Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது

Featured Replies

சரியுங்கோ உங்க கணக்குப்படி மிக் 27 விழுந்திடிச்சு..! அப்பிடின்னே வைச்சுக்குங்க. ஆனா.. நாங்க அப்படின்னு வைச்சுக்க நீங்க நிற்பந்திக்க முடியாது. நமக்கு ஆதாரம் வேண்டும்..! ஆதாரமில்லாம மெய்யைக் காண முடியாது..! :(

விளையாட்டும் அரசியலும் ஒன்றல்ல. அப்படி பார்க்கவும் நாம் தயாரில்ல. இங்கு எங்க மூக்கும் உடையல்ல நிலைப்பாடும் மாறல்ல..! அப்படிக்கா கற்பனை பண்ணிட்டு இருக்கிறது நாங்கல்ல நீங்க. விளையாட்டு அரசியலுக்கு அப்பாலதான் இருக்கனும். அது தமிழர் செய்தாலும் சரி சிங்களவர் செய்தாலும் சரி முஸ்லீம்கள் செய்தாலும் சரி..! :( :P

உம்மை மாதிரி மதில்மேற்பூனைகள் நம்பினா என்ன நம்பாட்டி என்ன. விமானத்தாக்குதலால் அல்லலுறும் மக்களின் துயரம் நீங்கினாலே போதும். இராணுவம் நாளை செல்லடிக்கவே பயப்படும் நிலை வரும். அப்போது சமாதானம் எனும் முகமூடிக்கு விடை கொடுத்தது போல் இதற்கும் கொடுப்பீர்.

எல்லாத்துக்கும் ஆதாரம் வேணுமோ உமக்கு வாயில் நல்ல வார்த்தைகள் வருது களநாகரீகம் கருதி தவிர்த்துக்கொள்கிறேன்.

  • Replies 245
  • Views 72.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Don't argue with a fool. The spectators can't tell the difference!

முட்டாள்களுடன் விவாதம் செய்யாதே. பார்ப்பவர்களுக்கு யார் முட்டாள் என்று புரியாது!

:( :P :(

புலிப்பாய்ச்சல் நடவடிக்கை பின்னிரவு தொடங்கி காலை வர நடந்த ஒரு தாக்குதல். முறியடிப்புச் சமரைத் தொடர்ந்து இப்பாய்ச்சல் நிகழ்ந்தது. புக்காரா விமானம் நண்பகல் போல் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர் விமானத்தாக்குதல்கள் சில தினங்கள் கழித்தே நிகழ்ந்தன. பலாலி தளத்தில் இருந்து ஆட்லறித்தாக்குதல்களே அதிகம் நிகழ்த்தப்பட்டன..! இது நமக்கு கிடைச்ச தகவல்..! இதைவிட நீங்கள் சொல்லுறது..??! :P :(

உங்களுக்கு கிடைத்த தகவல் சரியானது அல்ல.. அந்த சமயம் நான் அங்குதான் வாய்க்கால் வளியில் தவள்ந்து திரிந்தேன்...! :P

இப்ப நீங்க என்ன சொல்ல வாறீங்க..! நாம சொல்லுறம் விமானத்தாக்குதலை நிறுத்தும் படியா மிக் விழுந்தது என்ற செய்தி சரியா இல்லை...என்பதைத்தான்..! அரசுக்கு கணிக்க கூட்டத் தெரியா என்று சொன்னமா சார்..??! :D:(

விமானத்தாக்குதலை தீவிரப்படுத்தவேண்டிய கௌரவப்பிரச்சினையில் இருக்கும் அரசு குறைந்து இருப்பதுக்கான காரணம் தான் தாங்க முடியாமல் இருக்கிறது....!

மூதூருக்க புலிகள் வந்தார்கள் எண்டு ஆக்ரோசமாய் கொஞ்ச படைகளை மூதூருக்குள் கொண்டு போனவை, மாவிலாற்றையும் அப்பிடித்தான் பிடிச்சவை, வாகரையும் அப்பிடித்தான்.... விசயம் அப்பிடி இருக்க புலிகள் விமானத்தாலை அடிக்கினம் எண்டு விமானத்தாக்குதலை குறைப்பினம் எண்டு நீங்கள் சொன்னது நம்புறது மாதிரி இல்லை...

எதிரிக்கு முன்னாலை இரைகளை நீட்டி பிடியுங்கோ எண்டு மாவோக்கள் சொன்னார்கள்... இதை புலிகள் நீண்டகாலத்துக்கு முன்னமே செய்ய தொடங்கிவிட்டார்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

Don't argue with a fool. The spectators can't tell the difference!

முட்டாள்களுடன் விவாதம் செய்யாதே. பார்ப்பவர்களுக்கு யார் முட்டாள் என்று புரியாது!

