Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் - ஆன்மீகம் - மொழி

Featured Replies

#மொழி_vs_அறிவியல்

அறிவியலில் எல்லா கேள்விகளுக்கும் பதில் இல்லையே ஏன்..? 

உண்மையில் அந்த அளவுக்கு அவர்கள் அறிவியலை தேடி படித்து இருப்பார்களா என்றால் இல்லை...

அடிப்படையாக சில கேள்விகளை  ஆன்மீக கதைகளின் கண்ணோட்டத்தில் கேட்பார்கள்....

முக்கிய  கேள்விகள் இதோ

1. மனிதனின் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன..? 
2. தவறு செய்பவன் தப்பித்து கொண்டால் அவனை கண்டுபிடித்து தண்டிப்பது யார்?
3. ஏன் மனிதன் வாழ பூமி அமைய வேண்டும்..??
4. மரணத்தின் பின் என்ன நடக்கும் ?
5. ஏன் மனிதனுக்கு மட்டுமே 6 அறிவு? 

இந்த 5 கேள்விகளுக்கும் அறிவியலில் பதிலில்லை என்று ஏதோ அறிவியலை விட தங்களின் மத கட்டுக்கதைகள் சிறந்தது என மார்தட்டி கொள்வர்...காரணம் இந்த 5 கேள்விகளுக்கும் ஆன்மீக கட்டுகதைகளில் ஒரு வரி பதில் உண்டு

விடைகள்

1) கடவுளின் சித்தம்
2) தீர்ப்பு நாளில் நரக தண்டனை அல்லது மறுபிறவியில் துன்பம்
3) கடவுள் மனிதனுக்காக படைத்தது
4) ஆன்மா உடலை விட்டு வெளியேறும்
5) மனிதன் கடவுளின் சிறந்த படைப்பு

ஆனால் இந்த கட்டுக்கதை பதில்களை திரும்பவும் அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் ஒரு துளியும் ஆதாரம் இருக்காது...

1) கடவுள் படைத்ததற்கு ஆதாரம் என்ன? - மத நம்பிக்கை
2) தீர்ப்பு நாள் அல்லது மறு ஜென்மத்திற்கு ஆதாரம்? - மத நம்பிக்கை
3) ஏன் பூமியில் 75 கடல்? எதற்கு அவ்வளவு பெரிய அண்டார்டிகா பனி கண்டம்? எதற்கு மனித வாழ்வில் பயண்படாத பல கோடி இதர உயிரினங்கள்? எதற்கு கொடி உயிர் கொல்லி கிருமிகள்? எதற்கு இயற்கை பேரழிவுகள் (நல்லவர்களும் அழிக்கிறார்கள்) ? - கடவுளின் சித்தம்
4) ஆன்மா வெளியேறும் ஆதாரம்? 
5)ஏன் 9,000 வகை மரபியல் நோய்கள்? - கடவுளின் சித்தம் 

ஆக ஆன்மீகம் என்ற பெயரில் ஆதாரமற்ற கட்டுகதைகள் மட்டுமே சிறுபிள்ளைத்தனமான பதிலாக கிடைக்குமே ஒழிய ஆதாரத்துடன் எதுவுமே வராது

இந்த கேள்விகளுக்கு பின்னணி என்ன?

1) மனிதன், தன்னையும் மீறி நடக்கும் அழிவுகளுக்கும் மரணத்திற்கும் அஞ்சினான்...

2) மொழி முதலில் வந்தது...

3) தன் பயங்களையும் கற்பனைகளையும்   ஆன்மீகம் என்ற பெயரில் பொட்டலம் கட்டினான்

4) அறிவியல் கண்டுபிடிப்புகள் பின்னால் வந்தது....

5) பின்னர் அதை சார்ந்த அறிவியல் புரிதல் வந்தது....

இதில் வெறும் 3 ஆவது நிலை வரை மட்டுமே நிற்பவர்கள்தாம் இன்னும் ஆன்மீக கண்ணோட்டத்தோடு உலகை காண்கின்றனர்..‌.

இதை அறிவியலில் 'Sapir- Whorf hypothesis' என்பர்...தன் தாய்மொழியை முதலில் கற்பதால் அதை சார்ந்த சிந்தனைகளிளேயே உலகை காண்பது....

உதாரணமாக தமிழில் ஓர் அறிவித்திருந்தது 6 அறிவு வரை உயிரினங்களை பிரித்து 'உயர்தினை, அஃறினை' என்று தமிழ் இலக்கணத்திற்கு வித்திட்டவர் தொல்காப்பியர்...  எனவே தமிழ் பேசும் அனைவருக்கும் மனிதன் என்பவன் இதர  உயிரினங்களை காட்டிலும் 6 அறிவு படைத்த உயர்ந்த உயிரினம் என்ற எண்ணம் தானாகவே வரும். 

 உதாரணமாக தமிழ் வாக்கியத்தில்

எலிகள் ஆற்றுக்கு சென்றன...(கீழ் நிலை)
மனிதர்கள் ஆற்றுக்கு சென்றார்கள்...(உயர் நிலை) 

இந்த எண்ணத்திற்கு மேலும் நல்ல தீனி போடுவது மத கட்டுகதைகள்....

அறிவியல் சிந்தனைகள் முதல் வந்து பின்னர் தமிழ் வந்திருந்தால் 

எலிகள் ஆற்றுக்கு சென்றார்கள்...மனிதர்கள் ஆற்றுக்கு சென்றார்கள்...

என்று மனிதர்களும் எலிகளை போல ஒரு பாலூட்டி உயிரினம் தான் என்று தமிழ் இலக்கணம் வேறு மாதிரி அமைந்திருக்கும்....

இது போன்ற 'சிந்தனை' பிழைகள் தமிழில் மட்டுமல்ல ஒவ்வொரு மொழிகளிலும் உள்ளது...

எனவே அறிவியலால் பதில் கூற முடியாது என்று மார்தட்டி கொள்ளும் பல கேள்விகளும் தேவையற்ற காரணமற்ற வெட்டி கேள்விகளே என்று உணர்த்துகிறது அறிவியல்....

#மொழி_vs_அறிவியல்

வசந்தன் - ஆய்வுகூடம் - அறிவியல் தகவல்கள்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.