Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ரூபாய் இட்லிப்பாட்டி : 300 ரூபாய் செலவாகும். 200 ரூபாய் லாபம் கிடைக்கும்.

Featured Replies

ஒரு ரூபாய் இட்லிப்பாட்டி கமலாத்தாள் - "சாகும்வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன்"

இது 2019ஆம் ஆண்டு. ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? ஒரு ரூபாயை வைத்து என்ன செய்துவிட முடியும்? நாம் யாரிடமாவது ஒரு ரூபாய் கொடுத்தால், நம்மை அவர்கள் ஏளனமாகக்கூட பார்க்கக்கூடும்.

 

ஆனால், ஒரு ரூபாய்க்கு ஒருவரின் பசியை போக்குகிறார் இந்த கமலாத்தாள் பாட்டி.

கோவை மாவட்டம், வடிவேலம்பாளையம் கிராமத்தில் இன்றும் ஒரு ரூபாய்க்கு சுடச்சுட இட்லி சுட்டு கொடுக்கிறார் இந்தப் பாட்டி. இவருக்கு வயது 80.

 

இந்தத் தள்ளாத வயதிலும், ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மிக் கல்லில் சட்னி அரைக்கிறார்.

ஆட்டுக் கல்லில் மாவறைக்கும் கமலாத்தாள் பாட்டி Image caption ஆட்டுக் கல்லில் மாவறைக்கும் கமலாத்தாள் பாட்டி

"காலை 5:30 மணிக்கு எழுந்து சட்னி சாம்பார் செய்வேன். ஆறு மணி அளவில் இட்லி அடுப்பை பற்ற வைப்பேன். 12 மணி வரைக்கும் இட்லி ஊத்துவேன்" என்கிறார் கமலாத்தாள்.

உங்களால் எப்படி ஒரு ரூபாய்க்கு இட்லி விற்க முடிகிறது? என்று கேட்டதற்கு,

"அரிசி, பருப்பு, தேங்காய், கடலை, எண்ணெய் இதெல்லாம் சேர்த்து, எனக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் செலவாகும். 200 ரூபாய் லாபம் கிடைக்கும். அவ்வளவுதான். சாகும் வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன். யார் சொன்னாலும் விலை ஏற்ற மாட்டேன். இன்னும் எத்தனை நாட்கள் நான் வாழப்போகிறேன்?" என்று அவர் கூறுகிறார்.

"எல்லா இடங்களிலும் இருந்து மக்கள் இங்கு வந்து வாங்கி செல்வார்கள். சிலர் இங்கேயே அமர்ந்து சாப்பிடுவார்கள். தானாகவே இட்லி எடுத்துக் கொண்டு சாப்பிட்டு செல்வார்கள். சிலர் காசு கொடுப்பார்கள். சிலர் காசு கொடுக்காமல் சாப்பிட்டு செல்வார்கள். நான் கண்டுகொள்ள மாட்டேன். ஏழைகள் வந்து சாப்பிட்டு வாழ்த்திவிட்டு போகட்டும்" என்கிறார் கமலாத்தாள் தெரிவித்தார்.

இட்லி

"நாங்கள் எல்லாம் சோளக்களி, ராகி, கம்பஞ்சோறு போன்ற உணவுகளை சாப்பிட்டு வளர்ந்தோம். இதனால்தான் இன்றும் என் உடலில் தெம்பு இருக்கிறது." என்று தான் இந்த வயதிலும் திடமாக உழைக்கும் ரகசியத்தை தெரிவிக்கிறார் கமலாத்தாள் பாட்டி.

மேலும், தற்போதெல்லாம் அனைவரும் அரிசி சோறே அதிகம் சாப்பிடுவதாகவும், அதனாலேயே யாருக்கும் தெம்பு இருப்பதில்லை என்று அவர் கூறுகிறார்.

இந்தக்கடையின் தினசரி வாடிக்கையாளர் ராமசாமி கூறுகையில், "இப்பவும் இங்க இட்லி ஒரு ரூபாய்தான். 10 ரூபாய் இருந்தால் வயிறு நிறைய இங்கு சாப்பிடலாம். இன்னிக்கு எங்கிட்ட காசு இல்ல, நாளைக்கு தரேன் என்று சொன்னால்கூட, அவர் ஒன்னும் சொல்லமாட்டார். என் கையில் 500 ரூபாய் இருந்தாலும், நான் இங்கு வந்துதான் சாப்பிடுவேன். காரணம் சுவை. ஆட்டுக்கல்லில்தான் மாவு அரைப்பார். அம்மிக்கல்லில்தான் சட்னி அரைப்பார். சாம்பாரும் மிகப் பிரமாதமாக இருக்கும்" என்கிறார்.

"பாட்டி சில நாள் போண்டா சுட்டுக் கொடுப்பார். இட்லி ஒரு ரூபாய். போண்டா இரண்டு ரூபாய். வேறு எங்கு சாப்பிட்டாலும் இங்கிருக்கும் சுவை வராது. இங்கு 10 இட்லி சாப்பிட்டால் வயிர் நிறைந்துவிடும்" என்கிறார் பாட்டிக்கடைக்கு அருகில் வேலை பார்க்கும் செல்வசுந்தரம்.

https://www.bbc.com/tamil/india-49551458

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

"எல்லா இடங்களிலும் இருந்து மக்கள் இங்கு வந்து வாங்கி செல்வார்கள். சிலர் இங்கேயே அமர்ந்து சாப்பிடுவார்கள். தானாகவே இட்லி எடுத்துக் கொண்டு சாப்பிட்டு செல்வார்கள். சிலர் காசு கொடுப்பார்கள். சிலர் காசு கொடுக்காமல் சாப்பிட்டு செல்வார்கள். நான் கண்டுகொள்ள மாட்டேன். ஏழைகள் வந்து சாப்பிட்டு வாழ்த்திவிட்டு போகட்டும்" என்கிறார் கமலாத்தாள் தெரிவித்தார்.