:( :P :(

எட்டாக்கனி புளிக்கத்தான் செய்யும்...! :P :D

உங்கட எயார் டிபென்ஸ் சிஸ்டம் என்னாச்சு..! பதிலே சொல்லாம ஓடிட்டிங்க. தவறைத் திருத்திக்கோங்க..! :P

உங்களுக்கு கிடைத்த தகவல் சரியானது அல்ல.. அந்த சமயம் நான் அங்குதான் வாய்க்கால் வளியில் தவள்ந்து திரிந்தேன்...! :P

அன்றைய நிலையில் விமானத்தாக்குதல் தொடர்பான தாக்குதல் உண்மை போன்றே தெரிகிறது..!

விமானத்தாக்குதலை தீவிரப்படுத்தவேண்டிய கௌரவப்பிரச்சினையில் இருக்கும் அரசு குறைந்து இருப்பதுக்கான காரணம் தான் தாங்க முடியாமல் இருக்கிறது....!

மூதூருக்க புலிகள் வந்தார்கள் எண்டு ஆக்ரோசமாய் கொஞ்ச படைகளை மூதூருக்குள் கொண்டு போனவை, மாவிலாற்றையும் அப்பிடித்தான் பிடிச்சவை, வாகரையும் அப்பிடித்தான்.... விசயம் அப்பிடி இருக்க புலிகள் விமானத்தாலை அடிக்கினம் எண்டு விமானத்தாக்குதலை குறைப்பினம் எண்டு நீங்கள் சொன்னது நம்புறது மாதிரி இல்லை...

எதிரிக்கு முன்னாலை இரைகளை நீட்டி பிடியுங்கோ எண்டு மாவோக்கள் சொன்னார்கள்... இதை புலிகள் நீண்டகாலத்துக்கு முன்னமே செய்ய தொடங்கிவிட்டார்கள்...!

கெளரவப்பிரச்சனை என்பதிலும்.. விமானப்படையின் மிசன் எல்லாம் வான் புலிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போன தோல்வியை புலிகளின் வான் தாக்குதல் பறை சாற்றும் போது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி முட்டாள் ஆக அரசு விரும்புமா...??! :P :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நண்பர்களே.

மிக் விழுத்தியதற்கு குரவை கூவுவதை விட பிரயோசனமாக ஏதேனும் செய்ய முடியாதா? யாழின் சகோதரக்களமான ஆங்கிலக்களத்தில் செய்ய முயற்சிக்கிறார்கள்.

http://www.eelamist.com/forum/viewtopic.php?f=1&t=434

இந்த மிக் செய்த அட்டூழியங்களை இங்கே ஆவணப்படுத்துவோம். இந்த மிக்கினால் தமிழ் மக்கள் அடந்த துயரத்தை இங்கு ஆதாரத்துடன் இணையுங்கள். இணைக்கும்போது தமிழ்நெற், பிபிசீ பொன்ற தளங்களிலுள்ள செய்தியாக இருக்க வேண்டும். நன்றி.

எனது வேண்டுகோளை ஏற்று இணைப்புக்களை அனுப்பிய நண்பருக்கு நன்றி.

இதுவரை பின்வரும் இணைப்புக்கள் உள்ளன.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20785

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20787

http://www.un.org/News/Press/docs/2007/iha1248.doc.htm

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18522

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20168

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20252

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17920

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17927

http://www.tamilnation.org/forum/brian/060501killing.htm

http://www.tamilnation.org/indictment/cont...retaliation.htm

http://www.tamilnation.org/indictment/w ... /index.htm

http://www.tamilnation.org/indictment/g ... n95022.htm

http://www.tamilnation.org/indictment/g ... n95012.htm

http://www.tamilnation.org/forum/shanmu ... eminar.htm

http://www.answers.com/topic/navaly-church-bombing

http://www.answers.com/topic/nagerkovil-school-bombing

இவற்றை சீராக வகைப்படுத்த வேண்டும்.

இன்னும் இணைப்புக்கள் இருப்பவர்கள் அனுப்புங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு சிலர் சொன்னது போல கிபீர் 1993 இல் தாக்குதல் பாவனையில் இருக்கவில்லை சிறீலங்கா விமானப்படையில்..!

1993 ஆம் ஆண்டு இவ்வகை விமானங்கள் ஈழப்போரில் குதித்தன. இவ்விமானங்கள் ஏற்படுத்திய முதலாவது அவலமாக 1993 நவம்பரில் நடைபெற்ற யாழ்ப்பாணம் - யாகப்பர் ஆலயம் மீதான தாக்குதலைச் சொல்லலாமென்று நினைக்கிறேன்.

விமானம் வீழ்த்தப்பட்டது - வரலாற்று நிகழ்வு

நேற்று (30.04.2007) அன்று சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான மிக்-27 இரக குண்டுவீச்சு விமானமொன்று வன்னிப்பகுதியில் வைத்து விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானது.

