Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அழுத்தத்தின் மத்தியில் இலங்கை மக்கள்: பிரிவினைப் போக்கும் அதிகரிப்பு – ஐ.நா.வின் விசேட பிரதிநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழுத்தத்தின் மத்தியில் இலங்கை மக்கள்: பிரிவினைப் போக்கும் அதிகரிப்பு – ஐ.நா.வின் விசேட பிரதிநிதி

In இலங்கை     July 26, 2019 2:44 pm GMT     0 Comments     1117     by : Litharsan

Clément-Nyaletsossi-Voule.jpg

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றம் என்பவற்றோடு, அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளமையும் தற்போது மக்களுக்கான அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாக ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் நைலட்சோஸி வூல் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையில் மேலும் ஜனநாயகத்தை முன்னேற்ற வேண்டுமெனில், அது மக்களது ஐக்கியத்தின் ஊடாகவே சாத்தியப்படும் என்று குறிப்பிட்டார்.

எனினும், இலங்கை தனது கடப்பாடுகளை நிறைவேற்ற சமூகங்களில் காணப்படும் பிரிவினைகள் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் கிளெமென்ட் நைலட்சோஸி வூல் தெரிவித்தார்.

மக்களின் அபிலாசைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் அரசியல் தலைவர்கள் நிராகரிக்கக் கூடாதென்பது மிக முக்கியமானது.

போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகள் தொடர்பான முன்னேற்றத்தைக் குறைத்து மதிப்பிடுதல் போன்ற விடயங்களை எதிர்வரும் தேர்தல்களின்போது அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமைதியாக ஒன்றுகூடல், சங்கங்களை அமைக்கும் சுதந்திரம் என்பன இலங்கை அரசியல் அமைப்பில் பேணிப் பாதுகாக்கப்படுகின்ற போதிலும், தண்டனைச் சட்டக் கோவை, பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பன இந்த உரிமைகளை இல்லாதொழிக்கும் வகையில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

காணாமல் ஆக்கப்படுதல், காணி உரிமைகள், வாழ்வாதாரம், வளங்களையும் அபிவிருத்தித் திட்டங்களையும் அணுகுதல் என்பவை தொடர்பாக பாரபட்சமான முறையில் இச்சட்டங்கள் பிரயோகிக்கப்படுவது கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றம் என்பவற்றோடு, தற்போது நீடிக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டமும் மக்களுக்கு அழுத்தத்தை பிரயோகிக்கும் வகையிலேயே காணப்படுவதாகவும் ஐ.நா. விசேட நிபுணர் தெரிவித்தார்.

அத்தோடு, யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் கூட, பாதுகாப்புத் துறையில் சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாதமையானது, சிவில் சமூக இயக்கத்தில் தடையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

ஏப்ரல் தாக்குதல்களின் பின்னர் நாட்டில் பரவலாகக் காணப்படும் பகைமை உணர்ச்சியைத் தூண்டக் கூடிய உரைகளின் வளர்ச்சி குறித்தும் விசேட நிபுணர் எடுத்துரைத்தார்.

அதேநேரம், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து பல்வேறு விடயங்களை ஆராய்ந்துள்ள இவர், இதுதொடர்பான தனது விசேட அறிக்கையினையும், பரிந்துரைகளையும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அமர்வில் சமர்ப்பிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அழுத்தத்தின்-மத்தியில்-இ/

  • கருத்துக்கள உறவுகள்

5b6dd9f45a195237bd9cd100feac79e0.jpg

மாமா..  புரியாணி அரிசியா.? இவ்வளவு ருசியா இருக்கு..👌

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

5b6dd9f45a195237bd9cd100feac79e0.jpg

மாமா..  புரியாணி அரிசியா.? இவ்வளவு ருசியா இருக்கு..👌

roflphotos-dot-com-photo-comments-20190723174811.jpg

என்ன இழவுக்கு... இப்ப, இவங்கள்.. வாறாங்கள்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.