பின்னர் ஒரு மௌனம் நிலவியது. அவர் எனக்கு அனுப்பிய கடைசி முடிவுறாத செய்தி அது தான்.

உடனடியாக நான் அந்த இடத்திற்குச் சென்ற போதிலும், அங்கிருந்த கடற்படை சிப்பாய்கள் என்னைத் தடுத்து நிறுத்தினார்கள். நான் உள்ளே செல்வதற்கு அவர்கள் எனக்கு இடமளிக்கவில்லை. “எங்களுக்கு உதவுகள்! எங்களுக்கு உதவுங்கள்!” என்ற அழு குரல்கள் எனக்குக் கேட்டன. ஆனால், என்னுடைய மகன் அமர்ந்திருந்த காந்தி சிலைக்கு அருகில் விளக்குகள் வேண்டுமென்றே அணைக்கப்பட்டிருந்த காரணத்தினால் அங்குள்ள நிலைமையை என்னால் தெளிவாகப் பார்க்க  முடியாதிருந்தது. அதனையடுத்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதுடன், சிலைக்கு அருகில் இருந்த விளக்குகள் அனைத்தும் அணைந்தன.

கடற்படையினருக்கு சிகிச்சை அளித்திருந்த ஒரு மருத்துவராக இருந்து வந்த காரணத்தினால் ஆஸ்பத்திரி சவச்சாலைக்குள் பிரவேசிக்க் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு எடுத்துச் செல்லப்பட்ட சடலங்களில் ஒன்று எனது மகனுடைய சடலமாக இருந்து வந்ததா என்பதனை நான் தெரிந்துகொள்ள விரும்பினேன். நான் உள்ளே பிரவேசித்த பொழுது, முதலில் பார்த்த சடலம் எனது அன்பு மகன் ரஜிகரின் சடலமாக இருந்தது. அவனுடைய உடலில் ஐந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன. அங்கிருந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் ‘எனது மகன் ஒரு தமிழ் புலி’ என்று குறிப்பிட்டு, ஒரு பத்திரத்தில் கையெழுத்திடுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு நான் உடன்பட்டால் உடனடியாக சடலத்தை பெற்றுத்தர முடியும் என்றும் அவர் கூறினார். நான் அதற்கு மறுப்புத் தெரிவித்தேன். என்னுடைய மகன் ஒரு நல்ல மாணவன். ஒரு மேசைப் பந்து விளையாட்டு வீரன். அவன் சதுரங்க ஆட்டத்தில் கெட்டிக்காரனாக இருந்து வந்ததுடன், சதுரங்க ஆட்ட பயிற்றுவிப்பாளனாகவும் இருந்து வந்தான்.

image2.jpeg?resize=665%2C443&ssl=1

ஒரு கிரனைட் தாக்குதலில் எனது மகன் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறியது. ஆனால், சவச்சாலையில் நான் பார்த்த மூன்று சடலங்களின் தலையில் காயங்கள் இருந்ததுடன், தலையின் பின்பக்கத்தில் அவர்கள் சுடப்பட்டிருந்தார்கள். என்னிடம் புகைப்படங்கள் இருப்பதுடன், மருத்துவரின் அறிக்கை அதனை உறுதிப்படுத்துகின்றது. அச்சடலங்களில் உட்பிரவேசத் துவாரம் சிறியதாக இருந்து வந்ததுடன், வெளிச்சென்ற துவாரம் பெரியதாக இருந்தது. இது அந்தப் பையன்கள் மீது மிக அருகிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது என்பதனைக் காட்டுகின்றது. தமக்கென ஓர் எதிர்காலத்தைக் கொண்டிருந்த ஐந்து இளைஞர்கள் இவ்விதம்  கொல்லப்பட்டிருந்தார்கள். அன்றைய தினம் மாலை நேரம் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். இது தொடர்பான உண்மையைக் கூற வைப்பதற்கு அதிகாரிகளுக்கு சவால் விடுக்க வேண்டுமென நான் முடிவு செய்தேன். சம்பவ இடத்திற்கு அருகில் இலங்கை விசேட அதிரடிப்படை வீரர்கள் நிற்பதனை நான் பார்த்ததுடன், அவர்கள் தொடர்பாக புலன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டேன்.