அவ்விமானம் வீழ்ந்துவிட்டதாக புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அரசதரப்போ அதைப்பற்றி மூச்சும் விடவில்லை. அதன்காரணத்தால் மற்றச் செய்தி நிறுவனங்களும் இதைக் கண்டுகொள்ளவில்லை.

விமானம் எங்கு வீழ்ந்தது? வானோடிக்கு என்ன நடந்தது? போன்றவற்றுக்கு விடை இன்னும் கிடைக்கவில்லை.

கடலுக்குள் விழுந்திருக்க வேண்டுமென்று புலிகள் தரப்புச் செய்திகள் சொல்கின்றன.

விமானம் தாக்குதலுக்குள்ளாகி புகைகக்கியவாறு திரும்பியதை வன்னிமக்கள் பார்த்திருக்கிறார்கள். கக்கிய புகையின் அடிப்படையில் அவ்விமானம் மீளமுடியாத நிலையிலிருந்ததாகவே கருதப்படுகிறது. அதேநேரம் கொழும்பு வான்படைத்தளத்திலோ அல்லது வேறெங்குமோ புகைகக்கியபடி விமானமொன்று தரையிறங்கியதாகத் தகவலில்லை. பொதுமக்களுக்குத் தெரியாமல் தரையிறங்கக்கூடிய எவ்விடமும் சிறிலங்கா அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்குளில்லை.

எனவே புலிகளின் செய்தியை நம்பாத நடுநிலையாளர்கள்கூட விமானம் எங்கோ வீழ்ந்திருக்கிறது என்று தாராளமாகக் கருதலாம்.

மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கியபோது அடுத்தடுத்து இரண்டு அவ்ரோ இரக விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன. 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28, 29 ஆம் திகதிகளில் இவ்விரு விமானங்களும் சுட்டுவீழ்த்தப்பட்டன. ஈழப்போராட்டத்தில் விமான எதிர்ப்பில் புதிய எழுச்சியொன்று அத்துடன் தொடங்கியது. பன்னிரண்டு ஆண்டுகளின்பின் அதே நாட்களில் மிகையொலி விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டு புதியமுறையிலான வடிவமொன்றைக் கொடுத்துள்ளது.

*****************

இதுவொரு வரலாற்று நிகழ்வு. ஈழப்போராட்டத்தில் முதன்முதலாக மிகையொலி குண்டுவீச்சு விமானமொன்று களத்தில் வைத்துச் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.

மிகையொலி விமானங்கள் இலங்கையில் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட கடந்த பதினைந்தாண்டுகாலத்தில் ஒருதடவைகூட இவ்வகை விமானங்கள் களத்தில் வைத்துச் சுட்டுவீழ்த்தப்பட்டதில்லை - ஏன் சேதமாக்கப்பட்டதுகூட இல்லை.

1993 ஆம் ஆண்டு இவ்வகை விமானங்கள் ஈழப்போரில் குதித்தன. இவ்விமானங்கள் ஏற்படுத்திய முதலாவது அவலமாக 1993 நவம்பரில் நடைபெற்ற யாழ்ப்பாணம் - யாகப்பர் ஆலயம் மீதான தாக்குதலைச் சொல்லலாமென்று நினைக்கிறேன். (அதற்கு முன் ஏதாவது தாக்குதல் இவ்விமானங்களால் நடைபெற்றிருந்தால் அறியத்தரவும்).

இவ்விமானங்களின் வருகைக்கு முன், விமானச் சத்தத்தைக் கேட்டு, அது வட்டமிடுவதைப் பார்த்து, எங்கே குண்டுவிழப்போகிறதென்று ஊகித்துத்தான் மக்கள் காப்புத் தேடிக்கொள்வார்கள். ஆனால் இவற்றின் வருகைக்குப்பின் குறிப்பிட்ட காலம் அப்படியெல்லாம் செய்யமுடியாமற் போனது. இவற்றின் வேகம் காரணமாக சத்தத்தைக்கொண்டு விமானத்தைக் கணிக்க முடியாதிருந்தது. இதன் இரைச்சலே மக்களைக் கிலிகொள்ள வைத்தது. தொடர்ந்த போராட்டத்தில், இவ்வகை மிகையொலி விமானங்களே குண்டுவீச்சில் முதன்மைப் பங்கை வகித்தன. மிக அதிகளவான சேதத்தையும் ஏற்படுத்தின.

