Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகப்பேறு மருத்துவர் முதல் தெலுங்கானா ஆளுநர் வரை.. தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தமிழிசை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதவிà®à¯à®à®¾à®²à®®à¯

மகப்பேறு மருத்துவர் முதல் தெலுங்கானா ஆளுநர் வரை.. தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தமிழிசை!

தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜன் மருத்துவர் முதல் ஆளுநர் வரை கடந்து வந்த பாதையில் உழைப்பும், திறமையும் இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 1961-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார்.

அவரது தந்தை குமரி அனந்தன். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தன் முன்னாள் எம்பியாகவும் இருந்துள்ளார். தமிழிசை சவுந்திரராஜன் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். இதையடுத்து எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் மகப்பேறு மருத்துவம் படித்தார்.

அவர் கனடாவில் சோனாலஜி மற்றும் எஃப்இடி தெரபி பயின்றுள்ளார். கனடாவுக்கு செல்வதற்கு முன்னர் தமிழிசை ராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றினார். அது போல் பல்வேறு மருத்துவமனைகளுக்கு மருத்துவ ஆலோசகராக இருந்தார்.

இவரது கணவர் சவுந்திரராஜனும் மருத்துவர். இவர் சவீதா பல்கலைக்கழகத்தில் சிறுநீரகவியல் நிபுணராக உள்ளார். தமிழிசைக்கு அரசியல் மீது சிறுவயது முதல் ஆர்வம் இருந்து வந்தது. சென்னை மருத்துவக் கல்லூரியிலும் மாணவர்கள் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

பாஜகவின் சித்தாந்தம் பிடித்து போகவே அவர் பாஜகவில் இணைந்து முழு நேர அரசியல்வாதியானார். இதையடுத்து 1999-ஆம் ஆண்டு தென் சென்னை மாவட்ட மருத்துவ அணி தலைவராக தமிழிசை நியமிக்கப்பட்டார். அது போல் கடந்த 2001-ஆம் ஆண்டு மருத்துவ அணியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் 2007-ஆம் ஆண்டு மாநில பொதுச் செயலாளராகவும் 2010-ஆம் ஆண்டு மாநில பாஜக துணை தலைவராகவும் பின்னர் கடந்த 2013-ஆம் ஆண்டு தேசிய செயலாளராகவும் பதவி உயர்வுகளை பெற்றார்.

இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் முடிவடைந்தவுடன் அப்பதவிக்கு அவரே மீண்டும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்த நிலையில் அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை தோல்வி அடைந்தார். கடும் உழைப்பாளியான தமிழிசைக்கு தெலுங்கானா மாநில ஆளுநர் பதவியை பாஜக அளித்துள்ளது. அது போல் 2009-ஆம் ஆண்டு வடசென்னை எம்பி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பெண்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் பாடுபட்டார். தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தமிழிசையை வாழ்த்துவோம்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/how-tamilisai-elevated-to-telangana-governor-361724.html

தமிழக விளையாட்டு வீரர்களில் இருந்து சுந்தர் பிச்சை வரை தமிழராக பெருமை சேர்ப்பது மகிழ்ச்சி. 

ஒரு அரசியாவாதியாக, ஆளும் ஜெ.வி. பி. மாநில தலைவராக அப்படி என்ன சாதித்து விட்டார்?  ஆளுனராக வருவது ஒரு சாதனை இல்லை, காரணம் இரு ஒரு அரசியல் விசுவாசத்திற்கு அளிக்கப்படும் பரிசே.  

  • கருத்துக்கள உறவுகள்

என்னை வெச்சி செஞ்சுடீங்க... மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஹெவியா மெசேஜ் சொன்ன தமிழிசை.!

tamilisai-jpg.jpg

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். வரும் 8-ம் தேதி தெலங்கானா ஆளுநராக அவர் பதவியேற்க உள்ளார். தமிழிசை தமிழகத்திலிருந்து செல்ல உள்ள நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் சோகத்தில் உள்ளார்கள். மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஹெவியாக கண்டண்ட் கொடுத்தவர் தமிழிசை. அவருடைய பேட்டிகளை வைத்து உடனுக்குடன் மீம்ஸ் வெளியிட்டு கிண்டலடிப்பார்கள்.

ஒரு கட்டத்தில் அவருடைய உருவத்தை வைத்தும் தலை முடியை வைத்தும், உயரத்தை வைத்தும், தாமரை மலர்ந்தே தீரும் என்று பேசுவதையும் வைத்து அதிகமாக மீம்ஸ் கிரியேட்டர்கள் தமிழிசையை வறுத்தெடுத்தனர். உருவத்தை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகளவில் கிண்டலுக்கு ஆளானவர் தமிழகத்தில் தமிழிசை மட்டுமே.

தமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட்ட உடனே பல மீம்ஸ் கிரியேட் பக்கங்களை நடத்திவரும் மீம்ஸ் கிரியேட்டர்கள் வருத்தத்துடன் தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு  தமிழிசை ஹெவியான மெசேஜ் ஒன்றை சொல்லியுள்ளார்.

tamilisai-meme-jpg.jpg

இந்தத் தருணத்தில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் என்று ஆங்கில் நாளிதழ் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படி பதில் சொல்லியிருக்கிறார் தமிழிசை. “நான் எப்போதுமே உங்கள் (மீம்ஸ் கிரியேட்டர்) கற்பனை வளத்தை நேர்மறையான விசயங்களுக்கு பயன்படுத்துங்கள் என்று சொல்லி வந்திருக்கிறேன். தமிழிசையைக் குறி வைப்பதற்கு பதிலாக மீம்ஸ்கள் மூலம் நேர்மறையான சமுக விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

அவர்களுடைய கற்பனை திறனையும் அதை எடிட் செய்யும் திறமையையும் நான் பாராட்டுகிறேன். "தமிழிசையை வெச்சு செஞ்சுட்டீங்க.. " இதை அவர்கள்  இனியும் தொடர வேண்டும் என்றால் தொடரட்டும். . அதை என் இதயத்துக்குக் கொண்டு செல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இனியாவது தமிழிசையை விடுவீங்களா மீம்ஸ் கிரியேட்டர்ஸ்..?!

https://tamil.asianetnews.com/politics/tamilisai-message-to-meme-creators-px8jwm

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.