இது தொடர்பாக குரலெழுப்பத் தொடங்கியதிலிருந்து எனக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்தன. என்னுடைய ஏனைய மகன்மார்களும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார்கள். சடலங்களின் புகைப்படங்களை எடுப்பதற்காக என்னுடன் சவச்சாலைக்கு வந்த ஊடகவியலாளர் திரு. சுகிர்தராஜன் ஒரு சில வாரங்களின் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த மாணவர்கள் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டிருந்தார்களென இராணுவம் கூறியிருந்த விடயத்தை அவருடைய புகைப்படங்கள் பொய்யாக்கின. ரஜிகரின் கொலைச் சம்பவத்தைக் கண்டித்திருந்த புத்தபிக்கு ஒருவரும் கொல்லப்பட்டார். நானும், எனது குடும்பத்தினரும் இலங்கையில் தொடர்ந்து வசித்து வருவது மிகவும் ஆபத்தானதாக இருந்து வந்தது. கனத்த இதயங்களுடன் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாங்கள் இலங்கையிலிருந்து வெளியேறினோம். எமது நண்பர்களையும், மருத்துவத் தொழிலையும், சொத்துக்களையும் இழந்தோம்.  ஆனால், எமது மிகப் பெரிய இழப்பு ரஜிகரனின் இழப்பாகும்.

ஒரு தந்தை என்ற முறையில் இது தொடர்பான உண்மையைத் தேடிக் கண்டுபிடிப்பது எனது கடமையாகும். “Trinco 5 Case” என பரவலாக அறியப்பட்டிருக்கும் இந்தச் சம்பவம் தொடர்பாக புலன் விசாரணைகளை நடத்துவதற்கென முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமனம் செய்யப்பட்டிருந்த ஒரு விசாரணைக்குழுவிடம் நான் வீடியோ ஊடாக சாட்சியமளித்திருந்தேன். ஆனால், அது போன்ற முயற்சிகளினால் எத்தகைய பயன்களும் கிடைக்கவில்லை. இந்தக் கொலையில் பாதுகாப்புப் படையினரின் வகிபங்கினை ஏற்றுக்கொள்ளும் விடயத்தில் அரசாங்கம் ஓர் அரசியல் விருப்பினைக் கொண்டிருக்கவில்லை. எனவே, இந்த நிலையை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாத கட்டத்தில், ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் உண்மைக்கான எனது தேடலை எடுத்துச் செல்ல வேண்டுமென முடிவு செய்தேன். இது தொடர்பாக உண்மையைக் கூறுமாறு இலங்கையை வலியுறுத்த வேண்டுமென ஐ.நா. உறுப்பு நாடுகளிடம் கேட்டுக் கொண்டேன். இலங்கை தொடர்பாக 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் புலன் விசாரணை அறிக்கையில் திருகோணமலை ஐவர் சம்பவம் உள்ளடக்கப்பட்டிருந்தது. அதாவது – தண்டனைக்கு அச்சமின்றி குற்றம் புரியும் நிலையை எடுத்துக் காட்டும் ஒரு குறியீட்டுச் சம்பவமாக அல்லது சாதாரண மொழியில் கூறுவதாக இருந்தால் ஒரு குற்றச் செயலை மூடிமறைப்பதனை எடுத்துக் காட்டிய ஒரு குறியீட்டுச் சம்பவமாக – அது உள்ளடக்கப்பட்டிருந்தது.

