Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரேந்திர மோதி பேச்சு: "காஷ்மீரில் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமா படப்பிடிப்பு நடத்துங்கள் - வேலைவாய்ப்பு பெருகும்"

Featured Replies

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலம் என்ற நிலையில் இருந்து, அதிகாரமற்ற இரண்டு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், காணொளி மூலம் இந்த உரையை நிகழ்த்தினார் அவர். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், லடாக் மக்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்து அவர் பேசத் தொடங்கினார்.

 

கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ்

“காஷ்மீரின் புதிய சகாப்தம் தொடங்கி உள்ளது. படேல், அம்பேத்கர், சியாமா பிரசாத் முகர்ஜி, வாஜ்பேயி ஆகியோரின் கனவு நினைவாகி உள்ளது.” - பிரதமர் நரேந்திர மோதி

Posted by BBC News தமிழ் on Thursday, 8 August 2019

முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ்

"ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் சகோதர சகோதரிகளின் பல உரிமைகள் மறுக்கப்படக் காரணமாக இருந்த, வளர்ச்சிக்குத் தடையாக இருந்த ஒரு ஏற்பாடு நீக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார் .

 
 

கனவு நிறைவேறியது

ஒரு நாடாக, ஒரு குடும்பமாக ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

 

சர்தார் வல்லபாய் பட்டேல், பாபாசாஹிப் அம்பேத்கர், ஜனசங்கத் தலைவர் டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி, பாஜக வை சேர்ந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி ஆகியோரின் கனவு தற்போது நனவாகியுள்ளது என்றார் மோதி.

துப்புரவுத் தொழிலாளர்கள் உரிமை

இந்தியாவின் பல மாநிலங்களில் துப்புரவுத் தொழிலாளர்கள் உரிமையைக் காப்பதற்கு 'துப்புரவுத் தொழிலாளர் சட்டங்கள்' உள்ளன. ஆனால், ஜம்மு காஷ்மீர் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அந்த உரிமை இல்லை. தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமையைத் தடுக்க பல மாநிலங்களில் சட்டங்கள் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் அது இல்லை என்று தெரிவித்தார் மோதி.

விவாதம் நடைபெறவில்லை

அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 370 எப்படி ஜம்மு காஷ்மீர் மக்களை எதிர்மறையாகப் பாதிக்கிறது என்பது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. இந்த உறுப்புரை மக்களுக்கு எப்படிப் பலனளிக்கிறது என்று யாராலும் சொல்ல முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

"மத்திய அரசின் ஆளுகையில் வைத்திருப்பதால் நல்லாட்சி நடக்கிறது"

ஜம்மு காஷ்மீரை சிறிது காலத்துக்கு மத்திய அரசின் நேரடி ஆளுகையில் வைத்திருப்பது என்பது யோசித்து எடுக்கப்பட்ட முடிவாகும். ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதில் இருந்து மாநில நிர்வாகம் நேரடியாக மத்திய அரசுடன் தொடர்புகொண்டுள்ளது. இதனால், நல்லாட்சியின் விளைவுகளை களத்தில் பார்க்கலாம் என்றார் மோதி.

வளர்ச்சித் திட்டங்கள்

ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களின் கவலை, அனைத்து இந்திய மக்களின் கவலை. நாம் தனியாக இல்லை. பாரபட்சமின்றி, ஜம்மு காஷ்மீரிலும், லடாக்கிலும் வளர்ச்சித் திட்டங்கள் அமல்படுத்தப்படும். மத்திய அரசின் நடவடிக்கையால், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் இளைஞர்கள் பலனடைவார்கள். விளையாட்டுத்துறையில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார் மோதி.

"தமிழ் சினிமா படப்பிடிப்பு நடக்கும் - வேலைவாய்ப்பு பெருகும்"

இந்த முடிவால், காஷ்மீரில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் பெருமளவில் நடக்கும். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என்றும் கூறினார் மோதி.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது, முத்தலாக் தடை மசோதா, என்ஐஏ மசோதா, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய மசோதாக்கள் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த சூழலில் அவர் உரை நிகழ்த்துவது கவனம் பெறுகிறது.

https://www.bbc.com/tamil/india-49279079

`யூனியன் பிரதேசம் ஏன்; தீவிரவாதம் தொட்டுக்கூட பார்க்க முடியாது!' - மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

மாலை 4 மணிக்கு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் அது 8 மணியாக மாற்றப்பட்டது. நாட்டு மக்களிடையே பேசிய மோடி, ``காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. 370 சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் சர்தார் வல்லபாய் படேல், வாஜ்பாய் ஆகியோரின் கனவுகள் நனவாகியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. காஷ்மீரில் ஊழல் மற்றும் பயங்கரவாதத்திற்கு உதவவே சட்டப்பிரிவு 370 உதவியது. காஷ்மீரின் வளர்ச்சிக்கு இந்த சட்டப்பிரிவு இதுவரை தடையாக இருந்தது. 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதால் காஷ்மீர், லடாக் பகுதிகள் வளர்ச்சியடையும். காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் குடும்ப ஆட்சிமுறைக்கு முடிவு எழுதப்பட்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசால் லடாக் பகுதிகளில் எந்த நன்மையும் நடக்கவில்லை. காஷ்மீர் மக்களுக்கு இனி வேலைவாய்ப்புகள் எளிதில் கிடைக்கும். இந்த சட்டப்பிரிவு ரத்தால் பட்டியல், பழங்குடி இன மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். பிரதமரின் கல்வி உதவித்தொகை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கல்வி, மருத்துவம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும். 370 சட்டப்பிரிவு ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் மக்களை எவ்வாறு பாதித்தது என்பதைக்கூற இங்கும் யாரும் இல்லை. இந்த சட்டப்பிரிவு ரத்தால் அந்த மாநில மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து பேச இங்கு யாரும் இல்லாதது ஆச்சர்யமளிக்கிறது.

