Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உயிர்த்தஞாயிறு தாக்குதலை நடத்தியவர்கள் யார்?

Featured Replies

இலங்கை தனித்து பெளத்த சிங்கள நாடு என்ற மமதைத்தனம் நாட்டை படுபாதாளத்தில் தள்ளிவிட்டது. 

நாட்டின் வர்த்தக முயற்சிகள் தள்ளாடிக் கொண்டிருக்கின்ற நிலையில், கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் இலங்கையின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அதிலும் குறிப்பாக சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியானது பல்வேறு துறைகளிலும் பாதிப்பை விளைவித்துள்ளது.

இவை ஒருபுறமிருக்க, உயிர்த்தஞாயிறு தினத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக் குதலுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை என்பதாக இப்போது கதை விடப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலையடுத்து குறித்த குண்டுத்தாக்குதலை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதமே நடத்தியதாகக் கூறப்பட்டது. இது தொடர்பில் ஆதாரங்கள் வெளியிடப்பட்டன. தவிர, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கை மீது தாக்குதல் நடத்தலாமென இந்தியா வின் புலனாய்வுத்துறை எச்சரிக்கை செய்த தான தகவல்களும் உண்டு.

நிலைமை இதுவாக இருக்கையில், ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கை மீது தாக்கு தல் நடத்துவதை விட்டு விடுமாறு இந்த நாட்டின் ஜனாதிபதி பெளவியமான வேண்டுதல் ஒன்றை முன்வைத்திருந்தார்.

இவையயல்லாம் நடந்துமுடிந்த நிலையில் இப்போது தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக் கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என படைத்தரப்பு அதிகாரிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்பாகக் கூறிவருகின்றனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்தஞாயிறு தினத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்கு தலை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளே நடத்தினர் என முதலில் தெரிவித்தவர்கள் இப்போது அதிரடியாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்துக்கும் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கும் தொடர்பில்லை எனக் கூறிவருகின்றனர்.

இவ்வாறு கூறுவதன் பின்னணியில் இருக் கக்கூடிய காரணங்கள் என்ன என்பது ஆய்வுக்குரிய விடயம்.

இவற்றுக்கு மேலாக ஒட்டுமொத்தமாக அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்த முஸ்லிம் எம்.பிக்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் பதவி விலக வேண்டும் எனக் கேட்டிருந்த பெளத்த பிக்குகள், இப்போது வாய்பொத்தி மெளனமாக இருக்கின்றனரெனில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதம் தாக்குதலை நடத்தவில்லை என்று கூறுவதற்கும் பெளத்த பிக்குகளின் மெளனத்துக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் உண்டா என்று ஆராய்வதும் அவசியமாகிறது.

http://valampurii.lk/valampurii/content.php?id=19157&ctype=news

  • தொடங்கியவர்

உயிர்த்தஞாயிறு தாக்குதலை நடத்தியவர்கள் யார்? என்ற தொடர் விசாரணை இலங்கை என்ற நாட்டில் நீதியை தேடிய தொடர் பயணம் என்ற போர்வைக்குள் அரங்கேற்றும் பல உள்குத்துக்களை காட்டுகின்றது. 

இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு விசாரணை என்பதெல்லாம் கூட அரசியல். இது தொடர் தமிழன அழிப்பில் தொடங்கி இன்று சகல அரசியல் விசாரணைகளிலும் புற்று நோயாக பரவிவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஐஎஸ் அமைப்பின் தலைமைக்கு தொடர்பா? ஐநா நிபுணர்கள் விசேட அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஐஎஸ் அமைப்பின் தலைமைக்கு தொடர்பா? ஐநா நிபுணர்கள் விசேட அறிக்கை

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி உரிமை கோரியிருந்தார் ஆனால் உண்மையில் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து ஐஎஸ் அமைப்பிற்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு அதன் விசேட கண்காணிப்பாளர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை முன்னெடுத்த தேசிய தவ்ஹீத் ஜமாத்தும் ஜேஎம்டீ அமைப்பு 2014 இல் உருவாக்கப்பட்டவை என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது. 

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தாக்குதலிற்கு முன்னர் 50 உறுப்பினர்களை கொண்டிருந்தது எனவும் ஐநா குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஜேஎம்ஐ அமைப்பு 2015 இல் உருவாக்கப்பட்டதாகவும் அது சுமார் 150 உறுப்பினர்களை கொண்டிருந்ததாகவும்  அவர்களில் பலர் சிரியா சென்று ஐஎஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்றனர் எனவும் ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு நிபுணர்கள் இணையம் மூலம் ஐஎஸ் அமைப்பு உள்ளுர் வெடிகுண்டுகளை தயாரிக்கும் முறை குறித்து கற்றுள்ளனர் மேலும் தாங்கள் தயாரித்த குண்டுகளை பரிசோதனை செய்துள்ளனர் எனவும் அறிக்கையில் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ள போதிலும் உறுப்பு நாடுகள் மேற்கொண்ட விசாரணைகள் ஐஎஸ் அமைப்பிற்கு இந்த தாக்குதலுடன் நேரடி தொடர்பில்லை என்பதும் அந்த அமைப்பு முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது எனவும் அறிக்கையில் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் உள்ளுரிலேயே உருவாக்கப்பட்டதுடன் ஐஎஸ் அமைப்பின் நடவடிக்கைகளால் உந்தப்பெற்று முன்னெடுக்கப்பட்டது எனவும் எனவும் அறிக்கையில் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

easter-day-attack.jpg

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஐஎஸ் அமைப்பின் பிரச்சாரங்கள் தொடர்ந்தும் கவனத்தை ஈர்ப்பவையாக உள்ளதையும் உள்ளுர் குழுக்கள் எதிர்பாராத இடங்களில் உருவாகி  குறிப்பிடத்தக்க பயங்கரவாத திறனை உருவாக்குபவையாக மாறக்கூடிய ஆபத்துள்ளதையும் புலப்படுத்தியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது எனவும் அறிக்கையில் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

