Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆகஸ்ட் அதிசயம்...கொட்டித் தீர்க்கும் மழை!

Featured Replies

அணைகள் வேக வேகமாக நிரம்பி வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முடங்கிப் போய் கிடக்கிறது. கடந்த வாரம் வரை, நீர்நிலைகள் மைதானமாக காட்சியளித்த நிலையில், தற்போது சாலைகளே நீர்நிலைகளாக மாறிவிட்டன.

புதன்கிழமை மழை பெய்யத் தொடங்கியபோது, இதுவும் சாதாரண மழைதான் என்று கோவை மக்கள், தங்களது டே பிளானை (Day plan) அமைத்திருப்பார்கள். ஆனால், மழை வேறு பிளானை செயல்படுத்திவிட்டது.

புதன்கிழமை தொடங்கிய மழை, வெள்ளிக் கிழமை வரை கொட்டிக்கொண்டிருக்கிறது. வால்பாறை முற்றிலுமே முடங்கிப் போய்விட்டது. பழங்குடி கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

தொடர்மழை காரணமாக, கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செல்வபுரம் டூ பேரூர் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது.

தனது வழியெங்கும் நொய்யல் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது. ஒண்டிப்புதூர் அருகே, நொய்யலில் கழிவுநீர் கலந்து நுரைகள் பறந்துகொண்டிருக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் அதிகபட்சமாக சின்னக்கல்லாறு 372 மி.மீ, சின்கோனா 315 மி.மீ, சோலையாறு அணை 282 மி.மீ, வால்பாறை தாலுகா 260 மி.மீ, பொள்ளாச்சி160 மி.மீ, கோவை தெற்கு 120 மி.மீ, பீளமேடு 106 மி.மீ மழைப்பொழிவை பெற்றுள்ளன.

மொத்தமாக கோவை மாவட்டத்தில், 244 செ.மீ பெய்துள்ளதாக பேரிடர் மேலாண்மை தரப்பில் தெரிவித்துள்ளனர். `ஆகஸ்ட் மாதத்தில் (ஆல் டைம் ரெக்கார்டு), கோவைக்கு கிடைத்த சிறந்த மழைப்பொழிவு இதுதான்’ என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

பில்லூர் அணை, தற்போது முழுக் கொள்ளளவை எட்டிவிட்டது. சிறுவாணி அணையின் நீர் மட்டம் 36 அடியைத் தாண்டிவிட்டது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் சிறுவாணி அணை நிரம்ப உள்ளது.

சித்திரைசாவடி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில், 4,650 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. பில்லூர் அணையிலிருந்து 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கோவை குற்றாலம், வைதேகி நீர் வீழ்ச்சி, குரங்கு அருவி போன்றவற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், குற்றாலம் மற்றும் குரங்கு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆத்துப்பாலத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள பாலங்கள் தண்ணீரில் தத்தளிக்க, புதிதாகக் கட்டப்பட்டு வரும் உக்கடம் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் பாதிப்படைந்துள்ளன.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், ``கோவையில் மழையால் பெரிய பாதிப்பு இல்லை. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், பவானி மற்றும் நொய்யல் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்குச் செல்லவும். அவசர உதவிக்கு, 0422 2390261, 2390262, 2390263, 8190000200 (வாட்ஸ் அப்), 7440422422 ஆகிய உதவி எண்களைத் தொடர்புகொள்ளலாம்” என்று கூறியுள்ளது.

கடந்த சில மாதங்களாக தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருந்தனர். தண்ணீர் வந்துவிட்டது. அதை எப்படி சேமிக்கப் போகிறோம்?

https://www.vikatan.com/social-affairs/environment/heavy-rainfall-in-coimbatore

 

நீலகிரியில் பெய்து வரும் கனமழை எதிரொலி: மீட்பு பணிக்கு ராணுவ உதவியை நாடியது மாவட்ட நிர்வாகம்

கனமழையால் பாதித்துள்ள நீலகிரி மாவட்டத்தில் மீட்பு பணிக்கு உதவுமாறு ராணுவ உதவியை மாவட்ட நிர்வாகம் நாடியுள்ளது. குன்னூரில் உள்ள ராணுவ முகாமின் உதவியை நீலகிரி மாவட்ட நிர்வாகம் நாடியுள்ளது.  தென்மேற்கு பருவ மழை வட மாநிலங்களில் தீவிரமாகி கொட்டி வருகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் நீலகிரி அவலாஞ்சியில் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 92 செ.மீ மழை கொட்டியிருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,000 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கூடலூர், பந்தலூர், குந்தா மற்றும் ஊட்டி தாலூகாவுக்குட்பட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்வதால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 5-வது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஊட்டி - மஞ்சூர் சாலையில் நேற்று 10 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதியில் தீவிரம் அடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, மேலும் 2 நாட்களுக்கு அதிதீவிர கன மழை பெய்யக்கூடும் என்றும் தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனத்த மழை நீடிக்கும் எனவும் அறிவித்துள்ளது. இதன் காரணமாகவும், ஏற்கனவே பெய்துள்ள கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கவும் ராணுவத்தின் உதவியை அம்மாவட்ட நிர்வாகம் நாடியுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=516881

  • கருத்துக்கள உறவுகள்

à®à®°à¯à®ªà¯à®ªà®°à®¿à®à¯à®à¯à®®à¯ வà¯à®³à¯à®³à®®à¯

காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மேட்டூரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

காவிரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் மேட்டூரில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. இந்த மழையால் அணைகள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன.

இதனால் கபிணி, கிருஷ்ணராஜசாகர், பவானி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரியில் பாயும் வெள்ளத்தால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

à®à®°à¯ நாளில௠3 à®à®à®¿ à®à®¯à®°à¯à®µà¯

இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கலுக்கு தற்போது வினாடி 5,500 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அது போல் மேட்டூர் அணைக்கும் வினாடிக்கு 5.097 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

à®à¯à®à¯à®à¯à®¯à¯à®°à¯

இந்த நிலையில் மேட்டூர் நீர்தேக்க பகுதியான கோட்டையூரில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியில் நீரவரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/salem/heavy-rains-in-karanata-results-dams-water-level-increases-359711.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.