Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமாவளவனின் லண்டன் கூட்டத்தில் நடந்தது என்ன? நிதி திரட்டினாரா?

Featured Replies

முரளிதரன் காசிவிஸ்வநாதன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பாக லண்டனில் நடந்த கூட்டமொன்றில் பங்கேற்றபோது, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக சில இணையதளங்களில் வரும் செய்திகள் எந்த அளவுக்கு உண்மையானவை?

திருமாவளவன் எழுதிய 'அமைப்பாய்த் திரள்வோம்' நூலின் புத்தக விமர்சனக் கூட்டத்திற்கு ‘விம்பம்‘ என்ற அமைப்பு லண்டனில் ஏற்பாடுசெய்திருந்தது. இதற்காக ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று திருமாவளவன் லண்டன் சென்றிருந்தார். இந்த புத்தக விமர்சனக் கூட்டம் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று லண்டன் ஈஸ்ட் ஹாமில் உள்ள ட்ரினிடி சென்டரில் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் துவங்கியபோது உள்ளே நுழைந்த சிலர், திருமாவளவனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்கள் கூட்ட அமைப்பாளர்களால் வெளியேற்றப்பட்டனர். இதற்குப் பிறகு அந்தக் கூட்டம் நடந்து முடிந்தது. இதற்கு அடுத்த நாள் லண்டனில் உள்ள SOAS பல்கலைக்கழகத்திலும் திருமாவளவன் பேசினார்.

 

வலது சாரி இணைய தளங்கள் சொல்வதென்ன?

புத்தக விமர்சனக் கூட்டத்தில் நடந்த சலசலப்பு குறித்து, சமூக வலைத் தளங்களில் பலவிதமாக செய்திகள் உலவிய நிலையில், சில வலதுசாரி இணையதளங்களில் இந்த சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது: "கூட்டத்தில் சுமார் 100 தமிழர்கள், இலங்கை தமிழர்கள் உட்பட, பங்கேற்றனர். கூட்டத்தில் பேசத் தொடங்கிய திருமாவளவன் இந்தியாவில் மதவாத சக்திகள் அதிகரித்து விட்டார்கள். தொடர்ந்து பல்வேறு இன்னல்களை அவர்களால் அனுபவித்து வருகிறோம். இதற்கு முடிவு கட்டி தமிழர்களின் கலாசாரத்தை, பண்பாட்டை காக்க விடுதலை சிறுத்தை கட்சிக்கு நிதி உதவி அளியுங்கள் என்று கேட்டு கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த இலங்கையைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற ஈழத் தமிழர், உன்னை போன்ற ஆட்களால்தான் தமிழ் இனமே அழிந்தது, எங்கள் மக்கள் அழிவிற்கு காரணமான திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்த துரோகி நீ. நிச்சயம் உன்னை போன்ற ஆட்கள் இருப்பதால்தான் இலங்கையில் நாங்கள் அழிந்தோம். இனி இந்தியாவில் உள்ள தமிழர்களையாவது விட்டு வை, பணம்தானே உனக்கு வேணும் பொறுக்கி கொள் என்று பணத்தை விட்டு எறிந்தார். மேலும் தமிழர்களை இனி ஏமாற்றி உங்களால் மதமாற்றம் செய்யமுடியாது ஒழுங்காக ஓடி விடு என்று திட்டித் தீர்த்துவிட்டார்".

 

திருமாவளவன் என்ன சொல்கிறார்?

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய திருமாவளவன், "விம்பம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நீண்ட காலமாகவே இம்மாதிரி ஒரு கூட்டத்தை நடத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகஸ்ட் மாதத் துவக்கம் வரை நாடாளுமன்றக் கூட்டம் இருந்ததால், ஆகஸ்ட் மாதப் பிற்பகுதியில் செல்ல முடிவெடுத்து ஆகஸ்ட் 24ஆம் தேதி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 25ஆம் தேதி SOAS பல்கலையில் பேசவும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாகவே, இந்த அமைப்பு புலிகளுக்கு எதிரானவர்கள், புலிகள் மீது விமர்சனம் கொண்டவர்களால் நடத்தப்படும் அமைப்பு. அதில் திருமாவளவன் எப்படி பங்கேற்கலாம் என பலரும் சமூக வலைத்தளங்களில் எழுதியதாகச் சொன்னார்கள்.