அந்த எண்பது வயது மூதாட்டி... ஒரு ரூபாய்க்கு விற்கும்  இட்டலிக்கு கூட,
காசு கொடுக்காமல் செல்லும்.... கேவலமான மனிதர்களை  என்னவென்பது.  ☹️

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

 

4 hours ago, ampanai said:

"அரிசி, பருப்பு, தேங்காய், கடலை, எண்ணெய் இதெல்லாம் சேர்த்து, எனக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் செலவாகும். 200 ரூபாய் லாபம் கிடைக்கும். அவ்வளவுதான். சாகும் வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன். யார் சொன்னாலும் விலை ஏற்ற மாட்டேன். இன்னும் எத்தனை நாட்கள் நான் வாழப்போகிறேன்?" என்று அவர் கூறுகிறார்.

பாட்டி அம்பானியை விட அதிக வீதம் இலாபம் மட்டுமல்ல சக உறவுகளுக்கு சேவையும் செய்கின்றார்.

இவரிலும் ஒரு 'மதர் தெரேசா' தெரிகின்றார். 

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

ஒரு ரூபாய் இட்லிப்பாட்டி கமலாத்தாள்: மாவட்ட நிர்வாகம் முதல் மகேந்திரா நிறுவனம் வரை குவியும் உதவிகள்

கோவை மாவட்டம், வடிவேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு ரூபாய் இட்லிப்பாட்டி கமலாத்தாளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் புதிய வீடு கட்டி தருவதாக தெரிவித்துள்ளார்.

 

கடந்த சில வாரங்களில் பிபிசி தமிழ் உட்படப் பல ஊடகங்களில் செய்தியாக வந்த ஒரு ரூபாய் இட்லிப்பாட்டிக்கு பிரதமரின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

கமலாத்தாள் பாட்டி குறித்து ஊடகங்களில் தொடர்ந்து வந்த செய்திகளால், பலர் பாட்டியின் வீடு தேடிச் சென்று தங்களது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு பொருள் உதவியும் செய்து வருகின்றனர்.

பாட்டி

மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா பாட்டி குறித்த செய்தியை பகிர்ந்து பாட்டியின் வியாபாரத்தில் தான் முதலீடு செய்ய விரும்புவதாகவும், அவருக்கு எரிவாயு அடுப்பு வாங்கி தருவதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று கமலாத்தாள் பாட்டியைத் தனது அலுவலகத்திற்கு வரவழைத்த கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவரது சேவையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

வீடு பழுதடைந்த நிலையில் இருப்பதாகப் பாட்டி கூறியதைக் கேட்ட ஆட்சியர், பிரதமரின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் வீடு கட்டித்தரப்படும் எனவும், தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

யார் இந்த ஒரு ரூபாய் இட்லிப் பாட்டி?

கோவை மாவட்டம் ஆலாந்துறை வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள். 85 வயதான கமலாத்தாள் தனது ஒரு ரூபாய் இட்லி குறித்த ஊடகங்களின் செய்தியால் பிரபலம் அடைந்தார்.

கமலாளாத்தால் பாட்டி தனது இட்லி வியாபாரம் தொடங்கிய முதல் 15 வருடங்கள் 50 பைசாவுக்கும், அதன் பிறகு தற்போது வரை ஒரு ரூபாய்க்கும் இட்லி விற்று வருகிறார்.

வீட்டிற்கு வாங்கிச்செல்லப் பாத்திரம் கொண்டு வந்தால் மட்டுமே இட்லி கொடுக்கிறார்.

பாட்டியின் சுவையான இட்லிக்கு வடிவேலம்பாளையத்தை சுற்றியுள்ள ஐந்து கிலோ மீட்டருக்குள் இருக்கும் ஊர்களிலிருந்து தினமும் பலர் வந்து செல்கின்றனர்.

பாட்டிக்கு ஆதரவாக அவரது பேரன் புருசோத்தமன் இருந்து வருகிறார்.

இந்தத் தள்ளாத வயதிலும், ஆட்டுக்கல்லில் மாவரைத்து, அம்மிக் கல்லில் சட்னி அரைக்கிறார்.

https://www.bbc.com/tamil/india-49665243

  • கருத்துக்கள உறவுகள்

à®à®à¯à®à¯à®à¯ à®à®²à¯à®²à®¿à®²à¯ மாவறà¯à®à¯à®à¯à®®à¯ à®à®®à®²à®¾à®¤à¯à®¤à®¾à®³à¯ பாà®à¯à®à®¿

அந்தப் பாட்டியின்... நல்ல மனதிற்கும், பட்ட சிரமங்களுக்கும்...
பலரும் உதவ முன்வந்திருப்பது... மகிழ்ச்சியாக உள்ளது. 💓

  • 7 months later...
  • தொடங்கியவர்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நல்ல சேவை மானப்பான்மை  பாட்டிக்கு, இன்னும் பல ஆண்டுகாலமாக இருந்து இத்தொண்டை செய்யனும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.