புலிகளால் அவ்வப்போது குண்டுவீச்சு விமானங்கள் சுட்டுவீழ்த்தப்படும். மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கியபோது அடுத்தடுத்து சில விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன. ஆனால் மிகையொலி விமானங்களெவையும் வீழ்த்தப்படவில்லை. இவற்றின் அதிகூடிய வேகம், தானியங்கியாகச் செயற்படும் ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறை என்ற காரணிகளால் இதன்மீதான தாக்குதல்கள் அனைத்தும் முழுவெற்றியை அளிக்கவில்லை. தொன்னூறுகளின் இறுதிப்பகுதியில் - குறிப்பாக ஓயாத அலைகள் - 2 க்குப்பின்னான காலப்பகுதியில் இவ்வகை விமானங்களை குறிப்பிட்ட உயரத்தின்கீழ் தாழப்பதிந்து குண்டுபோட முடியாமல் செய்வதில் மட்டுமே எதிர்ப்புத் தாக்குதல்கள் வெற்றீட்டின. இதன்மூலம் குண்டுவீச்சைத் துல்லியமற்றதாக்கியது பெரும் அனுகூலமாக அமைந்தது. எனினும் எல்லாநேரத்திலும் எதிர்ப்புத் தாக்குதல் நடத்தும் சாத்தியமிருக்கவில்லை. எதிர்ப்புத் தாக்குதலுக்கு ஆகும் மிகப்பெரிய செலவு ஒருகாரணம்.

ஒருகட்டத்தில் எந்தவித எதிர்ப்புமின்றி சிறிலங்கா வான்படை தாக்குதல் நடத்துமளவுக்குச் சென்றிருந்தது. நேற்றுவரை, தாம் தாக்கப்படுவோமென்ற பயமேதுமின்றித்தான் விமானங்கள் குண்டுவீச்சை நடத்திக்கொண்டிருந்தன. இடைப்படட காலத்தில் மிகப்பெரிய அழிவை இவ்விமானங்கள் தமிழர் தரப்புக்கு - மக்களுக்கு மட்டுமன்றி போராளிகளுக்கும் ஏற்படுத்தியிருந்தன. இவ்வகை விமானங்களிலொன்று நேற்றுச் சுட்டுவீழ்த்தப்பட்டது.

***********************

மிகையொலி விமானங்களில் 'கிபிர் (Kfir) எனப்படும் இஸ்ரேலியத் தயாரிப்பு விமானங்கள் யாழ்ப்பாண இடப்பெயர்வை ஒட்டிய காலத்தில் சிறிலங்கா அரசபடையால் பயன்படுத்தப்பட்டத் தொடங்கின. தொன்னூறுகிளின் இறுதியில்தான் ரஸ்யத் தாயரிப்பான மிக் இரக விமானங்கள் களத்துக்கு வந்தன.

கிபீர் ஒப்பீட்டளவில் வேகம் கூடியது. அதனால் இரைச்சலும்கூடியது. மக்களை உளவியல் ரீதியில் அதிகம் வெருட்டியது கிபிர் விமானம்தான். ஆனால் மிக் வகையோடு ஒப்பிடும்போது துல்லியம் குறைவாகவே இருந்தது. இரைச்சல் மூலமும் வேகம் மூலமும் பெரும் பயத்தை உண்டுபண்ணினாலும் துல்லியக்குறைவு காரணமாக இது அதிகளவில் பாதிப்புக்களைத் தரவில்லையென்று சொல்லலாம்.

மிக் விமானம் ஒப்பீட்டளவில் வேகம் குறைவென்றாலும் தாக்குதல்திறன் அதிகமானது. போராளிகளுக்கு அதிகம் சிக்கலைக் கொடுத்தது மிக் விமானம்தான். துல்லியமாக பல தாக்குதல்களை அவ்வகை விமானங்கள் நடத்தியிருந்தன. வேகம் குறைவென்றபோதும் இதுவரையான அனைத்து விமான எதிர்ப்பு நடவடிக்கைகளின்போதும் தப்புவதற்கு அவ்வேகம் போதுமானதாக இருந்தது.

புரிந்துணர்வு ஒப்பநம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் சிறிலங்கா அரசபடையினரின் வான்டையினரின் தாக்குதல்கள் என்றுமில்லாத வகையில் மிகக்கடுமையாக இருந்தன என்பதோடு பாரியளவில் சேதத்தையும் ஏற்படுத்தியிருந்தன. அண்மைக்காலத்தில் அரசவான்படை ஏற்படுத்திய கிலியைப் போலவோ சேதத்தைப்போலவோ முன்னர் இருந்ததில்லை. வெல்லப்பட முடியாத சக்தியாகவே இது இருந்தது.

நேற்றுச் சுட்டுவீழ்த்தப்பட்ட நிகழ்வோடு தற்காலிகமாகவேனும் சிறிலங்கா வான்படையின் தாக்குதல்ளும் செயற்பாடுகளும் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்படும். இவ்வகையான வெற்றிகள் தொடர்ந்தும் கிடைக்குமா அல்லது அரசவான்டை தொடர்ந்தும் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபடுமா என்பது கேள்விக்குறியே.

எனினும் முதன்முதலில் மிகையொலி விமானமொன்றைச் சுட்டுவீழ்த்திய நிகழ்வு, ஈழப்போராட்டத்தில் ஒரு மைல்கல் என்பதை மறுக்க முடியாது. அதைப்பதிவாக்கவே இவ்விடுகை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகையொலி விமானங்களில் 'கிபிர் (Kfir) எனப்படும் இஸ்ரேலியத் தயாரிப்பு விமானங்கள் யாழ்ப்பாண இடப்பெயர்வை ஒட்டிய காலத்தில் சிறிலங்கா அரசபடையால் பயன்படுத்தப்பட்டத் தொடங்கின.

