Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர் எம்மைவிட்டு பிரிவதற்கு முன்னர் எமது உறவுகளை விடுதலை செய் ; காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

Featured Replies

வவுனியாவில் தொடர்ந்து இன்றுடன் 884ஆவது நாட்களாக சூழற்ச்சி முறையில் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று மதியம் அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறு கோரிய கண்ணீர்ப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

அவர்களது போராட்ட களத்தில் மதியம் இடம்பெற்ற இப்போராட்டத்தில் நீண்ட காலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்யுமாறும் அமெரிக்காவே சிங்கள ,பௌத்த ஒடுக்கு முறை ஜனநாயகத்திலிருந்து (சிங்கள அதிகார ஜனநாயகத்திலிருந்து) தமிழர்களை விடுவிக்க உன் உதவி தேவை.

எங்கள் உயிர் பிரிவதற்கு முன்பு எமது பிள்ளைகளை எங்களிடம் விடுவிக்கவும் , தமிழ் அரசியல் கைதிகளுக்கான விடுதலை என்றால் அது மரணமா? போன்ற  வாசகங்களைத் தாங்கியவாறும் கதறி அழுது, கண்ணீர்விட்டு தமது போராட்டத்தினை மேற்கொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை விடுவிக்கப்படகோரியும் கடந்த 884 நாட்களாக தமது தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

DSC_0457_1.JPG

DSC_0466.JPG 

 

DSC_0475_3.JPG

https://www.virakesari.lk/article/60964

  • தொடங்கியவர்

கல்முனையில் சத்தியாக்கிரக போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கல்முனை பகுதியில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று (22) முற்பகல் 11 மணியளவில் அம்பாறை மாவட்ட முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில், கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரன், கல்முனை முற்போக்கு தமிழர் அமைப்பின் உறுப்பினர் லிங்கேஸ்வரன் ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

“நிபந்தனையின்றி அரசியல் கைதிகளை விடுதலை செய், பொதுமன்னிப்பு வழங்கு, நல்லாட்சி அரசில் அரசியல் கைதிகளுக்கு விடிவில்லையா?” உள்ளிட்ட  பல்வேறு கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர்.

இதன்போது, அங்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், “கூட்டமைப்பினர் கடந்த காலங்களில் சந்தர்ப்பங்களை தவற விட்டுவிட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கன்னியா விவகாரத்தை ஜனாதிபதியிடம் கதைக்க  அமைச்சர் மனோ கணேசன் கட்சி பேதமின்றி    உட்பட எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் இவ்விடயம் குறித்து கதைக்க வடக்கு - கிழக்கு பகுதியில் இருந்து எந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்து கொள்ளவில்லை. நான் மாத்திரமே கலந்து கொண்டிருந்தேன்.

ஆனால், முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்ட போது அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜனாமாச் செய்து தங்களது இனத்தின் நலனுக்காக ஒற்றுமையாக செயற்பட்டனர். அவர்கள் தமது சமூக நலனுக்காக செயற்படுகின்றனர்.

ஆனால், எமது கூட்டமைப்பினர் பேய்க்கும் பிசாசுக்கும் வித்தியாசம் தெரியாமல் திணருகின்றனர். பேய் வரக்கூடாது என்பதற்காக பிசாசை பாதுகாக்கின்றனர்.” என்றார்.

image_42c6aa4afc.jpg

http://www.tamilmirror.lk/அம்பாறை/கல்முனையில்-சத்தியாக்கிரக-போராட்டம்/74-235704

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.