13 வருடங்கள் கடந்த நிலையிலும் இந்த வழக்கு இன்னமும் ஸ்தம்பித நிலையில் இருந்து வந்தது. திருகோணமலை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் சுருக்க முறையற்ற விசாரணை வழக்காக அது எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ஜூலை மாதம் 03ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த 13 விசேட அதிரடிப்படை வீரர்கள் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வினைத்திறன் மிக்க விதத்தில் விசாரணை நடத்தும் விடயத்தில் அரசாங்கம் எவ்வாறு தோல்வியடைய முடியும்? இது மிகவும் பாரதூரமான ஒரு கொலைச் சம்பவமாகும். சவச்சாலையிலிருந்து மருத்துவர் வழங்கிய அறிக்கை உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்த விடயத்தை ஏற்றுக்கொள்கின்றது. எம்மைப் போன்ற குடும்பங்களுக்கு பதில்களை வழங்க முடியாதிருந்தால், இலங்கையின் குற்றவியல் நீதித்துறை குறித்து நான் எத்தகைய நம்பிக்கையையும் வைக்க முடியாது.

ரஜிகர் கொல்லப்படுவதற்கு முன்னர் தனக்கு உதவி வேண்டுமென என்னிடம் அழுகுரல் எழுப்பியிருந்தான்…. இது தொடர்பாக நீதி வழங்கப்படும் பொழுது – எனது மகனுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மையை இறுதியில் இலங்கை கூறும் பொழுது – உதவிக்கான ரஜிகரின் கோரிக்கை இறுதியில் செவிமடுக்கப்பட்டுள்ளது என்பதனை எம்மால் கூற முடியும்.

திருகோணமலை ஐவர் வழக்கு பொருத்தமான விதத்தில் விசாரணை செய்யப்படுவதனையும், இந்தக் கொலையை நிகழ்த்திய குற்றவாளிகள் இது தொடர்பாக பொறுப்புக்கூற வைக்கப்படுவதனையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதற்கு தயவு செய்து என்னுடன் இணைந்து கொள்ளுங்கள்.

image1.jpeg?resize=665%2C998&ssl=1


குறிப்பு: யோலண்டா பொஸ்டெர் (Yolanda Foster) சுயாதீனமான ஒரு ஆராய்ச்சியாளர் ஆவார். அவர் முன்னர் சர்வதேச மன்னிப்புச் சபையில் பணி புரிந்ததுடன், 2009 – 2017 காலப் பிரிவில் நியூயோர்க்கிலும், ஜெனீவாவிலும் ஐ.நா. அமைப்புக்களிடம் சாட்சியமளிப்பதற்கென டாக்டர் மனோகரனுடன் சென்றிருந்தார்.


Justice Denied for Trinco 5 என்ற தலைப்பில் யோலன்டா பொஸ்டெர் எழுதி கிரவுண்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.

 

https://maatram.org/?p=7993

Link to comment
Share on other sites

No Justice for ‘Trinco 5’; HRW & Amnesty

“Sri Lankan authorities have proven unable to obtain justice for the murders of five young people and the resulting coverup despite the considerable evidence available,” said Meenakshi Ganguly, South Asia director at Human Rights Watch. “The failure to convict anyone in this emblematic case after 13 years demonstrates the need for a court with international participation that can properly protect victims and witnesses.”

http://www.sundaytimes.lk/article/1094500/no-justice-for-trinco-5-hrw

The failure to prosecute is also particularly damning given the national and international prominence of the incident. Such was the public outcry that followed it, the case is today routinely included among Sri Lanka’s list of so-called ‘emblematic cases’: instances of human rights abuses so egregious or incontrovertible in nature that successful prosecutions are regarded as a litmus test for the government’s stated commitment to justice and accountability. This week’s news gives lie to that commitment, and stands as a potent symbol of the government of Sri Lanka’s near total failure to deliver when it comes to prosecuting state forces.

https://www.srilankacampaign.org/an-emblematic-failure-in-an-emblematic-case/?fbclid=IwAR31t1i7zZ0Cmn7Mu0nGgyzVQklIB7bUY93gqgB5Iuw064EjeFYAkubqh6A

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.