Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் - முஸ்லிம் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும்! - மஹிந்த

Featured Replies

"நாடளாவிய ரீதியில் சிங்கள மக்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் என முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.  

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் எவர்? என்ற கேள்விக்கு விரைவில் பதில் தெரியவரும். மூவின மக்களையும் நாட்டையும் பாதுகாக்கக்கூடிய ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார். 

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கைகோர்க்க தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் தயாராகவுள்ளனர். அவர்களுடன் எமது சக உறுப்பினர்கள் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர். 

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வேட்பாளராக எவர் களமிறங்கினாலும் அது எமக்குச் சவால் அல்ல. 

சிறுபான்மை இன மக்களும் எமக்கே ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. நாடளாவிய ரீதியில் சிங்கள மக்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக இருந்தாலும் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானிக்கும்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் கடும் போட்டி நிலவக்கூடும் என்று பலர் கருதுகின்றனர். எனினும், இந்த இரு தேர்தல்களிலும் மூவின மக்களின் ஆதரவுடன் நாம் வெல்லுவோம்" - என்றார். 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கக்கூடிய வாய்ப்புக்களைக் கொண்டிருப்பவர் என்று கருதப்படும் கோத்தாபாய ராஜபக்ஷ, சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் தேர்தலில் வெற்றிபெற முடியும் என கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

https://www.virakesari.lk/article/62294

 

மீண்டும் பிள­வு­படும் சுதந்­திரக்கட்சி மஹிந்த பக்கம் தாவும் மற்­றொரு அணி

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் பற்­றிய அறி­விப்பு வெளி­யி­டப்­ப­ட­வி­ருக்கும் அந்தக் கட்­சியின் மாநாட்டில் தாம் கலந்துகொள்ளப் போவ­தாக ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் தெரி­வித்­துள்­ளனர்.

எதிர்­வரும் 11ஆம் திகதி ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் மாநாடு நடை­பெ­ற­வுள்­ளது. இதில் மஹிந்த ராஜ­பக் ஷ கட்­சியின் தலை­வ­ராக பங்­கேற்­க­வுள்­ள­துடன், தமது ஜனா­தி­பதி வேட்­பா­ளரின் பெய­ரையும் அறி­விக்­க­வுள்ளார்.

இந்த மாநாட்டில் பங்­கேற்­பதா இல்­லையா என்­பது குறித்து, கடந்த 6ஆம் திகதி ஜனா­தி­ப­தியின் இல்­லத்தில் சுதந்­திரக் கட்­சியின் முக்­கிய தலை­வர்கள் கூடி ஆராய்ந்­தி­ருந்­தனர்.

இதன்­போது, மாநாட்டில் பங்­கேற்கவேண்டும் என ஒரு தரப்பும், பங்­கேற்கக்கூடாது என மற்­றொரு தரப்பும் வாதிட்­டன.

இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடை­யி­லான கூட்­டணி தொட­ர்­பான முடிவு இன்­னமும் எடுக்­கப்­ப­டாத நிலையில், பொது­ஜன பெர­மு­னவின் மாநாட்டில் பங்­கேற்க வேண்டாம் என சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் ஜனா­தி­பதி கோரி­யி­ருந்தார்.  அதன் பின்னர் அவர் நேற்­று­முன்­தினம் அதி­காலை கம்­போ­டி­யா­வுக்குப் புறப்­பட்டுச் சென்று விட்டார்.

சுதந்­திரக் கட்­சியின் இந்த முடிவை நேற்­று­முன்­தினம் கட்­சியின் பொதுச்­செ­யலர் தயா­சிறி ஜய­சே­கர அறி­வித்­தி­ருந்தார்.

எனினும், சுதந்­திரக் கட்சி தலை­மையின் இந்த முடி­வுக்குக் கட்­டுப்­படப் போவ­தில்லை என சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

தயா­சிறி ஜய­சே­கர தவிர்ந்த சுதந்­திரக் கட்­சியின் ஏனைய உறுப்­பி­னர்கள் இந்த மாநாட்டில் பங்­கேற்­க­வுள்­ள­தாக எஸ்.பி.திசாநா­யக்க தெரி­வித்தார்.

அத்­துடன் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு தாம் ஆசி வழங்கப் போவ­தா­கவும் அவர் கூறினார்.

தானும் இந்த மாநாட்டில் பங்­கேற்கப்போவ­தாக, சுதந்­திரக் கட்­சியின் மற்­றொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான டிலான் பெரே­ராவும் கூறி­யுள்ளார். இதற்­கி­டையே இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடையில் கூட்­ட­ணியை உரு­வாக்­கு­வது தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்படுகின்ற நிலையில், ஸ்ரீ­லங்கா   சுதந்திரக் கட்சித் தலைமை மாநாட்டில் பங்கேற்க தடைவிதித்துள்ளமை குறித்து பொதுஜன பெரமுன கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

https://www.virakesari.lk/article/62299

Edited by ampanai

  • தொடங்கியவர்

தமிழர்களின் ஆதரவு தேவையில்லையென நான் கூறவில்லை - கோத்தா

68243859_511897686282263_149041529308263

 

இலங்கை வாழ் அனைத்து தமிழர்கள் மற்றும் சிங்களவர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான  த. சித்தார்த்தனுக்கும் தனக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் பல்வேறு போலியான தகவல்கள் வெளியாகின்றன.

அதனடிப்படையில், தமிழர்களின் ஆதரவு தனக்குத் தேவையில்லையென வெளியான செய்திகள் தவறானவையென்றும் அனைத்து தமிழ் மக்களின் ஆதரவும் தமக்கு தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிக்கு இலங்கை வாழ் அனைத்து தமிழர்கள், சிங்களவர்களின் வாக்குகளை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பலர் தன்னுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இவ்வாறு போலியான செய்திகள் வெளியாவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தன் மீதும் நாட்டின் மீதும் அன்பு கொண்டுள்ள மக்களை திசைமாற்றிவிட முடியாதென்றும் கோத்தாபய ராஜபக்ஷவின் ஊகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/62350

  • தொடங்கியவர்
14 minutes ago, ampanai said:

இலங்கை வாழ் அனைத்து தமிழர்கள் மற்றும் சிங்களவர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

14 minutes ago, ampanai said:

வெற்றிக்கு இலங்கை வாழ் அனைத்து தமிழர்கள், சிங்களவர்களின் வாக்குகளை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பலர் தன்னுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இவ்வாறு போலியான செய்திகள் வெளியாவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

முஸ்லீம் மக்களுக்காக இன்னொரு அறிக்கை விடப்போகின்றாரா? இல்லை அவர்களையும் தமிழர்கள் என்கிறாரா? இல்லை அவர்கள் வேண்டாம் என்கிறாரா?

(கௌதம) சித்தார்த்தனுக்கு தான் வெளிச்சம் 😔

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.