Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 காங். எம்எல்ஏக்களுக்கு புலிகளால் ஆபத்தாம்

Featured Replies

சென்னை: தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் விடுதலைப் புலிகள் மீது கடும் நடவடிக்கை கோரி சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய உளவுப் பிரிவு தகவல் அனுப்பியுள்ளது.

இதையடுத்து இந்த மூன்று எம்எல்ஏக்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவான ஹசன் அலி நிருபர்களிடம் பேசுகையில்,

எனக்கும் ஞானசேகரன், சுதர்சனம் ஆகிய எம்எல்ஏக்களுக்கும் புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவு மாநில அரசுக்கு தகவல் தந்துள்ளது. இதை மாநில அரசு எங்களிடம் தெரிவித்தது.

ேமலும் எங்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதாகவும் அரசு கூறியுள்ளது.

ஆனால், இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். இதனால் பாதுகாப்பு தேவையில்லை என்று கூறிவிட்டேன் என்றார்.

ஏற்கனவே நக்ஸல்களின் ஹிட் லிஸ்டில் இருப்பவர் ஞானசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது வீட்டுக்கு எப்போதும் போலீஸ் பாதுகாப்பு உண்டு. இப்போது அவரது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்த விஷயத்தில் சுதர்சனத்தின் கருத்தை அறிய முடியவில்லை.

http://thatstamil.oneindia.in/news/2007/05/01/cong.html

இவர்களிற்க்கு ஜோக் அடிக்கிறதை விட்டால் வேற வேலையே இல்லை, சட்ட சபையா இல்லை மெண்டல் சபையா?

  • கருத்துக்கள உறவுகள்

போலிஸ் பாதுகாப்பை பெற்று பந்தாவுடன் வலம் வருவதற்கு இப்படியும் ஒரு உத்தி அது சரி வைகோ வை கைது செய்ய வேண்டும் என்று கூறுகின்ற காங்கிரஸ்சின் தமிழகத் தலைவருடைய சம்மந்தி தானே ராம தாஸ்..? அப்படியானால் அவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடவேண்டுமே..

பெரிய ஒரு சூழ்ச்சி நடக்கிற மாதிரி தெரியுது.அமைதி படையென்று வந்தவர்கள் மீட்புப் படையென்று வாற எண்ணமோ?

பிறகு யார் அவையை மீட்கிறது பட்டட்து காணாதோ

சென்னை: தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் விடுதலைப் புலிகள் மீது கடும் நடவடிக்கை கோரி சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய உளவுப் பிரிவு தகவல் அனுப்பியுள்ளது.

இதையடுத்து இந்த மூன்று எம்எல்ஏக்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவான ஹசன் அலி நிருபர்களிடம் பேசுகையில்,

எனக்கும் ஞானசேகரன், சுதர்சனம் ஆகிய எம்எல்ஏக்களுக்கும் புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவு மாநில அரசுக்கு தகவல் தந்துள்ளது. இதை மாநில அரசு எங்களிடம் தெரிவித்தது.

ேமலும் எங்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதாகவும் அரசு கூறியுள்ளது.

ஆனால், இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். இதனால் பாதுகாப்பு தேவையில்லை என்று கூறிவிட்டேன் என்றார்.

ஏற்கனவே நக்ஸல்களின் ஹிட் லிஸ்டில் இருப்பவர் ஞானசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது வீட்டுக்கு எப்போதும் போலீஸ் பாதுகாப்பு உண்டு. இப்போது அவரது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்த விஷயத்தில் சுதர்சனத்தின் கருத்தை அறிய முடியவில்லை.

http://thatstamil.oneindia.in/news/2007/05/01/cong.html

இவங்களுக்கு இதை விட்டால் வேறு வேலை இல்லைப் போலிருக்கிறது.

:angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திட்டமிடும் குழு திட்டமிட்டுக்கொண்டு அதன் இலக்கிற்கான செய்திகளை உருவாக்கி தனது செயற்பாட்டிற்கான பயணப்பாதையை அவ்வப்போது செப்பனிடும். உலகமே நாடக மேடை அதில் நாம் ஒரு பாத்திரம் என தனது பாடலில் குறிப்பிட்டான் ஒரு கவிஞன். ஆக இதற்கான வசனம் எழுதிக் கொடுப்பது யார்? என அக்கவி குறிப்பிடவில்லை.

ஆனால் உயர் குடி அதிகாரிகளின் திட்டமிட்ட வசனங்களை கொப்பளித்து அதற்கிசைவாக இயல்பாக நடித்து தமது கதிரைகளைக் காக்கும் ஜனநாயக மேடை நடிகர்களின் வசங்களைக் கண்டு நாம் மயக்கமுறலாமா?

ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளுடன் யார்? யரால்? எதற்காக? இப்படி நடக்கின்றன என நாம் அலசிப்பார்க்க வேண்டும்.

இந்தியாவில் சமீபத்தில் வெளிவரும் செய்திகளை ஒழுங்குபடுத்தித் தொகுத்துப் பார்த்தால் திட்டமிடும் குழுவொன்றின் எண்ணம் வெளிப்படும்.

எய்தவன் இருக்க அப்புகளை நோகக் கூடாது! என்பது நம்மவர் முதுமொழி- நீண்ட அனுபங்களின் தொகுப்பால் கிடைத்த அனுபவ மொழி.

அலசிப்பார்த்தால் அனைத்தும் புரியும். நிதானத்துடன் நாம் செல்ல வேண்டிய பாதையும் தெளிவாகப் புரியும்.

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளையும் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுத் தளத்தையும் சிதைக்கும் நோக்கங் கொண்டதாக இவர்களது செயற்பாடு அமைந்திருக்கிறது. கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 12 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் போன்ற சம்பவங்களை வைத்துக் கொண்டு நாடகமாட புறப்பட்டுவிட்டார்கள். கலைஞரின் அரசியல்தான் இதற்குள் சிக்கித் தவிக்கப்போகின்றது. யாவரும் அறிந்திருக்கும் உண்மையொன்று திரிபுபடுத்தப்படப் போகின்றது. இறுதியில் பாதிப்பு அடையப்போவது இந்திய மத்தியஅரசுதான். கலைஞர் கருணாநிதி தீர்க்கமான முடிவிற்கு வராவிட்டால் மத்தியஅரசுக்கான ஆதரவு மாநிலஅரசின் தளம்பல் கூட்டணிக்கட்சிகளின் எதிர்ப்புப் போக்கு எல்லாம் சேர்ந்து கலைஞரைவிழுங்கிவிடும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.