OK OK I am escape

வணக்கம் நண்பர்களே.

மிக் விழுத்தியதற்கு குரவை கூவுவதை விட பிரயோசனமாக ஏதேனும் செய்ய முடியாதா? யாழின் சகோதரக்களமான ஆங்கிலக்களத்தில் செய்ய முயற்சிக்கிறார்கள்.

http://www.eelamist.com/forum/viewtopic.php?f=1&t=434

இந்த மிக் செய்த அட்டூழியங்களை இங்கே ஆவணப்படுத்துவோம். இந்த மிக்கினால் தமிழ் மக்கள் அடந்த துயரத்தை இங்கு ஆதாரத்துடன் இணையுங்கள். இணைக்கும்போது தமிழ்நெற், பிபிசீ பொன்ற தளங்களிலுள்ள செய்தியாக இருக்க வேண்டும். நன்றி.

எனது வேண்டுகோளை ஏற்று இணைப்புக்களை அனுப்பிய நண்பருக்கு நன்றி.

இதுவரை பின்வரும் இணைப்புக்கள் உள்ளன.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20785

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20787

http://www.un.org/News/Press/docs/2007/iha1248.doc.htm

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18522

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20168

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20252

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17920

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17927

http://www.tamilnation.org/forum/brian/060501killing.htm

http://www.tamilnation.org/indictment/cont...retaliation.htm

http://www.tamilnation.org/indictment/w ... /index.htm

http://www.tamilnation.org/indictment/g ... n95022.htm

http://www.tamilnation.org/indictment/g ... n95012.htm

http://www.tamilnation.org/forum/shanmu ... eminar.htm

http://www.answers.com/topic/navaly-church-bombing

http://www.answers.com/topic/nagerkovil-school-bombing

இவற்றை சீராக வகைப்படுத்த வேண்டும்.

இன்னும் இணைப்புக்கள் இருப்பவர்கள் அனுப்புங்கள்.

என்னால் முடிந்த அளவு செய்து கொண்டிருகின்றேன் 96 ம் ஆண்டு வரையிலான சம்பவங்களை தொக்குத்து முடித்துவிட்டேன் இன்னும் விரைவில் மிகுதியை முடித்துவிடுவேஎ கள உறுப்பினர்களின் ஆதரவு தேவை இதை திருத்துவதற்கு உதவுவீர்கள் என நினைகின்றேன்

இந்த இணைப்பில் தரவிறக்குங்கள்

http://www.MegaShare.com/165228

அன்புடன்

ஈழவன்

கிபிர் விமானம் நானறிந்தவரையில் 96ஆம் ஆண்டே இலங்கை வான்படையில் இணைக்கப்பட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னால் முடிந்த அளவு செய்து கொண்டிருகின்றேன் 96 ம் ஆண்டு வரையிலான சம்பவங்களை தொக்குத்து முடித்துவிட்டேன் இன்னும் விரைவில் மிகுதியை முடித்துவிடுவேஎ கள உறுப்பினர்களின் ஆதரவு தேவை இதை திருத்துவதற்கு உதவுவீர்கள் என நினைகின்றேன்

இந்த இணைப்பில் தரவிறக்குங்கள்

http://www.MegaShare.com/165228

அன்புடன்

ஈழவன்

கிபிர் விமானம் நானறிந்தவரையில் 96ஆம் ஆண்டே இலங்கை வான்படையில் இணைக்கப்பட்டது

நல்ல முயற்சி. இவ்வளவு பழைய தகவல்களை எங்கு பெறுகிறீர்கள்?

நானும் எவ்வகையான உதவிகளை செய்யலாம் என்று கூறினால் செய்யத் தயார். தனி மடலில் தொடர்பு கொள்கிறேன்.

உங்களுக்கு தனி மடல் அனுப்ப முடியாமல் இருகின்ரது யாராவது பாலியல் வல்லுறவு சம்பவங்களை தொகுக்க முனருவீர்களா என்னால் அத்தனை தகவல்களையும் தரமுடியும் அப்படி யாராவது உதவ முன்வருவீர்களாயின் என்னை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்

அன்புடன்

ஈழவன்

அந்த பிரசண்டேசன் செய்ய பூர்வாங்க உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய நெடுக்கால போவானுக்கு இத்தருணத்தில் நன்றிகள்

1993 ஆம் ஆண்டு இவ்வகை விமானங்கள் ஈழப்போரில் குதித்தன. இவ்விமானங்கள் ஏற்படுத்திய முதலாவது அவலமாக 1993 நவம்பரில் நடைபெற்ற யாழ்ப்பாணம் - யாகப்பர் ஆலயம் மீதான தாக்குதலைச் சொல்லலாமென்று நினைக்கிறேன்.

