Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலம்பியா | பார்க்(FARC) விடுதலை அமைப்பு மீண்டும் போராட்டத்துக்குத் திரும்பலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
f6bdd299ae8542898a274053d3e98483_18-800x
 

கொலம்பியா | பார்க்(FARC) விடுதலை அமைப்பு மீண்டும் போராட்டத்துக்குத் திரும்பலாம்?

2016 இலிருந்து கொலம்பியா மக்கள் அனுபவித்துவந்த அமைதி மீண்டும் கலையப்போகிறது. துப்பாக்கிச் சத்தங்களும், கூக்குரல்களும், பிணங்கள் சிதறிய வீதிகளும் இனி தினச் சம்பவங்களாகப் போகின்றன. கொலம்பியாவின் ஆட்சியினருக்கும் பார்க் விடுதலை அமைப்பிற்கும் 2016 இல் எழுதப்பட்ட போர் தவிர்ப்பு ஒப்பந்தம் விரைவில் முறிக்கப்படவிருக்கிறது.

இரு தரப்புகளுக்குமிடையில் பேச்சுவார்த்தையை நடத்திவைத்த ஐவான் மார்க்கேஸ் உள்ளடங்கிய பல பார்க் (Revolutionary Armed Forces of Columbia – FARC) தலைவர்கள் தாம் திரும்பவும் ஆயுதங்களைத் தூக்கப்போவதாக அறிவித்துள்ளனர். தற்போதய அதிபர் ஐவன் டுகே 2016 செய்யப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை என விடுதலை அமைப்பு குற்றம் சாட்டி ஒப்பந்தத்தை முறிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

கொலம்பியாவின் போரும் கிட்டத்தட்ட ஈழப்போர் மாதிரியான ஒன்றுதான். கிராமங்கள் தோறும் விடுதலைப் போராளிகளுக்கும் இராணுவத் துணைக்குழுக்களுக்குமிடையில் நடக்கும் போரில் பாதிக்கப்படுவது மொது மக்களே. எந்த ஒரு பகுதியினருடனும் பேசினாலும் மற்றப் பகுதியின் சந்தேகப் பழிவாங்கலுக்கு உள்ளாக வேண்டி வரும்.

கடத்தல், கொலை, பாலியல் வன்முறை, வீடெரிப்பு என்பதே வாழ்வென இருந்த காலம் மீண்டும் வரப்போகிறது என மக்கள் அஞ்சுகின்றனர்.

அரை நூற்றாண்டாக காடுகளிலும், நகரங்களிலும் நடைபெற்று வந்த கொலம்பியாவின் போர் எட்டு மில்லியனுக்கு மேலான மக்களை இரை கொண்டிருக்கிறது. 28,000 மக்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

முன்னாள் கொலம்பிய அதிபர் ஹுவான் மனுவேல் 2016 இல் பார்க் போராளிகளோடு சமாதான ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டதிலிருந்து நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. ஒரு வருடத்துக்கு முதல் புதிய அதிபர் ஐவான் டூக்கே பதவிக்கு வந்ததிலிருந்து அமைதி ஒப்பந்தத்திற்கு ஆபத்து வந்தது. சமாதான ஒப்பந்ததுக்கு எதிரான கொள்கையை முன்வைத்தே அவர் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்; மக்களும் அவரைத் தேர்வு செய்திருந்தார்கள்.

அவர் தெரிவு செய்யப்பட்ட அடுத்த வருடமே சமூகத் தலைவர்களும், போராட்ட அமைப்பின் தலைவர்களும் கொலைசெய்யப்படுவது அதிகரிக்கத் தொடங்கியது. முன்நாட் போராளிகளை சமூகத்துள் உள்வாங்கல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கள், போரினால் அதிகளவு பாதிக்கப்பட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்தல் போன்ற சமாதான ஒப்பந்தத்தின் முக்கிய சில அம்சங்களை நடைமுறைப்படுத்த அரசு நடைமுறைப்படுத்தத் தவறியிருந்தது.

அதிருப்தியடைந்த சில போராளிகள் குழுக்களாகி மீண்டும் ஆயுதங்களைத் தூக்கியபோது பார்க் அமைப்பின் முன்நாட் போராளிகள் இவர்களோடு போராட வேண்டி ஏற்பட்டது. அபாயத்தை உணர்ந்த சர்வதேசத் தலைவர்கள், சமாதான ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர்.

போராளி அமைப்பின் தலைவர்களினது அறிவித்தலுக்குப் பதிலாக அதிபர் டூக்கே அவர்களைத் தேடி இராணுவத்தை அனுப்பப் போவதாகவும், அவர்களைக் கைதுசெய்ய உதவுபவர்களுக்கு 3 பில்லியன் பேசோ பண முடிப்பைத் தருவதாகவும் அறிவித்திருக்கிறார்.

வெள்ளியன்று, அரச படைகள் 9 பார்க் உறுப்பிப்னர்களைக் கொன்றதாக கொலம்பியாவின் பாதுகாப்பு அமைச்சர் குலேர்மோ பொட்டேரொ அறிவித்திருக்கிறார்.

“கொலம்பியா அரசாங்கம் சமாதான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டது. இந்த மனிதனுக்கு சமாதானம் தேவையில்லை. அரசாங்கமே இதற்குப் பொறுப்பு. அதுவே உண்மை” என்கிறார் பொதுமக்களில் ஒருவர்.

http://marumoli.com/கொலம்பியா-பார்க்farc-விடுதல/?fbclid=IwAR2wV_3Kc6tvyXWOyb9hjuqb_3VgmZ8AJiPY5Zo38RV4sbDtHoNCMHDMAH4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.