Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மந்தமடையும் உலக பொருளாதாரமும் பூச்சியத்தை நோக்கிய மத்திய வங்கிகளும் 

Featured Replies

மந்தமடையும் உலக பொருளாதாரமும் பூச்சியத்தை நோக்கிய மத்திய வங்கிகளும் 

கடந்த உலக பொருளாதார வங்கிகள் ஊடான சிக்கல் நடந்தது 2007-2008 காலப்பகுதியில். அதன் பின்னராக உலக பொருளாதாரம் வளர்ந்தே வந்தது. ஆனால், உலக மத்திய வங்கிகளின் பண முறிவு வீதம், உலகம் ஒரு பொருளாதார தேக்க நிலையை நோக்கி நகருவதாக எதிர்வு கூறுகிறது. 

இதை சமாளிக்க இல்லை தாக்கத்தை குறைக்க பல நாட்டு மத்திய வங்கிகளும் தங்கள் வட்டி வீதத்தை குறைத்துள்ளன. வரும் மாதங்களில் மேலும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இறுதியில் பூச்சியம் என மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்கு கொடுக்கும். இதனால், மக்கள் மேலும் கடன் வாங்க தூண்டிடப்படுவார்கள். இது, பொருளாதார சீரமைப்பிற்கு உதவும் என்பது கணிப்பு. 

சீன- அமெரிக்க பொருளாதார யுத்தம் ஒரு பக்கம், ஆசியாவின் பொருளாதார முயங்களில் ஒன்றான ஹாங்கோங் போராட்டங்கள் ( பத்தாவது வாரமாக தொதரும் போராட்டங்கள், இத்தாலி அரசின் விருப்பாளர்களின் போராட்டங்கள், ஆர்ஜெண்டீனா தேர்தலால் ஏற்பட்ட  50% பங்கு சரிவும் நாட்டின் பண சரிவும் என உலக பொருளாதாரத்தை ஒரு நிலையற்ற நிலையில் வைத்துள்ளன. மேலும், பிரித்தானியாவின் ஐரோப்பிய யூனியன் ஊடான பிரிவும் உதவவில்லை. 


ஆக்கம் : சுய தேடல், தொகுப்பு 

  • தொடங்கியவர்

மந்தமடையும் உலக பொருளாதாரத்தால், உலக மசகு எண்ணெய் விலை குறைந்தே காணப்படும். சீன, இந்தியா நாடுகளின் கொள்வனவு குறைந்து வருகின்றது, அமெரிக்க நாடானது அதிகளவில் உற்பத்தி செய்வதும் ஒரு காரணம். 

மக்கள் ஒரு பாதுகாப்பான முதலீட்டை நோக்கி நகர்வதால் உலகத்தில் தங்க, வெள்ளி விலை அதிகரித்து செல்வதையம் காணக்கூடியதாக உள்ளது.

  • தொடங்கியவர்

இன்று உலகம் முழுவதும் பங்கு சந்தைகள் சரிந்தன. காரணம் ?

அமெரிக்க திறைசேரியின் இரண்டு ஆண்டு கால பண முறிவின் வட்டி வீதம் பத்து ஆண்டு கால பண முறிவின் வட்டி வீதத்தை விட குறைவாக இருப்பது. 

அதாவது நீண்ட கால முதலீட்டில் அது அமெரிக்க பொருளாதார தேக்கத்தை குறிக்கின்றது, இவ்வான சுட்டிகள் காட்டிய வரலாற்றில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. ஆனால், அது நிச்சயம் நடக்கும் என்றோ இல்லை எப்பொழுது நடக்கும் என்றோ உறுதியாக கூற முடியாது. 

இதனால் மிகவும் அதிருப்தி அடைந்த அமெரிக்க அதிபர், உலகின் மிகப்பலம் வாய்ந்த அமெரிக்க  மத்திய வங்கி  வட்டி வீதத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என குறுஞ்செய்தி அனுப்பி, அரசியல் கலக்காத வங்கி ஆளுனரை தூண்டி உள்ளார். 

இவ்வாறு தங்கள் வட்டி வீதத்தை குறைத்த ஜப்பான் போன்ற நாடுகள் தங்கள் வசம் வேறு கருவிகள் இல்லாமலும் பொருளாதாரத்தை மீளமைக்க முடியாமலும் உள்ளன.   

 

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

அமெரிக்க திறைசேரியின் இரண்டு ஆண்டு கால பண முறிவின் வட்டி வீதம் பத்து ஆண்டு கால பண முறிவின் வட்டி வீதத்தை விட குறைவாக இருப்பது.

நான் நினைகிறேன், எதிர் மறைதான் சரியானதென்று. பத்து ஆண்டு கால பண முறிவின் வட்டி வீதம் இரண்டு ஆண்டு கால பண முறிவின் வட்டி வீதத்தை விட குறைவாக இருப்பது. 