இல்லை. சுப்பர்சொனிக்கான F7 விமானத்தின் முதலாவது தாக்குதல் நாவற்குழி இறால் வளர்ப்பு திட்டத்துக்கு அருகில் + கோப்பாய் அரசினர்வைத்தியசலைக்கு அருகில், இரண்டாவது தாக்குதல் யாழ் இராசவீதி. யாழ் புனித யாகப்பர் ஆலையத்தில் மீது 1993 இல் தாக்கியது இத்தாலிய தயாரிப்பான சியாமா செற்றி ரகத்தைச் சேர்ந்த குண்டுவீச்சு விமானங்கள்.

மன்னிக்கவும் நான் சுப்பர்சொனிக் F7 விமானத்தை தவறுதலாக கிபீர் என சொல்லிவிட்டேன். கிபீர் விமானம்1995 காலப்பகுதிகளில் தான் தனது தாக்குதலை ஆரம்பித்தது.

Edited by mathuka

1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி காலை 7-30 மணியளவில் யாகப்பர் ஆலயத்துக்கு குண்டு வீசப்பட்டது. குண்டு வீசிய விமானத்தின் பெயர் "சுப்பர் சொனிக்"

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி காலை 7-30 மணியளவில் யாகப்பர் ஆலயத்துக்கு குண்டு வீசப்பட்டது. குண்டு வீசிய விமானத்தின் பெயர் "சுப்பர் சொனிக்"

ஒலியை விட வேகமாகப் பறக்கும் விமானங்கள் அனைத்துமே சுப்பர் சொனிக் தான். ஈழப்போர் வரலாற்றில் சிறீலங்காவுக்கு சுப்பர் சொனிக் அல்லது மிகையொலி விமானங்களை வழங்கிய முதல் நாடு சீனா. அது அப்போது தனது F-7 ரக மிகையொலி தாக்குதல் விமானங்களை வழங்கியது. அப்புறம் பிரேமதாச கொல்லப்பட்டதன் பின்னர்.. இஸ்ரேலுடன் இராணுவ நெருக்கம் மீளவும் ஏற்பட்டு கிபீர் போன்றவை கிடைக்க அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் வகை செய்யப்பட்டன. :(

f7_web.jpg

http://www.cdi.org/terrorism/iraqifighters-pr.cfm

ஈழப்போட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே வெளிப்படையா எதிர்க்கும் நாடு அமெரிக்கா. :P

Edited by nedukkalapoovan

தாயகத்தில் இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சுகள் பற்றிய செய்திகளை அறிய இந்த லிங்கை அழுத்தவும்.

தாயகத்தில் இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுறாப் போல கற்பனை செய்ய சிறீலங்கா விமானப்படை ஒன்றும் கேணத்தனமா இல்ல. இந்திய மற்றும் ரஷ்சிய விமான ஓட்டிக்களின் உதவியைக் கொண்டுள்ள அது வெறும் அணுமானிப்புக்கள் மூலம் முடிவெடுக்கும் என்று கருத முடியாது. காரணம் 1995 இல் புலிகள் முதல் அவ்ரோவை சுட்டதும்.. அதை இயந்திரக் கோளாறு என்று அரசு மூடி மறைக்கப் போய் இரண்டாவது அடுத்த நாள் விழுந்ததும்.. சந்திரிக்கா அம்மையார் கூட இருந்த தற்போதைய அரசுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை..! அப்படி இருந்தும்..???! :rolleyes::icon_idea: :P

95ம் ஆண்டு அவ்ரோ முதல் தடவை, சுட்டு விழுத்தப்பட்டபோது சிறிலங்கா அரசுக்குப் புலிகளால் தான் அது சுட்டு விழுத்தப்பட்டது என்று தெரியாது. அப்படித் தெரிந்திருந்தால், அடுத்தநாள், அவ்விமானம் பற்றிய விசாரணைக்குச் சென்ன மேலதிகாரிகளின் விமானமும், அதே பாதையில் திரும்பிச் சென்றிருக்காது. முதலாம் நாள் சுட்டு விழுத்தப்பட்ட அவ்ரோ தொடர்பாக ஈழநாதம், வெளிட்ட பின்னேரச் செய்தியில் மர்மமான முறையில் விழுந்ததாகவே குறிப்பிட்டிருந்தார்கள்.