இந்த நிலையில் அன்று கூட்டம் துவங்கியதும் ஒருவர் கவிதை படித்தார். பிறகு நூல் திறனாய்வு துவங்கியது. அந்தத் தருணத்தில் திடீரென கூட்டத்திலிருந்து ஒருவர் சத்தம்போட்டார். ஆனால், அவர் என்ன பேசினார் எனத் தெரியவில்லை. கையில் மு.க. ஸ்டாலின் படமும் சோனியா காந்தியின் படமும் வைத்திருந்தார்.

 

திருமாவளவன்படத்தின் காப்புரிமை Thol.Thirumavalan/Facebook Image caption லண்டனில் திருமாவளவன்.

பிறகு இன்னொருவர் எழுந்தார். அவர் கலைஞர், அண்ணா படங்களை வைத்திருந்தார். அவர்கள் தொடர்ந்து சத்தமிட்டார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. விழா அமைப்பாளர்களில் ஒருவர், அவர்கள் குடித்துவிட்டு இவ்வாறு செய்கிறார்கள் என்று கூறினார்.

பிறகு அவர்கள் விழா அமைப்பாளர்களால் வெளியேற்றப்பட்டனர். பிறகுதான் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் கூட்டணி குறித்து கேள்வியெழுப்பியதாகக் கூறினார்கள். நான் அவர்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன் என்று சொன்னேன். ஆனாலும் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதற்குப் பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் ஆரம்பிக்கப்பட்டது, அதன் அரசியல், புலிகள் இயக்கத்துடன் எனக்கு இருந்த தொடர்புகள் குறித்தெல்லாம் பேசினேன். பிறகு பலரும் புத்தகங்களை வாங்கிக்கொண்டார்கள்.

சத்தம்போட்டவர்கள் வெளியேறும்போது வாசலில் இருந்த போஸ்டர்களைக் கிழித்துவிட்டுச் சென்றதாகச் சொன்னார்கள். அடுத்த நாள் SOASல் கூட்டம் சிறப்பாகவே நடந்தது" என்றார்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்காக கூட்டத்தில் பணம் கேட்டதாகவும் அப்போதுதான் சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறதே என்று கேட்டபோது, திருமாவளவன் அதனைக் கடுமையாக மறுத்தார்.

 

"அந்தக் கூட்டத்தில் மட்டுமல்ல, வேறு எங்குமே வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களிடம் பணம் கொடுங்கள் என்று நான் கேட்டதில்லை. தேர்தல் செலவுக்குக்கூட கேட்டதில்லை. இது முழுக்க முழுக்க அவதூறு. நான் உட்பட மூன்று பேர் எங்கள் செலவில்தான் லண்டன் சென்றுவந்தோம்" என்கிறார் திருமாவளவன்.

விம்பம் அமைப்பைச் சேர்ந்தவரும் அந்த விழாவில் கலந்துகொண்டவருமான சின்னய்யா ராஜேஷ்குமாரிடம் என்ன நடந்தது எனக் கேட்டபோது, "திருமாவளவன் பணம் கேட்டதாகச் சொல்வது மிக மிகத் தவறு. கூட்டம் துவங்கும்போது, நாலைந்து பேர் கூட்டத்தை குழப்பும் நோக்கில் வந்து கூச்சல் போட்டு, சோனியா, திருமா, கருணாநிதி, ராஜபக்சே படங்களை காட்டி அவற்றை கிழித்தனர்.

அவர்களை மண்டபத்தில் இருந்து வெளியேற்றிய பின் கூட்டம் ஒழுங்காக நிகழ்ந்தது. திருமா காசு திரட்டும் நோக்கில் வரவில்லை. அவரது புத்தகமான ‘அமைப்பாய் திரள்வோம்‘ வெளியீட்டில் கலந்து கொள்ளவும் SOAS இல் 'விடுதலை சிறுத்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள்' என்ற தலைப்பில் பேசவுமே வந்தார். அவரது தலித்திய சிந்தனைகள் பற்றிய உரையாடலுக்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார். இந்த இரு கூட்டங்களும் சிறப்பாக நிகழ்ந்தன" என்று குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருமாவளவன் தன் ஃபேஸ்புக் பக்கத்திலும் விளக்கமளித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-49498858

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.