The 10-year Treasury bondyield fell below 1.6% Wednesday morning, dropping just below the yield of the 2-year Treasury bond." (cnn.com)

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய பொருளாதார வளர்ச்சி பிரக்சிட் நிச்சயமற்ற தன்மையால் தள்ளாடி வரும் நிலையில் கடைசிக் காலாண்டில்.. பூச்சியத்துக்கு கீழ்.. - 0.2 என்ற நிலையை எட்டி உள்ளது. பவுன்சின் பெறுமதியிலும் பிரக்சிட் வாக்களிப்பின் பின் கிட்டத்தட்ட தொடர் வீழ்ச்சி அவதானிக்கப்படுகிறது. 

ஜேர்மனியின் கடைசிக் காலாண்டு வளர்ச்சியும் பூச்சியத்துக்கு கீழ்.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் மட்டும் வளர்ச்சி பூச்சியத்துக்கு மேல் உள்ளது. 

இத்தாலி பூச்சியமாக உள்ளது.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

பிரபா,நெடுக்ஸ்,
உங்கள் இருவருக்கும் இந்த திரியில் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி.
இதையும் வாசிப்பதுடன், நான் எழுதியதில் உள்ளதா தவறு மற்றும் கருத்துக்களை தெரிவிப்பது மகிழ்ச்சியை தருகின்றது.

நன்றிகள்.

  • தொடங்கியவர்

பண முறிவு வட்டி வீதங்கள் பற்றிய தகவல்களும் அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட எதிர்வுகூறலும் குழப்பமாக இருந்தது. இறுதியில் சந்தைகள் சற்று எழுந்தன. 
 

 

  • தொடங்கியவர்

பொருளாதார மந்தநிலை மிகவும் கவலையளிக்கிறது : ரகுராம் ராஜன் பேட்டி

Dkn_Tamil_News_2019_Aug15__843013942241669.jpg

 

புதுடெல்லி : ‘‘நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை மிகவும் கவலையளிக்கிறது. இப்பிரச்னைகளை சரிசெய்ய, தனியார் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் புதிய சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்’’ என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2018-19ம் நிதியாண்டில் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 2014-15ம் நிதியாண்டிலிருந்து மிகவும் குறைவான அளவு. தற்போதைய நிதியாண்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி(ஜிடிபி) 7 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. ஆனால் வளர்ச்சி இதைவிட குறைவாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலை குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தொழில்கள் கவலையளிப்பதாக உள்ளது என பலர் கூறுவதை இப்போது நம்மால் கேட்க முடிகிறது.  இதற்கு ஏதோ ஒரு ஊக்குவிப்பு தேவை என தொழிலதிபர்கள் கூறுகின்றனர். பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி வீதத்தை அதிகரிக்க நமக்கு புதிய சீர்திருத்தங்கள் தேவை. சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவது சீர்திருத்தம் அல்ல. அது ஒரு யுக்தி நடவடிக்கை.

நாட்டின் வளர்ச்சி வீதத்தை 2 அல்லது 3 புள்ளிகள் அதிகரிக்க, நாட்டை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்ற புரிதல்தான் நமக்கு இப்போது தேவை. மின்துறை மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் நிலவும் பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். தனியார் துறை முதலீடுகளை அதிகரிக்க புதிய சீர்திருத்தங்கள் தேவை. தற்போதுள்ள நிதி நெருக்கடியில் சலுகைகள், ஏதோ ஒருவிதமான ஊக்குவிப்பு போன்றவை நீண்ட காலத்துக்கு பயன் அளிக்காது. இந்திய சந்தைகள், இந்திய தொழில்கள், நாட்டு மக்களை ஊக்குவிக்கும் வகையில் நன்கு சிந்தித்து எடுக்கப்படும் சீர்திருத்தங்கள்தான் நமக்கு இப்போது தேவை. ஜிடிபி வளர்ச்சி குறித்து முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறிய சில விவாதங்கள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். சில ஜிடிபி புள்ளிவிவரங்களை வைத்து, நாம் வளர்ச்சி வீதத்தை மிகை மதிப்பீடு செய்யலாம். ஜிடிபி கணக்கிடும் முறையை நாம், தனியான நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும். ஜிடிபி எண்கள், தவறான கொள்கை திட்டங்கள் வகுக்க காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

கடந்த 2008ம் ஆண்டு நிலவிய சர்வதேச நிதி நெருக்கடியை ஒப்பிடும்போது, உலக முழுவதும் வங்கிகள் தற்போது மோசமான நிலையில் இல்லை.


நிதித்துறைகளில் தற்போது பெரியளவில் பிரச்னை இல்லை. வர்த்தகம் மற்றும் சர்வதே முதலீடுகளில்தான் உண்மையான பிரச்னை உள்ளது. அதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றால், உலக நாடுகள் தங்கள் சொந்த நலனுக்காக சில நடவடிக்கைகளை எடுக்கலாம். இது வித்தியாசமான உலகம். 2008ம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மீண்டும் வருமா என எனக்கு தெரியாது. ஆனால் வேறு வழிகளில் பிரச்னைகள் ஏற்படும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, புதிய பிரச்னைகளை தடுத்து நிறுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519485

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஏன் மத்திய வங்கிகள் பணத்தை மக்களுக்கு இறைக்கின்றன .... 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.