அடுத்த நாளும் விழுந்த பின்னரே, சிறிலங்கா அரசு ஊசாரடைந்து பாதையைக் கடல்வழிப்பக்கமாக மாற்றியது. எனவே முதல்தடவை சுட்டதை மறைக்கப் போய்த் தான், 2வது விழுந்தது என்றது பிழையானது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது விமானம் பலாலியில் இருந்து புறப்பட்டு தென்மராட்சி வான் பரப்பில் பறந்து கொண்டிருக்கும் போது சுடப்பட்டது. அது இயந்திரம் ஒன்று தாக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் அவசர தரையிறக்கம் கருதி பலாலிக்கு மீளத் திரும்புகையில் விழுந்து நொருங்கியது. சிறீலங்கா அரசுக்கு அது சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது இயந்திரக் கோளாறா என்ற தெளிவின்மை இருந்ததே தவிர சுட்டு வீழ்த்த சந்தர்ப்பம் இல்லை என்று அவர்கள் கருதி இருக்க முடியாது. காரணம் ஆகாய கடல் வெளிச்சமரில் சீனத் தயாரிப்பு Y - 8 சுட்டு வீழ்த்துப்பட்டதை அரசு நன்கு அறியும்..! அதற்கு முன்னர் யாழ் கோட்டைச் சண்டையில் சியாமாசெட்டி போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அரசு மேற்கூறிய இரண்டையும் இயந்திரக் கோளாறு என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தது. அதேபாணியைத்தான் அவ்ரோ விசயத்திலும் செய்யப் போயினர்.

அரசுக்கு விமானம் ஏவுகணையால் தாக்கப்பட சந்தர்ப்பம் இல்லை என்று தெரியவே தெரியாது அல்லது புலிகளால் சுட்டு விழுந்த முடியும் என்பது தெரியாது என்பதை இலகுவாக ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை. காரணம் ஏவுகணை வெடிப்புச் சத்ததை ஊர் மக்கள் கேட்கக் கூடியதாகவே இருந்தது. அப்படி இருக்க அந்தத் தகவல் அரசை சரியாக அடையாததால் தான் அடுத்த தினம் அடுத்த விமானம் இரையாக வாய்ப்பிருந்திருக்குமே தவிர அரசுக்கு புலிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த சந்தர்ப்பம் உள்ளது என்பது தெரியாது என்பதை ஏற்றுக் கொள்வது கடினமானதாகவே உள்ளது..! :icon_idea:

slaf_y-8_r-873b.jpg

5 July 1992: Y-8 "CR-872" shot down by LTTE SA-7 near Iyakatchitchy, during landing in Palay, killing all 20 on board. இப்படித்தான் இருக்கிறது செய்தி.

இந்த இணையத்தளத்தில் சிறீலங்கா விமானப்படை தொடர்பான நாமறியாத பல விபரங்கள் உள்ளன. விமானப்படையின் இழப்புகளும் ( 1971 - 2004) வரை இடப்பட்டுள்ளது.

http://www.acig.org/artman/publish/article_336.shtml

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தான் தாக்கினார்கள் என்று தெரிந்திருந்தால், மறுநாளும் அதே பாதையை ஏன் பாவிக்க வேண்டும். 2வது விழுந்தது சிறுப்பிட்டிப் பகுதியில், யாழ்பாணத்தின் நடுப்பகுதியூடாகவே அது திரும்பிச் சென்று கொண்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தான் தாக்கினார்கள் என்று தெரிந்திருந்தால், மறுநாளும் அதே பாதையை ஏன் பாவிக்க வேண்டும். 2வது விழுந்தது சிறுப்பிட்டிப் பகுதியில், யாழ்பாணத்தின் நடுப்பகுதியூடாகவே அது திரும்பிச் சென்று கொண்டிருந்தது.

அரசின் தெளிவின்மை தான் அதற்குக் காரணமே அன்றி புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட சந்தர்ப்பம் இல்லை என்று அரசு நம்பி இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம்.. ஆகாய கடல் வெளி சமரில் தாம் பாவித்த விமான எதிர்ப்பு பீரங்கியின் மாதிரியை புலிகள் நாவற்குழி வெளியில் ஆனையிறவு சமர் தொடர்பான நினைவு கூறல் நிகழ்வில் வைத்திருந்தனர். அது குறித்த உளவுத் தகவல் கிடைக்காமல் அரசு இருந்திருக்கும் என்றில்லை..! அரசுக்கு நடந்த சம்பவம் தொடர்பில் இருந்த தெளிவின்மையே இரண்டாவது விமானமும் ஏவுகணைக்கு இரையாக வாய்ப்பானது புலிகளைப் பொறுத்தவரை. அதை அப்பவே புலிகளின் குரல் சொன்னது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

2001 கட்டுநாயகா தாக்குதலில் அழிந்த விமானப்படை விமானங்களின் விபரங்கள்..!

பலரும் அறியாத சங்கதிகள்...

- 24 July 2001: Kfir C.2 CF-722, destroyed at Katunayake AB by LTTE sappers.

- 24 July 2001: Kfir C.2 CF-723, destroyed at Katunayake AB by LTTE sappers.

- 24 July 2001: Kfir C.2 (reported) destroyed at Katunayake AB by LTTE sappers.

- 24 July 2001: K-8 CF-741, destroyed at Katunayake AB by LTTE sappers.

- 24 July 2001: K-8 CF-743, destroyed at Katunayake AB by LTTE sappers.