 

ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக்க முடிவெடுத்தது ஏன்?
ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தைக் கடந்த சில மாதங்களாக மத்திய அரசு கவனித்து வந்தது. அப்போது, நல்ல நிர்வாகம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டங்களை வேகமாக செயல்படுத்த முடிந்தது.

 

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தற்காலிக முடிவுதான்!
ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியது தற்காலிக முடிவுதான். அதேநேரம், லடாக் யூனியன் பிரதேசமாகவே தொடரும். காஷ்மீர் மக்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்படும். அந்த உரிமை அவர்களுக்கு என்றும் நிலைத்திருக்கும். பாதுகாப்பு படையில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் வகையில் முகாம்கள் நடத்தப்படும். நான் சமீபத்தில் காஷ்மீர் சென்றிருந்தபோது சாலை மற்றும் மின்சார வசதிகள் மேம்பட்டிருப்பதைக் கண்டேன். காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி கொண்டு வரப்பட்ட பிறகு அங்கு வளர்ச்சி பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. காஷ்மீரில் சினிமா படப்பிடிப்புகளுக்கான தடைகள் நீக்கப்படும்.

காஷ்மீரில் இனி திரைப்பட நிறுவனங்களைத் தொடங்கலாம். தமிழ், இந்தி, தெலுங்கு மொழிப் படங்களை தயாரிப்பவர்கள், காஷ்மீரில் படப்பிடிப்புகளை நடத்த முன்வர வேண்டும். சினிமா படப்பிகளை காஷ்மீரில் நடத்தியதால் அந்த மக்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். லடாக்கில் சூழலியல் சுற்றுலாக்கள் ஊக்கப்படுத்தப்படும். காஷ்மீரில் உள்ள மூலிகை வளங்களை சந்தைப்படுத்தி விவசாயிகளின் வாழ்க்கை மேம்படுத்தப்படும். ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கை புதிய பாதைக்கு அழைத்துச் செல்வோம்.

காஷ்மீர் மக்கள் பிரிவினைவாதிகளைத் தோற்கடிப்பார்கள். மாற்றுக்கருத்து உள்ளவர்களை மதிக்கிறோம்; ஆனால், தேசவிரோத நோக்கில் செயல்படக்கூடாது. லடாக் மற்றும் காஷ்மீரை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இனிமேல் ஜம்மு - காஷ்மீரையோ லடாக்கையோ தீவிரவாதம் தொட்டுக்கூட பார்க்க முடியாது.

அனைவருக்கும் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் எந்தவொரு பிரச்னையும் எங்கள் பிரச்னை. அவர்களின் மகிழ்ச்சி, சோகமான தருணங்களில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்கள் முழுமையான பாதுகாப்புடன் விரைவில் நடத்தப்படும். கடந்த 1947-க்குப் பிறகு மற்ற மாநிலங்களுக்கு உரிமைகள் கிடைத்தன. ஜம்மு - காஷ்மீரில் மட்டும் கிடைக்கவில்லை. காஷ்மீரில் ஆய்வு செய்து அரசு ஊழியர்கள், போலீஸாருக்கான சலுகைகளை உறுதி செய்வோம். விமான நிலைய உருவாக்கம், தரமான சாலை வசதி உள்ளிட்டவை அடுத்தடுத்து ஏற்படுத்திக் கொடுக்கப்படும். காஷ்மீரில் விளையாட்டு அரங்குகள் போன்றவை இல்லை. அவற்றில் கவனம் செலுத்தப்படும். காஷ்மீர் இளைஞர்கள் இந்தியாவின் பெயரை சர்வதேச அரங்கில் உயர்த்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்று பிரதமர் மோடி பேசினார். காஷ்மீர் மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்து, தனது உரையை பிரதமர் மோடி நிறைவு செய்தார். 8 மணிக்குத் தொடங்கி ஏறக்குறைய 40 நிமிடங்கள் அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

https://www.vikatan.com/news/india/we-have-taken-a-historic-decision-pm-modi-on-kashmir-issue

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ஓ அரசியல்வாதிகள் அந்தப் பக்கம் போயிடாதேங்கோ.

மக்களை மட்டும் பலிக்கடாவா அனுப்புங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

           -- முனிரத்னம் --

531223912_1280x720.jpg

எடுடா வண்டிய..  ரோஜா-2 எடுக்கணும்..😊

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.