.ஐஎஸ் அமைப்பு தற்போது இலங்கையில் இடம்பெற்றது போன்ற ஐஎஸ் அமைப்பினால் உத்வேகம் பெறப்பட்ட தாக்குதல்களை நம்பியுள்ளது என ஐநாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/61837

 

  • 1 year later...

உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு பூஜித் பொறுப்பேற்று பதவி விலகினால் அவருக்கு தூதுவர் பதவியை வழங்க தயார் என சிறிசேன தெரிவித்தார்- முன்னாள் பாதுகாப்பு செயலாளர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிரதிபொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர பொறுப்பேற்றால் வெளிநாட்டு தூதுவர்பதவியை அவருக்கு வழங்குவதற்கு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன முன்வந்தார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


2019 ஏப்பிரல் 21 ம்திகதி இடம்பெற்ற ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று அக்காலப்பகுதியில் பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய பூஜித்ஜயசுந்தர பதவிவிலகினால் அவருக்கு ஓய்வூதிய த்தை வழங்குவதுடன் வெளிநாடொன்றின் தூதுவராகஅவரை நியமிப்பதாக ஏப்பிரல் 24 ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இது குறித்து தனதுஆலோசனையை பூஜித்ஜயசுந்தர நாடினார் என ஹேமசிறிபெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
எனினும் பாரதூரமான விடயம் என்பதால் நான் அதனை தவிர்த்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நான் பூஜித்தை அந்த விடயத்தினை அவரது குடும்ப உறுப்பினர்களுடன் ஆராயுமாறுகேட்டேன் என ஹேமசிறி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.


பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் பிடியிலிருந்து பொலிஸ்மாஅதிபரை விடுவிக்க முடியும் எனவும் மைத்திரிபாலசிறிசேன அவருக்கு தெரியப்படுத்தினார் என ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/69893

 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2019 at 16:59, கிருபன் said:

ஆனால் உண்மையில் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து ஐஎஸ் அமைப்பிற்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது

குண்டுத்தாக்குதலின் சூத்திர தாரிகளை ஐ. நா. வெளிப்படுத்தி விடும் என்று பயப்படுகிறார்களோ?

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தால் பல்வேறு சலுகைகளை அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு உறுதிமொழி அளித்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தில் தாக்குதல் நடைபெற்றது.

இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை அழைத்து உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தால் பல்வேறு சலுகைகளை அளிப்பதாக உறுதிமொழி அளித்துள்ளார்முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன .

இதன்படி ஓய்வூதியத்தை அளித்தல் அத்துடன் அவர் விரும்பும் நாட்டில் தூதுவராக நியமித்தல் என்பனவே அவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலரின் இந்த வாக்குமூலம் மைத்திரிபாலவிற்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

https://www.ibctamil.com/srilanka/80/150876?ref=home-imp-parsely

ஹரின் பெர்னான்டோவின் கருத்து உண்மைக்குப் புறம்பானது; கார்தினல் மெல்கம் ரஞ்சித் நிராகரிப்பு

 

 

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்தினை வணக்கத்திற்குரிய கார்தினல் மெல்கம் ரஞ்சித் நிராகரித்துள்ளார்.

குறித்த கருத்து தொடர்பில் கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயர்களின் அமைப்பும் கண்டனம் வெளியிட்டுள்ளதாக பேராயர் இல்லம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ஹரீன் பெர்னாண்டோவால் பேராயர் மீது உண்மைக்கு புறம்பான, அநீதியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராயர், ஆயர்கள் அல்லது எந்தவொரு காத்தோலிக்க பாதிரியார்களோ ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னரே அறிந்திருக்கவில்லை என பேராயர் இல்லம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://thinakkural.lk/article/70279

 

 

முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் குற்றச்சாட்டை நிராகரித்தார் சிறிசேன

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்

.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற வேளை பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய பூஜிதஜயசுந்திர தாக்குதலுக்கான பொறுப்பையேற்று பதவிவிலகினால் அவரை வெளிநாட்டு தூதுவராக நியமிப்பதாகவும் ஓய்வுதீயத்தை பெற்றுதருவதாகவும் சிறிசேன தெரிவித்தார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டிருந்தார் .
ஆனால் முன்னாள் ஜனாதிபதியின் அறிக்கையொன்றில் இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ளதுடன் இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை தீயநோக்கம் கொண்டவை என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிர்காலத்தில் உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுமுன்னிலையில் ஆஜராவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் உண்மையை தெளிவுபடுத்துவார் என அவரது செயலாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/70286

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.