Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

50 ரூபாய் கொடுப்பனவு தீர்க்கப்படாவிட்டால், ஐ.தே.கட்சியின் புதிய கூட்டணியில் இணையப்போவதில்லை - ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

Featured Replies

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை அரசாங்கம் வழங்கத் தவறினால், ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி அமைக்கப்படவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் புதிய கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி இணையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும், அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சருமான வீ.ராதாகிருஷ்ணன், கந்தபளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/220828/50-ரூபாய்-கொடுப்பனவு-தீர்க்கப்படாவிட்டால்-ஐ-தே-கட்சியின்-புதிய-கூட்டணியில்-இணையப்போவதில்லை-ராதாகிருஷ்ணன்-அறிவிப்பு

ஒரு­ மா­தத்­திற்குள் 50 ரூபாவை பெற்றுக்கொடுப்பேன் இல்லையேல் அமைச்சுப் பத­வியை துறப்பேன் - திகா

நாட்டு மக்கள் எதிர்­பா­ர்த்­துள்ள  ஜனாதி­பதித் தேர்­தலில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவும் இணைந்து செயற்­பட்டால் ஐக்­கிய தேசிய கட்சி  நிச்­சயம் வெற்றி பெறும்.

இன்னும் ஒரு மாத காலத்­துக்குள் 50 ரூபாவைப் பெற்றுக் கொடுப்பேன். அவ்­வாறு முடி­யா­விட்டால் எனது அமைச்சுப் பதவியை தூக்கியெறிந்துவிட்டு மக்­க­ளோடு மக்­க­ளாக இருப்பேன் என தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்­ச­ரு­மான பி. திகாம்­பரம் தெரி­வித்தார்.

அட்டன் செனன் வெலி­ஓயா தோட்­டத்தின் ஊடாக வட்­ட­வளை நக­ருக்குச் செல்லும் 9.28 கிலோ மீற்றர் பாதை 32 கோடி ரூபா செலவில் “கார்பெட் போடப்­பட்டு நேற்று  மக்கள் பாவ­னைக்கு திறந்து வைக்­கப்­பட்­டது. மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பி.திகாம்­பரம் தலை­மையில் நடை­பெற்ற திறப்பு விழாவில் ஐ.தே.க. தவி­சா­ளரும், நெடுஞ்­சா­லைகள் மற்றும் வீதி அபி­வி­ருத்தி, பெற்­றோ­லிய வள அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசிம் பிர­தம அதி­தி­யாகக் கலந்துகொண்டார். இதில் தலைமை வகித்து உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

தோட்டப் பகு­தி­களில் பாதைகள் கார்பெட் போட்டு செப்­ப­னி­டப்­ப­டு­வது ஐ.தே.க ஆட்­சியில்தான் என்­பதை சொல்லத் தேவை­யில்லை. கடந்த அர­சாங்­கத்தின் காலத்தின் பாதைகள் “கார்பெட்” செய்­யப்­பட்ட போதிலும் அவை தோட்டப் பகு­தி­களில் இடம்­பெ­ற­வில்லை. 

அந்த வேலைத்திட்­டத்தை ஐ.தே.க. தான் தோட்­டங்­களில் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அதேபோல், தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு தலா 07 பேர்ச் காணியில் தனி வீடுகள் அதற்­கான காணி உறுதிப் பத்­தி­ரங்கள், பிர­தேச சபைகள் அதி­க­ரிப்பு, பிர­தேச செய­ல­கங்கள் மற்றும் மலை­ய­கத்­துக்­கான தனி­யான அபி­வி­ருத்தி அதி­கார சபை என பல வேலைத் திட்­டங்கள் இன்­றைய நல்­லாட்சி அர­சாங்­கத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்­வுக்­காக பல்­வேறு போராட்­டங்கள் நடத்­தப்­பட்டு கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. எனினும், தொழி­லா­ளர்கள் எதிர்­பார்த்த சம்­பள உயர்வு கிடைக்­காமல் ஏமாற்­றப்­பட்­டுள்­ளார்கள். இதை அர­சாங்­கத்­தி­டமும் பிர­த­ம­ரி­டமும் சுட்டிக்காட்­டியபோது, மேல­தி­க­மாக நாளாந்தம் 50 ரூபாவை வழங்­கு­வ­தற்கு இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டது. அமைச்சர் நவீன் திசா­நா­யக்­கவும் இணக்கம் தெரி­வித்­தி­ருந்தார். 

எனினும், கடந்த மே மாதம் வழங்­கு­வ­தற்கு ஏற்றுக் கொள்­ளப்­பட்ட 50 ரூபா மேல­திகக் கொடுப்­ப­னவும் இன்றுவரை வழங்­கப்­ப­ட­வில்லை. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.பி. ரட்­நா­யக்க 50 ரூபா வழங்க முடி­யாது என தெரி­வித்­துள்ளார். அதே­போன்று அமைச்சர் நவீன் திசா­நா­யக்க 50 ரூபா தரு­வ­தாக இருந்தால் அமைச்சுப் பத­வியை விட்டு விலகப் போவ­தாகக் கூறு­கின்றார். 

அவர் வில­கினால் எனக்­கென்ன? வில­கா­விட்டால் எனக்­கென்ன? எமது மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­தது போல, இன்னும் ஒரு மாத காலத்­துக்குள் 50 ரூபாவை பெற்றுக்கொடுப்பேன். 

அவ்­வாறு முடி­யா­விட்டால் எனது அமைச்சுப் பத­வியை தூக்கியெறிந்துவிட்டு மக்­க­ளோடு மக்­க­ளாக இருப்பேன். எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படும்போது, ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் வெற்றி பெறும். அவ்வாறு இணைந்து செயற்படும்போது கடந்த முறையைவிட அதிகமான வாக்குகளை பெற்றுக்கொடுப்போம் என்றார்.

67165041_2345552809037450_44552124270295

67244772_2345554862370578_34311186296749

https://www.virakesari.lk/article/60937

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.