Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தில் நிர்க்கதியான பெண்களில் துயர வாழ்வு

Featured Replies

fea01_0.jpg?itok=vRAzlV2Z

படுவான்கரை பிரதேசத்தில் தொடரும் அவலம்!

முப்பது வருட கால உள்நாட்டு யுத்தம் ஓய்ந்து போனாலும் அதன் பாதிப்பு இன்னும் காணப்படுகின்றது. எமது நாட்டில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் மிகப் பாரியதாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே படுவான்கரை பிரதேசம் என அடையாளப்படுத்தப்படுகின்ற போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் யுத்தம் தீவிரமாக இடம்பெற்ற காலத்தில் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் கூடியளவு பெண்கள் கணவனை இழந்து விதவைகளாகினர்.இங்கு 2010க்கு மேற்பட்ட விதவைகள் உள்ளதாக பிரதேச செயலக அறிக்கை மூலமாக அறியக் கூடியதாகவுள்ளது.

இவர்களில் அநேகமானோர் இளவயதினராகக் காணப்படுகின்றனர். திடீரென கணவனை இழந்த அவர்கள் எந்தவிதமான முன்னனுபவங்களும் இன்றி குடும்ப தலைமைத்துவத்தினை ஏற்க வேண்டி ஏற்பட்டது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் மொத்த நிலப்பரப்பு 180 சதுர கிலோ மீற்றராகும். இதில் மேட்டு நிலங்கள், காடுகள், விவசாய நிலங்கள், கால்வாய்கள், குடியிருப்புக்கள் காணப்படுகின்றன.

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 43 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் சுமார் 47,000 க்கு உட்பட்டதாக சனத்தொகை எண்ணிக்கை காணப்படுகின்றது.இப்பிரதேசத்தில் அடிக்கடி யானைகள் தாக்கம் மற்றும் பாம்புக்கடிக்கு உள்ளாதல், வெள்ள அனர்த்தம் போன்றவற்றால் பலர் மரணங்களை எதிர்கொள்கின்றனர். மக்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான அரச வைத்தியசாலைகள் இல்லாமை பாரிய பிரச்சினையாகும்.

குறித்த பிரதேசத்தில் ஆதார வைத்தியாலை அளவிற்கு தரம் கொண்ட வைத்தியசாலை ஒன்று இன்மை காரணமாக பல கிலோ மீற்றர் தூரம் கொண்ட களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு சென்று வைத்திய சேவையினை மக்கள் பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.

பாம்பு தீண்டுகின்ற போது பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் பலர் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் வைத்திய சேவை வசதிகள் இல்லாமை ஒரு புறம் இருக்க சிறந்த போக்குவரத்து வசதிகளும் இல்லை.

பிரதேச மக்கள் தமது வீட்டுத் தேவையை நிறைவு செய்ய களிமண்,கிடுகு, செங்கல் என்பவற்றைப் பயன்படுத்தி சிறு வீடுகளை அமைத்துள்ளனர். குடிநீர் வசதியினைப் பெறுவது மிகவும் கஷ்டமான காரியமாகத் திகழ்கின்றது. அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் மூலமாக வீடமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் அவை மக்களின் தேவைகளை திருப்திப்படுத்துவதாக இல்லை.

இப்பிரதேசத்தில் கல்வி நிலைமையினை நோக்குகின்ற போது நகர்ப்புறப் பாடசாலைகளில் காணப்படுகின்ற வளங்களை விடவும் மிகவும் குறைவான அளவு பௌதீக, ஆளணி வளம் உள்ளமை வேதனைக்குரிய விடயமாகும். தேசிய பாடசாலை இப்பிரதேசத்தில் இல்லாமை பாரிய பிரச்சினையாகும். பல பாடசாலைகளில் பிரதான பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. துறைசார் ஆசிரியர் இல்லாமை இப்பிரதேச கல்வியில் பாரிய பிரச்சினையாகும்.

இப்பிரதேசமானது வயல் நிலங்களை அண்டியதாகக் காணப்படுவதால் பிரதான வாழ்வாதாரத் தொழிலாக விவசாயம் காணப்படுகிறது. மேலும் மிருக வளர்ப்பு, மீன்பிடி, வியாபாரம், சுயதொழில் போன்றன காணப்படுகின்றன. தமது குடும்ப வருமானத்தினை ஈடுசெய்யும் வகையில் பெரும்பாலான இளைஞர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றிருக்கின்றனர். பிரதானமாக விதவைகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, தொழில் ரீதியாகவும் விதவைகள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். கூலித் தொழிலாக வீட்டுவேலை,வயல்களில் புல் பிடுங்குதல், உணவுப் பண்டங்கள் தயாரித்தல் போன்ற தொழல்களில் ஈடுபட்டு ஈட்டிக் கொள்கின்ற வருமானம் அவர்களது குடும்பத்தினை பராமரிப்பதற்கு போதுமானதாக இல்லை.இதனால் தமது அடிப்படை வசதிகளைக் கூட நிறைவு செய்ய முடியாத வகையில் விதவைகள் உள்ளனர்.

விதவைகள் சமூகத்தில் ஏனையவர்களைப் போன்று வாழ்வதற்கு வழிகாட்ட வேண்டியது அவசியம். விதவைகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழிலை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது. சுயதொழிலை மேம்படுத்துவதற்கான வசதி வாய்ப்புக்கள் அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்ற போது விதவைகளின் பிரச்சினைக்கு ஓரளவாயினும் தீர்வினைப் பெறக் கூடியதாக அமையும்.

விதவைகள் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிள்ளைகளை இனங்கண்டு அவர்களை கல்விச் செயற்பாடுகளில் வழிப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடு அனைவருக்கும் உரியது.போரதீவுப்பற்று விதவைகளின் துயர் போக்குவதற்கு சிறந்த வழி பிரதேசத்தில் தொழில் பேட்டையினை அமைத்து அதன் ஊடாக தொழில் வாய்ப்புக்களை வழங்குவதாகும்.

 

https://www.thinakaran.lk/2019/08/05/கட்டுரைகள்/38146/யுத்தத்தில்-நிர்க்கதியான-பெண்களில்-துயர-வாழ்வு

Edited by ampanai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.