Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டா விவகாரம்: குடியுரிமை இழந்தவர்களின் பெயர்கள் மாத இறுதியிலேயே பதிவிடப்படும் – அமெரிக்க தூதுவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Teplitz-Gota.jpg

கோட்டா விவகாரம்: குடியுரிமை இழந்தவர்களின் பெயர்கள் மாத இறுதியிலேயே பதிவிடப்படும் – அமெரிக்க தூதுவர்

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பெயர் பதிவு, பெரும்பாலும் மாத இறுதியிலேயே பதிவு செய்யப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைய்னா பி டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் பதிவேட்டில் இல்லை என்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் “குடியுரிமையை கைவிடுவது என்பது ஒரு நிர்வாக செயன்முறை ஆகும். அதன் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன் பிரகாரமே குடியுரிமையை கைவிட வேண்டும்” என கூறினார்.

இதேவேளை எவ்வாறாயினும், தனது நாட்டின் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், கோட்டாபய ராஜபக்ஷவின் வழக்குகள் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்திருந்தார்.

2019 ஆம் ஆண்டு மார்ச் 1 தொடக்கம், ஜூன் 30 வரையான காலப்பகுதியில் அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பெயர் பட்டியலை கடந்த வாரம் அமெரிக்க இராஜாங்கத்தினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தனது அமெரிக்க குடியுரிமை துறப்பு ஆவணம், மே 3ஆம் திகதி அமெரிக்க அரசாங்கத்தினால் உறுதி செய்யப்பட்டதாகவும் ஏப்ரல் 17ஆம் திகதியிலிருந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவராக கணிக்கப்படமாட்டார் என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் கூறியிருந்தார். இந்த ஆவணம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்தநிலையில், அமெரிக்க அரசாங்கத்தின் பதிவாளர் வெளியிட்ட முதலாவது காலாண்டில் அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை என கடந்த வாரம் பல சர்ச்சைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கோட்டா-விவகாரம்-மாத-இறுத/

In response to comments about the name of SLPP Presidential Candidate Gotabaya Rajapaksa’s name not being in the Federal Register, US Ambassador Alaina B.Teplitz said on Monday that the Federal Register could often be months behind the recording of one’s renunciation of citizenship.

http://www.dailymirror.lk/breaking_news/Federal-Register-could-be-behind-schedule-US-envoy/108-173099

Federal Register could often be months behind  = பிரசா உரிமையை இழந்தவர்களின் பதிவு வெளிவர மாதங்கள் எடுக்கலாம் 

 

அமெரிக்க பிரஜையாகயிருந்தவேளை தேர்தலில் வாக்களித்தாரா கோத்தபாய- ?

Published by rajeeban on 2019-08-20 15:26:51

2005 இல் கோத்தபாய ராஜபக்ச தனது பெயரை வாக்காளர் பதிவில் பதிவு செய்தார் என வெளியாகும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்  என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிங்கள பத்திரிகையாளர் ஒருவர் தேர்தல் ஆணையகத்திடம் இது குறித்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார் என தெரிவித்துள்ள  தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான அமைப்பு 2005 இல் வாக்காளர் பதிவில் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் பதியப்பட்டிருந்தது இலங்கையின் பிரஜையாக இல்லாதபோதிலும் அவர் தேர்தலில் வாக்களித்தார் என குறிப்பி;ட்ட பத்திரிகையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் பொதுஜனபெரமுனவின் வேட்பாளராக போட்டியிடவுள்ளதால் இந்த குற்றச்சாட்டு அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது எனவும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பிரஜையில்லாத ஒருவர் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் அவ்வாறு வாக்களிப்பது குற்றம்  இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களை இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் கீழ் தண்டிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டால் அது இலங்கையின் அரசமைப்பையும் சட்டத்தையும் பாராதூரமாக மீறியதாக அமையும் எனவும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடைமுறையின் அடிப்படையையே மீறியதாகவும் இது அமையும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச தன்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நிருபிப்பதற்காக இது குறித்த விசாரணைகளிற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்  தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தல் ஆணையகம் இந்த குற்றச்சாட்டுகள் குறித்த பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

 

https://www.virakesari.lk/article/63019

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ampanai said:

2005 இல் கோத்தபாய ராஜபக்ச தனது பெயரை வாக்காளர் பதிவில் பதிவு செய்தார் என வெளியாகும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்  என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பெட்டி பெட்டியாக கள்ளவாக்கு போட அவர்களுக்கு ஆட்கள் இருக்கும் போது இப்படி சில்லறைத் தனமாக செய்வாரா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.