- 24 July 2001: K-8 CF-745, destroyed at Katunayake AB by LTTE sappers.

- 24 July 2001: MiG-27M CF-732, destroyed at Katunayake AB by LTTE sappers.

- 24 July 2001: MiG-27M badly damaged at Katunayake AB by LTTE sappers.

- 24 July 2001: Mi-24 destroyed at Katunayake AB by LTTE sappers.

- 24 July 2001: Mi-17 CH-590, destroyed at Katunayake AB by LTTE sappers.

- 24 July 2001: Mi-17 CH-597, destroyed at Katunayake AB by LTTE sappers.

- 24 July 2001: Bell 412 destroyed at Katunayake AB by LTTE sappers.

K8Side.jpg

இதில் பொதுவாக அறியப்படாத K-8 (பாகிஸ்தானிடம் உள்ள பயிற்சிச் சண்டை விமானம்)

SLAF-a1.jpg

சிறீலங்கா வான்படை தமிழ் மக்களுக்கு எதிராக ஏவிய முதல் தாக்குதல் விமானம் இத்தாலிய தயாரிப்பு சியாமாசெட்டி (SF.260) படத்தில் கீழ் பகுதியில் உள்ள விமானம். (யாழ் கோட்டைச் சண்டையில் பண்ணைக் கடலுள் சுட்டு வீழ்த்தப்பட்டது. முதலாம் ஈழப்போர் ஆரம்ப காலங்களில் யாழ் நகரையும் அண்டிய பிரதேசங்களின் மக்களின் அழிவுக்கு காரணமான விமானம்..)

இதே படத்தில் சற்றுமேலே உள்ள விமானம் ஆஜென்ரீனா தயாரிப்பான புக்காரா விமானம். ஆஜென்ரீனா -பிரிட்டன் auckland - war இல் ஆஜென்ரீனாவின் பிரதான சண்டை விமானமாக செயற்பட்ட விமானம் இறுதியில் உற்பத்தி நிறுத்தப்பட தேங்கிக் கிடந்ததால் சிறீலங்காவின் தலையில் தமிழர்களை தாக்க கட்டப்பட்டது..! (புலிப்பாய்ச்சலின் போது சண்டிலிப்பாயில் சுட்டு வீழ்த்தப்பட்டது - நவாலி தேவாலயப் படுகொலையின் சூத்திரதாரி, இந்தத் தாக்குதலில் 150 வரையான பொதுமக்கள் உயிரிழக்க பலர் படுகாயமடைந்தனர்.)

http://www.acig.org/artman/publish/article_336.shtml

Edited by nedukkalapoovan

2001 கட்டுநாயகா தாக்குதலில் அழிந்த விமானப்படை விமானங்களின் விபரங்கள்..!

பலரும் அறியாத சங்கதிகள்...

பரபரப்பில் வேலை செய்கிறீர்களோ?

Sri Lankan State Air Terrorism

http://www.mediafire.com/?2n1dnymnwmd

முற்றாக ச்செய்து முடிக்கப்பட்டு இருகின்றது தயவு செய்து இதனை பார்த்து இதில் இருக்கும் குறை நிறைகளை சுட்டிக்காட்டவூம் அடுத்ததாக படுகொலைகள் பற்றி செய்ய எண்ணியுள்ளோம்

அன்புடன்

ஈழவான்

ஈழவன் உங்கள் முயற்சி நன்றாக உள்ளது.

ஆனால் இன்னும் கூடுதலான படங்களை ஒவ்வொரு நிகழ்விற்கும் சேர்த்திருந்தீர்கள் என்றால் பார்க்கும் ஒவ்வொருவரும் வாசிப்பாதோடு மட்டும் நின்றுவிடாது,உண்மை நிலவரத்தை உணரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும் என நினைக்கிறேன்.அத்துடன் அது பல வழிகளில் நமக்கு அனுகூலமாகவும் இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வரை

  1. எத்தனை தடவைகள் (how many sorties) சிறிலங்கா விமானங்கள் தமிழீழத்தில் குண்டு போட்டிருக்கும்?
  2. எத்தனை குண்டுகள் வீசப்பட்டிருக்கும்?
  3. இதற்கு எவ்வளவு செலவாகி இருக்கும்?
  4. எத்தனை தமிழர் இறந்து இருப்பார்கள்?
  5. எத்தனை பேர் அங்கவீனர்களாகி இருப்பார்கள்?
  6. சொத்துக்களின் அழிவுகளின் மதிப்பீடு?
போன்ற விபரங்களை எங்கு பெறலாம் அல்லது எவ்வாறு ஓரளவுக்கு சரியாக கணிப்பிடலாம்?

யாராவது இது தொடர்பான தகவல்/உதவிகள் தர முடியுமா? இந்த மதிப்பீடுகள் உருவாகிக்கொண்டிருக்கும் விவரணத்திற்கு வலுச்சேர்க்கும்.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.